Sunday, January 20, 2013

மகியின் கவிதைகள்...


 
நீ  
தோளில் சாய்த்து
பயணித்த கனவுகளில்...

நான்இன்னும்
பயணித்துக்கொண்டே
இருக்கிறேன்..!
'தீதும் நன்றும் பிறர் தர வாரா'

காதலும் அதற்க்கான ஆறுதலும் நீயே தர வாராய்...
 
பேய் வீடு கண்டு
அஞ்சுவது போல...

நீ
இல்லாத
பகலை கண்டும்
அஞ்சி நடுங்குகிறேன்..!
 
சிறு
புன்னகை துளியில் தள்ளிவிட்டு...

காதல் கடலில்
தத்தளிக்க விட்டு விட்டு
போகிறாய்..!
 
உன் பார்வை வேப்பதிர்க்காகவும்
உன் பார்வை வெப்பத்திலும்
தவம் இருக்க வேண்டும்

மார்களியல்லாது
சித்திரையிலும்..!
 
புன்னகையை புயலாக்குவது...

புயலை பூவாக்குவதும்...

காதலுக்கு
கைவந்த கலை..!
 
ஆயிரம் ஏவுகணைகள்
அவள் பார்வையில்...
எனக்கு
மட்டும் சொந்தமாகவேண்டும்
அதன் தாக்குதல்..!
 
நீ இரவில் சூரியாங்க வருகிறாய்
பகலில் நிலாவாக வருகிறாய்
வேற்கின்ற போது அனலை மூடிகிறாய்
குளிர்கின்ற போது விசிரிவிடுகிறாய்
உன்
வார்த்தைகள் , பார்வைகள் , ஸ்பரிசங்கள் எல்லாம்
விசேஷ காலங்களில்
நான் உடுத்தும் ஆடைகளாக இருக்கிறது..!
 
உன்
விழி ஈர்ப்பு விசையால்
கரைதட்டிய
கப்பல் நான்..!
 
உன்னை
பார்க்கவோ...
பேசவோ...
பழகவோ...
எனக்கு எந்த அச்சமும்
இல்லை..!

ஆனால்
ஒரே ஒரு பயம்தான்
அதன் பிறகு
என்னை மறந்துவிடுவேனோ
என்று..!
 
இசையை போல...

என்
மெய் மறக்க செய்யும்
உன்
நினைவுகளுக்கு தெரிவதில்லை
காரணம்
தான் தானென்று..!
 
நூறு சூரியன் வந்தாலும்
உன் கோவம்
சுட்டேரிப்பதுபோல
எந்த
சூரியனாலும் முடியாது...!
 
எரிக்கும்
உன் கோவம்...

விளக்குகள் இல்லா
இரவு போல
இருக்கிறேன்..!
 
நீ
அந்தி சூரியன்...

உன்னை
பிரிய மனம் இல்லாத
வானம் கருவழிந்து
நிற்கிறது...

என்னை போல..!
 
இன்னும் எந்த எந்த
பழங்கள் தடை
செய்யப்பட்டு
உள்ளதோ...

வா
நீயும் நானும்
தேடி தின்போம்..!
 
எனக்கு
பிடித்தமான கவிதை
உன்
விழிகளை தவிர
வேறு யாரும்
எழுத முடியாது...

உனக்கு
பிடித்தமான கவிதை
என்
குறும்புகளை தவிர
என்னால் கூட
எழுத முடியாது..!
 
  எனக்கு
முன்னதாகவே
உனக்கு
"காலை வணக்கம்"
சொல்ல எழுந்து வந்துவிடும்
இந்த விடியலை
என்ன செய்வது..?
 
பூக்களுக்குள்
தேன் நுழைந்ததுபோல...
எனக்குள்
உன்
நியாபகக்காதல்..! 
 
பூக்களுக்குள்
தேன் நுழைந்ததுபோல...
எனக்குள்
உன்
நியாபகக்காதல்..!
 
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment