Tuesday, June 17, 2014

சென்னையில் ஒரு நாள் ஈரநெஞ்சம்

ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services
" ****************
(320/13-06-2014)

சென்னை மயிலாப்பூர் , ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள Yellow Pages பேருந்து நிறுத்தத்தில் ,நேற்று 13/06/2014 சுமார் 60 வயதுடைய சென்னை பட்டினபாக்கத்தை சேர்ந்த தனமாலையா ஜீனத் பேகம் ஆதரவற்ற மனநிலை பாதித்த பெண் வலது கால் புண்ணாகி அழுகிய நிலையில் படுத்திருப்பதை பார்த்த நம் ஈர நெஞ்சம் அமைப்பின் உறுப்பினர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து வரவழைத்து அந்த ஆம்புலன்சிலேயே அவர்களுடன் சென்று ராயபேட்டை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார் .

கோவையை சேர்ந்த அவர் சென்னை தெரியாத ஊர் நமக்கென்ன என்று விடாமல் அந்த பெண்ணின் மேல் கருணை கொண்டு மருத்துவமனை வரை சென்று சேர்த்ததை தபார்த் மருத்துவர்கள் அவரை பாராட்டினர் . அவரது மனித நேய செயலை நாமும் பாராட்டுவோம் ...

ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

A member of the Eera Nenjam Trust found helpless 60 year old Thanamalaya Jeenath Begam at Chennai, Mayilapur, Radhakrishnan Street beside the Yellow Pages Bus stop. Thanamalaya was mentally ill and had decayed right leg. The trust member immediately called the 108 ambulance service. When they arrived the member also went along with them in the ambulace and admitted the lady at Rayapettai Government Hospital.

The doctors at the hospital praised the trust member for his kind service. The member was from Coimbatore, Chennai was an unfamiliar place for him, but that didn’t stop him from helping the needy person. Let us also praise him and wish him for him being a good humanitarian.

~thank you
Eera Nenjam

Sunday, June 08, 2014

அந்தியூரின் அதிவேக விழிப்புணர்வு நாயகன்

எத்தனையோ சாதனைகளை பற்றி கேள்விப்பட்டிருப்போம் . தங்கள் லட்சியங்களுக்காக எத்தனையோ கஷ்டப்பட்டவர்களை பார்த்திருப்போம். " இளம் கன்று பயமறியாது " என்பதற்கு ஏற்ப தன் உயிரை பணயம் வைத்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த துணிந்திருக்கும் இந்த இளைஞரை நாம் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.

"இந்தியாவின் சாதனை நாயகன் பதினெட்டு வயது துளசிமணி", அந்தியூர் தவுட்டுபாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தை சுப்பிரமணி, ஆட்டோ டிரைவராக இருக்கிறார். தாய் அன்னபூரணி மற்றும் இவரது தங்கை எட்டாவது படிக்கிறார். இந்தியாவின் சாதனை நாயகன் துளசிமணி கோவை கற்பகம் கல்லூரியில் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படித்துக் கொண்டு இருக்கிறார். சிறுவயது முதலே இவருடன் நெருங்கிய நட்புடன் இருந்த அவரது நண்பர் நந்தகுமார், இருவரும் நன்றாக பைக் ஓட்டுபவர்கள். ஒரு முறை பைக் பயணத்தின் போது ஏற்பட்ட சாலை விபத்தில் நந்தகுமார் வண்டி ஓட்டி போகும்போது தலைக்கவசம் (ஹெல்மட்) அணியாமல் சென்றதால் உயிரிழந்தார். தன் கண் முன்னர் நடந்த இந்த விபத்தில் உயிர் நண்பன் பலியானதை கண்டு மனம் உடைந்த துளசிமணி இனி யாருக்கும் இந்த நிலை நேராமல் இருக்க மக்களுக்கு விழிப்புணர்வு கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்தார்.

இருசக்கர பயணத்தின் போது கண்டிப்பாக ஹெல்மட் அணியவேண்டும்,
சாலை விதிகளை மதிக்க வேண்டும்,
மரம் நட வேண்டும்,
பாலிதீன் பொருட்களை ஒழிக்க வேண்டும்,
இளைஞர்களிடம் சமூக சேவை விழிப்புணர்வு கொண்டுவரவேண்டும்.

போன்ற கருத்துக்களை மக்கள் மனதில் பதிய வைக்க விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டார் . கடந்த வருடம் 2013 டிசம்பர் 21தேதி சனிக்கிழமை அன்று காலை 5:20க்கு பொள்ளாச்சியில் கிளம்பி தாராபுரம், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமாரி அங்கிருந்து கிளம்பி திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர் மீண்டும் திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக வந்து காலை 5:10க்கு கன்னியாகுமரி வந்தடைந்தார். அதுமட்டுமின்றி இந்த பயணத்தின் போது அவர் தனது லட்சியங்களான ஹெல்மட் அணியவேண்டும், சாலை விதிகளை மதிக்க வேண்டும், மரம் நட வேண்டும், பாலிதீன் பொருட்களை ஒழிக்க வேண்டும், இளம் மாணவர்களிடையே சமூக சேவை மனப்பான்மையை உருவாக்க வேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை சுமார் 3800 பொது மக்களுக்கு வழங்கி அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டார்.

அமெரிக்க நிறுவனமான "அயர்ட் அசோசியேசன்" அறிவித்திருக்கும் 24 மணிநேரத்தில் ஆயிரத்து அறுநூறு (1600 ) கிலோமீட்டர் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தால் "சேட்டில் சோர்" என்ற விருதுக்கு, இதுவரை 1624 கிலோமீட்டர் என்பது தான் அதிகபட்ச தூர சாதனையாக இருந்தது ... மேலும் இது போன்ற சாதனையை புரிய முயற்சி செய்த 24 பேர் இறந்துவிட்டனர்.

இதற்குமுன் இந்த விருதுக்காகவே பயிற்சி பெற்று களத்தில் இறங்கி உயிரிழந்த 24 பேரும் தங்கள் சொந்த பணத்தில்தான் இந்த முயற்சியை மேற்கொண்டனர். துளசிமணியின் நோக்கம் விருதல்ல மக்களிடயே ஒரு நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றே இருந்தது கூடவே வறுமையும் இருந்தது மனம் தளராது துளசிமணி பொதுமக்களிடம் பண உதவி பெற்று இந்த முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க நிறுவனமான "அயர்ட் அசோசியேசனின் " " சேட்டில் சோர் " என்ற விருதுக்கும் சொந்தமாகி உள்ளார். இந்த சாதனை நிகழ்த்திய துளசிமணி 24 மணிநேரத்தில் 1804 கிலோமீட்டர் சென்று அதுவும் பத்து நிமிடத்துக்கு முன்னர் குறிப்பிட்ட தூரத்தையும் தாண்டி ( 204 கிமீ அதிகமாக ) அடைந்து சாதனை படைத்து இந்த விருதை பெற்றுள்ளார். இதில் அவர் பயணம் செய்த நேரம் 21 மணிநேரம் 30 நிமிடங்கள் மட்டுமே.

"இதுவரை இவரது இந்த சாதனை கின்னஸ் சாதனைக்கு பரிந்துரைக்கவில்லை அப்படி பரிந்துரைத்தால் கண்டிப்பாக இவரது இந்த சாதனை கின்னஸ் சாதனை பட்டியலில் இடம் பெற்றிருக்கும் "

இதோடு நின்று விடவில்லை. துளசிமணியின் அடுத்த முயற்சியாக வரும் ஜூலை மாதம் 72 மணிநேரத்தில் 6800 கிலோமீட்டர் தொலைவு இதேபோல இருசக்கர வாகனத்தில் பயணம் செய்ய முடிவு செய்துள்ளார். அதற்காக அவர் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை செல்ல திட்டமிட்டுள்ளார். அது மட்டுமின்றி தனது விழிப்புணர்வு பிரசுரத்தையும் குறைந்தது 15000 பேருக்காவது பகிர்ந்து கொண்டு அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார். அதில் அவர் வெற்றி பெறவேண்டும் , இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று நாமும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.

முந்தையை பயணத்தில் மணிக்கு 90 km வேகத்தில் பயணம் செய்த இவர் இவரது பயணத்தின் போது நிறைய விபத்துக்களை பார்க்க நேர்ந்தது. மேலும் பல விபத்துக்களில் இருந்து தப்பிக்கவும் செய்திருக்கிறார். எனவே தான் மக்களிடையே மீண்டும் விழிப்புணர்வை ஏற்படுத்த அடுத்த முயற்சிக்கு அடி எடுத்து வைத்திருக்கும் அவர் வெற்றி பெற வாழ்த்துவோம். துளசிமணியை சந்திராயன் விஞ்ஞானி திரு. மயில்சாமி அண்ணாதுரை அவர்களும், கார் பந்தய வீரரான திரு. நரேன் கார்த்திகேயன் அவர்களும் பாராட்டியுள்ளனர். அவர் மேலும் பல சாதனைகள் புரியவும், அவற்றில் வெற்றி பெற்று அவரது லட்சிய விழிப்புணர்வுகளை மக்களிடையே நல்ல முறையில் கொண்டு சேர்க்க அந்த இறைவன் அவருக்கு மனோதிடத்தை வழங்கட்டும் . அவரது முயற்சியை நாமும் மனமார பாராட்டுவோம்.

~மகேந்திரன்

Friday, June 06, 2014

பெத்த மனம் பித்து : பிள்ளை மனம் கல்லு ~ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services
(315 / 06-06-2014)"
*********************

02-06-2014 அன்று சுமார் 51 வயதான ஒருவர் கோவை, காந்திபுரம் நகர பேருந்து நிலையம் எதிரில் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார் . அங்கு வந்த ஈரநெஞ்சம் அமைப்பினர் அவரை மீட்டு உடனடியாக அவரை கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்தனர் .

https://www.facebook.com/photo.php?fbid=576204495810304&set=a.249582201805870.51248.199260110171413&type=1&theater

அவரிடம் ஈரநெஞ்சம் அமைப்பினர் பேசியதில் அவர் தன் பெயர் சதிஷ் என்றும் , தன் ஊர் பாப்பநாயக்கன் பாளையம் என்றும் தெரிவித்தார் . அவருக்கு தாய் தந்தை இருப்பதாக தெரிவித்த அவர் .

மேலும் அவர் " நான் மிகவும் மோசமானவன் சிறு வயது முதல் தீய நண்பர்களின் சகவாசத்தால் குடி மற்றும் போதை பழக்கத்தால் பெரியவர்களை மதிக்காமல் , திருட்டு , சங்கிலி பறிப்பு போன்ற பல களவாணி தனங்கள் செய்து பல பேர் வாழ்க்கையில் விளையாடியிருக்கிறேன் . அவர்களின் வயித்தெரிச்சலும், சாபமும் தான் 15 நாட்களாக இப்படி அசைய கூட முடியாத நிலையில் இருக்கிறேன் . இந்த நிலையில் என்னை பார்த்தால் கூட என் பெற்றோர் என்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் . நான் அவர்களுக்கு அவ்வளவு கஷ்டங்கள் கொடுத்திருக்கிறேன். சிலர் என்னை மருத்துவ மனையில் கொண்டு சேர்த்தனர் . ஆனால் அங்கிருந்தவர்கள் என்னை மீண்டும் வெளியே கொண்டு வந்து விட்டு விட்டனர் . அடுத்தவர்களின் பாவத்தைக் கொட்டிக் கொண்ட எனக்கு ஆண்டவன் கொடுத்த இந்த தண்டனை சரியானது தான் . நான் இப்படியே இந்த நிலையிலேயே இறந்து போனால் கூட பரவாயில்லை " என்று கண்ணீருடன் கூறினார் .

அவர் தன் தவறுக்காக வருந்தி கண்ணீர் விடுவதை கண்ட ஈர நெஞ்சம் அமைப்பினர் அவரை அவரது பெற்றோருடன் சேர்த்து வைத்து விட வேண்டும் என்று விரும்பி அவர்களை நேற்று இரவு 04/06/2014 தொடர்பு கொண்டு பேசினர் . அப்போது பேசிய அவரது அப்பா குபேந்திரன் , தன்னால் இரவில் வரமுடியாது காலையில் வருகிறேன் என்று கூறினார் . அதே போல் இன்று காலை அவர் கோவை மாநகராட்சி காப்பகத்தில் வந்து தன் மகனை சந்தித்து கண்ணீர் விட்டார் ... தந்தையை பார்த்ததும் சதிஷும் கண்ணீர் விட்டு கதறினார் அதை பார்த்து அருகில் இருந்த அமைப்பினரும் மனம் நெகிழ்ந்தனர் .

பின்னர் குபேந்திரன் " நான் இருதய நோயாளி ,என் மனைவி ஜோதி இப்போது உடல் நலமில்லாமல் இருக்கிறார் அதனால் தான் நான் மட்டும் என் மகனை பார்க்க வந்தேன் . இருபது வருடங்களுக்கு முன்னால் இவன் பண்ணாத தப்பே கிடையாது என்று கூறலாம் , இரவில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் போலீஸ் வந்து வீட்டுக் கதவை தட்டி இவனை பற்றி விசாரிப்பார்கள் . இவனால் எங்களுக்கு பலவகையிலும் அவமானங்கள் தான்
ஏற்பட்டது . எங்கள் வீட்டில் நடைபெற இருந்த ஒரு திருமணம் கூட இவனால் தடைப் பட்டது ... பல இலட்சங்கள் இவனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது . இவன் வீட்டை விட்டு வெளியேறியதும் போலீஸ் ஸ்டேஷன் போய் சதிஷுக்கும் எங்களுக்கும் இனி எந்த சம்பந்தமும் கிடையாது அவனை தேடி இனி யாரும் எங்கள் வீட்டுக்கு வராதீர்கள் என்று எழுதி கொடுத்து விட்டோம் ... இன்று என் மகனின் இந்த நிலையை பற்றி கேட்டதும் எங்கள் மனம் தாங்கவில்லை நான் அவனை நாளை இங்கிருந்து அழைத்து சென்று வேறு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க போகிறேன் " என்று கண்ணீருக்கு இடையில் கூறினார் .

இதை தான் நம் முன்னோர்கள் ' பெத்த மனம் பித்து : பிள்ளை மனம் கல்லு ' என்று கூறினார்கள் போலும் .

மீண்டும் ஒரு உறவை இணைத்து வைத்ததில் ஈர நெஞ்சம் மகிழ்கிறது .

நன்றி
~ஈரநெஞ்சம்

On 02.06.2014 there was a 51 year old man with poor health found opposite to the Gandhipuram bus station in Coimbatore. The members of the Eera Nenjam Trust rescued him and admitted at the Coimbatore City Corporation Home.

When the members spoke to him, he mentioned in tears that his name was Sathish, he was from Pappanayakkan Palayam and he had both parents. He also said that “I am an evil person. Since I was small, with the bad friendship I got used to alcohol and drugs. I never respected the grownups, played evil games with people by breaking gold chains, and doing other robberies. I think it is the curse and the suffering of the people that I am in this bad situation and not being moved myself for the past 15 days. My parents won’t accept me in this terrible situation. I gave them a lot of hardship. Some people admitted me at the hospital, but people at the hospital sent me out. It is right for God to punish me like this for doing sins for other people. I won’t mind suffering like this and later die in this situation.”

When the members saw him realizing his mistakes and being in tears, they liked to reunite him with his parents. They contacted his parents and talked to them last night 04.06.2014. His father Kubendran said that he was unable to travel in the night and will arrive in the morning. As he said, this morning he came to the Coimbatore City Corporation Home and was in tears when he saw his son. Sathish also cried when he saw his father, this made the hearts of the trust members of the trust melt.

Kubendran said in tears “ I am a heart patient, now my wife Jothy is not well because that I came alone to see my son. 20 years ago there was no bad things being left without him doing them. The police came any night knocking on the door to inquire about his whereabouts. He brought a lot of shame onto us. He made us loose several lacks of money. When he left home, we went to the police station and gave a report saying that we have no connection with Sathish and never come looking for him to our door step. Today when I heard the situation of my son we couldn’t bare it. I am going to bring him with me tomorrow and admit him in another hospital for treatment.”

This was why our ancestors said “ parents hearts are soft and the children's hearts made of rock”.

The Eera Nenjam Trust is very pleased about the fact that they managed to reunite another needy individual back with their family and is happy to share that with you all.

~thank you
Eera Nenjam

Thursday, June 05, 2014

நீங்களும் உடல்தானம் செய்யலாம் செய்யணும்.

கோவை ஜூன் 03 : இறந்த உடல் மண்ணுக்கு மட்டும் உரமாக பயனாகி வந்தது போதும். மனிதர்களுக்கும் பயனாகட்டும் என்ற உன்னதத்தின் வெளிப்பாடே உடல் தானம். இறந்த உடல் மருத்துவ கல்லூரி மாணவர்களின் பயிற்சிக்கு தரப்படும் போது அவர்களின் ஆராய்ச்சிக்கும், பயிற்சிக்கும் பயன்படும் போது புதிய கண்டுபிடுப்புகளுக்கும் வழி வகுக்கும், நல் மருத்துவம் மேம்படவும் வழி வகுக்கும்.

அந்த வகையில் உடல் தான விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஈரநெஞ்சம் அமைப்பு அவ்வப்போது நடத்தி வருகிறது. இதன் வழியாக பலர் தங்களது உடலை தானம் செய்ய அருகில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் பதிவு செய்து வருகின்றனர் .

கடந்த ஜனவரி 21 தேதியில் டெக்கான் கிரானிக்கிள் ( Deccan Chronicle )
ஆங்கில நாளிதழில் வெளிவந்த உடல்தானம் பற்றிய தகவலில் ஈரநெஞ்சம் அமைப்பு உடல்தானம் பற்றிய விளக்கம் கொடுத்திருந்தது.

அதன் வழியாக கோவை பார்க் கல்லூரி ( park college of engineering and
technology ) Dean திரு. H. சந்திர குப்தா 68 மற்றும் அவரது மனைவி
திருமதி H.விஜய லக்ஷ்மி 67. இருவரும் தங்களது உடலை இறப்புக்கு பிறகு கோவை அரசு மருத்துவ கல்லூரிக்கு தானம் செய்ய முன் வந்து ஈரநெஞ்சம் அமைப்பை தொடர்புகொண்டனர் . அதனை அடுத்து ஈரநெஞ்சம் அமைப்பின் உதவியுடன் திரு. H. சந்திர குப்தா மற்றும் அவரது மனைவி திருமதி H.விஜய லக்ஷ்மி இருவரும் 20 ரூபாய் பத்திரத்தில் தங்களது உடல் தானம் பற்றிய உயிலை நோட்டரி வக்கீல் முன்னிலையில் பதிவு செய்து கோவை அரசு மருத்துவ கல்லூரி HOD . திருமதி . M . ரோகிணி தேவி அவர்களிடம் வழங்கினார்.



நாம் மட்டுமல்ல நமக்கு பின் நம்முடைய உடலும் மற்றவர்களுக்கு பயனாக இருக்கட்டுமே !

நண்பர்களே !!!
நீங்களும் உடல்தானம் செய்ய விரும்பினால் தொடர்பு கொள்ளவும்...

ஈரநெஞ்சம் - 9080131500