Monday, May 28, 2012

கோவை அரசுமருத்துவமனை அருகில் பரிதாபமான நிலையில் ஒருவர் ....


' ஈர நெஞ்சம் ' பணிகள் / EERA NENJAM Activities
கோவை அரசு மருத்துவ மனை அருகில் குப்பையோடு குப்பையாக, கடந்த பத்து நாட்களாக அடையாளம் தெரியாத ஒருவர் உடல்நலகுறைவால் ஆதரவற்ற நிலையில் யாரும் பராமரிப்பற்று இருந்தார், இவரை பற்றி 28/05/12 இன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியாகி உள்ளது.
28/05/12 -இந்தியன் எக்ஸ்பிரஸ்
/An unknown man was lying down near Coimbatore Government Hospital for the past ten days without proper care and food. This news was published in 'Indian Expres'newsopaper on 28.05.2012/

ஈரநெஞ்சம்' அறக்கட்டளை இந்த செய்தியினை கண்டதும், உடனடியாக, என்ன செய்ய வேண்டும் ஆலோசித்தது. ' ஈர நெஞ்சம்' அறக்கட்டளையின், நிர்வாக அறங்காவலர் திரு ப.மகேந்திரன், அவர்கள், உடனே அரசு மருத்துவமானையை தொடர்புகொண்டு, தகுந்த ஏற்பாடுகளுடன் அவரை, அரசு மருத்துவமனையில் சேர்த்து வந்தார்.

/The Managing trustee of 'EERA NENJAM', Mr P. Mahendiran have acted immediately and taken necessary steps to admit him at the Coimbatore Government Hospital. /

 



















ஆயிரக்கணக்கான பேர் வந்து போகும் வழியில் இப்படி ஆதரவு இல்லாத நிலையில் பத்து நாட்களாக குப்பையோடு குப்பையாக போட்டு விட்டு போய்விட்டார்களே , காக்கை இறந்தால் கூட அதை சுற்றி காக்கை கூட்டம் அலை மோதுகிறது , காக்கையை விடவா மோசமாகிவிட்டார் இவர் இது போன்றவர்களை பராமரிப்பது யார் பொறுப்பு ? அரசாங்கம் இவர்களுக்காக என்ன செய்யபோகிறது...?
/As per Mr P.Mahendiran asked a question, Who is held responsible for these kinds of people and how Government to help them?
~P.மகேந்திரன் (18/2012)  / P.Mahendiran (18/2012)

(அவர் மருத்துவமனை அருகில் அவர்  இருந்த பரிதாபமான கீழ்கானும் link பாருக்கவும்.)
http://youtu.be/XeQthRWYxEw

Saturday, May 19, 2012

வேலைக்கு செல்ல இருந்த குழந்தைகளை மீட்ப்பு


இந்த புகைப்படத்தில் காணப்படும் இரண்டு குழந்தைகளுக்கு , ரஞ்சித் (13 வயது, எட்டாம் வகுப்பு செல்லகூடியவர்) மற்றும் பவித்திரா (11 வயது, ஆறாம் வகுப்பு செல்லக்கூடியவர்), அப்பா கிடையாது மற்றும் துரதிஸ்டவசமாக, அவர்களின் அம்மாவிற்கு, உயிர் கொல்லி நோய் தொற்றியுள்ளது. அவர்களின் அம்மாவிற்கு, கடந்த ஆறு மாதமாக, உடல்நிலை மிகவும் மோசமடைந்தததால், அவர்கள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. இவர்கள், மதுரை ஆண்டிப்பட்டி பகுதியில் இருந்து வந்தவர்கள். இவர்களை, இந்த குழந்தைகளின் மாமா, கோவைக்கு, எதோ ஒரு காப்பகத்தில் சேர்க்கலாம் என்று முடிவு செய்து, கூட்டிக்கொண்டு வந்தார். அந்த நல்ல சமயத்தில், " ஈர நெஞ்சம்" அறக்கட்டளையின்சார்பாக திரு. மகேந்திரன், எதேட்சையாக, கோவை "கருணை இல்லத்தில் (18 .05 .2012), உணவு வழங்கும்போது . இந்த குழந்தைகளின் அம்மா, மற்றொரு காப்பகத்தில் அனுமதிக்கப்பட உள்ளார் இந்த குழந்தைகளை வேலைக்கு அனுப்பபோகிறார்கள் , என்பதையும் அறிந்து கொண்டேன் . இந்த சூழ்நிலையில்,  இந்த குழந்தைகளை அழைத்து வந்தவரிடம் குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி எடுத்து கூறி   எங்களது "ஈர நெஞ்சம்" அறக்கட்டளையின் அறங்காவலர்கள், ஒரு மனதாக முடிவெடுத்து, அவர்களுடைய சாப்பாட்டு மற்றும் கல்வி செலவுகளை முழுவதுமாக எடுத்துக்கொள்வதாக உறுதிபூண்டு, அந்த குழந்தைகளை Universal peace foundation, கோவையில் தங்க ஏற்பாடு செய்துள்ளோம். குழந்தையை அழைத்து வந்த அந்த குழந்தைகளின் தாய் மாமா அவர்களுக்கு கோவையில் இப்படிப்பட்ட நல்ல  மனிதர்கள் எல்லாம் இருக்கிறார்களா என்று கூறி நெகிழ்த்து போனார் . 


~மகேந்திரன்

Friday, May 18, 2012

நீ வரும் அழகை பார்த்து...

உனக்குத்தான்
வெட்கப்பட  தெரியும்
என
நினைக்காதே..!
கனவில்
நீ வரும் அழகை
பார்த்து
பலமுறை
கூச்சப்பட்டு
நானும் கண்விழித்து
இருக்கிறேன்..♥

Wednesday, May 16, 2012

உணர்ந்தால் போதும்...

என் கவிதைகளை
எல்லாம்
நீ
படிக்கும் போது
நான்
இங்கு இருப்பேனா.?
எனத் தெரியாது..!
ஆனால்
இதை படிக்கும் போது
இதெல்லாம்
உனக்காகத் தான் எழுதினேன்
என
நீ
உணர்ந்தால் போதும்...


நாகம்மாள் பாட்டிக்கு 24 மணிநேரத்திற்குள் உறவு கிடைத்தது ~மகேந்திரன்


(15 .05.2012) காலை, சுமார் 11 மணிக்கு, கோவை, ராமநாதபுரத்தில் ஒரு பாட்டி, தன் நிலையை மறந்து, சுற்றிகொண்டிருப்பதாக கேள்விப்பட்டதும், ஈர நெஞ்சம் அறக்கட்டளையின் முக்கிய உறுப்பினரான திரு. Magi Mahendiran,(நான்) எனக்கு தெரியப்படுத்தப்பட்டது. நான் அங்கு சென்று, அந்த பாட்டியை பார்க்கையில், அவரிடம் ஆர். எஸ். புரம் சீத்தாலட்சுமி மருத்துவமனையின், மருத்துவரின் குறிப்பு சீட்டு ஒன்று இருந்தது. பாட்டியிடம் நான்விசாரிக்கும் போது எதுவும் நினைவுக்கு வரவில்லை என்பதை மட்டும் கூறினார் அதனால்

அந்த பாட்டிக்கு ஒரு பாதுகாப்பான தேவைப்பட்டதால், கோவை ,அல்வெனியா காப்பகத்தை அணுகியதில், அவர்கள், அந்த பாட்டிக்கு மருந்து மாத்திரைகள் கொடுத்து தற்காலிகமாக தங்க வைத்துள்ளனர். இதனிடையில், அந்த மருத்துவரின் குறிப்பை, வைத்துக்கொண்டு, அந்த மருத்துவமனைக்கு சென்று விவரம் சேகரித்ததில், அவரது வயது 67 என்றும், பெயர் நாகம்மாள் என்றும் தெரியவந்தது.

மருத்துவமனை கொடுத்த, விவரங்களின் படி, அந்த பாட்டியின் வசிப்பிடம், சரவணம்பட்டி என்று தெரிந்தவுடன், கொடுத்துள்ள முகவரிக்கு தொடர்பு கொண்டதில், அந்த பாட்டியின் மருமகன் திரு. ஜெயராம் என்றும் அவர்கள், அந்த பாட்டியை, காலையில் இருந்து தேடிக்கொண்டிருப்பதும் தெரியவந்தது. இப்போது, இரவு நேரம் ஆகையால், நாளை காலை, அந்த பாட்டியை அழைத்து செல்ல அந்த பாட்டியின் உறவினர்கள் வருவதாக தெரிவித்துள்ளனர்.

இன்று (16 .05.2012) காலை,அந்த பாட்டியின் மருமகன் திரு. ஜெயராம், மற்றும் நாகம்மாள் பாட்டியின் தங்கையின் மகன் அழகப்பன்  அவர்கள் நேரில் வந்து பாட்டியை சந்திக்கும் போது பாட்டிக்கு அவர்களை சற்று நேரம் கழித்துதான் நினைவு வந்தது மகன் அழகப்பனை கட்டித்தழுவி அழும்போது எங்களது
கண்ணும் கலங்கியது சற்று நேரத்தில் அவர்கள் பாட்டியை தன் வீட்டிற்கு, அழைத்து செல்ல ஏற்பாடு நடந்தது . மேலும் அந்த பாட்டியை அழைத்து செல்லும் போது ஜெயராம், மற்றும் அழகப்பன் கூறும்போது நாகம்மாள் பாட்டிக்கு மனநிலை சரி இல்லை என்பதும் , இனி நாங்கள் கவனமாக பார்த்து பராமரிதுக்கொல்கிறோம் என்பதையும் உறுதியளித்தார்கள் ,மேலும் அவர்கள் காப்பக நிர்வாகிக்கும் ,பாட்டியை பற்றி தகவல்தந்த எனக்கும் நன்றிய தெரிவித்து கொண்டு வீட்டிற்கு அழைத்து சென்றனர்.  பாட்டி காப்பகத்தை விட்டு செல்லும் போது அவர்களது கண்ணில் பெரும் நிம்மதி தெரிந்தது .
கொஞ்சம் கஷ்ட்டம் தாங்க ஆனா பாதிக்கப்பட்டவங்களின் சந்தோஷ படராங்கான எவ்ளோவேனாலும் கஷ்ட்டப்படலாம்ங்க...
~மகேந்திரன்
ஈரநெஞ்சம்

Monday, May 07, 2012

கோவை வானொலி நான் உரையாற்றிய பதிவு ~மகேந்திரன்

கோவை வானொலி நிலையம் 24/01/12 அன்று  இளையபாரதம் நிகழ்ச்சியில் நான் உரையாற்றிய பதிவு... 
~மகேந்திரன்

கருப்புகொடி காட்டுகிறதோ..♥

முன் அறிவிப்பு இல்லாமலே
என்
மீது யுத்தம் செய்யும்
உன்
விழிகளுக்கு
உன்
இமைகளே
கருப்புகொடி காட்டுகிறதோ..♥


Friday, May 04, 2012

நன்றி தினத்தந்தி

 தமிழ் நாளிதழான தினத்தந்தி என்னை , என் சேவைகளின் சிலவற்றையும் 26 /04 /12 வெளியிட்டது ....
நன்றி தினத்தந்தி