Thursday, October 23, 2014

ஈரநெஞ்சம் கொண்டாடிய தீபாவளி

" ஈரநெஞ்சம் கொண்டாடிய தீபாவளி "
ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM" Services
***********************************************************
(370 / 21-10-2014)




கோவை சிங்கநல்லூர் அருகே நீலிக்கோணாம்பாளையம் என்னும் இடத்தில் சண்முகம் ( 58 ) என்பவர் கண் தெரியாதவராக இருக்கும் காரணத்தால் பத்து வருடங்களாக குடும்பத்தாரால் புறக்கணிக்கப்பட்டு கழிவுநீர் கால்வாய் ஓரமாக இத்தனை நாளும் இருந்திருக்கிறார் . அவரைப் பற்றி மனோன்மணி என்னும் பெண் ஈரநெஞ்சம் அமைப்புக்கு தகவல் தெரிவித்தார். அனைவரும் தீபாவளி கொண்டாடும் நேரம் அவர் இப்படி இருப்பது மனதுக்கு கஷ்டமாக இருப்பதாகவும் தெரிவித்தார் . அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற ஈரநெஞ்சம் அமைப்பினர் , அந்த பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் சண்முகத்தை அங்கேயே குளிக்க வைத்து , பொதுமக்கள் முன்னிலையில் அவரை தீபாவளி கொண்டாட வைக்க முடிவெடுத்தனர் . அதனைக் கண்ட பொதுமக்கள் அவர்களாகவே அவருக்கு உடுத்த புதிய துணி வாங்கி கொடுத்தனர் .பின்னர் சாப்பிட தீபாவளி பலகாரம் கொடுத்தனர் . பின்னர் அங்கிருக்கும் குழந்தைகள் முன்னிலையில் அவருக்காக பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடி அங்கிருக்கும் மக்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்களையும் நமது ஈரநெஞ்சம் அமைப்பு தெரிவித்துக்கொண்டது ...





பின்னர் கோவை மாநகராட்சி தங்கும் விடுதியில் அனுமதி கேட்டு அங்கு சண்முகம் அவர்களை பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார் . "




" சந்தோஷத்திலேயே பெரிய சந்தோஷம் பிறரை மகிழ்வித்துப் பார்ப்பது தான் " ; அந்த வகையில் சண்முகம் அவர்களை மகிழ்வித்ததில் ஈரநெஞ்சம் அமைப்பு பெருமிதம் கொள்கிறது . அதில் பொதுமக்களும் கலந்து கொண்டது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது ...
ஈரநெஞ்சம் அமைப்பிற்கு இந்த தீபாவளி மறக்கமுடியாத தீபாவளி !!!
~ஈரநெஞ்சம்.
https://www.facebook.com/eeranenjam

Tuesday, October 21, 2014

சாலையில் தவித்த 85 வயது பாட்டியின் உறவினர் கண்டுபிடிப்பு

ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM" Services.
******************************************************************
(368 / 20-10-2014)

கடந்த 18/10/2014 அன்று கோவை B9 காவலர்கள் உதவியுடன் சரவணம் பட்டி பகுதியில் இருந்து சுப்பம்மாள் 85 என்ற பாட்டியை மீட்டு கோவை மாநகராட்சிக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார் , அதனை தொடர்ந்து பாட்டியின் உறவினர்களை கண்டுப்பிடிக்கும் முயற்சியை ஈரநெஞ்சம் மேற்கொண்டது ,

https://www.facebook.com/eeranenjam/photos/a.249582201805870.51248.199260110171413/643014075796012/?type=1&theater

அதன் பலனாக வீரமநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு செந்தாமரைக் கண்ணன் அவர்கள் மூலமாக கோவையில் சிங்காநல்லூர் பகுதியில் சுப்பம்மாள் பாட்டியின் மகன் முருகன் என்பவர் தொடர்பு கிடைத்து. உடனடியாக அவருக்கு தகவல் அளிக்கப்பட்டது. , தகவல் அறிந்ததும் முருகன் உடனடியாக காப்பகத்திற்கு வந்து சுப்பம்மாள் பாட்டியை அழைத்துச் சென்றார்.
 




பாட்டியின் மகன் முருகன் கூறும்பொழுது :
அம்மாவிற்கு சற்று ஞாபகமறதி இருப்பதாகவும் சிங்காநல்லூரில் எங்களது வீட்டில் இருந்து கடந்த 16/10/2014 அன்று காலை முதல் காணவில்லை , எங்கெல்லாமோ தேடினோம் எங்கு தேடியும் கிடைக்காததால் இன்று 20/10/2014 அம்மாவைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் கொடுக்க காவல் நிலையம் சென்றவேளையில் ஈரநெஞ்சம் அமைப்பினர் அம்மாவைப்பற்றிக் கூறி நேரடியாக வந்து அழைத்துச் செல்லும்படிக் கேட்டுக்கொண்டனர் , அதை கேட்டதும் பெரும் மகிழ்ச்சி அடைந்தோம் , அம்மாவை நான்குநாட்களாக காணாமல் குடும்பத்தில் யாரும் சரிவர உணவுகூட உண்ணாமல் அம்மாவைத் தேடி அலைந்துக்கொண்டே இருந்தோம் இன்று அவர் கிடைத்ததும் பெரும் நிம்மதி அடைந்தோம் , அம்மாவை கண்டுபிடித்துக் கொடுத்த ஈரநெஞ்சம் அமைப்பிற்கும் அம்மாவை பராமரித்துக் கொண்ட மாநகராட்சிக் காப்பகத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகக் கூறி தனது அம்மாவை அழைத்துச் சென்றார்.

மேலும் சுப்பம்மாள் பாட்டியை கண்டுப்பிடிக்க பெரிதும் உதவிய வீரமநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு செந்தாமரைக் கண்ணன் அவர்களுக்கும் மற்றும் ஈரநெஞ்சம் அமைப்பைச் சேர்ந்த நண்பர்களுக்கும் , கோவை B9 காவல் நிலைய காவலர்களுக்கும், மாநகராட்சிக் காப்பகத்திற்கும் மற்றும் நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது ஈரநெஞ்சம் அறக்கட்டளை.

~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam?ref=hl

Due to those efforts and with the help of Mr. Senthaamarai kannan, Veermanallur police station Inspector, we can found her son Mr. Murugan, who is living in Singanallur. We informed to him and immediately he came to Coporation home and brought her with him to their home.

Mr. Murugan told that his mother Subbammaal is absent minded some times. Last 16-10-2014 she was missed from their home. They tried to find her in all places. When we decided to give complaint in police station today 20-10-2014, Eeranenjam trust people contacted us to bring our mother. We felt very happy, For past 4days we didn’t take even proper food too and continuously we were searching our mother. Now we feel very happy and peaceful. So we wish to say thanks to Eeranenjam trust for find out mother and Corporation home for taken care of her.

Our Eeranenjam trust giving our thanks to Police Inspector Mr, Senthamarai kannan, Veeramanallur station, and Eeranenjam trust people, B9 police station police officers, Friends and Corporation home for giving their helping hand to find Subammal family.

Thanks,

Eeranenjam.

Sunday, October 12, 2014

கைப்பொருள் இழந்து கலையை வாழவைக்கும் மாமனிதன்..அண்ணாமலை

நம் எண்ணங்களில் தோன்றும் பல கற்பனைகளை எழுத்து வடிவமாகவோ , அல்லது சித்திர வடிவமாகவோ படைக்கும் பொழுது அதை பார்ப்பவர்கள் மனதை கவர்ந்து அவர்களின் மனதில் எளிதாக பதியும் . அது மட்டுமில்லாமல் காலங்காலமாக அது அழியாமல் நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை . இதன் காரணமாகவே கல் தோன்றிய காலமுதலாக சிலைகள், சுவர் ஓவியங்கள் , குகை ஓவியங்கள் , கல் வெட்டுகள் , ஓலை சுவடி ஓவியங்கள் மற்றும் பல படைப்புகள் படைக்கப்பட்டு இன்றளவும் நம் மனதை கவர்ந்துக் கொண்டிருக்கிறது . ஆனால் இக்காலக்கட்டத்தில் அப்படி பல கலைகளை உருவாக்கும் கலைஞர்கள் பலரும் , கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்களுக்காக மக்கள் முன் படைக்க முன்வருவது இல்லை . அவர்கள் படிக்கும் கலைகளை , வியாபார நோக்கத்துடன் விற்று பல அரிய கலைஞர்கள் வியாபாரிகளாகவே மாறி விட்டனர் என்றே சொல்லலாம் .
இப்படிப் பட்டவர்களின் மத்தியில் கோவையைச் சேர்ந்த ஜெகநாதன் என்கின்ற  அண்ணாமலை என்பவர் தனது கலைத்திறன் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் , கோவையை சுற்றி பல அரிய சிற்பங்களையும் , சுவர் ஓவியங்களையும் மக்கள் மத்தியில் படைத்து வருகிறார் .

 

கோவையை அழகு படுத்தும் வகையிலும் மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும் வகையிலும் , இவர் கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் வடிவமைத்துள்ள உலக அதிசயமாக உள்ள ஹவா மஹால். பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் , செங்கோட்டை போன்றவை மிகவும் தத்ரூபமாக காட்சி அளிக்கின்றது . இந்த படைப்புகளுக்கு மக்கள் மத்தியிலும் பலமான வரவேற்பு கிடைத்துள்ளது.

 


முன்னாள் பிரதமர் திறந்துவைத்த கோவை கொடிசியாவில் உள்ள ஸ்க்கான் கோவிலின் முகப்பு அலங்காரம் இவரை ஒரு சிறந்த சிற்ப கலைஞராக காட்டி உள்ளது . இது மட்டும் இல்லாமல் திருப்பூர் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பொழுது முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் திறக்கப்பட்ட திருப்பூர் நினைவுத்தூண் , கிணத்துக் கடவு பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அண்ணா சிலை காந்திப்பூங்காவில் அமைந்துள்ள காந்தி சிலை என கோவையை சுற்றி பல கலை வேலைப்பாடுகள் அண்ணாமலையால் உருவாக்கப்பட்டுள்ளது.


இதன் மூலம் கட்டிட சிறப்புக் கலைஞராக வலம் வந்தவர் அண்ணாமலை . கோவையில் பல கட்டிடங்களுக்கு முகப்பு அலங்காரம் வடிக்கும் கலைஞராக இவரையே தேர்வு செய்து வருகின்றனர் . அது மட்டும் இல்லாமல். தான் கற்ற கலையை பள்ளி மாணவர்களுக்கும் பயன் பெரும் வகையில் சிறு சிறு கற்களை கொண்டு சிற்பம் செய்யும் கலைகளையும் கற்றுக் கொடுத்து வருகிறார்.
இந்த பணியெல்லாம் தனது குடும்பம் நடத்துவதற்கு என எடுத்துக் கொண்டாலும் , இவர் தற்போது துவங்கி செய்துவரும் கலை வேலைப்பாடு தனது வருமானத்திற்கும் மிஞ்சிய பொருட்செலவில் மக்களுக்கு விழிப்புணர்வை கொடுக்கும் வகையில் கோவையைச் சுற்றி உள்ள சுவர்களில் சிற்பம் வடித்து வருகிறேன் என்று கூறுகிறார் . மேலும் அதை பற்றி அவரிடம் கேட்ட பொழுது.


" நான் இந்த கலைப்பணியை கடந்த 20 வருடத்திற்கு மேலாக செய்து வருகிறேன் . பல சவால்களுக்கு இடையே தான் , நான் ஒரு நல்ல கலைஞன் என்று பெயர் வாங்கினேன் . குறிப்பாக ரேஸ்கோர்ஸ் பகுதியில் பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் அமைக்கும் பொழுது கோவை மாநகராட்சி சார்பாக 150 பொறியாளர்களுக்கு மேல் தேர்வு செய்யப்பட்டு , யாரும் சரிவர அந்த கோபுரத்தை சாய்த்து அமைக்க முடியாமல் நிராகரித்த பிறகு வெறும் 6 ஆம் வகுப்புவரை மட்டுமே படித்த நான் மிக நேர்த்தியாக 16 அடியில் பைசா கோபுரம் 1.5 அடி சாய்வாக அமைத்து கட்டியது எனக்கு மிகவும் சவாலாக அமைந்து இருந்தது . காந்தி பூங்காவில் வைத்திருக்கும் காந்தி சிலையின் கண்கள் உயிருள்ள மனிதக் கண்களைப் போன்றே அமைக்கப்பட்டதாகும் . ஸ்கான் கோயிலின் முகப்பு வடிவம் அமைக்க எனக்கு அழைப்பு வந்த பொழுது நானும் எனது குடும்பத்தாரும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை " என்றும் கூறினார் .
மேலும் அவர் கூறும் பொழுது பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாத விஷயங்களான போக்குவரத்து நெறிமுறைகள் , மழைநீர் சேகரிப்பு , எரிபொருள் சிக்கனம் , மின்சார சிக்கனம் , தூய்மை , பிறருக்கு உதவும் மனம் , போதை பழக்க வழக்கங்களின் தீமைகள் போன்ற பல்வேறு விஷயங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளக்கமாக தத்ரூபமாக சாலைகளின் ஓரமாக இருக்கும் சுவர்களில் சுவர் சிற்பங்கள் உருவாக்கி வருவதாக கூறினார் ,
இந்த சுவர் சிற்பங்களுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதாகவும் கூறினார் . ஒரு சுவற்றில் சுவர் சிற்பம் உருவாக்க குறைந்தது 5 நாட்கள் வரை ஆகும் . அதற்கான செலவு 15 ஆயிரம் ரூபாய் வரையிலும் ஆகிறது என்றும் , இதுவரைக்கும் 5 இடங்களில் உருவாக்கி விட்டதாகவும் பொது மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற நல்ல எண்ணத்தின் காரணமாக தனது மனைவி இந்திராணி அவர்களின் விருப்பப்படி அவரது நகைகளை அடமானம் வைத்து அதில் வந்த பணத்தை கொண்டு இந்த சுவர் சிற்பம் உருவாக்கி வருவதாகவும் கூறிய பொழுது , எங்கள் மனம் சற்று கனத்தது.






மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது மட்டுமல்லாமல் , லிம்கா உலக சாதனை மற்றும் கின்னஸ் சாதனையே தனது வாழ்வின் லட்சியமாக கொண்டு கலைத்துறையில் தன்னை அர்பணித்து வரும் அண்ணாமலை மக்களிடம் இருந்து எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்று தான் . சாலையோரமாக யாராவது நீண்ட சுவர் தந்து உதவினால் , அவர்கள் அவரது சாதனை கலைப் பயணத்திற்கு ஏணிப்படியாக இருப்பார்களே !!!

அண்ணாமலை அவர்களை தொடர்புகொள்ள ~92452 80844 / 90035 38492 / 0422 2499191

~மகேந்திரன்