Monday, January 23, 2023

குழந்தைகள் நட்ட மரக்கன்றுகள்

கோவை விநாயகபுரம் கிரிமலை நகரில் இன்று (22/01/23) தங்கள் நகரை பசுமைநகராக மாற்றும் முயற்சியின் முதல் படியாக பெற்றோர்களும் குழந்தைகளும் இன்றைய விடுமுறை நாளை அழகாகப் பயன்படுத்தி உள்ளனர்...
மரம் வளர்ப்பது தொடர்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு  நம் முன்னாள் குடியரசு தலைவர் மற்றும் மாணவர்களின் நாயகன் APJ அப்துல் கலாம் அவர்கள் கூறிய உறுதிமொழி:
     நான் என் வீட்டிலோ, காட்டிலோ, பள்ளிக்கூடத்திலோ, வேலை இடத்திலோ 10 மரங்களை நட்டு, அதைப் பாதுகாப்பேன். நான் என் குழந்தைகளை மரம் நட்டு வளர்க்க ஊக்குவிப்பேன், என்று அவர் கடைப்பிடிக்க சொல்லிய உறுதிமொழியை இந்த பெற்றோர்களும் குழந்தைகளும் செயல்படுத்தி உள்ளனர்.
அழிந்து வரும் இயற்கையைப் பாதுகாக்கவும், மரங்களின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு புரியவைக்கவும் அவர்களை தங்கள் பகுதியில் பராமரிப்பற்ற நிலையில் இருந்த பூங்காவில் மரம் நட ஊக்கப்படுத்திய பெற்றோர்க்கு வாழ்த்துகள்..
நிகழ்வில் கலந்து கொண்ட மழலைச் செல்வங்கள் புதிதாக நடப்பட்ட மரக் குழந்தைகளுக்கு தங்கள் பெயரைச் சூட்டி மகிழ்ந்ததோடு தண்ணீர் ஊற்றி எந்நாளும் பராமரிப்போம் என்று உறுதியளித்தனர்.
எங்களை எங்கள் அப்பா அம்மா பார்த்துக் கொள்வது போல மரங்களை நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்று குழந்தைகள் கூறுகையில் கலாம் கண்ட கனவு இந்தியா கண்ணில் ஒளிர்ந்தது.

~ ஈரநெஞ்சம் மகேந்திரன்

Friday, January 06, 2023

தொல்காப்பிய இரட்டை சிறுமியர்

தொல்காப்பியத்தின் நூல். மொழி மரபினை ஒப்பிவித்து சாதனை படைக்கும் 5 வயது இரட்டையர்கள் .

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கோவையை சேர்ந்த செந்தில் குமார் உமாராணி தம்பதியர்களுக்கு பிறந்த மகிமா, மகிதா என்ற 5 வயது இரட்டையர்கள். இருவருமே வீட்டில்  படு சுட்டி, தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள  தி அத்யாயனா இண்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி UKG படித்து வருகின்றனர்  படிப்பிலும் சளைத்தவர்கள் இல்லை.
செந்தில் குமார் உமாராணி இருவருக்கும் தமிழ் மீது பற்று அதிகம். செந்தில் குமார் தினமும் காலையும் மாலையும் தெய்வ வழிபாடு போன்று   தொல்காப்பியம் படிப்பது வழக்கம், 

செந்தில் குமார் தொல்காப்பியம்  வாய்விட்டு படிப்பதை  மகிமா, மகிதா இருவரும் தவழும் வயது முதல் கவனித்து வருவது உண்டு. 3 வயதாகும் போதே மழலை மொழியில் இருவரும் தொல்காப்பியம் ஒப்பிக்க ஆரம்பித்து விட்டனர், 

நான்கு வயதில் பள்ளியில் சேர்த்ததும் பள்ளியில் தொல்காப்பியத்தை சரளமாக ஒப்பிப்பதை கண்ட ஆசிரியர்கள் அனைவரும் மிகவும் ஆச்சர்யப்பட்டனர்.

தமிழ் மொழிக்கு மிகவும் முக்கியமானது இலக்கணம் . இலக்கணத்தை தமிழ் மொழியில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று அருளியவர் தொல்காப்பியர் . இவர் எழுதிய தொல்காப்பியமே மிகவும் பழங்காலத்தில் தோன்றிய இலக்கண தொகுப்பாகும். நமது  பண்டைய இலக்கணங்களை புரிந்து கொள்வதற்கு நமக்கு உறுதுணையாய் உதவுவது தொல்காப்பிய நூலே ஆகும். 

காப்பியத்தில் உள்ள எழுத்து அதிகாரம், சொல் அதிகாரம்,  பொருள் அதிகாரம்,  ஆகியவற்றை நன்றாக கற்கும் பொழுது, எந்த கல்வி பயின்றாலும் தமிழ் மொழியில் சிறந்து விளங்குவார்கள் . என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .

மகிமா, மகிதா குழந்தைகள் இரண்டு வயது முதலே தொல்காப்பியத்தின்  எழுத்து அதிகாரம், சொல் அதிகாரம், பொருள் அதொகாரம் போன்ற தொகுப்புகளை கொண்டவற்றில் எழுத்து அதிகாரத்தில் உள்ள முதலில், நூல் மரபு மற்றும் மொழி மரபினை கற்றுக் கொண்டுள்ளனர். 

இப்பொது நூல் மரபு, மொழி மரபு , பிறப்பியல் , மூன்றும் கற்றுணர்ந்து பிழையின்றி ஒப்பிக்கின்றனர். மற்றும் தற்பொழுது  புணரியல் கற்று வருகின்றனர். 

உலகில் முதலில் தோன்றிய மொழி தமிழ் மொழி.  ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு  (அ ) நாகரிக மாற்றத்தின் காரணமாக  நம் தமிழ் மொழி  சிதைந்து விடுமோ  என்ற அச்சம் நிலவும் இக்காலகட்டத்தில்  தொல்காப்பியத்தை  தெள்ளத்தெளிவாக ஒப்புவிக்கும் இந்த தமிழ் மழலை குழந்தைகளை பார்க்கும் பொழுது தமிழ் மொழி என்றும் நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

தற்பொழுது மகிமா, மகிதா இரட்டையர்கள் பல தமிழ் வழி கூட்டங்களில் கலந்து கொண்டும்  வருகின்றனர். தமிழ் ஆர்வலர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகின்றனர்.


மகிமா, மகிதா இரட்டையரின் தமிழ் வளர்ப்பை கண்டு ஈரநெஞ்சம் அறக்கட்டளை அவர்களுக்கு இன்று பரிசு வழங்கி மகிழ்வித்தது. 

தமிழ் வாழ்க !!!

~ஈரநெஞ்சம் அறக்கட்டளை
https://www.facebook.com/eeranenjam.organization