Showing posts with label ஆதரவற்றோர். Show all posts
Showing posts with label ஆதரவற்றோர். Show all posts

Friday, January 12, 2018

இறைவனது படைப்பில் சிறு துரும்பும் கூட அர்த்தமற்றதாக இருப்பது இல்லை , ஆனால் அதை உணர்ந்து கொள்ளத்தான் பலருக்கு ஞானம் இல்லை.

இறைவனது படைப்பில் சிறு துரும்பும் கூட அர்த்தமற்றதாக இருப்பது இல்லை , ஆனால் அதை உணர்ந்து கொள்ளத்தான் பலருக்கு ஞானம் இல்லை.
~~~~~~~~~~~~~~~~~~~

அமுதா வயது 52 . இரண்டு சகோதரர் சகோதரிகள் இருவர் இவருக்கு. குடும்பத்தில் இரண்டாமவர் இவர். ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கூட இவர் பிறந்த நாள் முதல் இறந்த நாள் வரையில் வாழ்வில் அனுபவிக்காத துன்பமே இல்லை.





பிறந்து சிறிது காலத்திலேயே ஒரு விபத்தில் தலை நரம்பில் அடிபட்டதால் வாழ் நாள் முழுவதும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர். அந்த காலத்தில் போதிய மருத்துவ வசதி இல்லாததால் இந்த வியாதிக்கு முழு மருத்துவம் கிடைக்கவில்லை. இந்த வலிப்பு நோயின் காரணமாக பள்ளி படிப்பும் துவக்கத்திலேயே நிறுத்த வேண்டியதாயிற்று.

பள்ளி படிப்பு இல்லை என்றாலும் வீட்டில் இருந்து தனது உடன் பிறந்தவர்களுக்கு தேவையான அனைத்து பணிவிடைகளும் செய்து கொடுப்பார். சொந்த தாய்மாமனுக்கு மணம் முடித்து அவர்கள் வாழ்விற்காக பெரும் பொருளுதவியும் அமுதாவின் பெற்றோர்கள் செய்து கொடுத்தனர்..

ஆனால் மூன்று வருடத்திலேயே அவர் திருமண வாழ்வு முடிவுக்கு வந்தது. அதற்குள் ஒரு அழகான பெண் குழந்தையும் பெற்றெடுத்து , அதை எமனுக்கு தாரைவார்த்துக் கொடுத்துவிட்டார். தன் கணவர் வேறு ஒரு பெண்ணை மணமுடித்துக் கொண்டதால் மன அழுத்தம் காரணமாக மனநோய் ஏற்பட்டு தன்னை யார் என்றே தெரியாத நிலைக்கு ஆளானார். .








அதன் பின் அமுதாவின் பெற்றோர்கள் தொடர்ந்து செல்லாத மருத்துவமனை இல்லை , வேண்டாத தெய்வங்கள் இல்லை. அமுதாவின் நலனில் எந்த முன்னேற்றமும் இல்லை.

வாழ்ந்த நாளில் எந்த ஒரு நல்லது கெட்டதிற்கும் சென்றது இல்லை. அக்கம் பக்கம் கூட சென்றது இல்லை. சென்றது எல்லாம் மருத்துவமனை மருத்துவமனை மட்டுமே. 2015 இல் மனநலம் பெரிதும் பாதிக்கப்பட்டது அதுவரை இவரது நிலையை ஓரளவிற்கு கட்டுப்பாட்டில் வைத்திருந்த மருத்துவர்களும் முற்றிலும் கைவிட்டு விட்டனர்.

எத்தனையோ விஞ்ஞானம் வளர்ந்த இந்த உலகில் இவருக்கு வைத்தியம் பார்க்க தமிழ் நாட்டில் எந்த மருத்துவமும் கிடைக்க வில்லை. வீதியில் விட வேண்டிய கட்டத்திற்கு தள்ளப்பட்டார். அதன் பிறகு தனது குடும்பத்தை பிரிந்து பெங்களூரில் உள்ள ஒரு மருத்துவமனையிலும் காப்பகத்திலும் மூன்று வருடம் இருந்தார்.

அமுதாவை சந்திப்பவர்கள் எல்லோரும் பாவப்பட்ட பிறவி , வாழ்வில் எந்த ஒரு சுகத்தையும் அனுபவிப்பதற்கு இல்லை. எப்போது இறைவன் அழைத்து செல்ல போகிறான் , யார் யாருக்கோ முடிவு வருகிறது ஒரு புரயோஜனமும் இல்லாத இந்த அமுதாவிற்கு எப்போது முடிவு வரும் என்றே புலம்பிக் கொண்டு இருந்தனர்.


இவர்களது பார்வைக்கு அமுதா ஒரு வேண்டாத பொருளாகத்தான் இருந்தார்.

ஆனால் அமுதாவின் மற்றொரு பக்கம் அவர்களுக்கு தெரியாது .

அமுதாவின் நிலையைத் தான் மேம்படுத்த முடியவில்லை ஆனால் அமுதாவை பின்னணியாக கொண்டு அவரை போல மற்றொருவர் இந்த உலகில் பாதிக்க கூடாது என்று அமுதாவின் உடன் பிறந்தவர்களும் அவர்களது நண்பர்களும் சேர்ந்து ஈரநெஞ்சம் என்ற அறக்கட்டளை உருவாக்கினர்.

அமுதாவின் வாழ்வு சுகமாக இல்லை என்றாலும் . அவரது பின்னணியில் உருவான இந்த ஈரநெஞ்சம் அறக்கட்டளை மூலமாக அமுதாவை போன்றவர்கள் ஆயிரக்கணக்கில் மறுவாழ்வு பெற்று வாழ்கின்றனர்.
மனநிலை பாதிக்கப்பட்ட எத்தனையோ பேர் , தன்னிலை மறந்து குடும்பத்தை இழந்தவர்கள் குணமாகி குடும்பத்துடன் இணைந்து உள்ளார்கள். சாலையில் ஆதரவற்று உயிர் நீத்தவர்களை அவர்களுக்கு உறவாக நின்று நல்லடக்கம் செய்வதும். ஆதரவற்ற குழந்தைகள் பாதுகாப்பு, கால்கள் இழந்தவர்களுக்கு செயற்கை கால் வழங்குவது , மற்றும் ஈரநெஞ்சம் காப்பகத்தில் ஆதரவற்றவர்கள் 150 பேருக்கும் மேல் ஆதரிக்கப்பட்டு வருகிறார்கள் . இந்த செயல்கள் அனைத்திற்கும் பின்னணி இந்த அமுதா என்ற தேவதை தான்.

இவ்வளவு பெருமைக்கும் உரிய இந்த தேவதை, கடந்த 3/1/18 அன்று தான் மண்ணுக்கு வந்த இறை பணியை முடித்துக் கொண்டு மீண்டும் இறைவடிவம் பெற்றுக் கொண்டது.

கடவுள் சில நேரம் தேவதைகளை மண்ணிற்கு ஏதோ சில காரணத்திற்காக அனுப்பி வைப்பார் . அவர்கள் மண்ணுலகில் பொழுது போக்கிற்காக வந்து மனிதகுல நன்மைக்காக வாழ்ந்து போவார்கள். அவர்கள் இருக்கும் காலத்தில் பெரும் கூட்டத்திற்கு தலைவராகவோ, அல்லது தான் சொல்லும் அனைத்தையும் மக்கள் வேதவாக்காக எடுத்துக் கொள்ளும் போலி சாமியார்களாகவோ இருக்க மாட்டார்கள் . நாம் அடிக்கடி கேட்டு இருக்கின்றோம் சித்தர்கள் வாழ்வு பற்றி . பெரும் துன்பம் அனுபவிப்பார்கள் ஆனால் அது எல்லாம் அவர்களது பொழுது போக்காகவே இருக்கும் என்று .

இறைவன் படைப்பில் சிறு துரும்பும் கூட பயனற்றதாக இருப்பது இல்லை..!!!

~மகேந்திரன்

Monday, May 11, 2015

வாழ்வு வந்தால் அனைவரையும் வாழவைப்போமே

ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM" Services
*********************************************************************
(458 / 11-05-2015 )

எங்களுக்கும் காலம் வரும் !!!
காலம் வந்தால் வாழ்வு வரும் !!!
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழவைப்போமே !!!

கோவை 10-05-2015
உடலில் எந்த குறையும் இல்லாதவர்களே வாழ்வதற்கு பிறரைச் சார்ந்து இருக்கும் நிலையில் இரண்டு கால்களும் செயல்படாத நிலையிலும் சுயமாக சம்பாதித்து வாழ வேண்டும் என்ற மன உறுதியுடன் வாழ்ந்து வருபவர் ஏசுராஜ். இவரைப் பற்றி தொடர்ந்து ஈரநெஞ்சம் அறக்கட்டளை முகநூலில் எழுதி வருகிறது. இவர் இரண்டு கால்களும் செயல்படாத நிலையில் சாலையோரமாக முடி திருத்தும் பணி செய்து வருகிறார். நல்ல வீடும் கடையும் கூட இல்லாத நிலையில் இவர் இந்த வேலையை செய்து வந்ததோடு ஆதரவற்ற ஒரு பெண்ணுக்கு ஆதரவளித்து , மனநலம் சரி இல்லாத அவரது மகனுக்கும் தந்தையாக அவர்களையும் பேணி பாதுகாத்து வருகிறார். இந்த நிலையில் ஈரநெஞ்சம் அறக்கட்டளை இவரைக் கண்டு கோவை மாநகராட்சி காப்பகத்தில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு முடி திருத்தும் பணியை அளித்தது. தொடர்ந்து அதையும் செவ்வனே செய்து வந்தார் ஏசுராஜ். மேலும் ஈரநெஞ்சம் அறக்கட்டளை மூலம் இவரை பற்றி அறிந்து தினமலர் நாளிதழில் இவரை பற்றிய கட்டுரை வெளி வந்தது.
http://www.dinamalar.com/news_detail.asp?id=1238727



இவரை பற்றி அறிந்து, கோபிசெட்டிபாளையம் பாரதி வித்யாலயா பள்ளியின் நிறுவனர் திரு. வேலுமணி அவர்கள் ஏசுராஜ் அவர்களுக்கு கடை வைத்து கொடுப்பதற்கும் மற்றும் தேவையான மூலப்பொருட்களுக்கும் தேவையான நிதி உதவி அளிக்க முன்வந்தார். செய்தியை படித்த உடனே ஈரநெஞ்சம் அறக்கட்டளை அறங்காவலர் திரு. மகேந்திரன் அவர்களை தொடர்பு கொண்டு தகவல்களை கேட்டறிந்த திரு. வேலுமணி அவர்கள் உடனடியாக அவருக்கு நிதியுதவியாக ரூபாய் 50000 ஐ அளிக்குமாறு ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்கு வங்கி மூலம் நன்கொடையாக அளித்தார்.

அதைத் தொடர்ந்து ஈரநெஞ்சம் அறக்கட்டளையின் முயற்சியின் மூலம் இன்று 10-05-2015 ஏசுராஜ் க்கு கோவை , சாய்பாபா கோவில் பகுதியில் பெரியார் நகரில் புதிதாக கடை வைத்து கொடுக்கப்பட்டது. கடைக்கு தேவையான பொருட்களும் வழங்கப்பட்டது. சொக்கம்புதூர் மயானத்தில் மயானத் தொழிலாளியாக இருக்கும் ஈரநெஞ்சம் அமைப்பின் உறுப்பினர் திருமதி. வைரமணி அவர்கள் குத்து விளக்கு ஏற்றி வைத்து கடை திறப்பு விழாவை துவக்கினார். மேலும் ஈரநெஞ்சம் அறங்காவலர் திரு. மகேந்திரன் அவர்களின் தந்தை திரு. பழனிச்சாமி அவர்கள் தலைமையேற்று வாழ்த்தினார். திரு. வேலுமணி அவர்கள் அளித்த நன்கொடையில் கடைக்கு தேவையான பொருட்கள் போக மீதித் தொகை திரு. ஏசுராஜ் அவர்களுடன் நிதியுதவியாகவும் வழங்கப்பட்டது.




கோபிசெட்டிபாளையம் பாரதி வித்யாலயா பள்ளியின் நிறுவனர் திரு. வேலுமணி அவர்கள் கூறும்போது, தான் இன்று ஒரு கல்வி நிறுவனத்தின் நிர்வாகியாக இருந்த போதும் ஒரு காலத்தில் தானும் இதுபோல சாலையோரமாக தான் தன் வாழ்க்கையை துவக்கியதாகவும் , தன்னை போல உழைப்புக்கு முக்கியத்துவம் தரும் சக மனிதருக்கு தானும் உதவ வேண்டும் என்று எண்ணி உதவியதாகவும் தெரிவித்தார். மேலும் ஈரநெஞ்சம் அமைப்பின் பணிகள் மேலும் வளர்ந்து சிறக்கவும் இது போல இன்னும் பலர் பயன் பெறவேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்.



தனக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்தி கொடுத்து உதவிய கோபிசெட்டிபாளையம் பாரதி வித்யாலயா பள்ளியின் நிறுவனர் திரு. வேலுமணி அவர்களுக்கும் அதற்கு உறுதுணையாக இருந்த ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்கும், தினமலர் நாளிதழுக்கும் திரு. ஏசுராஜ்  தனது மனமார்ந்த  நன்றியை தெரிவித்துக் கொண்டார்.







மேலும் கடை திறப்பு விழாவிற்காக அழைக்கப்பட்டிருந்த “ கிரேஸ் ஹேப்பி ஹோம் “ ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஒரு மாதத்திற்கு  தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் ஏசுராஜ் அவர்கள் வழங்கினார்.



~ஈரநெஞ்சம்

Thursday, January 01, 2015

ஆதரவற்றவர்களுக்கு சுகிசிவம் உதவி ஈரநெஞ்சம்





கோவைக்கு மற்றுமொரு சிறப்பு RS புரம் பகுதியில் அமைந்திருக்கும் மாநகராட்சி ஆதரவற்றோர் காப்பகம். சுமார் 100 பேர் இருக்கும் இந்த காப்பகத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும் தங்கள் குடும்பத்தாரால் ஒதுக்கப்பட்ட நிலையில் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதை இந்த காப்பகத்தில் காணலாம். அதுமட்டும் இல்லாமல் சாலையோரம் பிச்சை எடுக்கக்கூட முடியாத நிலையில் இருப்பவர்களுக்கும் வயதான நிலையில் ஞாபக மறதியால் தன்னிலை அறியாது இருப்பவர்களுக்கு உறவுகள் கிடைக்கும் வரை உணவு, உடை, பாதுகாப்பு அனைத்தும் கொடுக்கும் இடம் இந்த மாநகராட்சி பாதுகாப்பு மையமே.


 



இந்த காப்பகம் மாநகராட்சி உதவியால் மட்டும் இல்லாமல் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடனும் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் கடந்த 14/12/2014 அன்று ஈரநெஞ்சம் அறக்கட்டளையின் சேவைகளை பார்வையிட நேரில் வந்த ஆன்மீக சொற்பொழிவாளர் கலைமாமணி திரு.சுகிசிவம்அவர்கள் காப்பகத்தில் இருப்பவர்களுக்காக தாமும் ஏதாவது பயனுள்ள உதவி செய்வதாக உறுதி அளித்து அதன்படி திருப்பூரில் இருக்கும் அவரது நண்பர்கள் திரு. கிரிபிரபு, திரு. நந்தகோபால் அவர்களுடன் இணைந்து காப்பகத்தில் வாழும் ஆதரவற்றவர்களுக்காக தண்ணீரை கொதிக்கவைத்து சுத்தம் செய்யும் அதி நவீன குடிநீர் சுத்திகரிப்பு உபகரணம் [ Water Purifier ] தானமாக வழங்கி உள்ளார்கள்.

இந்த உபகரணத்தினால் காப்பகத்தில் வாழும் ஆதரவற்றவர்களுக்கு இதுநாள் வரையில் தூய்மையான குடிநீர் கிடைக்காமல் இருந்த நிலை மாற்றப்பட்டு கொதிக்கவைத்த சுத்தமான குடிநீர் கிடைக்கிறது .

 


கொடை வழங்க இன்று (26.12.2014) நேரில் வந்த திரு. சுகிசிவம்அவர்களது நண்பர்களான திரு. கிரிபிரபு அவர்களும் திரு. நந்தகோபால் அவர்களும் " ஆதரவற்றவர்களுக்கு உதவுவது என்பது, அந்த ஆண்டவனுக்குத் தொண்டு செய்வதைக் காட்டிலும் உயர்வானதொரு தொழுகை. அது அவ்வளவு எளிதில் யாருக்கும் வாய்த்திடாது அந்த வாய்ப்பினை எங்களுக்கு அளித்த கோவை ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்கும், மாநகராட்சி ஆதரவற்ற காப்பகத்திற்கும் முதற்கண் அங்கு வாழும் ஆதரவற்றவர்களுக்கும் மனதார நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் " என்றார்கள்.

என்ன தான் அவர்கள் நன்றி தெரிவித்தாலும், இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் சில முக்கியமான உதவிகள் கனவாக இருப்பதை நனவாக்குவது என்பதும் கனவாகவே இருக்கிறது.. இந்நிலையில் அதிக பொருள் செலவில் நவீன உபகரணம் வழங்கிய ஆன்மீக சொற்பொழிவாளர் கலைமாமணி திரு.சுகிசிவம் மற்றும் அவரது நண்பர்கள் திரு. கிரிபிரபு, திரு.நந்தகோபால் இவர்களுக்கும் நன்றிகளையும் வணக்கங்களையும் உங்கள் சார்பாக தெரிவிப்பது இறையாண்மை என்று ஈரநெஞ்சம் அமைப்பு மனதார நன்றியை தெரிவிக்கிறது.


  


~ ஈரநெஞ்சம்

Tuesday, October 21, 2014

சாலையில் தவித்த 85 வயது பாட்டியின் உறவினர் கண்டுபிடிப்பு

ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM" Services.
******************************************************************
(368 / 20-10-2014)

கடந்த 18/10/2014 அன்று கோவை B9 காவலர்கள் உதவியுடன் சரவணம் பட்டி பகுதியில் இருந்து சுப்பம்மாள் 85 என்ற பாட்டியை மீட்டு கோவை மாநகராட்சிக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார் , அதனை தொடர்ந்து பாட்டியின் உறவினர்களை கண்டுப்பிடிக்கும் முயற்சியை ஈரநெஞ்சம் மேற்கொண்டது ,

https://www.facebook.com/eeranenjam/photos/a.249582201805870.51248.199260110171413/643014075796012/?type=1&theater

அதன் பலனாக வீரமநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு செந்தாமரைக் கண்ணன் அவர்கள் மூலமாக கோவையில் சிங்காநல்லூர் பகுதியில் சுப்பம்மாள் பாட்டியின் மகன் முருகன் என்பவர் தொடர்பு கிடைத்து. உடனடியாக அவருக்கு தகவல் அளிக்கப்பட்டது. , தகவல் அறிந்ததும் முருகன் உடனடியாக காப்பகத்திற்கு வந்து சுப்பம்மாள் பாட்டியை அழைத்துச் சென்றார்.
 




பாட்டியின் மகன் முருகன் கூறும்பொழுது :
அம்மாவிற்கு சற்று ஞாபகமறதி இருப்பதாகவும் சிங்காநல்லூரில் எங்களது வீட்டில் இருந்து கடந்த 16/10/2014 அன்று காலை முதல் காணவில்லை , எங்கெல்லாமோ தேடினோம் எங்கு தேடியும் கிடைக்காததால் இன்று 20/10/2014 அம்மாவைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் கொடுக்க காவல் நிலையம் சென்றவேளையில் ஈரநெஞ்சம் அமைப்பினர் அம்மாவைப்பற்றிக் கூறி நேரடியாக வந்து அழைத்துச் செல்லும்படிக் கேட்டுக்கொண்டனர் , அதை கேட்டதும் பெரும் மகிழ்ச்சி அடைந்தோம் , அம்மாவை நான்குநாட்களாக காணாமல் குடும்பத்தில் யாரும் சரிவர உணவுகூட உண்ணாமல் அம்மாவைத் தேடி அலைந்துக்கொண்டே இருந்தோம் இன்று அவர் கிடைத்ததும் பெரும் நிம்மதி அடைந்தோம் , அம்மாவை கண்டுபிடித்துக் கொடுத்த ஈரநெஞ்சம் அமைப்பிற்கும் அம்மாவை பராமரித்துக் கொண்ட மாநகராட்சிக் காப்பகத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகக் கூறி தனது அம்மாவை அழைத்துச் சென்றார்.

மேலும் சுப்பம்மாள் பாட்டியை கண்டுப்பிடிக்க பெரிதும் உதவிய வீரமநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு செந்தாமரைக் கண்ணன் அவர்களுக்கும் மற்றும் ஈரநெஞ்சம் அமைப்பைச் சேர்ந்த நண்பர்களுக்கும் , கோவை B9 காவல் நிலைய காவலர்களுக்கும், மாநகராட்சிக் காப்பகத்திற்கும் மற்றும் நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது ஈரநெஞ்சம் அறக்கட்டளை.

~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam?ref=hl

Due to those efforts and with the help of Mr. Senthaamarai kannan, Veermanallur police station Inspector, we can found her son Mr. Murugan, who is living in Singanallur. We informed to him and immediately he came to Coporation home and brought her with him to their home.

Mr. Murugan told that his mother Subbammaal is absent minded some times. Last 16-10-2014 she was missed from their home. They tried to find her in all places. When we decided to give complaint in police station today 20-10-2014, Eeranenjam trust people contacted us to bring our mother. We felt very happy, For past 4days we didn’t take even proper food too and continuously we were searching our mother. Now we feel very happy and peaceful. So we wish to say thanks to Eeranenjam trust for find out mother and Corporation home for taken care of her.

Our Eeranenjam trust giving our thanks to Police Inspector Mr, Senthamarai kannan, Veeramanallur station, and Eeranenjam trust people, B9 police station police officers, Friends and Corporation home for giving their helping hand to find Subammal family.

Thanks,

Eeranenjam.

Wednesday, December 25, 2013

புதுக்கோட்டை ஸ்ரீ ராமலு உறவினருடன் ஒப்படைப்பு~ ஈரநெஞ்சம்







''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
******
[For English version, please scroll down]
(245/25-12-2013)
புதுகோட்டையில் ஸ்ரீராமலு என்ற 75 வயதான முதியவர் தனது மகனுடன் நடந்த குடும்ப தகராறில் வீட்டிலிருந்து வெளியேற்றபட்டார். எங்கு செல்வது என்று தெரியாமல், தன் மகளின் முகவரியும் தெரியாமல், கோவையில் தனது நண்பர்களை சந்திக்க வந்த ஸ்ரீராமுலு உடல் நிலை சரி இல்லாத நிலையில் மருத்துவமனையில் நடக்க இயலாத நிலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகும் நடக்க முடியாமல் எங்கு செல்வது என்று தெரியமால் மழையில் நனைந்து சாலையோரம் கிடந்த அவரை B3 காவல் துறையினர் ஈரநெஞ்சம் அமைப்பிற்கு தகவல் கொடுத்தனர். அதனைதொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்பு அந்த முதியவரை மீட்டு கோவை மாநகராட்சி காப்பகத்தில் (22/10/13) அன்று சேர்த்தது.

https://www.facebook.com/photo.php?fbid=279912475467048&set=pb.100003448945950.-2207520000.1387979573.&type=3&theater


ஸ்ரீ ராமலு மருத்துவ உதவியுடன் காப்பகத்தில் நல்லமுறையில் பராமரிக்கப்பட்டுவந்தனர்.
மேலும் ஸ்ரீராமலு கொடுத்த தகவலை வைத்து அவருடைய உறவினர்களை தேடும் முயற்சியில் ஈர நெஞ்சம் மற்றும் புதுகோட்டை காவல் துறையினர் ஈடுபட்டனர். ஸ்ரீராமலு கொடுத்த தொலைபேசி எண் தவறாக இருந்தது. அனால் தொடர்ந்து அவருடைய மகள் ஹேமாவை தேடும் முயற்சி நடந்து வந்தது. நேற்று ஈர நஞ்சம் அமைப்பினர் சண்முகம் என்ற நகர காவல் துறை துணை ஆய்வாளர் உதவியினால் ஸ்ரீராமுலுவின் மகள் ஹேமாவின் விலாசத்தை கண்டுபிடித்தனர். இதைடுத்து இன்று (25.12.13)அவரை ஈர நெஞ்சம் அமைப்பினர் ஹேமாவிடம் ஒப்படைத்தனர். கணவரை இழந்து தனியாக வாழும் ஹேமாவுக்கு தன் தந்தை திரும்ப கிடைத்ததில் அளவற்ற மகிழ்ச்சி. ஸ்ரீராமலுவின் மனைவி திருமதி பிரேமாவும் தன் கணவர் திரும்ப கிடைத்ததற்கு ஈர நெஞ்சம் அமைபிற்கு நன்றியை தெரிவித்தார்.

http://youtu.be/y117XG1FDW0

யாரும் உதவாத நிலையில் தன்னை மீட்டு காப்பகத்தில் சேர்த்ததற்கும் மேலும் தன் மகளுடன் தன்னை சேர்த்ததற்கும் ஸ்ரீராமலு ஈரநெஞ்சம் அமைப்பிற்கு நன்றியை தெரிவிதுகொண்டார். இதற்க்கு பெரிதும் உதவி செய்த காவல் துறை அதிகாரி திரு. சண்முகம் அவர்களுக்கும் ஈர நெஞ்சம் உறுபினர்களுக்கும், ஈர நெஞ்சம் தன்னுடைய நன்றிகளை தெரிவித்துகொண்டது.
~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Sri Ramalu the 75 year old man was abused by his sons and was chased away from pudhukottai. He was unable to walk and admitted to be treated at the hospital in Coimbatore. After the treatment he didn't know where to go and was drenched in the rain. The B3 Police service noticed his situation and contacted Eera Nenjam. following that Eera Nenjam rescued him and admitted him at Coimbatore City Corporation Home. Now he is feeling better but could not remember any details properly. The phone number that he gave to the police as his daughter’s number was also wrong. But still eera nanjam was constantly taking efforts to find out his daughter’s address. At last his daughter Hema’s address was found out with the help of S.I Mr. Shanmugam of pudhukottai. He showed interest in helping sriramalu and was very helpful. Hema was very happy to have found her father and expressed her willingness to take care of her father. She lives alone after her husband’s death and she was happy to have her father back with her. Mr. Sriramalu’s wife Mrs. Prema also came along with her daughter and was extremely happy about her husband’s safety. The entire family was happy and they sincerely thanked Eera nenjam for this noble service. Eera nenjam sincerely thanks Mr. Shanmugam (S.I of Police, Pudhukottai) and the members of eera enjam who has helped Mr. Sriramulu to find his family.

~Thank You
Eera Nenjam

Thursday, November 28, 2013

லட்சுமி அம்மாவிற்கு உறவு கிடைச்சாச்சு ~ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
****** [For English version, please scroll down]
(237/27-11-2013)

26.11.13 அன்று முகநூலில் ஈரநெஞ்சம் அமைப்பு கொடுத்த தகவலை தொடர்ந்து லட்சுமி அம்மாள் பாட்டியின் பேரன் சிவகுமார் அவர்களின் தொடர்பு கிடைத்தது.

https://www.facebook.com/photo.php?fbid=494572107306877&set=a.249582201805870.51248.199260110171413&type=1&theater

அதனை தொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்பினர் சிவகுமார் அவர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தவுடன் சிவக்குமார் 27-11-2013 இன்று கோவை வந்தார். அவரிடம் லட்சுமி அம்மாள் ஒப்படைக்கப்பட்டார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம். சிவகுமார் கூறுகையில் தனது பாட்டி தூத்துக்குடியில் 30.09.13 அன்று காணமல் போனதாகவும். அவரை பற்றி காவல் துறையில் தகவல் கொடுத்து கடந்த ஒரு மாதமாக தேடி வருவதாகவும் தெரிவித்தார். பிரிந்த தனது பாட்டியை மீட்டு தந்த ஈரநெஞ்சம் அமைப்பிற்கு அவர் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார். அவரை அவரது குடும்பத்தினருடன் சேர்க்கவும் உதவிய அனைத்து நண்பர்களுக்கும் ஈரநெஞ்சம் சார்பில் நன்றிகள்.

மீண்டும் ஒரு உறவை சேர்த்து வைத்ததில் ஈரநெஞ்சம் மகிழ்ச்சியடைகிறது.

~ நன்றி

ஈர நெஞ்சம்

https://www.facebook.com/eeranenjam

On 26-11-13, Eeranenjam's post in Facebook as Mrs. Lakshmiammal's detail, we came to know about his grand son Mr. Sivakuamr. As soon as Eeranenjam contacted and let him know about Mrs. Lakshmiammal. He came to Coimbatore and taken care of her. He told that she was missed in Thoothukudi on 30-10-2013 and they registered a complaint in police and searched her for a month. He told thanks to Eeranenjam to rescue his Grandmother. We thank you all who are helped to collect the details and rescue her. Eeraemjam feels happy to join one more person with family.

~thank you.
Eera Nenjam Charity
Photo: Eera Nenjam Charity
''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
****** [For English version, please scroll down]
(237/27-11-2013)

26.11.13 அன்று முகநூலில் ஈரநெஞ்சம் அமைப்பு கொடுத்த தகவலை தொடர்ந்து லட்சுமி அம்மாள் பாட்டியின் பேரன் சிவகுமார் அவர்களின் தொடர்பு கிடைத்தது.

https://www.facebook.com/photo.php?fbid=494572107306877&set=a.249582201805870.51248.199260110171413&type=1&theater

அதனை தொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்பினர் சிவகுமார் அவர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தவுடன் சிவக்குமார் 27-11-2013 இன்று கோவை வந்தார். அவரிடம் லட்சுமி அம்மாள் ஒப்படைக்கப்பட்டார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம். சிவகுமார் கூறுகையில் தனது பாட்டி தூத்துக்குடியில் 30.09.13 அன்று காணமல் போனதாகவும். அவரை பற்றி காவல் துறையில் தகவல் கொடுத்து கடந்த ஒரு மாதமாக தேடி வருவதாகவும் தெரிவித்தார். பிரிந்த தனது பாட்டியை மீட்டு தந்த ஈரநெஞ்சம் அமைப்பிற்கு அவர் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார். அவரை அவரது குடும்பத்தினருடன் சேர்க்கவும் உதவிய அனைத்து நண்பர்களுக்கும் ஈரநெஞ்சம் சார்பில் நன்றிகள்.

மீண்டும் ஒரு உறவை சேர்த்து வைத்ததில் ஈரநெஞ்சம் மகிழ்ச்சியடைகிறது.

~ நன்றி

ஈர நெஞ்சம்

https://www.facebook.com/eeranenjam

On 26-11-13, Eeranenjam's post in Facebook as Mrs. Lakshmiammal's detail, we came to know about his grand son Mr. Sivakuamr. As soon as Eeranenjam contacted and let him know about Mrs. Lakshmiammal. He came to Coimbatore and taken care of her. He told that she was missed in Thoothukudi on 30-10-2013 and they registered a complaint in police and searched her for a month. He told thanks to Eeranenjam to rescue his Grandmother. We thank you all who are helped to collect the details and rescue her. Eeraemjam feels happy to join one more person with family.

~thank you.
Eera Nenjam Charity

Thursday, November 21, 2013

இறந்தாலும் ஈரநெஞ்சம் இருக்கிறது. ~ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(233/21/11/2013)

கோவை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ஒரு வார காலமாக உடலில் ஆடை இல்லமால் எறும்பு மொய்த்த நிலையில் முதியவர் ஒருவர் கிடப்பதாக அப்பகுதி மக்கள் ஈரநெஞ்சம் அமைப்பிற்கு அளித்தத் தகவலின் பேரில் 03/11/13 அன்று அந்த முதியவரை மீட்டு தேவையான முதலுதவிகளை அளித்து மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
https://www.facebook.com/photo.php?fbid=484791868284901&set=a.249582201805870.51248.199260110171413&type=1&theater
அந்த முதியவர் சிகிச்சை பலன் இல்லாமல் 6.11.13 அன்று காலமானார். B4 காவல் நிலையம் அந்த முதியவரை பற்றி விசாரணை நடத்தியது. விசாரணைக்கு பிறகு இன்று 21.11.13 அவரின் பிரேத உடல் ஈர நெஞ்சம் அமைப்பிடம் கொடுக்கப்பட்டது.
ஈர நெஞ்சம் அமைப்பினர் அவரின் உடலை சொக்கம்புதூர் மயானத்தில் நல்ல முறையில் அடக்கம் செய்தனர். அந்த பெரியவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Eera Nenjam was informed by the public about an elderly man who was lying at Coimbatore General hospital premises without any clothes on him and ants crawling all over his body. Following the information that was given on 03.11.2013, Eera Nenjam rescued the elderly man and gave him first aid, later admitted him at the general hospital for treatment. Unfortunately the elderly man passed away on 6.11.13. Since there was no information about this elderly man, B4 police station was trying to get some information about him. Later today 21.11.13, the elderly man’s body was given to Eera nenjam trust. Eera Nenjam trust did the final funeral services to his body with due respect.
Let us pray for his soul to rest in peace.

Thank you.
~Eera Nenjam


Photo: ''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(233/21/11/2013)

கோவை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில்  ஒரு வார காலமாக உடலில் ஆடை இல்லமால் எறும்பு மொய்த்த நிலையில் முதியவர் ஒருவர் கிடப்பதாக அப்பகுதி மக்கள் ஈரநெஞ்சம் அமைப்பிற்கு அளித்தத் தகவலின் பேரில் 03/11/13 அன்று அந்த முதியவரை மீட்டு தேவையான முதலுதவிகளை அளித்து மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
https://www.facebook.com/photo.php?fbid=484791868284901&set=a.249582201805870.51248.199260110171413&type=1&theater
அந்த முதியவர் சிகிச்சை பலன் இல்லாமல் 6.11.13 அன்று காலமானார். B4 காவல் நிலையம் அந்த முதியவரை பற்றி விசாரணை நடத்தியது. விசாரணைக்கு பிறகு இன்று 21.11.13 அவரின் பிரேத உடல் ஈர நெஞ்சம் அமைப்பிடம் கொடுக்கப்பட்டது.
ஈர நெஞ்சம் அமைப்பினர் அவரின் உடலை சொக்கம்புதூர் மயானத்தில் நல்ல முறையில் அடக்கம் செய்தனர். அந்த பெரியவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Eera Nenjam was informed by the public about an elderly man who was lying at Coimbatore General hospital premises without any clothes on him and ants crawling all over his body. Following the information that was given on 03.11.2013, Eera Nenjam rescued the elderly man and gave him first aid, later admitted him at the general hospital for treatment. Unfortunately the elderly man passed away on 6.11.13. Since there was no information about this elderly man, B4 police station was trying to get some information about him. Later today 21.11.13, the elderly man’s body was given to Eera nenjam trust. Eera Nenjam trust did the final funeral services to his body with due respect.
Let us pray for his soul to rest in peace.

Thank you.
~Eera Nenjam

Wednesday, October 02, 2013

தளர்ந்த வயதிலும் தளராத நம்பிக்கை ~ மகேந்திரன்





*நம்பிக்கைதான் வாழ்க்கை. 
இன்றைய கால கட்டத்தில் காதல் தோல்வி, தேர்வில் தோல்வி, தொழிலில் நஷ்டம், என கொஞ்சமும் அர்த்தமற்ற காரணம் கொண்டு தம் உயிரை மாய்த்துக்கொள்ளும் மூத்த தலை முறை முதல் இளம் தலைமுறை


யினர் வரை நாம் அன்றாடம் பார்த்திருப்போம். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாத நிலையில் வீட்டை விட்டு சென்றவர்களோ ஏராளம். இப்படி பட்டவர்களுக்கு எல்லாம் ஏதோ ஒருவிதத்தில் விடுதலை என்று வைத்துக்கொள்வோம், ஆனால் இவர்களை நம்பி இருப்பவர்களின் நிலை. (?).... போராடி வெற்றி பெறுவதுதான் வாழ்க்கை.

துன்பங்கள் இருந்தாலும் அதையும் தாண்டி பரந்து விரிந்த ஒரு உலகம் எப்போதும் காத்திருக்கும் எனும் தன்னம்பிக்கை நிறைந்தவர்களுக்கு, அப்படி ஒரு நம்பிக்கையை, உண்மையான பாசத்தை, தாய்மையை, விட்டுக்கொடுத்து வாழும் பண்பை தனது தள்ளாத 90 வயதில் நமக்குகற்று தருகிறார் இந்த தெய்வத்தாய் ரங்கம்மாள் பாட்டி.

“மரத்தை வைத்தவன்தான் தண்ணீரை ஊற்றவேண்டும்” என்பார்கள் இந்த சொல்லிற்கு ஏற்ப மரம்போல இருக்கு 60 வயது குழந்தைக்கு இன்னும் தாயாக அரவணைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் இந்த தாய்.

கோவையில் உள்ள ஒரு சிறிய கிராமம் சோமனூர், அங்கு இவருக்கு ஐந்து மகன்களும் ஒரு மகளும். கணவர் இறந்து நாற்ப்பது வருடம் .தற்போது 90 வயதைத் தாண்டி இன்னும் தாயாக இருக்கும் ரங்கமாள் பாட்டி . இவரை பற்றிதான் சொல்லப்போகிறேன்.

ஒரு குழந்தையை கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வளர்ப்பதற்கே படாத பாடு படும் நிலையில் ஆறு குழந்தைகளையும் தனக்குத் தெரிந்த வெள்ளை அடிக்கும் வேலையில் வரும் சொற்ப வருமானத்தில் அனைவரையும் ஓரளவிற்குப் படிக்கவைத்து நல்ல இடத்தில திருமணங்களையும் முடித்து வைத்து ஒய்வு எடுக்கப்போகும் காலத்தில், தனது கடைசி மகன் சுப்ரமணி இவருக்கு தற்போது 60 வயது. சுப்ரமணி தாத்தாக்கு 50 வயது இருக்கும்போது அவருக்கு ஏற்ப்பட்ட பக்கவாதத்தினால் நடக்க கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். இதனால் தான் பார்த்துவந்த கட்டிட வேலையும் பார்க்க முடியாமல் போனது. வேலை இல்லை என்றால் வருமானம் எப்படி வரும்? வறுமை கஷ்டம் எல்லாம் தலை தூக்க துவங்கின . இனி இவரோடு இருந்தால் தன் குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகிவிடும் என்று தன் இரண்டு குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி விட்டார் சுப்பரமணி தாத்தாவின் மனைவி பாக்கியம்.

அதன் பிறகு பத்துமாதம் வயிற்றில் சுமந்தவள் காடுபோகும்வரை சுமந்துதான் ஆகவேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டது ரங்கம்மாள் பாட்டிக்கு. தாய்க்கு பின் தாரம் என்பார்கள். அந்த தாரமும் விட்டு போன பிறகு தாரத்துக்கு பின் மீண்டும் தாயாகி இருக்கிறார் ரங்கம்மாள் பாட்டி. பத்து மாதம் வயிற்றில் சுமந்தாள். பத்து வயதுவரை இடுப்பில் சுமந்தாள். அதுமட்டும் போதாது என மகனை இப்போது காலம் முழுதும் தோளில் சுமந்து, தன் கரங்களில் அவரது வாழ்க்கையை ஏந்தி காத்து வருகிறார். மிக கஷ்டமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு மனைவி மற்றும் குழந்தைகளையும் பிரிந்து வாழும் இவருக்கும் இவரை அரவணைத்து வரும் இந்த தாய்க்கும் இவர்களது உறவினர்களும் உதவ முன்வரவில்லை. இதுதான் உலகம். நன்றாக வாழும் வரை சுற்றி நிற்கும் சுற்றம், கஷ்டம் என வரும்போது விட்டு செல்லும் சுற்றம், சுற்றம் மட்டுமின்றி சொந்தமாக வந்த மனைவியும் விட்டு போன பின் ஒரு கட்டத்தில் எந்த வருமானமும் இல்லாமல் பிச்சை எடுக்கும் சூழ்நிலைக்கு இவர்கள் தள்ளப்பட, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மூலமாக இவர்கள் கோவையில் உள்ள ஒரு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். அங்கும் இவர் தனது மகனை தானே கவனித்து பாராமரித்து வருகிறார்.

90 வயதான தாய் 60 வயதான குழந்தை பாசத்தின் உச்சம் இவர்களிடம் நேரில் காணும்போது வாழ்க்கை எவ்வளவு அர்த்தமுடையது என்பது புரியவருகிறது. ஆனாலும் யாருக்காக யார் இவர்கள் உயிர் சுமந்து இருக்கின்றார்கள் என விடையை தேடும் போது . மனிதர்களுக்கு மனித வாழ்வின் அர்த்தத்தை உணரவைக்கும் அவதாரம் என்பது விளங்கவைக்கிறது.

~மகேந்திரன்

Saturday, September 28, 2013

மீண்டும் ஒரு உறவை ஈரநெஞ்சம் சேர்த்து வைத்தது.



''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
******
[For English version, please scroll down]
(207/28-09-2013)

கடந்த 16/09/2013 அன்று கோவை நஞ்சப்பா ரோடு பகுதியில் 80 வயது மதிக்கத்தக்க லக்ஷ்மி அம்மாள் என்ற மூதாட்டி ஒருவர் மனநில பாதிக்க பட்ட நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் மற்றும் B3 காவல் துறையினரால் ஈரநெஞ்சம் அமைப்பிற்கு தகவல் கொடுக்கப்பட்டு , கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

https://www.facebook.com/photo.php?fbid=271635149628114&set=a.143756775749286.13398.100003448945950&type=1&theater

அதனை தொடர்ந்து லக்ஷ்மி அம்மாவின் உறவினரை தேடும் முயற்சியில் , லக்ஷ்மி அம்மாளின் புகை படத்துடன் காணவில்லை என்ற அறிவிப்பு காலை 28/09/2013 கோவை நகர பேருந்தில் கண்ட ஈரநெஞ்சம் அமைப்பினர் , அதில் இருந்த அலைபேசி என்னுடன் தொடர்புகொண்டு லக்ஷ்மி அம்மாளை பற்றி விளக்கம் கேட்டு , அந்த எண் லக்ஷ்மி அம்மாளின் மகளான தமிழ் செல்வி என்பதை உறுதி படுத்திக்கொண்டு
ஈரநெஞ்சம் லக்ஷ்மி அம்மாளை அவரது மகள் தமிழ் செல்வியுடன் இணைத்து வைத்தது.

மேலும் தமிழ் செல்வி அவர்கள் கூறு பொழுது என்னுடைய அம்மா லக்ஷ்மிஅம்மாள் தான் என்றும், சற்று மனநலம் சரியில்லாதவர் மற்றும் காதும் சரியாக கேட்காது என்றும் கூறினார். மேலும் தாங்கள் உறவினர் ஒருவரின் இறப்பிற்க்கு சென்று இருந்த பொழுது காணாமல் போய் விட்டர் . கடந்த பத்து நாட்களாக காணவில்லை எங்கு தேடியும் கிடைக்கவில்லை அம்மாவை பத்திரமாக பார்த்துக்கொண்ட மாநகராட்சி காப்பகதிர்க்கும் ஈரநெஞ்சம் அமைபிர்க்கும் நன்றியை தெரிவித்து கொண்டார்.

இதன் மூலமாக மேலும் ஒரு உறவை சேர்த்து வைத்த மகிழ்ச்சியை ஈர நெஞ்சம் தாங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறது.
நன்றி
~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

B3 police station and public informed Eeraneanjam about 80 years old lady who is mentally ill & roaming in Koavai Nanjappa road alone and no one knows about her.
Meanwhile members of Eeraneanjam saw the posters about that lady that she is Lakshmi Ammal, with her photo and contact number. Eeraneanjam contacted that number, that was her daughter tamil selvi s number, and she was informed about her mother, that she is in the care of Eeraneanjam.
Tamil selvi said her mother is mentally ill and she lost her hearing power also, 10 days back she was gone out when we were went to one funeral, they were searching everwhere and posted the posters with photo and contact number. She extended her heartfelt thanks to Corporation home and Eeraneanjam who taken care of her.
Eeraneanjam is also happy that one more person has been reunion with her family.

Thank you
~Eera Nenjam
Photo: ''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
******
[For English version, please scroll down]
(207/28-09-2013)

கடந்த 16/09/2013 அன்று கோவை நஞ்சப்பா ரோடு பகுதியில் 80 வயது மதிக்கத்தக்க லக்ஷ்மி அம்மாள் என்ற மூதாட்டி ஒருவர் மனநில பாதிக்க பட்ட நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் மற்றும் B3 காவல் துறையினரால் ஈரநெஞ்சம் அமைப்பிற்கு தகவல் கொடுக்கப்பட்டு , கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

https://www.facebook.com/eeranenjam.organization#!/photo.php?fbid=271635149628114&set=a.143756775749286.13398.100003448945950&type=1&theater

அதனை தொடர்ந்து லக்ஷ்மி அம்மாவின் உறவினரை தேடும் முயற்சியில் , லக்ஷ்மி அம்மாளின் புகை படத்துடன் காணவில்லை என்ற அறிவிப்பு காலை 28/09/2013  கோவை நகர பேருந்தில் கண்ட ஈரநெஞ்சம் அமைப்பினர் , அதில் இருந்த அலைபேசி என்னுடன் தொடர்புகொண்டு லக்ஷ்மி அம்மாளை பற்றி விளக்கம் கேட்டு , அந்த எண் லக்ஷ்மி அம்மாளின் மகளான தமிழ் செல்வி என்பதை உறுதி படுத்திக்கொண்டு
ஈரநெஞ்சம் லக்ஷ்மி அம்மாளை அவரது மகள் தமிழ் செல்வியுடன் இணைத்து வைத்தது.

மேலும் தமிழ் செல்வி அவர்கள் கூறு பொழுது என்னுடைய அம்மா லக்ஷ்மிஅம்மாள் தான் என்றும், சற்று மனநலம் சரியில்லாதவர் மற்றும் காதும் சரியாக கேட்காது என்றும் கூறினார். மேலும் தாங்கள் உறவினர் ஒருவரின் இறப்பிற்க்கு சென்று இருந்த பொழுது காணாமல் போய் விட்டர் . கடந்த பத்து நாட்களாக காணவில்லை எங்கு தேடியும் கிடைக்கவில்லை அம்மாவை பத்திரமாக பார்த்துக்கொண்ட மாநகராட்சி காப்பகதிர்க்கும் ஈரநெஞ்சம் அமைபிர்க்கும் நன்றியை தெரிவித்து கொண்டார்.

இதன் மூலமாக மேலும் ஒரு உறவை சேர்த்து வைத்த மகிழ்ச்சியை ஈர நெஞ்சம் தாங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறது.
நன்றி
~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

B3 police station and public informed Eeraneanjam about 80 years old lady who is mentally ill & roaming in Koavai Nanjappa road alone and no one knows about her.
Meanwhile members of Eeraneanjam saw the posters about that lady that she is Lakshmi Ammal, with her photo and contact number. Eeraneanjam contacted that number, that was her daughter tamil selvi s number, and she was informed about her mother, that she is in the care of Eeraneanjam.
Tamil selvi said her mother is mentally ill and she lost her hearing power also, 10 days back she was gone out when we were went to one funeral, they were searching everwhere and posted the posters with photo and contact number. She extended her heartfelt thanks to Corporation home and Eeraneanjam who taken care of her.
Eeraneanjam is also happy that one more person has been reunion with her family.

Thank you
~Eera Nenjam


Thursday, September 19, 2013

வேலூரில் ஆதரவற்று இருந்தவரை காப்பகத்தில் சேர்ப்பு~ ஈரநெஞ்சம் .


''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
******
[For English version, please scroll down]
(204/18-09-2013)

வேலூர் அருகம்பாரை அரசு மருத்துவமனை அருகே ஆதரவற்று இருவர் ரோட்டில் கிடப்பதை அவ்வூரை சார்ந்த ஜெய்சங்கர் என்பவர் பார்த்துள்ளார் மேலும் அவர்களிடம் பேசியதில் அந்த இருண்டு நபரில் ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்டு பேச இயலாத நிலையிலும் மற்றோவர் பெயர் மணி என்றும் அவருக்கு யாரும் இல்லை என்பதையும் அறிந்த அவர் அவர்களை காப்பகத்தில் சேர்க்க கடந்த ஐந்து நாட்களாகமுயற்சித்து வந்து இருக்கிறார் , அவருக்கு போதிய உதவி கிடைக்காத நிலையில் அவர் ஈரநெஞ்சம் அமைப்பை தொடர்பு கொண்டு அவருக்கு உதவி அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்பு மேற்கொண்ட முயற்சியுடன் அந்த இரண்டு நபர்களையும் செங்கல்பட்டு பாலேஸ்வரத்தில் உள்ள புனித ஜோசெப் கருணை இல்லத்தில் நேற்று 17.09.13 சேர்கப்படர்கள் என்பதை ஈரநெஞ்சம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறது. மேலும் அவர்களுக்கு உதவ நினைத்த ஜெய்சங்கர் அவர்களின் நல்ல உள்ளதை ஈரநெஞ்சம் பாராட்டுகிறது.

நன்றி
~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Near Vellore Arumbaarai government hospital two unknown people were identified by Mr Jaishankar. He came to know that one is mentally ill and can’t speak as well, another one Mr. Mani is aged and no one to take care of him, so Mr.Jaishankar wants to admit both of them in a home, he searching the home for past 5 days. At last he approached Eeraneanjam to help to admit both in a home. Eearaneanjam helped him to admit both in St Josephs home at Paaleshvaram, Sengalpattu, on 17/09/13. Eeraneanjam appreciate the initiative taken by Mr Jaishankar to help them.

Thank you
~Eera Nenjam
Photo: ''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
******
[For English version, please scroll down]
(204/18-09-2013)

வேலூர் அருகம்பாரை அரசு மருத்துவமனை அருகே ஆதரவற்று இருவர் ரோட்டில் கிடப்பதை அவ்வூரை சார்ந்த ஜெய்சங்கர் என்பவர் பார்த்துள்ளார் மேலும் அவர்களிடம் பேசியதில் அந்த இருண்டு நபரில் ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்டு பேச இயலாத நிலையிலும் மற்றோவர் பெயர் மணி என்றும் அவருக்கு யாரும் இல்லை என்பதையும் அறிந்த அவர் அவர்களை காப்பகத்தில் சேர்க்க கடந்த ஐந்து நாட்களாகமுயற்சித்து வந்து இருக்கிறார் , அவருக்கு போதிய உதவி கிடைக்காத நிலையில் அவர் ஈரநெஞ்சம் அமைப்பை தொடர்பு கொண்டு அவருக்கு உதவி அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்பு மேற்கொண்ட முயற்சியுடன் அந்த இரண்டு நபர்களையும் செங்கல்பட்டு பாலேஸ்வரத்தில் உள்ள புனித ஜோசெப் கருணை இல்லத்தில் நேற்று 17.09.13 சேர்கப்படர்கள் என்பதை ஈரநெஞ்சம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறது. மேலும் அவர்களுக்கு உதவ நினைத்த ஜெய்சங்கர் அவர்களின் நல்ல உள்ளதை ஈரநெஞ்சம் பாராட்டுகிறது.

நன்றி
~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Near Vellore Arumbaarai government hospital two unknown people were identified by Mr Jaishankar. He came to know that one is mentally ill and can’t speak as well, another one Mr. Mani is aged and no one to take care of him, so Mr.Jaishankar wants to admit both of them in a home, he searching the home for past 5 days. At last he approached Eeraneanjam to help to admit both in a home. Eearaneanjam helped him to admit both in St Josephs home at Paaleshvaram, Sengalpattu, on 17/09/13. Eeraneanjam appreciate the initiative taken by Mr Jaishankar to help them.

Thank you
~Eera Nenjam

மனிதாபிமானம் மரிக்கவில்லை:-

மனிதாபிமானம் மரிக்கவில்லை:-

சக மனிதர்களிடம் குறிப்பாக துயரத்தில் சிக்கி தவிப்போரிடம் காட்டும் அன்பு,இரக்கம் போன்றவைகளை மனிதாபிமானம் எனக் கூறலாம்.விபத்தில் அடிபட்டு சாகக்கிடப்பவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தால், அங்கே மனிதாபிமானம் வாழ்கிறது. இவ்வகையில் மனிதபிமானதிற்க்கு உதாரணமாக இருப்பவர்தான் 'கோவை ஆம்புலன்ஸ் முருகேசன்'.

தமிழகத்தில் வாழும் கோடிக்கணக்கான மனிதர்களில் இவரும் ஒருவர்.கோவையில் அவசர ஊர்தியில் வாகன ஒட்டுனராக பணியாற்றி வரும் முருகேசன்,கடந்த செப்டம்பர் மாதம் 12 ம் தேதி இரவு வழக்கம் போல தன் பணியை முடித்துக்கொண்டு இரவு 8 மணியளவில் கோவை-தடாகம் சாலையில் வந்து கொண்டிருந்தார்.அங்கே அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சிக்குள்ளாகியது.ஒரு இளைஞரை பத்துக்கும் மேற்பட்டோர் அடித்துக்கொண்டிருந்தனர். கூட்டத்தை விலக்கிப் பார்த்தால் அந்த இளைஞர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் போலத் தெரிந்தது.உண்மைதான் அவர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்தான்.அங்கிருந்தவர்களை பாவம் அவரை அடிக்காதிர்கள் இவரை அடிக்கிறீர்கள் என வினவ, அந்த இளைஞர் பொதுமக்களுக்கு இடையூறு செய்வதாகவும், அவ்வழியே செல்லும் ஆட்டோ போன்ற வாகனங்களை பிடித்து இழுப்பதாகவும் அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.

பிறகு மெதுவாக கோவை முருகேசன் அந்த இளைஞரிடம் பேசினார்.ஹிந்தி கோவை முருகேசனுக்கும் தெரியும் என்பதால் அந்த வாலிபரை கூட்டத்தில் இருந்து மீட்டு காவல் நிலையத்தில் சேர்த்தார் காவலர்கள் உதவியுடன் .பாதிக்கப்பட்ட இளைஞர் பின்பு R.S.புரத்தில் உள்ள முதியோர் காப்பகத்தில் சேர்த்தார்.பாதிக்கப்பட்ட நபர் இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே கட்டிக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.கோவை முருகேசனுக்கு உதவியாக அவரது நண்பர்கள் ஜோதிமணி
மற்றும் M.P.K.முருகேசன் உடனிருந்தனர்.பிறகு சகஜ நிலைக்கு வந்த அந்த இளைஞரை விசாரித்ததில் அவர் பெயர் சிண்டு என்றும்,வயது 28 ஆகிறது என்றும் திருமணமாகி மனைவியும்,4 வயதில் குழந்தையும் இருப்பதாக அந்த வாலிபர் கூறினார்.உடனடியாக கல்கத்தாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சிந்துவின் அப்பாவும்,பக்கத்து வீட்டுக்காரரும் வரவழைக்கப்பட்டனர்.பின்னர் பத்திரமாக சிண்டுவை
அவர்கள் கரங்களில் ஒப்படைத்தனர்.

கோவை முருகேசன் கூறிய கருத்துக்கள் நம்மை ஆச்சர்யத்தில் மூழ்கடித்தன.ஈரநெஞ்சம் என்னும் சமூக சேவை அமைப்பின் செயல்பாடுகளும்,மனிதாபிமானச் செயல்களும் தன்னை வெகுவாகக் கவர்ந்து தன்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறினார்.மேலும் சமூகத்திற்கு தானும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாகவும் கூறினார்.

ஒரு மனிதன் சமுதாயத்தில் கொலை,கொள்ளைப் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கூட சட்டப்படி தண்டிக்கின்றார்கள் .அப்படிப்பட்ட ஒரு சூழலில் ஏதோ தன் விதிவசத்தால் வீட்டை விட்டு
வெளியேறி அங்கும் இங்கும் அலைந்து திரிந்து உணர்ச்சிவசப்பட்ட நிலையில் செய்வதறியாது செய்த குற்றத்திற்கு அவரை ஒன்று கூடி அடித்தல் முறையாகுமா? நாம் ஒவ்வொருவரும் முடிந்த வரையில்
மனிதபிமானதொடு வாழ்வோம்.மேலும் கோவை முருகேசனைப் போன்றோர் இருப்பதாலும்,இவர்களைப் போன்ற சாதாரண மனிதர்களையும் மனிதபிமானதோடு நடந்து கொள்ளச் செய்யும் தாக்கத்தை ஏற்படும் 'ஈரநெஞ்சம்' போன்ற சமுதாய அக்கறை கொண்ட அமைப்புகளாலும் 'மனிதாபிமானம் இன்னும் மரிக்கவில்லை' வாழ்ந்து கொண்டுதான் உள்ளது என்பதை கண்கூடாக காணமுடிகிறது.REAL லைப் HERO,கோவை முருகேசனுக்கும் அவர் நண்பர்களுக்கும் ஈரநெஞ்சத்திற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மனித நேயத்தை வளர்ப்போம்..மனிதாபிமானத்தைப் போற்றுவோம்!

-எழுத்தாளர்,என்.டி.சரவணன்



Sunday, January 27, 2013

தினமலரில் என்னை பற்றி ~நன்றி தினமலர்

இரக்கமுள்ள மனசுக்கு இன்னொரு பெயர் மகேந்திரன் > முன்பெல்லாம் தெருவோரங்களில் குப்பைகள்தான் கிடக்கும். ஆனால் இப்போதோ பிறந்த குழந்தைகளும், நடமாட முடியாத வயதானவர்களும் கூட குப்பை கூளங்கள் நடுவே மக்கியபடி கிடக்கின்றனர்.

கிடக்கின்றனர் என்பது கொஞ்சம் மரியாதையான வார்ததை, உண்மையில் வீசியெறியப்படுகின்றனர்.

பொதுமக்களைப் பொறுத்தவரை , வீசியெறியப்பட்ட முதியவர்கள் ரத்தகாயமின்றி இருந்தால் ஒரு விநாடி நின்று பார்த்து, "ஐயோ பாவம் ' என சொல்லி செல்வார்கள், அதே வயதானவர்கள் அருவறுப்பான தோற்றத்துடனோ, ரத்த காயத்துடனோ, ஆடைகள் களைந்த நிலையிலோ, நோய் தாக்கிய நிலையிலோ இருந்தால், திரும்பி கூட பார்க்காமல் வேகவேகமாக நடப்பார்கள். அந்த முதியவர்கள் மனநோயாளியாக இருந்துவிட்டால் போதும், எதிர்திசையில் ஒட்டமெடுப்பார்கள். அவர்களைச் சொல்லியும் குறையில்லை அம்மா, மனைவி, குழந்தைகளிடம் கூட பேச நேரமில்லாத அவசர யுகத்தில் வசிக்கின்றனர்.

பொருள் தேடும் உலகில் உயிர்கள் மீதான பாசமும், நேசமும் அவ்வளவுதான்.

ஆனால் எல்லோரும் அப்படியில்லை, ஒரு சிலருக்குள் இன்னமும் மனிதத்தன்மை மரித்து போய்விடாமல்தான் இருக்கிறது,அவர்களில் ஒருவர்தான் கோவை காந்திபுரத்தைச் சேர்ந்த முப்பத்தைந்து வயதாகும் மகி என்கின்ற மகேந்திரன்
கடந்த 2009ம்ஆண்டில் இவரது சகோதரி ஒருவர் திடீரென உடல்நலம் குன்றி ரோட்டில் விழுந்து கிடந்த போது, பலரும் வேடிக்கை பார்த்தார்களே தவிர ஏன் என்று கேட்டு ஒருவரும் உதவி செய்யவரவில்லை.

இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு அதனால் பாதிக்கப்பட்ட மகேந்திரன் அன்று முதல் ரோட்டில் யார் ஒதுங்கிக்கிடந்தாலும், உடனே என்ன ஏது என்று கேட்டு அவர்களை உரிய உறவினர்களிடமோ, காப்பகத்திலோ, ஆஸ்பத்திரியிலோ சேர்த்து வருகிறார்.
வீதியோரம் கிடப்பவரை பார்த்ததும் முதலில் அவருக்கு நல்ல உணவு கொடுத்து தெம்பு ஏற்படுத்துவார், பின் ஆணாக இருந்தால் முடிவெட்டி, முகச்சவரம் செய்வார், நன்றாக குளிக்க வைத்து, புது உடைவாங்கிக்கொடுத்து விடுவார், பார்ப்பவர்கள், "கொஞ்ச நேரத்திற்கு முன் ரோட்டில் கிடந்த ஆளா இது!' என்று ஆச்சசரியப்படும் அளவிற்கு ஆளை மாற்றிவிடுவார் .

அதன் பிறகு அவர்கள் அருகில் அமர்ந்து விசாரிப்பார், முடிந்தவரை அவர்களை, அவர்களது உறவினருடன் சேர்த்து விடுவார், முடியாத போது காப்பகங்களிலும், சிகிச்சை தேவை எனில் ஆஸ்பத்திரியிலும் சேர்த்துவிடுவார்.
காப்பகத்தில் சேர்த்தாலும் சரி, ஆஸ்பத்திரியில் சேர்த்தாலும் சரி , சேர்த்ததோடு தனது கடமை முடிந்ததாக கருதாமல், அவ்வப்போது போய் பார்த்து ஒரு உறவினராக, நண்பனாக நடந்து கொள்வார்.

பதினெட்டு வருடங்களுக்கு முன் காணாமல் போன மகனை நினைத்து அழுதவர்கள் முன் இந்தாருங்கள் உங்கள் பிள்ளை என்று நிறுத்தி, அந்த குடும்பத்தின் நீண்ட கால வேதனை கண்ணீரை, ஆனந்த கண்ணீராக மாற்றியுள்ளார். மன நோயாளிகள் பலர் இவரது அன்பால் மன நோய் நீங்கிப்பெற்று தற்போது திருமணம் முடிந்து நல்லபடியாக இருக்கின்றனர், தெருவோரம் கேட்பாரற்று கிடந்த பாட்டிகளும், தாத்தாக்களும் இப்போது காப்பகத்தில் உற்சாகமாக வலம் வருகின்றனர்.
ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனில்லாமல் இறந்துபோய் "அநாதை பிணங்கள்' என முத்திரை குத்தப்படுபவர்களின் உடல்களை, "நானே அவரது உறவினர் என்று தானே வலியப் பெற்று' அவர்களது உடலை மாலை மரியாதையுடன் நல்லடக்கம் செய்தும் வருகிறார்.

தீபாவளி பொங்கல் என்றால் உறவினர்களை அழைப்பது போல அரவாணிகள், உடல் ஊனமுற்றவர்ககள், முதியவர்களை அழைத்து விருந்து கொடுத்து அவர்களை மகிழ்விப்பதன் மூலம் குடும்பத்துடன் தானும் மகிழ்ந்து வருகிறார்.
ஈர நெஞ்சம் என்ற அமைப்பை ஏற்படுத்தி இத்தகைய தொண்டாற்றிவரும் மகேந்திரனின் இந்த பணிக்கு பெரும் பலமாக இருந்து உதவுபவர்கள் பாலசந்திரன், பரிமளா வகீசன், தபசுராஜ், சுரேஷ் கணபதி, கணேஷ் குமார், மணிமேகலை, வசந்திரா, மோகனசுந்தரம், செண்பகம், பழநியப்பன் ஆகிய நண்பர்களும், இவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நம்பி தோள்கொடுக்கும் அன்னை தெரசா காப்பகம், பிரபஞ்ச அமைதி சேவாலயம், சாய்பாபா முதியோர் இல்லம், அன்பாலயம், சாய் முதியோர் இல்லம், கருணாலயம் ஆகிய காப்பகங்களும்தான்.

இவரால் நலமடைந்து பலனடைந்தவர்களின் பட்டியல் மிக நீளமானது. இப்போது கோவை வீதியில் யாரேனும் விழுந்து கிடந்தால், "கூப்பிடு மகேந்திரனை' என்று சொல்லுமளவிற்கு பிரபலமடைந்துவிட்டார்.
ஒரு வார்த்தை மகேந்திரனை வெறுமனே கூப்பிட்டு வாழ்த்தினால் கூட போதும், இன்னும் ஆயிரம் பேரை காப்பாற்றும் தெம்பும், திராணியும் அவருக்கு கிடைத்துவிடும், மகேந்திரனை வாழ்த்த விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள; 9843344991, 9600400120

தினமலரில் 

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=634850