Showing posts with label மகி. Show all posts
Showing posts with label மகி. Show all posts

Monday, February 17, 2025

இமைகளின் காதல்

*இமைகளின் காதல்* 

என் காதலியின் புகைப்படத்தை கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருக்கும் வேளையில், 'நீ உன் காதலியைப் பார்க்க வேண்டும் என்பதற்காக எங்களைக் கட்டித் தழுவ விடாமல் தடுப்பது நியாயமா' என்று என்னைப் பார்த்துக் கேட்டன என் இமைகள்.

இது என்னடா புதுத் தடங்கல் என்று பதைத்தபடி, என் இமைகளிடம் கேட்டேன்  ‘ஏன்... நீங்களும் காதலிக்கிறீர்களா' என.

'ஆம்... பிறந்ததில் இருந்தே நாங்கள் ஒருவரை ஒருவர் காதலிக்கிறோம். அதனாலேயே நீ விழித்திருக்கும்போது நொடிக்கு ஒரு முறையும், நீ தூங்க ஆரம்பித்தால், கண் விழிக்கும் வரையும் கட்டித் தழுவி முத்தமிட்டபடியே இருப்போம்' என்றன இமைகள்.

ஊரார் காதலை ஊட்டி வளர்த்தால், தன் காதல் தானே வளரும் என்கிற ஆசையில் என் கண்களை கொஞ்சம் மூடி, இமைகள் இரண்டையும் கட்டித் தழுவ விட்டேன்.

மூடிய கண்களுக்குள் 
உள்ளே ஓங்கி வளர்ந்து காட்சி தந்தாள் என் காதலி.

அதற்குள் அறைக்குள் வந்த என் காதலி நான் வரும்வரை காத்திருக்காமல் எப்படி நீ உறங்கலாம் என்று என்னிடம் சண்டை போடுகிறாள் 😒

~மகி ~

Sunday, February 16, 2025

காதல் என்பது மண்டியிட்டு ரோஜாக்களை நீட்டுவது அல்ல

*காதல் என்பது மண்டியிட்டு ரோஜாக்களை நீட்டுவது அல்ல* 
காதல் என்பது மண்டியிட்டு ரோஜாக்களை நீட்டுவதில் இல்லை. அது ஒரு ஆழமான உணர்வு, இரண்டு இதயங்கள் ஒன்றையொன்று புரிந்து கொண்டு, மதித்து, அன்பு செலுத்துவதில் உள்ளது. ரோஜாக்கள் ஒரு அழகான அடையாளம், ஆனால் அவை காதலின் சாராம்சத்தை வரையறுக்க முடியாது.

புரிதல்: ஒருவரை ஒருவர் முழுமையாகப் புரிந்து கொள்வது, அவர்களின் எண்ணங்கள், உணர்வுகள், கனவுகள் மற்றும் பயங்களை அறிந்து கொள்வது.

மரியாதை: ஒருவரை ஒருவர் மதிப்பது, அவர்களின் தனித்துவத்தை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கருத்துக்களைப் பாராட்டுவது.

நம்பிக்கை: ஒருவரை ஒருவர் நம்புவது, அவர்களின் மீது நம்பிக்கை வைப்பது, அவர்கள் எப்போதும் தங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று நம்புவது.

தியாகம்: ஒருவருக்காக ஒருவர் தியாகம் செய்ய தயாராக இருப்பது, அவர்களின் மகிழ்ச்சிக்காக தங்கள் சொந்த தேவைகளை விட்டுக்கொடுப்பது.

பொறுமை: ஒருவரை ஒருவர் சகித்துக்கொள்வது, அவர்களின் தவறுகளைப் பொறுத்துக்கொள்வது, அவர்களுக்கு ஆதரவாக இருப்பது.

மகிழ்ச்சி: ஒருவரோடு ஒருவர் இருக்கும்போது மகிழ்ச்சியாக உணர்வது, வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் ஒன்றாக அனுபவிப்பது.

காதல் என்பது ஒரு பயணம், அது எப்போதும் எளிதானது அல்ல. ஆனால், உண்மையான காதல் என்பது தடைகளைத் தாண்டி, ஒருவரை ஒருவர் மேலும் நெருக்கமாகக் கொண்டு செல்லும்.

எனவே, காதலை ரோஜாக்களுடன் மட்டும் ஒப்பிட்டு விடாதீர்கள். காதல் என்பது ஒரு ஆழமான மற்றும் சிக்கலான உணர்வு, அது வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.

~ மகி

Friday, April 23, 2021

இராவணன் போல தான் வேணும் அம்மா




கர்ப்பமாக இருந்த தாய், தன் மகளிடம் கேட்டாள்...
"உனக்குத் தம்பி வேண்டுமா, அல்லது தங்கை வேண்டுமா?" என்று...

மகள், "தம்பி வேண்டும்" என்றாள்.

"யாரைப் போல் தம்பி இருக்க வேண்டும்?" என்று தாய் கேட்க, "ராவணனைப் போல் இருக்க வேண்டும்" என்றாள் மகள்.

திடுக்கிட்ட தாய், "உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா என்ன? ராமனைப் போல் ஒரு சகோதரன் வேண்டும் என்று சொல்லாமல், ராவணனைப் போல் வேண்டும் என்கிறாயே!" என்றாள்.

"அம்மா! நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? உடன் பிறந்த சகோதரி அவமானப்பட்டாள் என்பதற்காக, ராவணன் தன் அரியணை, ராஜ்ஜியம், உயிர் அனைத்தையும் இழந்தானே! தன் எதிரியின் மனைவியைச் சிறை பிடித்த போதிலும், அவளை ஒரு போதும் தீண்டவில்லையே! ஆனால் ராமன், யாரோ ஒருவன் சொன்னான் என்பதற்காக, கர்ப்பவதியாக இருந்த தன் மனைவியை ஒதுக்கி வைத்தானே! அவளை தீக்குளித்துத் தன் புனிதத்தை நிரூபிக்கச் செய்தானே!

உனக்கு வேண்டுமானால் ராமனைப் போல் மகன் பிறக்கட்டும். ஆனால் எனக்கு ராவணன் போன்ற சகோதரன் தான் வேண்டும்" என்றாள் மகள்.

தாயால் பதில் கூற முடியவில்லை. அதிர்ந்து போனாள்.

இக்கதை ஒரு விவாதத்தைத் துவக்கலாம். ஆனால் கதையின் உட்பொருளைக் கூர்ந்து நோக்கினால், ஒரு உண்மை புலப்படும்.இவ்வுலகில் நல்லவர், கெட்டவர் என்பது நாம் நம் தனிப்பட்ட அனுமானங்களால் முடிவு செய்வதே.

கேளிக்கைகளில் திளைப்பவன் என்பதால்,
ஒருவன் கெட்டவன் என்றில்லை.
கோவிலுக்குச் செல்பவன் என்பதால்,
ஒருவன் நல்லவனும் இல்லை.

கோவிலுக்கு வெளியே இருக்கும் ஏழையும் சரி, கோவிலுக்கு உள்ளே இருக்கும் பணக்காரனும் சரி - கேட்பதென்னவோ பிச்சை தான்.

நம் எண்ணங்கள் தராசின் முள் போல் இருத்தல் வேண்டும்.

Saturday, April 03, 2021

பந்தமின்றி இருத்தல்







ஒரு நாட்டின் ராஜா ஒவ்வொரு நாள் இரவும் நகர்வலம் வருவான். அப்போது அவன் தினமும் ஒரு இளைஞன் மரத்தடியில் அசைவின்றி சிலைபோல அமர்ந்திருப்பதை போல பார்ப்பான். அவனுக்கு அமைதியாக அந்த இளைஞன்
அமர்ந்திருப்பதை பார்க்க மிகவும் ஆச்சரியமாக இருக்கும்.

அவனால் தனது ஆர்வத்தை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அதனால் ஒருநாள் தனது குதிரையை நிறுத்தி
இறங்கி, “இளைஞனே, உனது தியானத்தைக் கலைத்ததற்காக என்னை மன்னித்துக் கொள்.” என்றான்.

அந்த இளைஞன் தனது கண்களை திறந்து, இங்கே எந்த மன்னிப்புக்கும் இடமே இல்லை, நான் தியானம் செய்யவில்லை, இங்கே தியானம்தான் இருக்கிறது – யாரும் அதை தொந்தரவு செய்ய முடியாது. ஆனால் உனது ஆர்வம் எதுவோ அதை பூர்த்தி செய்துகொள். என்றான்.

அரசன், “நீங்கள் எனது அரண்மனைக்கு வர வேண்டும். நான் உங்களை கவனித்துக் கொள்வேன். இந்த மரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களதுதவத்தினாலும், உங்களது பொலிவினாலும், அமைதியினாலும் நான் ஈர்க்கப்பட்டு விட்டேன்.அமைதியாக இந்த மரத்தடியில் நீங்கள் அமர்ந்திருப்பதை பார்த்தால் ஒரு புத்தரை பார்ப்பது போல இருக்கிறது. நான்தான் இந்த நாட்டின் அரசன், நான் உங்களை எனது அரண்மனைக்கு அழைக்கிறேன்.”  என்றான்.

இப்படித்தான் காட்டுமிராண்டிதனமான மனம் வேலை செய்கிறது. அரசன் அந்த இளைஞனை தனது அரண்மனைக்கு வருமாறு அழைக்கிறான் – ஆனால் அவனது ஆழ் மனதில் இவர் தனது அழைப்பை ஏற்றுக் கொள்ளக் கூடாதென தோன்றுகிறது. ஏனெனில் அப்போது அவர் அரண்மனையையும் ஆடம்பரத்தையும் விரும்புகிறார் என ஆகி விடுமென
பயப்படுகிறான்.

ஆனால் அந்த இளைஞன் எழுந்து நின்று, “போகலாம்” எனக் கூறுகிறான்.

இப்போது உடனடியாக அந்த சூழ்நிலையே மாறுகிறது. அரசனின் மனம், “நான் இப்போது என்ன செய்வது?  அரசனின் விருந்தாளியாக இருப்பதற்கு, அரண்மனையில்  இருக்கும் சுகங்களைஅனுபவிப்பதற்கு இவர் ஆர்வமாக இருப்பது போல தோன்றுகிறதே, இவர் உண்மையான துறவியேஅல்ல.” என நினைக்கிறது. எந்த அளவு ஒருவர் தன்னை
துன்புறுத்திக் கொள்கிறாரோ அந்த அளவு அவர் ஒரு துறவி என்பது பழமையான ஒரு கருத்து.
வசதியின்றி இருப்பது மதம். நோய், பசி, என தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்ள ஆயிரம்
வழிகள்…….. அப்போது ஒரு சிறப்பான துறவி. அரசனின் மனதில் இந்த இளைஞன் தனது
துறவிதன்மையிலிருந்து கீழிறங்கி விட்டார். ஆனால் இப்போது ஒன்றும் செய்ய முடியாது.
தனது வார்த்தையிலிருந்து மாற முடியாது.

ஆனால் இந்த இளைஞன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் எதுவும் பேசவில்லை. அரசன் அரண்மனையின் சிறப்பான இடத்தை கொடுத்து நல்ல  வேலையாட்களைஅமர்த்தி இளைஞனை கவனித்துக்கொள்ள இளம்பெண்களை ஏற்பாடு செய்தான். துறவி இது ஒவ்வொன்றையும் ஏற்றுக் கொள்ள கொள்ள அரசனின் மனதில் தனது துறவிதன்மையிலிருந்து கீழிறங்கி கொண்டே வந்தான். என்ன வகையான துறவி இவர்?  அழகான மிகப் பெரிய படுக்கையை ஏற்றுக் கொண்டார். அரண்மனையின் சிறப்பான உணவு வகைகளை உண்டார்.

அரசன், “கடவுளே, மடையன் நான். இவன் என்னை ஏமாற்றிவிட்டான். இவன் வலை விரித்து பிடித்துவிட்டான். நான் ஒவ்வொரு நாள் இரவும் போகும் வழி அறிந்து அந்த இடத்தில் ஒரு புத்தரைப் போல அமர்ந்து என்னை ஏமாற்றும் வகை அறிந்து என்னை வீழ்த்தியிருக்கிறான். நானும் ஏமாந்து விட்டேன். இப்போது இவனை மெல்லவும் முடியாது,
துப்பவும் முடியாது. அரண்மனைக்குள் வந்துவிட்டான். மிகவும் ஏமாற்றுக்காரன் இவன்.” என்று நினைத்தான்.

ஆனால் இப்படிப்பட்ட மனநிலையோடு எவ்வளவு நாள் தாக்கு பிடிக்கமுடியும்?

ஆறு மாதம் கழித்து ஒருநாள் அதிகாலையில் தோட்டத்தில் உலாவியபடி பேசிக் கொண்டிருக்கையில், அரசன், ஒரு விஷயம் உங்களிடம் கேட்க வேண்டும். அது என்னை துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. என்னால் அதிலிருந்து விடுபட முடியவில்லை. அதனால் ஆறு மாதங்களாக சரியாக தூங்கக் கூட முடியவில்லை. என்றான்.

இளைஞன், நீ எதை வேண்டுமானாலும் கேட்கலாம். என்று கூறினான்.

நான் இப்படி உங்களிடம் கேட்கக்கூடாது. ஆனாலும் உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று எனக்கு தெரிய வேண்டும். நீங்களும் அரண்மனையில்தான் இருக்கிறீர்கள், எல்லா சுகங்களையும் அனுபவிக்கிறீர்கள், உங்களுக்கும் எனக்கும் உள்ள வேறுபாடு என்ன?

என்றாவது ஒருநாள் இந்த கேள்வி வரும் என்று எனக்குத் தெரியும். உண்மையில் நான் இங்கே வருவதற்காக மரத்தடியில்
எழுந்து நின்றபோதே அது உன்னுள் எழுந்து விட்டது. நீ தைரியசாலி அல்ல. நீ இந்த கேள்வியை அப்போதே கேட்டிருக்க வேண்டும். ஆறு மாதங்கள் தேவையின்றி உனது தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை, ஆறு மாதங்களை வீணடித்திருத்த வேண்டியதில்லை. நான் உனது கேள்விக்கு பதிலை இங்கு சொல்ல போவதில்லை. நீ என்னுடன் உனது எல்லையை தாண்டி வர வேண்டும். என்றான் இளைஞன்.

அந்த இடம் ஒன்றும் அதிக தூரம் இல்லை. சில மைல் தூரத்தில் உள்ள நதிகரைதான் அரசனின் எல்லை.

அரசன், அங்கே போக வேண்டிய தேவை என்ன? நீங்கள் எனக்கு இங்கேயே பதில் கூறுங்கள்.என்றார்.

இளைஞன், இல்லை, அவசியம் இருக்கிறது. என்றார்.

இருவரும் நதியை கடந்தனர். கரையை கடந்தவுடன் இளைஞன் நான் தொடர்ந்து போகப் போகிறேன். என்னுடன் வர நீங்கள் தயாரா இதுதான் என் பதில் என்றார்.

அரசன், “என்னால் எப்படி வர முடியும்?  என்னுடைய அரண்மனை, என்னுடைய அரசாங்கம், என்னுடைய
மனைவி, என்னுடைய குழந்தைகள்……. ஆயிரக்கணக்கான கவலைகளும் பிரச்னைகளும் எனக்கு
உள்ளன. என்னால் எப்படி உங்களோடு வர முடியும்?” என்றான்.

இளைஞன், வித்தியாசத்தை பார்த்தாயா, நான் போகிறேன். எனக்கு அரண்மனை, குழந்தைகள், மனைவி, பிரச்னைகள் என
எதுவும் இல்லை. நான் அரண்மனையில் எவ்வளவு மகிழ்வோடு இருந்தேனோ அதே மகிழ்வோடுமரத்தடியிலும் இருப்பேன் – இம்மியளவும் கூடவும் குறைவும் இல்லாமல். நான் காட்டில்இருந்தாலும் சரி, அரண்மனையில் இருந்தாலும் சரி எனது விழிப்புணர்வு அதேதான். என்றார்.

தான் இவ்வளவு மோசமாக நினைத்ததை எண்ணி அரசன் மிக வருந்தினான். அவன் இளைஞனின் காலில் விழுந்து, இப்படி
நினைத்ததற்காக  என்னை மன்னித்து விடுங்கள். என்னை நினைத்தால் எனக்கே கேவலமாக இருக்கிறது. என்றான்.

இளைஞன், அப்படி நினைக்காதே. நீ மன்னிப்பு கேட்டு கண்ணீர் விடுவதால் திரும்பி வருவதற்கு எனக்கு எந்தவிதமான
தயக்கமும் இல்லை. ஆனால் நீ திரும்பவும் கடவுளே, என்னை இவன் திரும்பவும் ஏமாற்றிவிட்டானோ என்று நினைக்க ஆரம்பித்துவிடுவாய். நான் திரும்பவும் வருவதில் எனக்கு எந்த வித கஷ்டமும் இல்லை. ஆனால் உன் மீதுள்ள கருணையால் நான் வரப் போவதில்லை. என்னைபோகவிடு. இந்த முழு உலகமும் பரந்து விரிந்திருக்கிறது, எனக்கு எதுவும் பெரிதாகதேவையில்லை. ஒரு மரநிழல் மட்டுமே போதுமானது. எதுவாக இருந்தாலும் சரியே. என்றார்.

ஆனால் அரசன், இல்லை, இல்லை. நீங்கள் வராவிட்டால் நான் மிகவும் கவலைப்படுவேன், காயப்பட்டுப்போவேன், நான் என்ன செய்துவிட்டேன் என வருத்தப்பட்டுப் போவேன். என்று வலியுறுத்திச் சொன்னான்.

அந்த மனிதர், நீ இப்போது என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிட்டாய். நான் வருவதில் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை என நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ஆனால் நினைவில் வைத்துக் கொள், என்ன வித்தியாசம் என திரும்பவும் உனக்கு தோன்ற ஆரம்பித்துவிடும், என்றார்...

Thursday, March 25, 2021

இரண்டு இட்லி... சிந்தனை

ரெண்டு இட்லி!!

இரக்க குண பெண்மணி ஒருத்தி
தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் சுவர் மேல் வைப்பாள்...

அவ்வழி திரியும் ஒரு கூனல் முதுகு கிழவன் அதை எடுத்துக் கொண்டு
ஏதோ முனங்கிக் கொண்டே போவான்
இது அன்றாட வழக்கமாயிற்று

ஒரு நாள் மதில் அருகிலேயே நின்று
கிழவன் என்ன முனங்குகிறான் என்று செவிமடுத்து கேட்டாள்

அவன் முனகியது இதுதான்
நீ செஞ்ச பாவம் உன்கிட்டேயே இருக்கும்
நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும்

தினந்தோறும் இதையே சொல்லிக் கொண்டு போனான்
தினமும் இட்லி வைக்கிறேன் எடுத்துட்டு போறான்;
நீ மவராசி நல்லா இருக்கணும் என்று
கையெடுத்துக் கும்பிட்டு கை கால்ல விழவில்லைனாலும்
"இட்லி நல்லா இருக்கு என்று பாராட்டவில்லை என்றாலும்
 ரொம்ப நன்றி தாயே என்று சொல்லக் கூடவாத் தோணல 
ஏதோ,... "செஞ்ச பாவம் உன்கிட்டேயே இருக்கும்
செஞ்ச புண்ணியம் உனக்கே திரும்பும் என்று
தினம் தினம் உளறிட்டுப் போறானே'
என்று எண்ணி எண்ணி புலம்பினாள் அவள்.

'இவன் என்ன பித்தனா, இல்ல, சித்தனா, பரதேசி பய' என்று திட்டினாள்
'நன்றி கெட்ட கூனனை' நினைத்து
மன உளைச்சலுக்கு ஆளானாள்
நாளடைவில் அவளது கோபம் தலைக்கேறி
கொலை வெறியாக மாறியது
ஒருநாள் இட்லி மேல் விஷம் கலந்து செத்து தொலையட்டும் என
மதில் மேல் வைக்கப் போனாள்....

மனம் ஏனோ கலங்கியது
கை நடுங்கியது அவன் அப்படி இருந்தாலும் சே...நாம் ஏன் இப்படியாகணும் என்று
அந்த விஷம் கலந்த இட்லியை சாக்கடையில் எறிந்து விட்டு
வேறு நல்ல இட்லியை மதில் மேல் வைத்து விட்டு மனம் அமைதியானாள்.

வழக்கம் போல் கூனக் கிழவன் வந்தான்
இட்லியை எடுத்துக் கொண்டு
வழக்கம்போல
நீ செஞ்ச பாவம் உன்கிட்டேயே இருக்கும் 
நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும்
என்று சொல்லிக் கொண்டே சென்றான்!
அவனை அப்படியே அறையலாம் போலிருந்தது அந்த பெண்மணிக்கு

அன்று மதியம் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தாள்
வாசலில் வாலிபன் ஒருவன்
கசங்கிய உடையோடு தள்ளாடிய படி நின்றிருந்தான்

வேலையோடுதான் திரும்புவேன் என்று சொல்லி விட்டு ஒரு மாதம் முன்பு வேலை தேடி வீட்டை விட்டு சென்ற அவளது ஒரே மகன்தான் அவன்!.

"அம்மா, வீட்டுக்கு திரும்பி வரும் போது
என் பர்ஸ் காணாம போச்சு கையில காசு இல்ல
தெரிஞ்சவங்க யாரும் கண்ணுல படல
மணிக் கணக்கில நடந்து வந்துட்டே இருந்தேன்
நல்ல வெய்யில் அகோரப் பசி வேறு
மயங்கி விழுந்துட்டேன்
கண் முழிச்சு பாத்தப்போ...
யாரோ ஒரு கூனமுதுகு கிழவன்
என்னை தூக்கி உட்கார வச்சு
ரெண்டு இட்லி கொடுத்து சாப்பிடச் சொன்னார்

இட்லி சாப்பிட்ட பிறகுதான் எனக்கு உயிரே வந்தது
இதைக் கேட்டதும் பேயறைந்தது போல் அதிர்ச்சி அடைந்தாள்

'விஷம் கலந்த இட்லியை கூனனுக்கு கொடுத்திருந்தால்...
அது என் மகனுக்கே எமனாக ஆகியிருக்குமே ஆண்டவா
என்று நினைத்து தாய் உள்ளம் பதைபதைத்தது கண்கள் பனித்தன..

"நீ செஞ்ச பாவம் உன்கிட்டேயே இருக்கும்
நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் "
...கூனன் முனகலின் பொருள் இப்போது நன்கு புரிந்தது!
உண்மைதான் ...

எல்லாருக்கும் எல்லாம் புரிவதில்லை...

புரியும் வேளையில் வாழ யாரும் இருப்பதும் இல்லை....

செய்த தர்மம் என்றும் நம்மை ஏதாவது ஒரு ரூபத்தில் காக்கும்

ஏதேனும் ஒரு தர்மம் செய்யும் சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள்

வாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே.

Tuesday, March 23, 2021

மன சாட்சி... சிறுகதை





ஒருமுறை, கென்ய ஓட்ட பந்தய வீரர் எபெல் முடய், எல்லை குறியை அடைய சில மீட்டர் தூரம் தான் இருந்தது. 

ஆனால் குறியீடுகளை பார்த்து குழம்பி போய் இலக்கை அடைந்து விட்டதாக நினைத்து நின்று விட்டார்.

பின்னால் வந்த ஸ்பெயின் நாட்டின் ஐவன் பெர்னான்டஸ் இதை சுதாரித்து கொண்டு எபெலை தொடர்ந்து ஓட சொல்லி சத்தமிட்டார். எபெலுக்கு ஸ்பானிய மொழி தெரியாததால் இவர் சொன்னது புரியவில்லை.

இதை புரிந்து கொண்ட ஐவன் பெர்னான்டஸ், முடய்'யை இலக்குக்கு நேராய் உந்தி தள்ளினார்.

ஏன் இப்படி செய்தீர்கள் என்று பத்திரிக்கையாளர்கள் ஐவனிடம் கேட்டபோது, 

"என்றாவது ஒரு நாள் நாம் ஒருவரை ஒருவர் வெற்றிக்கு நேராய் உந்தி தள்ளுகிற ஒரு சமுதாயமாக மாறுவோம் என்பது தான் என கனவு" என்றார்...

ஏன் அந்த கென்னியரை வெல்ல விட்டீர்கள் என்று பத்திரிகையாளர் மறுபடியும் கேட்ட போது, "நான் அவரை வெற்றிபெற விடவில்லை, அவரே வெற்றிக்கு அருகில் வந்து விட்டார். இந்த பந்தயம் அவருடையது" என்றார்....

நீங்கள் வென்றிருக்கலாம் என்று பத்திரிகையாளர் மறுபடியும் கேட்ட போது, 

அந்த வெற்றியின் சிறப்பு என்னவாக இருக்கும்? 

இந்த பதக்கத்திற்கு என்ன மரியாதை இருக்கும்?

என் தாய் ..எனது குடும்பம் என்ன நினைப்பார்கள்?

நற்பண்புகள் ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லப்படுகிறது. 

நாம் நம் குழந்தைகளுக்கு எப்படி பட்ட பண்புகளை கற்று கொடுக்கிறோம்?
எந்த அளவுக்கு மற்றவர்களை நற்பண்புகளால் ஈர்க்கிறோம்? நம்மில் பலரும் மற்றவர்களின் பலவீனத்தில் உதவி செய்வதை விட அதை நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறோம். 

சுயநலமாய் இருப்பதை விட்டு,ஒருவரை ஒருவர் வெற்றிக்கு நேராய் உந்தி தள்ளுவோம். நாம் எல்லாருமே வெற்றிக்கு தகுதி ஆனவர்கள்... 

என்று கூறி முடித்தார்.

 *நீதி:* *மனசாட்சியே இறைவனின் ஆட்சி..* *மனசாட்சியை கொல்லும்போதே/கேட்காமல் சுயநலமாய் செயல்படும்போதே இறைவன் அங்கிருந்து நீங்கிவிடுகிறார்.* *வெறுமனே தெய்வத்தை வணங்குவது மட்டும் பயனில்லை.*

Sunday, March 21, 2021

அம்மா...

இரவு 11 மணி. சாலையில் ஓர் வாடகை டாக்ஸி வேகமாகச் சென்று கொண்டிருந்தது. 


ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, டாக்ஸி என கையசைத்து நிறுத்தினார். 

'தம்பி ஆஸ்பத்திரி போகனும்'.

'நான் சாப்பிட்டுட்டு,படுக்கப் போற நேரம்'.

'என் மகளுக்கு பிரசவ நேரம்பா, தயவுசெய்து வரமாட்டேன்னு சொல்லிடாதேப்பா’ என்றார் அப்பெண்மணி.

'நீங்க இவ்வளவு சொல்றதாலே வர்றேன். 500 ரூபா ஆகும்' என்றான் அந்த டாக்ஸி ஓட்டும் இளைஞன்.

அப்பெண்மணி, 500 ரூபா என்ன 1000 ரூபாய் கேட்டால் கூட தர சம்மதம் என்பது போல் வேக வேகமாக தலையாட்டி சம்மதிக்க, டாக்ஸி அவர்களுடன் மருத்துவமனைக்கு விரைந்தது.

டாக்ஸி ரெயில்வே கேட்டை நெருங்கவும், எச்சரிக்கை மணி ஒலிக்க கேட் மூடப்பட்டது.

அக்கர்ப்பினியின் முனகல் சற்று அலறலாக மாறியது. நல்ல வேளை அந்த நேரத்தில் அங்கு யாரும் இல்லை.

இரண்டு ரயில் வண்டிகள் எதிர் எதிர் திசையில் கடக்க, பத்து நிமிடத்தில் கேட் திறந்தது.

இப்போது டாக்ஸி, இன்னும் சற்று வேகமாக ஓடி மருத்துவமனையில் நின்றது.

நடுநிசியின் நிசப்தத்தைக் கிழித்தது, அப்பிரசவத் தாயின் அலறல். 

மூடிய விழிகளில் நீர் மல்க, அந்த நடுத்தர வயதுப் பெண்மணி கைகளைக் கூப்பி மகளுக்காக இறைவனிடம் வேண்டினாள்.

அந்த டாக்ஸி இளைஞனும் அமைதியாக அங்கே நின்றிருந்தான்.

சற்று நேரத்தில் சுகப் பிரசவம்.

'தம்பி, ரொம்ப நன்றிப்பா. இந்தா நீ கேட்ட பணம்’ என பணத்தை நீட்டினாள் அப்பெண்மணி.

'வேனம்மா. எங்கம்மா என்னைப் பெற எவ்வளவு வேதனைப் பட்டிருபாங்கன்னு, கடவுள் எனக்குப் புரிய வைச்சிருச்சு. பணத்தை நீங்களே வையிங்' என்று சொன்னபடி நடக்க ஆரம்பித்தான்.

ஏதோ யோசிக்க மொபைலை எடுத்து, ஒரு நம்பரை கண்டுபிடித்து டயல் பன்னினான்.

'ஹலோ முதியோர் இல்லமா'?

'ஆமா. என்ன இந்த நேரத்துல போன் பன்னுறீங்கே'?

'மன்னிக்கவும். நாளு நாளைக்கி முன்னாடி அனாதைன்னு சொல்லிட்டு, ஒருத்தவங்கள உங்க இல்லத்துல சேர்த்தேன் இல்லையா? அவுங்க அனாதை இல்லை. என்ன பெத்த தாய். நாளைக்கு காலையிலே வர்றேன், அவுங்கள கூட்டிட்டு போக' என்றான்.  

முதியோர் இல்ல பொறுப்பாளரின் அனுமதியைக் கூட கேட்காமல், மொபைலை கட் பன்னிவிட்டு வண்டியை தீர்க்கமான முடிவோடு ஸ்டார்ட் செய்தான்..!

Saturday, March 20, 2021

கிழமைக்கு ஏது நேரம்.. காலம்..

*கிழமைக்கு ஏது நேரம்.. காலம்..!!* 

பக்கத்து வீட்டு சங்ரம்மாவின் ஐந்து வயது மகள்..
 
ப்ரியாவிடம் வந்து, ” தம்பிப் பாப்பாவுக்கு காய்ச்சல். அம்மா உங்ககிட்ட 100 ரூபா வாங்கிட்டு வரச் சொன்னாங்க ” என்று..

அந்த பிஞ்சு மழலை மொழியில் சொல்ல, ப்ரியாவிற்கு கோபம் தலைக்கேறியது.

“ஏண்டி… ஒங்கம்மாவுக்கு என்னக்கி காசு கேக்கறதுன்னு வெவஸ்தையேயில்ல. வெள்ளிக் கிழமயும் அதுவுமா, காலங்காத்தால. போடி, போய், ‘இல்லே’ன்னு சொல்லு” என்று சொல்லும்போதே..

“ஏய் ப்ரியா” என்று கூப்பிட்டபடி வந்தான், ப்ரியாவின் கணவன் அழகர்.

“போன மாசம் உங்கப்பாவுக்கு இருதய ஆபரேஷன் பண்ணினோமே… அன்னிக்கு என்ன கிழமை ?” என்று ப்ரியாவைக் கேட்க,

ப்ரியா, “வெள்ளிக் கிழமை” என்றாள்.

“ஆபரேஷனுக்கு டாக்டர் கட்டச் சொன்ன ஒரு லட்சத்த, நம்ம ரமேஷ், அவன் ஒய்ஃபோட நகைய அடமானம் வெச்சுக் குடுத்தான். 

‘வெள்ளிக் கிழமையாச்சே’ன்னு, ரமேஷோட பொண்டாட்டி நினைச்சிருந்தா, ஒங்கப்பா உயிரோட இருந்திருப்பாரா? இறந்திருப்பாரு. 

வெள்ளிக் கிழமையும், செவ்வாக் கிழமையும் உடம்புல உயிர் இருக்குற மட்டுந்தான். 

பர்ஸ்ல பணம் இருக்கு. 100 ரூபாயக் குடுத்தனுப்பு” என்றபடி, சாமி அறைக்குள் சென்றான் அழகர்.

Sunday, November 23, 2014

உலகம் அழியப்போகும் இன்னும் சில தினங்களில்



வானம் உடையுமா ?
நிலா மண்ணில் விழுமா ?
கடல் கரைத்தாண்டுமா ?
எரிமலை வீட்டின் அடுப்புக்குள் புகுமா ?
இமயம் இல்லாமல் போகுமா ?
இந்த பூமி உருண்டு ஓடுமா ?

இந்த பூமிக்கு முடிவு எப்படி இருக்கும்
என மனிதர்களுக்கு பெரும் பயம் கலந்த ஆவல் !

அடுத்தநாள் நாளிதழில்
இன்னும் இரண்டு நாளில்
நிலா உடையும்
உடைந்து
நிலா துகள்கள் பாறைகள் பூமியை தாக்கும்
என அறிவிப்பு...

மண்ணை பார்த்து நடந்த பெண்களும்
பெண்ணை பார்த்து நடந்த ஆண்களும்
இரண்டு நாளாக நிலாவை பார்த்தபடியே நடக்கிறார்கள்...

நிலாவைப் பற்றி வர்ணித்த பேனாக்கள் எல்லாம்
இப்போது நிலாவை பற்றி வரலாறு எழுத ஆரம்பித்தது....

நிலா கவிஞர்கள் கண்ணில்
நிலா பெரும் பாரத்தை தூக்கி வைத்தது...

பெண்ணை நிலா என கூறியவர்கள்
நிலா தான் பெண் என மாற்றி பேச ஆரம்பித்தனர்...

இரண்டு நாள் கழிய சில மணிநேரம்
பாக்கியாக வந்தது

கிட்டத்தட்ட பூமியின் முடிவு
உறுதியானது.

நிலா உடையும் சத்தம்
நீலாம்பூர் வரை செவி அடைத்தது...

அனைத்து தொழிற்சாலையும்
விடுமுறை அறிவிக்கப்பட்டுவிட்டது...

வெளியூர் வேலை வாசிகள்
முண்டியடித்து குடும்பத்துடன் சேர்ந்து போக
பேருந்தைத் தேடி...

பங்களாவாசிகள் பதுக்காத மீதிப் பணத்தை
பதுக்க பாதாளம் தேடி...

சில காதல் வாசிகள்
இறுதி முத்தத்தைத் தேடி...

போதை வாசிகள்
மரண வலி தெரியக் கூடாது என
டாஸ்மாக் தேடி...

பாச வாசிகள்
இறுதி கட்ட பாசம் காட்ட
தொலை பேசி தேடி...

ஆன்மீக வாசிகள்
சிறப்புப் பிரார்த்தனை என
தேவாலயம் , கோவில், மசூதி தேடி...

சாலை எங்கிலும்
மக்கள் நெரிசல் சாலை விதிகளை மீறி
மாரத்தான் ஓட்டம்...

டாஸ்மாக்கில் குடிக்கும் கணவனை
வீட்டிற்கு வரச்சொல்லி அழுகை...

துடிக்கும் இதயம் எல்லாம் துடி துடிக்க
ஆரம்பித்துவிட்டது...

முன் பதிவு செய்து கட்டிக்கொண்ட
கல்லறையில் அடுத்தவன் புகுந்துவிட கூடாது
என தன் கல்லறையை தேடி...

இன்னும் சில நிமிடம் தான்
என அறிவிப்பு வந்தது...

தொலைகாட்சி சிறப்பு செய்தி

அழிவைப் பற்றி அறிவிப்பு வாசிப்பாளர்
கடைசி நிமிடம் என தெரிந்தும் முகத்தில் மேக்கப்பும்
புது சேலையும் செயற்கையாய் ஒட்டி வைத்த சிரிப்புடன்...

போக்குவரத்து நெரிசலில் சிக்கி நடந்தே வீட்டிற்கு
ஓடும் ஒபாமாவையும்...

தூய்மை இந்தியாவிற்காக
விளம்பரத்திற்கு நடிக்க
வந்த நடிகைகளையும் நடிகர்களையும்
மரணபயம் முகத்தில் விளையாட
விளக்குமாறை கீழே போட்டுவிட்டு ஓடுவதை
காட்டிக்கொண்டு இருந்தது...

நிலா பாறைகள் பூமியை நோக்கி
கண்ணில் தெரியும் தூரம்...

சில நொடிகள்

உலகமே மரண பயம் வாயை அடைத்துகொண்டது
பூமியெங்கும் சப்தம் நின்று நிசப்தம் பரவியது...

வீட்டை தேடும் பதட்டத்தில்
ஒரு தாய் தன் கைக் குழந்தையை மறந்தாள்...

குழந்தை பசிக்கு அழுதது
பூமியின் நிசப்தத்தால் அழுகை
சிங்காநல்லூரில் இருந்து சிங்கப்பூர்வரை
எதிரொலித்தது...

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த
பசு ஒன்று குழந்தை அருகில் வந்தது
குழந்தை பசுமாட்டின் காலைபிடித்து
மடிதேடி வாய் வைத்தது...!

~மகி

Thursday, July 17, 2014

அன்பு தங்கைக்கு

அன்பு தங்கை
அதென்ன அன்பு தங்கை ?

 


அன்பு என்றாலே தங்கைதான்.. அவசர பட்டு எழுதி விட்டேன்

அழகு என்னும் திமிர் பிடித்த பெண்கள் மத்தியில் , திமிரி வழிந்தோடும் அன்பு எடுத்தவள் நீ

திமிரி திரிந்த காளையாய் நான் இருக்க
கடிவாளம் உன் பாசமம்மா

நான் பிறந்த பயன் நீ என்னை அண்ணா என்று அழைத்தபோதே அடைந்துவிட்டேன் மா...

வேறென்ன வேணும் ஏழு ஜென்மத்திற்கு எனக்கு இந்த ஆசிர்வாதம் போதுமம்மா...

பாதி வயதிலே பல மடங்கு அனுபவம் வாய்ந்தவள் நீ...

நாடாளும் அரசன் நான் ஆனாலும் உந்தன் அறிவுரை வேணுமம்மா...

நீ சிரித்து மட்டும் பேச தெரிந்தவள் அல்ல அதில் சிந்தனை கலந்த சொல் கொண்ட சரஸ்வதி நீ யம்மா.

ஒருநாளும் உன் பேச்சை தட்டிப் போவேனா, என் எண்ணம் எல்லாம் தடம்புரள ஆவேனா !

நீ குழந்தை என்றாலும் எனக்கு உன் வாக்கு தெய்வவாக்கு தானம்மா
உனக்கு மூத்தவன் என்றாலும்

உனக்கு முதல் குழந்தை நான்தானம்மா
வாழ்வின் அர்த்தங்களில் முதலிடமாய் நீ..

சந்தேகம் வேண்டாம்.. அண்ணிக்கு ஆறு குழந்தை பெற்றாலும் அவளே சொல்லிடுவாள் அவளுக்கு மூத்த குழந்தை நீதான் என்று...

எத்தனை வெயில் காலம் , பனிக்காலம் மாறி மாறி வந்தாலும் நம் பாசக்காலம் மாறாது...

உன் பாசம் தொட்டுதான் என் பணியும் தொடங்கும்...

கோபத்தையும் கொள்ளும், அந்த கோபத்தையும் கொல்லும் சிரித்த பார்வை சக்தி உனக்கு.

உன் விருப்பம் அதுவென்று உனக்கென வாழாமல்
என் விருப்பம் உனதாக்கி உருகி வாழும் தேவமகள்...

வசந்த காலம் எனக்கு எது என்றால் உன் புன்னகை உதிரும் காலம்தான் .
எனக்கு இலையுதிர்காலம் எதுவென்றால் உன் கண்ணில் கண்ணீர் உதிரும் காலமம்மா...

உன் பாசம் கண்ட இந்த ஜென்மம் இது போதுமம்மா எனக்கு இன்னும் இரண்டு ஜென்மம் வேண்டும் அதில் ஒன்று
ஒரு தாய் வயிற்றில் நாம் பிறக்க பிறந்திட வேண்டும்...

அடுத்த ஜென்மம் உன் வயிற்றில் நான் பிறந்திட வேண்டும்...

உனக்காக நீ கவிதை கேட்டாயா அதற்கு இன்னும் எழுதலாம் ஆனால்
அதற்கு வான் கொண்ட காகிதம் போதாது.!!!

~மகி அண்ணா

Wednesday, April 02, 2014

அந்த நாளுக்காக எந்நாளும் தயாராக இரு



ஒரு நாள் வரும் 
அது உனக்காக வரும் 

அந்தநாளில் 
உன்னை எதிர் நோக்கியே அனைவரும் 
வருவார்கள்... 

உன் கூக்குரல் செவி கேளாதவர்களுக்கு
உன் மௌனம் செவியடைக்கும்

உன் மௌனத்தைப் பார்த்து
கதறினாலும்
உன்
செவிக்கு எட்டாது...

யார் அழுதாலும்
கண்ணீர் துடைக்கும் உன் கரங்கள்
உனக்காக அழும் போது
உன் கரம் நீளாது...

அன்று

குளிக்க மாட்டாய்
உன்னைக் குளிப்பாட்டுவார்கள்
உடை மாற்றம் செய்ய மாட்டாய்
உனக்கு உடை மாற்றுவார்கள்...

நீ
யாருக்காகவும் வேண்டமாட்டாய்
உன்னை வைத்தே எல்லோரும் வணங்குவார்கள்...

ஒவ்வொருவரின்
முற்றுப் புள்ளிகளுக்கும்
முகவரி தேடியவன்
உன்னுடைய புள்ளிக்கு
பேரம் நடக்கும்...

நீ
அழைத்துச் சென்றது போதும் என
உன்னை அழைத்துச் செல்ல
ஊரே வரும்...

ஊரே
வரும் அப்போதும் உன்னை
தனிமை படுத்திப் போகும்...

கோடிசொத்து
கோடிசொந்தம்...

தெரு கோடி
தெருவோடு...

இதில் எது உனதாக இருந்தாலும்
அந்த நாளில்
கோடி துணியும்
ஆறடியும்
நீண்ட உறக்கம் மட்டுமே
உனதென
உறுதிப்படுத்தும்...

அந்த நாளுக்காக எந்நாளும் தயாராக இரு...

#மகேந்திரன்

Monday, March 24, 2014

இனி ஒரு விதி செய்வோம்..!

இனி ஒரு விதி செய்வோம் !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிபடைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கண்ட தோளினாய் வா வா வா
. - மகாகவி பாரதியார்...

சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதும். எந்தச் சக்தியும் எந்தத் தடையும் அந்தச் சாதனைக்கு முட்டுக்கட்டை போட முடியாது. திறமைகளுக்கு உடல் ஊனமும் கூட ஒரு பொருட்டில்லை.

இறைவனின் படைப்புகளில் மனிதன் ஓர் ஆச்சரியம்!!!

இறைவன் படைப்பில் எத்தனையோ அற்புதங்களை எத்தனையோ அதிசயங்களை நேர்த்தியான படைப்புகளைக் கண்டு வியந்திருக்கிறோம். இறைவனே ஆனாலும் தவறுகளுக்கு விதிவிலக்கு இல்லை, என்று சொல்ல தோன்றும் "செய்வன திருந்த செய் " என்பது மனிதனுக்கு மட்டுமல்ல சில நேரங்களில் கடவுளுக்கும் கூட பொருந்துகிறதோ என்றும் என்ன தோன்றும் . உடலில் ஊனத்தைக் கொடுத்து விட்டு மனதில் ஏக்கத்தையும் அளவுக்கு அதிகமாகவே சுமந்து வாழ்கிறார்கள். இது கர்மவினை என்றோ பூர்வ ஜென்ம பலன் என்றோ மனதை தேற்றிக்கொள்ளக் முடிவதில்லை. உடல் ஊனம் என்ற நிலையில் அம்மனிதர்கள் படுகின்ற வேதனைகளை பார்த்தால் கடவுள் மீதும் கோபம் கொள்ள தோன்றும் ...ஏன் இப்படி, எதற்கு இப்படிப் படைத்தான் என்ற விடைதெரியாத கேள்விக்கு எல்லாம் விளக்கம் தன்னம்பிக்கையே இறைவன் வடிவம் அவன் கரம் பிடித்தோர் தோற்றதாக எந்த சரித்திரமும் இல்லை .

தன்னம்பிக்கை இழந்த வர்கள் பலர் பிறரை போலத் தான் இல்லையே என்று தன் குறைபாட்டை எண்ணி , ஏங்கி மண்ணோடு மண்ணாக மட்கிப்போய் விடுகின்றனர். ஆனால் ஒரு சிலரோ தன் ஊனத்தைப் பொருட்படுத்தாமல், அதை ஒரு குறையாக எண்ணாமல் தன் மனதில் வைராக்கியத்தை வளர்த்துக், தன்னம்பிக்கை என்னும் மகா சக்தி தந்துனை கொண்டு தன்னைத்தானே செதுக்கி கொள்ளும் சிற்பியாகி தனது பல்வேறு திறன்களால் தன்னைச் செதுக்கிக் கொண்டு சாதித்து உலகில் தங்கள் சுவடு பதித்து நிலைத்து நிற்கின்றனர். அவர்களைப் படைத்த இறைவனே அவர்களைக் கண்டு வியக்கும் வண்ணம் ஜொலிக்கின்றனர்.

இதுபோலத் தன் திறமைகளால் தன்னையே செதுக்கி கொண்ட ஒரு சாதனை சிற்பி தான் 17- வயதாகும் கலைவாணி என்ற சிறுமி ...

கலைவாணி பிறந்த சில நாட்களிலேயே தந்தை சக்திவேல் காலமானார். தாயார் கண்ணம்மாள் தந்தைக்குப் பிறகு கீரை வியாபாரம் செய்து கலைவாணியை வளர்த்து வந்தார். கலைவாணி கைக்குழந்தையாய் இருந்த பொழுது கூப்பிட்டால் திரும்பி பார்ப்பதில்லை, கத்தி அழுவதோ எந்தச் சப்தமும் தருவதோ இல்லை.. என்ற போதுதான் கலைவாணிக்கு ஏதோ பிரச்சினை இருப்பதை உணர்ந்தார் தாய் கண்ணம்மாள். மேலும் கலைவாணி மற்றக் குழந்தைகள் போல் இல்லாமல் தனித்து இருந்ததையும், மற்றக் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடாமல் எந்தச் சராசரி நடவடிக்கைகளும் இல்லாமல் இருப்பதைக் கண்ட தாயார் மிகவும் வருந்தி உறவினர்களின் உதவியை நாடினார். அவர்களுக்கும் போதிய படிப்பறிவும், விழிப்புணர்வும் இல்லாத காரணத்தால் மந்திரித்துப் பார்க்கும்படி கூறினர். அது எந்தப் பலனும் அளிக்காததால் கண்ணம்மாள் என்ன செய்வதென்று தெரியாமல் மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு மகள் கலைவாணியை அழைத்துச் சென்றார். அப்போதுதான் தன் மகள் கலைவாணிக்கு காது கேட்கவோ , வாய் பேசவோ முடியாது என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். அவரிடம் மருத்துவர்கள் இவர்களைப் போன்ற குழந்தைகளுக்கு என்று தனியாகப் பள்ளிக்கூடங்கள், காப்பகங்கள், தனிக் கல்விமுறைகள், விளையாட்டு முறைகள் போன்றவை இருப்பதைத் தெரியப்படுத்தினர். அங்குக் கலைவாணியைச் சேர்ப்பதன் மூலம் அவளது தனிமையைப் போக்க முடியும் என்பதைத் தாய் கண்ணம்மாவிற்கு உணர்த்தினர். அதன் பிறகு மூன்று வருடங்களாக அதற்கான முயற்சியை மேற்கொண்ட அந்த தாய் பல இடங்களில் தேடி இறுதியாக திருப்பூர் காது கேளாதோர் பள்ளியில் கலைவாணியைச் சேர்த்தார்.

இங்குத் தனிப்பட்ட சிறப்புப் பாட முறைகள், ஆதரவு, அன்பு, அனுசரணை போன்றவற்றால் கலைவாணி மிக விரைவிலேயே இங்கு உள்ள குழந்தைகளுடனும் ஐக்கியமாகி விட்டார். தனக்குள் இருக்கும் தனித் திறமைகளைச் சரியான முறையில் புரிந்து கொண்டு அவற்றை வளர்த்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்தாள்.

தற்போது 11ஆம் வகுப்பு படித்து வரும் கலைவாணியின் ஆற்றலையும், தனித் திறமைகளையும், சாதனைகளையும் பற்றிச் சொல்வதென்றால் நாளெல்லாம் சொல்லிக் கொண்டே போகலாம். காது கேட்க, வாய் பேச இயலாத நிலையிலும் கலைவாணி 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் 82 % மதிப்பெண்கள் பெற்றுப் பள்ளியில் முதலிடம் பெற்றாள். கடந்த வருடம் 2003-2004க்கான தமிழக அரசு மாநில அளவில் நடத்திய மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் ஓட்டப் பந்தயப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை வென்றாள்.
அது மட்டுமல்லாமல் ஓவியக் கலையிலும் சிறப்பாகப் பயிற்சி பெற்று கோவை பாரதியார் பல்கலை கழகத்தில் நடந்த ஓவியப் போட்டியிலும் கலந்து கொண்டு சிறப்பாக ஓவியம் வரைந்து முதல் பரிசை தட்டிச் சென்றாள் . மேலும் கணினித் துறையிலும் திறமை வாய்ந்தவராகத் திகழ்கிறார். இதுவரையிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட பதக்கங்களும், 100க்கும் மேற்பட்ட சான்றிதழ்களும் வென்றுள்ளார்.

இது போன்ற வெற்றிகளை எல்லாம் யார் வேண்டுமானாலும் சற்று முயற்சி செய்தால் சாதித்துக் காட்டலாம் . ஆனால் இவை எல்லாம் தாண்டி கலைவாணியிடம் இருக்கும் திறமையோ இறைவனையே இவரைப் படைத்தற்காகப் பெருமிதம் கொள்ளச் செய்யும். இனி இந்தத் தவறை செய்யாமல் இருக்கவேண்டும் என்று நினைக்க வைக்கும்.

வாய் பேச முடியாத காது கேளாத கலைவாணி ஒரு சிறந்த நடனக் கலைஞரும் கூட ...

இசைக்கு ஏற்ப நடனம் ஆடும் திறமை வாய்ந்த அதிசய படைப்பான இவள் கலைவாணி என்ற பெயருக்கேற்ப கலைகளின் தேவதை தான் ...

கலைவாணியின் இந்த நடன திறனை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்ட சன் டிவியில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சாதனையாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. அதில் நடந்த 13 வார நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் பரிசாக 5 லட்சம் வென்றார். காது கேட்க முடியாத இவரால் இசையை உணந்து அதற்கு ஏற்ப ஆட முடியும் என்பதை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டிய சன் டிவிக்கு நன்றி. கலைவாணியைப் படைத்த இறைவனையும் இவரைக் கண்டு பிரமிக்க வைக்கும் இந்தத் திறமை ஒவ்வொரு மாற்றுத் திறனாளிக்கும் ஊக்கத்தைக் கொடுக்கிறது. தன்னாலும் சாதிக்க முடியும் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

இவருக்குக் கற்றுத் தரும் ஆசிரியர்களான சித்ரா மற்றும் ஸ்ரீனிவாசனிடம் கேட்ட போது, "பொதுவாகக் கலைவாணி மிகவும் துடிப்பு நிறைந்த சுறுசுறுப்பான பெண் , அவள் குழந்தை பருவத்தில் இருந்தே எல்லாப் பாடங்களிலும் எல்லாத் துறையிலும் முன்னிலை பெற்று வருவாள். சாதாரண மாணவர்களைக் காட்டிலும் கலைவாணி மிகவும் திறமைசாலியாகவே காணப்படுவாள். சொல்வதை எளிதில் புரிந்து கொள்வாள். இதைவிட மேலும் இவள் சாதிப்பாள் என்ற நம்பிக்கை எங்களுக்கு நிறையவே இருக்கிறது " என்று பெருமிதம் கொண்டார்கள்.

இவராலேயே இவ்வளவு சாதிக்க முடியும் என்றால், எந்த முயற்சியும் இல்லாமல் வாழ்ந்து மண்ணோடு மண்ணாகும் குறைகள் இல்லாத மனிதர்கள் உண்மையாக முயற்சித்தால் சுலபமாக வெல்லலாம். இன்னும் எவ்வளவோ சாதிக்கலாம். இதுபோன்ற மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் உலகை வெல்லத் துடிக்கும் இன்னும் எத்தனையோ கலை தேவதைகள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் தங்கள் சாதனைகளில் வென்று மகிழ்வுற வாழ்த்துவோம் !!! கலைவாணிக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துக்கள் !!!

‪#‎மகேந்திரன்‬

Sunday, May 05, 2013

இப்போ உனக்கு நிம்மதியா...

உனக்கு என்ன
உன்
நினைவுகளை
எனக்கு அனுப்பிவிட்டு
நீ
நிம்மதியாக உறங்க
போய்விட்டாய்...

இங்கு
உன் நியாபகங்கள்
என்னை
படுத்தும்பாடு
உனக்கு
எங்க தெரியபோகிறது..!

-மகி

Sunday, March 24, 2013

கொள்ள வந்தாயா..? கொல்ல வந்தாயா..? ~மகியின் கவிதைகள்

நீ
காதல் கொள்வதற்கு வந்தாயா
காதலால் கொல்வதற்கு வந்தாயா

என புரியவில்லை...

அருகில் இருப்பாய்
பார்வைகளால் கொல்வாய்...

தூரத்தில் இருப்பாய்
ஞாபகத்தால் கொல்வாய்...

யாரடி நீ மோகினி..?

 

 

நட்பின்
இலக்கணம் அனைத்தும்
நிறைந்த காதலியடி
நீ...

உனக்கும் எனக்கும் போட்டி வரும்...
சண்டை வரும்...

எல்லாவற்றிக்கும்
உன்னை விட்டுக்கொடுத்து
என்னையே
ஜெய்க்க வைக்கிறாயடி
நீ..!

 

உன்னைவிட
நான்
ஒன்றும்
அவளவு அழகு இல்லை...

ஆனாலும்

உன்னோடு
நான்
இருக்கும்
ஒவ்வொரு கணமும்
இந்த
உலகிலேயே
நான் தான் பேரழகனாய்
தெரிகிறேன்..! 

 

உன்
துன்பங்களுக்கு
என்
தோள்களுக்கு மட்டுமே
பாரமாக இருக்க வேண்டும்
என்று
நீ
விண்ணப்பிக்கும் போது

இருந்த
துன்பங்கள் எல்லாம்
எங்குப்போய் தொலைந்ததோ..!?

 

 

 

உன்னுடைய
கோவங்கள் எல்லாவற்றையும்
எவனோ
ஒருவனுக்காக
சமாதானம் ஆகிறது...

அந்த
எவனோ ஒருவன்
நான் என இருக்கும் போது
உன்னை
நேசிக்காமல்
எப்படி அடி இருக்க
முடியும்..! 

 

உனக்கு
எதெல்லாம் பிடிக்காது
என்று
எனக்கு கற்றுத்தரும்
உன்
கோவம்
எனக்கு ரொம்ப பிடிக்கும்..!

 

சிலநேரம்
உன்னை நினைப்பதை கூட
நிறுத்திவிட்டு
துடிக்க பார்க்கிறது
என் இதயம்...

வெட்டியாக
எதற்கு துடிக்கனும்
என்று தெரியவில்லை...

உன்னை நினைத்தாலே
நூறுவருடம் வாழ்வேனே..! 

Sunday, January 27, 2013

தினமலரில் என்னை பற்றி ~நன்றி தினமலர்

இரக்கமுள்ள மனசுக்கு இன்னொரு பெயர் மகேந்திரன் > முன்பெல்லாம் தெருவோரங்களில் குப்பைகள்தான் கிடக்கும். ஆனால் இப்போதோ பிறந்த குழந்தைகளும், நடமாட முடியாத வயதானவர்களும் கூட குப்பை கூளங்கள் நடுவே மக்கியபடி கிடக்கின்றனர்.

கிடக்கின்றனர் என்பது கொஞ்சம் மரியாதையான வார்ததை, உண்மையில் வீசியெறியப்படுகின்றனர்.

பொதுமக்களைப் பொறுத்தவரை , வீசியெறியப்பட்ட முதியவர்கள் ரத்தகாயமின்றி இருந்தால் ஒரு விநாடி நின்று பார்த்து, "ஐயோ பாவம் ' என சொல்லி செல்வார்கள், அதே வயதானவர்கள் அருவறுப்பான தோற்றத்துடனோ, ரத்த காயத்துடனோ, ஆடைகள் களைந்த நிலையிலோ, நோய் தாக்கிய நிலையிலோ இருந்தால், திரும்பி கூட பார்க்காமல் வேகவேகமாக நடப்பார்கள். அந்த முதியவர்கள் மனநோயாளியாக இருந்துவிட்டால் போதும், எதிர்திசையில் ஒட்டமெடுப்பார்கள். அவர்களைச் சொல்லியும் குறையில்லை அம்மா, மனைவி, குழந்தைகளிடம் கூட பேச நேரமில்லாத அவசர யுகத்தில் வசிக்கின்றனர்.

பொருள் தேடும் உலகில் உயிர்கள் மீதான பாசமும், நேசமும் அவ்வளவுதான்.

ஆனால் எல்லோரும் அப்படியில்லை, ஒரு சிலருக்குள் இன்னமும் மனிதத்தன்மை மரித்து போய்விடாமல்தான் இருக்கிறது,அவர்களில் ஒருவர்தான் கோவை காந்திபுரத்தைச் சேர்ந்த முப்பத்தைந்து வயதாகும் மகி என்கின்ற மகேந்திரன்
கடந்த 2009ம்ஆண்டில் இவரது சகோதரி ஒருவர் திடீரென உடல்நலம் குன்றி ரோட்டில் விழுந்து கிடந்த போது, பலரும் வேடிக்கை பார்த்தார்களே தவிர ஏன் என்று கேட்டு ஒருவரும் உதவி செய்யவரவில்லை.

இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு அதனால் பாதிக்கப்பட்ட மகேந்திரன் அன்று முதல் ரோட்டில் யார் ஒதுங்கிக்கிடந்தாலும், உடனே என்ன ஏது என்று கேட்டு அவர்களை உரிய உறவினர்களிடமோ, காப்பகத்திலோ, ஆஸ்பத்திரியிலோ சேர்த்து வருகிறார்.
வீதியோரம் கிடப்பவரை பார்த்ததும் முதலில் அவருக்கு நல்ல உணவு கொடுத்து தெம்பு ஏற்படுத்துவார், பின் ஆணாக இருந்தால் முடிவெட்டி, முகச்சவரம் செய்வார், நன்றாக குளிக்க வைத்து, புது உடைவாங்கிக்கொடுத்து விடுவார், பார்ப்பவர்கள், "கொஞ்ச நேரத்திற்கு முன் ரோட்டில் கிடந்த ஆளா இது!' என்று ஆச்சசரியப்படும் அளவிற்கு ஆளை மாற்றிவிடுவார் .

அதன் பிறகு அவர்கள் அருகில் அமர்ந்து விசாரிப்பார், முடிந்தவரை அவர்களை, அவர்களது உறவினருடன் சேர்த்து விடுவார், முடியாத போது காப்பகங்களிலும், சிகிச்சை தேவை எனில் ஆஸ்பத்திரியிலும் சேர்த்துவிடுவார்.
காப்பகத்தில் சேர்த்தாலும் சரி, ஆஸ்பத்திரியில் சேர்த்தாலும் சரி , சேர்த்ததோடு தனது கடமை முடிந்ததாக கருதாமல், அவ்வப்போது போய் பார்த்து ஒரு உறவினராக, நண்பனாக நடந்து கொள்வார்.

பதினெட்டு வருடங்களுக்கு முன் காணாமல் போன மகனை நினைத்து அழுதவர்கள் முன் இந்தாருங்கள் உங்கள் பிள்ளை என்று நிறுத்தி, அந்த குடும்பத்தின் நீண்ட கால வேதனை கண்ணீரை, ஆனந்த கண்ணீராக மாற்றியுள்ளார். மன நோயாளிகள் பலர் இவரது அன்பால் மன நோய் நீங்கிப்பெற்று தற்போது திருமணம் முடிந்து நல்லபடியாக இருக்கின்றனர், தெருவோரம் கேட்பாரற்று கிடந்த பாட்டிகளும், தாத்தாக்களும் இப்போது காப்பகத்தில் உற்சாகமாக வலம் வருகின்றனர்.
ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனில்லாமல் இறந்துபோய் "அநாதை பிணங்கள்' என முத்திரை குத்தப்படுபவர்களின் உடல்களை, "நானே அவரது உறவினர் என்று தானே வலியப் பெற்று' அவர்களது உடலை மாலை மரியாதையுடன் நல்லடக்கம் செய்தும் வருகிறார்.

தீபாவளி பொங்கல் என்றால் உறவினர்களை அழைப்பது போல அரவாணிகள், உடல் ஊனமுற்றவர்ககள், முதியவர்களை அழைத்து விருந்து கொடுத்து அவர்களை மகிழ்விப்பதன் மூலம் குடும்பத்துடன் தானும் மகிழ்ந்து வருகிறார்.
ஈர நெஞ்சம் என்ற அமைப்பை ஏற்படுத்தி இத்தகைய தொண்டாற்றிவரும் மகேந்திரனின் இந்த பணிக்கு பெரும் பலமாக இருந்து உதவுபவர்கள் பாலசந்திரன், பரிமளா வகீசன், தபசுராஜ், சுரேஷ் கணபதி, கணேஷ் குமார், மணிமேகலை, வசந்திரா, மோகனசுந்தரம், செண்பகம், பழநியப்பன் ஆகிய நண்பர்களும், இவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நம்பி தோள்கொடுக்கும் அன்னை தெரசா காப்பகம், பிரபஞ்ச அமைதி சேவாலயம், சாய்பாபா முதியோர் இல்லம், அன்பாலயம், சாய் முதியோர் இல்லம், கருணாலயம் ஆகிய காப்பகங்களும்தான்.

இவரால் நலமடைந்து பலனடைந்தவர்களின் பட்டியல் மிக நீளமானது. இப்போது கோவை வீதியில் யாரேனும் விழுந்து கிடந்தால், "கூப்பிடு மகேந்திரனை' என்று சொல்லுமளவிற்கு பிரபலமடைந்துவிட்டார்.
ஒரு வார்த்தை மகேந்திரனை வெறுமனே கூப்பிட்டு வாழ்த்தினால் கூட போதும், இன்னும் ஆயிரம் பேரை காப்பாற்றும் தெம்பும், திராணியும் அவருக்கு கிடைத்துவிடும், மகேந்திரனை வாழ்த்த விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள; 9843344991, 9600400120

தினமலரில் 

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=634850

Sunday, January 20, 2013

மகியின் கவிதைகள்...


 
நீ  
தோளில் சாய்த்து
பயணித்த கனவுகளில்...

நான்இன்னும்
பயணித்துக்கொண்டே
இருக்கிறேன்..!
'தீதும் நன்றும் பிறர் தர வாரா'

காதலும் அதற்க்கான ஆறுதலும் நீயே தர வாராய்...
 
பேய் வீடு கண்டு
அஞ்சுவது போல...

நீ
இல்லாத
பகலை கண்டும்
அஞ்சி நடுங்குகிறேன்..!
 
சிறு
புன்னகை துளியில் தள்ளிவிட்டு...

காதல் கடலில்
தத்தளிக்க விட்டு விட்டு
போகிறாய்..!
 
உன் பார்வை வேப்பதிர்க்காகவும்
உன் பார்வை வெப்பத்திலும்
தவம் இருக்க வேண்டும்

மார்களியல்லாது
சித்திரையிலும்..!
 
புன்னகையை புயலாக்குவது...

புயலை பூவாக்குவதும்...

காதலுக்கு
கைவந்த கலை..!
 
ஆயிரம் ஏவுகணைகள்
அவள் பார்வையில்...
எனக்கு
மட்டும் சொந்தமாகவேண்டும்
அதன் தாக்குதல்..!
 
நீ இரவில் சூரியாங்க வருகிறாய்
பகலில் நிலாவாக வருகிறாய்
வேற்கின்ற போது அனலை மூடிகிறாய்
குளிர்கின்ற போது விசிரிவிடுகிறாய்
உன்
வார்த்தைகள் , பார்வைகள் , ஸ்பரிசங்கள் எல்லாம்
விசேஷ காலங்களில்
நான் உடுத்தும் ஆடைகளாக இருக்கிறது..!
 
உன்
விழி ஈர்ப்பு விசையால்
கரைதட்டிய
கப்பல் நான்..!
 
உன்னை
பார்க்கவோ...
பேசவோ...
பழகவோ...
எனக்கு எந்த அச்சமும்
இல்லை..!

ஆனால்
ஒரே ஒரு பயம்தான்
அதன் பிறகு
என்னை மறந்துவிடுவேனோ
என்று..!
 
இசையை போல...

என்
மெய் மறக்க செய்யும்
உன்
நினைவுகளுக்கு தெரிவதில்லை
காரணம்
தான் தானென்று..!
 
நூறு சூரியன் வந்தாலும்
உன் கோவம்
சுட்டேரிப்பதுபோல
எந்த
சூரியனாலும் முடியாது...!
 
எரிக்கும்
உன் கோவம்...

விளக்குகள் இல்லா
இரவு போல
இருக்கிறேன்..!
 
நீ
அந்தி சூரியன்...

உன்னை
பிரிய மனம் இல்லாத
வானம் கருவழிந்து
நிற்கிறது...

என்னை போல..!
 
இன்னும் எந்த எந்த
பழங்கள் தடை
செய்யப்பட்டு
உள்ளதோ...

வா
நீயும் நானும்
தேடி தின்போம்..!
 
எனக்கு
பிடித்தமான கவிதை
உன்
விழிகளை தவிர
வேறு யாரும்
எழுத முடியாது...

உனக்கு
பிடித்தமான கவிதை
என்
குறும்புகளை தவிர
என்னால் கூட
எழுத முடியாது..!
 
  எனக்கு
முன்னதாகவே
உனக்கு
"காலை வணக்கம்"
சொல்ல எழுந்து வந்துவிடும்
இந்த விடியலை
என்ன செய்வது..?
 
பூக்களுக்குள்
தேன் நுழைந்ததுபோல...
எனக்குள்
உன்
நியாபகக்காதல்..! 
 
பூக்களுக்குள்
தேன் நுழைந்ததுபோல...
எனக்குள்
உன்
நியாபகக்காதல்..!
 

Sunday, December 09, 2012

வரி வரியாக எழுதுகிறேன்..!

விரல்களை தாண்டி வளர்ந்த நகம்மடி
உன் நினைவுகள்...
வெட்டிவிடத்தான் முடியும்
வேரோடு பிடிங்கினால்
உயிர் போகும்
வலியடி..!


விரல்களை தாண்டி வளர்ந்த நகம்மடி 
உன் நினைவுகள்...
வெட்டிவிடத்தான் முடியும் 
வேரோடு பிடிங்கினால் 
உயிர் போகும் 
வலியடி..!
~மகி 

வரி வரியாக
எழுதுகிறேன்..!

என்

காதல்

ஒரு வரியில்
உனக்கு புரியாதா
என்று..!


வரி வரியாக 
எழுதுகிறேன்..!

என் காதல் 

உனக்கு 
ஒரு வரியில் 
உனக்கு புரியாதா 
என்று..!
~மகி

Friday, December 07, 2012

காதல் வானிலே

கன்னாபின்னான்னு கிறுக்கும்
இந்த
கவிதையெல்லாம் என்னுடையது...
அதன்
காப்பி ரைட்
உன்னுடையது..!

கன்னாபின்னான்னு கிறுக்கும்
இந்த 
கவிதையெல்லாம் என்னுடையது...
அதன்
காப்பி ரைட்
உன்னுடையது..!
~மகி 
 
ஆயிரம்
பொய் சொல்லி
கவிதை எழுதினாலும்
நீ
என் காதலி என்ற
உண்மையில் தான்
முற்று பெரும்.!

ஆயிரம்
பொய் சொல்லி
கவிதை எழுதினாலும்
நீ
என் காதலி என்ற
உண்மையில் தான்
முற்று பெரும்.!
~மகி 
 
 
உன்
வருகைக்கு பிறகு ,
கோடைகாலம்
இலை உதிர்காலம் என்றெல்லாம்
எதும் எனக்கு இல்லை .,
எல்லா காலமும்
வசந்த காலம் தான் ..!

உன் 
வருகைக்கு பிறகு ,
கோடைகாலம் 
இலை உதிர்காலம் என்றெல்லாம் 
எதும் எனக்கு இல்லை .,
எல்லா காலமும் 
வசந்த காலம் தான் ..!
~மகி 
 
வரம்
தருவதால் மட்டும்
தெய்வமாகி விட முடியாது.
உன்னை
போல பாசமும் காட்ட
தெரிந்திருக்க வேண்டும்..!

வரம் 
தருவதால் மட்டும் 
தெய்வமாகி விட முடியாது.
உன்னை 
போல பாசமும் காட்ட 
தெரிந்திருக்க வேண்டும்..!
~மகி
 
 

Friday, October 26, 2012

மரங்களை எல்லாம் இப்படி கடவுள்ளாக ஆக்கிட்டா


மரங்களை எல்லாம் இப்படி கடவுள்ளாக ஆக்கிட்டா யாரும் வெட்ட மாட்டார்களோ...
"மே பிளவர்" மரம் இல்லைங்க இது விநாயகர் மரம்
கோவை ராம் நகர் பகுதியில்...
~மகி