Showing posts with label தொகுப்பு. Show all posts
Showing posts with label தொகுப்பு. Show all posts

Friday, December 07, 2012

காதல் வானிலே

கன்னாபின்னான்னு கிறுக்கும்
இந்த
கவிதையெல்லாம் என்னுடையது...
அதன்
காப்பி ரைட்
உன்னுடையது..!

கன்னாபின்னான்னு கிறுக்கும்
இந்த 
கவிதையெல்லாம் என்னுடையது...
அதன்
காப்பி ரைட்
உன்னுடையது..!
~மகி 
 
ஆயிரம்
பொய் சொல்லி
கவிதை எழுதினாலும்
நீ
என் காதலி என்ற
உண்மையில் தான்
முற்று பெரும்.!

ஆயிரம்
பொய் சொல்லி
கவிதை எழுதினாலும்
நீ
என் காதலி என்ற
உண்மையில் தான்
முற்று பெரும்.!
~மகி 
 
 
உன்
வருகைக்கு பிறகு ,
கோடைகாலம்
இலை உதிர்காலம் என்றெல்லாம்
எதும் எனக்கு இல்லை .,
எல்லா காலமும்
வசந்த காலம் தான் ..!

உன் 
வருகைக்கு பிறகு ,
கோடைகாலம் 
இலை உதிர்காலம் என்றெல்லாம் 
எதும் எனக்கு இல்லை .,
எல்லா காலமும் 
வசந்த காலம் தான் ..!
~மகி 
 
வரம்
தருவதால் மட்டும்
தெய்வமாகி விட முடியாது.
உன்னை
போல பாசமும் காட்ட
தெரிந்திருக்க வேண்டும்..!

வரம் 
தருவதால் மட்டும் 
தெய்வமாகி விட முடியாது.
உன்னை 
போல பாசமும் காட்ட 
தெரிந்திருக்க வேண்டும்..!
~மகி
 
 

Sunday, February 05, 2012

ஆறுதல் தரும் அவஸ்த்தை

ஒரு
முற்றுப்புள்ளிக்கூட
அழகான கவிதையாய்
இருக்கிறது...
உன்
நெற்றிப்பொட்டை
படித்ததில்
அதில்
அர்த்தம் புரிந்தது..♥


ஏதாவது
இருந்தால்தான்
திருடப்பட வேண்டும் ...
என்
இதையத்தை எதற்கு
திருடினாய்..♥


தலைமுறை தலைமுறைக்கா
சேர்த்துவைக்க போகிறாய்
கொஞ்சம்
சிந்திவிட்டு
போ...
உன்
புன்னகை பூக்களை..♥



என்
கண்ணே
எனக்கு பட்டுவிடும்
போலிருக்கிறது..!
என்
கண்ணில் உன் பின்பம்..♥


நீ
வரும் செய்தி
அறிந்ததும்
இதயம் விழிவரை
வந்து பார்க்கிறது..♥


எல்லா
நிழலிலும்
இருள் தான் இருக்கும்...
உன்
நிழலில் மட்டும்
ஒருவித
வெளிச்சம் இருக்கிறது..♥


நீ
செல்லும் இடமெல்லாம்
கம கம என
மல்லிகை வாசம் வீசுகிறது..!
உன்
பாத சுவடுகளில் எல்லாம்
வேலி போட்டு
பூங்கா அமைத்தால்
என்ன ..?


உன்னை
அலைட்சியப்படுத்த
முடியாது..!
நீ
ஆறுதல்
தரும்
அவஸ்த்தை..!


என்
தாய் மொழிக்கு
சந்தோசம்
நீ என்னோடு
தமிழில் பேசியதால்...
உன்
தாய் மொழிக்கு
கொடுப்பினை இல்லை
எனக்கு உன் மொழி தெரியாது..!

Sunday, January 22, 2012

பெண் என்றும் தேவதை என்றும்...

உன்
புறக்கணிப்பு
எனக்கு
புரியவில்லை..!
என்
எதிர் பார்ப்பு
உனக்கு
தெரியவில்லை..♥


உன்னிடம்
தவிர வேறு யாரிடம்
என்னை பழக விட்டு
இருக்கிறாய்..?
உன்னை
தான் படிக்க வேண்டும்
என்று கட்டளை இடுகிறாய்....
உன்
கவிதையை கூட
படிக்க தடை கொடுகிறாய்..!



ஒருவேளை
இவன்
உண்மையாக
உன்னை காதலித்து இருக்க மாட்டானோ...
என்று
நினைத்து விடாதே...!
நான்
இருக்கேனோ இல்லையோ
காதல் தற்கொலை செய்து
கொள்ள கூடாது ..!


பூப்பதும்,
புன்னகைப்பதும்
பூ என்றால்...
உன்னை
ஏன்
பெண் என்றும் தேவதை
என்றும்
சொல்ல வேண்டும்..♥


இதுவரை
நான் கண்ட தோல்விகள்
எல்லாம்
தோல்விகள் அல்ல
நீ
எனக்கு கிடைத்து விட்டால்..!
இனி
நான்
பெறப்போகும் வெற்றிகள்
எல்லாம்
வெற்றிகள் அல்ல
நீ என்னை பிரிந்தால்..!



தாயை போல
அன்பு கொடுக்க
துணையே
உன்னைவிட வேறு
எந்த
உறவாவது
இனி பிறக்குமா..?







Thursday, January 05, 2012

என் நினைப்பை குடுத்தால் போதும்..♥

பூக்களுக்கும்
இதயம் இரும்பால் இருந்தால்
உன்னையும்
பூக்களோடு
ஒப்பிடலாம்..!


கோலாரில் தங்கம் கிடைக்க
காரணம்..
போன
ஜென்மத்தில்
உன் மரணத்துக்கு
பிறகு கோலாரில்தான்
உன்னை புதைத்து
இருப்பார்கள்..♥



நீ
நீயாக
இருக்கிறாய்...
நீ
தீயாக இருந்தாலும்
நான்
குளிக்க வருவேன்..♥



பெட்டியை
திறந்ததும் படம் எடுக்கும்
பாம்பை போல..!
என்னை
பார்த்ததும்
உன்னுள் எடுக்கும் வெட்கம்
ஆஹா..♥



காதல் தரும்
இன்பம்
சில வருடம் தொடரும்..!
காதல் தரும்
துன்பம்
சில ஜென்மங்கள்
தொடரும்..!



என்னை வைத்து எப்படி
வேண்டுமானாலும்
விளையாடு..!
உடைத்து விடாதே
விளையாட என்னை போன்ற
இன்னொரு
உயிருள்ள பொம்மை
கிடைக்காது..♥



பசி வந்தால்
பத்தும் பறந்து போகும்..!
காதல் வந்தால்
பசியும் பறந்து போகும்..!

என்னை
தொட்டு செல்லும் தென்றலிலும்,
சுட்டுச்செல்லும் வெப்பத்திலும்
நனைத்து செல்லும் மழையிலும்
மறைத்துக்கொள்ளும் நிழலிலும்
உன்
காதலையே உணர்கிறேன்...


உனக்கு
குடுப்பதற்கு
உதடுகள்
இருக்கும் பொது...
வெறும் கையேடு தானே
உன்னை
சந்திக்க வரமுடியும்..♥

என்னை பார்த்து
"என்ன தனியா இருக்கியா"
என்று கேட்ப்பார்கள்
"ஹ ஹ ஹ"
நான்
உன் நினைவோடு
இருப்பதை
அறியாமல்..♥
மின்னுவதெல்லாம் பொன்னல்ல"
உன்
விழியை பார்த்த
பிறகுதான்
இதன் உண்மை புரிந்தது..♥

உன்
வாழ்த்துக்களுக்காகவே
ஒவ்வொரு நாளும்
நான்
பண்டிகை நாட்களை
தேடி கொண்டு
இருக்கிறேன் ..!



கொல்வதற்கும் ...
கொல்வதற்கும்
காதல்
அழகு ..!

உன்
கோபத்தில் கூட அப்படி
இல்லை..!
நீ
கை அசைத்து
போகும் பொது
எங்கிருந்துதான் வருகிறதோ
இந்த
கண்ணீர் அருவி..♥



பூக்கள்
உதிர்வதால்
கவலை இல்லை
வாடினால்தான்
நானும் வாடிப்போகிறேன்..!


ஒரு
முற்றுப்புள்ளி வைப்பதில் கூட
நீ
அழகான கவிதை
வடிக்கிறாய்..!
நெற்றியில்
நீ
வைத்திருக்கும் பொட்டை
சொல்கிறேன்..!




அவசர அவசரமாக
கோவிலுக்கு போவேன்...
எதேச்சையாக
எதிரில்
நீ வருவதை பார்ப்பேன்...
என்
அவசரத்தை புரிந்துக்கொண்டு
அம்மனே
நேரில் வருவதாய்
நினைத்துக்கொண்டு
உன்னை தரிசித்துவிட்டு
போவேன்..!


கொடுக்கின்ற
தெய்வம் கூரையை
பித்துக்கொண்டு கொடுக்குமாம்..!
எனக்கு அவ்வளவு எல்லாம் வேண்டாம்,
உனக்குள் 
என் நினைப்பை குடுத்தால் போதும்..♥

Sunday, January 01, 2012

உன்னோடு பேச,உன்னோடு வாழ..!

வீணையை
கையில் குடுத்துவிட்டு
விரல்களை விறகாக்கி பார்க்கிறது
"காதல்"



வைத்தியம்
செய்யப்போவது
நீ
என்றால்...
உன்
மடியிலேயே
மயங்கிகிடக்க
நான் தயார்..!


நீ
மனம் வீசும்
மலரல்ல...
மலர்
வீசும் மனம்...



நீ
நிறைகுடம் தூக்கி
செல்கிறாய்..!
நான்
ததும்பிக்கொண்டு
இருக்கிறேன்..♥



காதல் தரும்
இன்பம்
சில வருடம் தொடரும்..!
காதல் தரும்
துன்பம்
சில ஜென்மங்கள்
தொடரும்..!



எல்லோருக்கும்

சூரியன் உதிக்கும் விடியல் ஆகும்...!


எனக்கு

உன் கனவு களையும் வேளைதான் விடியல்..!


உன் நினைவுகள் என்னிடம்
இருக்கும் வரை ..
நீ என்னிடம் இல்லை என்றாலும்
பறவை இல்லை ..



என்
கவிதைக்கு
எழுத்துப்பிழை நீ ...
நீ
இல்லாமல்
நான் கவிஞன் இல்லை ...♥

நல்லவேளை
நீ
நீயாகவே இருக்கிறாய்
கனியாக
இருந்துதால்
வேரோடு விழுங்கி
இருப்பேன் ..!


உன்
நினைவு மட்டும்
இருந்தால்
போதும்...
என்
நிழலுக்கு
கூட மரணம் கிடையாது..!



என்
ஆயுள் ரேகை
உன்னால் தான் வளர்கிறது .
அதை
எந்த இடத்தில் வேண்டுமானாலும்
துண்டிக்க
உனக்கு மட்டுமே
உரிமை உண்டு..♥


உன்
நினைவு மட்டும்
இருந்தால்
போதும்...
என்
நிழலுக்கு
கூட மரணம் கிடையாது..!


ஏ...
அழகிய கப்பலே...
உன்னால்
கவிழ்ந்த கடல்களில்
நானும் ஒன்று..!



உன்னோடு பேச கவிதை இருக்கிறது...
உன்னோடு வாழ கனவு இருக்கிறது...



ஒரு
புத்தகத்தில்
முதல் பக்கத்தில்
உன் பெயரை
வாசித்துவிட்டேன்...
அடுத்த பக்கம்
புரட்டவே மனம்
இல்லை..♥