Wednesday, December 25, 2013

புதுக்கோட்டை ஸ்ரீ ராமலு உறவினருடன் ஒப்படைப்பு~ ஈரநெஞ்சம்







''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
******
[For English version, please scroll down]
(245/25-12-2013)
புதுகோட்டையில் ஸ்ரீராமலு என்ற 75 வயதான முதியவர் தனது மகனுடன் நடந்த குடும்ப தகராறில் வீட்டிலிருந்து வெளியேற்றபட்டார். எங்கு செல்வது என்று தெரியாமல், தன் மகளின் முகவரியும் தெரியாமல், கோவையில் தனது நண்பர்களை சந்திக்க வந்த ஸ்ரீராமுலு உடல் நிலை சரி இல்லாத நிலையில் மருத்துவமனையில் நடக்க இயலாத நிலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகும் நடக்க முடியாமல் எங்கு செல்வது என்று தெரியமால் மழையில் நனைந்து சாலையோரம் கிடந்த அவரை B3 காவல் துறையினர் ஈரநெஞ்சம் அமைப்பிற்கு தகவல் கொடுத்தனர். அதனைதொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்பு அந்த முதியவரை மீட்டு கோவை மாநகராட்சி காப்பகத்தில் (22/10/13) அன்று சேர்த்தது.

https://www.facebook.com/photo.php?fbid=279912475467048&set=pb.100003448945950.-2207520000.1387979573.&type=3&theater


ஸ்ரீ ராமலு மருத்துவ உதவியுடன் காப்பகத்தில் நல்லமுறையில் பராமரிக்கப்பட்டுவந்தனர்.
மேலும் ஸ்ரீராமலு கொடுத்த தகவலை வைத்து அவருடைய உறவினர்களை தேடும் முயற்சியில் ஈர நெஞ்சம் மற்றும் புதுகோட்டை காவல் துறையினர் ஈடுபட்டனர். ஸ்ரீராமலு கொடுத்த தொலைபேசி எண் தவறாக இருந்தது. அனால் தொடர்ந்து அவருடைய மகள் ஹேமாவை தேடும் முயற்சி நடந்து வந்தது. நேற்று ஈர நஞ்சம் அமைப்பினர் சண்முகம் என்ற நகர காவல் துறை துணை ஆய்வாளர் உதவியினால் ஸ்ரீராமுலுவின் மகள் ஹேமாவின் விலாசத்தை கண்டுபிடித்தனர். இதைடுத்து இன்று (25.12.13)அவரை ஈர நெஞ்சம் அமைப்பினர் ஹேமாவிடம் ஒப்படைத்தனர். கணவரை இழந்து தனியாக வாழும் ஹேமாவுக்கு தன் தந்தை திரும்ப கிடைத்ததில் அளவற்ற மகிழ்ச்சி. ஸ்ரீராமலுவின் மனைவி திருமதி பிரேமாவும் தன் கணவர் திரும்ப கிடைத்ததற்கு ஈர நெஞ்சம் அமைபிற்கு நன்றியை தெரிவித்தார்.

http://youtu.be/y117XG1FDW0

யாரும் உதவாத நிலையில் தன்னை மீட்டு காப்பகத்தில் சேர்த்ததற்கும் மேலும் தன் மகளுடன் தன்னை சேர்த்ததற்கும் ஸ்ரீராமலு ஈரநெஞ்சம் அமைப்பிற்கு நன்றியை தெரிவிதுகொண்டார். இதற்க்கு பெரிதும் உதவி செய்த காவல் துறை அதிகாரி திரு. சண்முகம் அவர்களுக்கும் ஈர நெஞ்சம் உறுபினர்களுக்கும், ஈர நெஞ்சம் தன்னுடைய நன்றிகளை தெரிவித்துகொண்டது.
~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Sri Ramalu the 75 year old man was abused by his sons and was chased away from pudhukottai. He was unable to walk and admitted to be treated at the hospital in Coimbatore. After the treatment he didn't know where to go and was drenched in the rain. The B3 Police service noticed his situation and contacted Eera Nenjam. following that Eera Nenjam rescued him and admitted him at Coimbatore City Corporation Home. Now he is feeling better but could not remember any details properly. The phone number that he gave to the police as his daughter’s number was also wrong. But still eera nanjam was constantly taking efforts to find out his daughter’s address. At last his daughter Hema’s address was found out with the help of S.I Mr. Shanmugam of pudhukottai. He showed interest in helping sriramalu and was very helpful. Hema was very happy to have found her father and expressed her willingness to take care of her father. She lives alone after her husband’s death and she was happy to have her father back with her. Mr. Sriramalu’s wife Mrs. Prema also came along with her daughter and was extremely happy about her husband’s safety. The entire family was happy and they sincerely thanked Eera nenjam for this noble service. Eera nenjam sincerely thanks Mr. Shanmugam (S.I of Police, Pudhukottai) and the members of eera enjam who has helped Mr. Sriramulu to find his family.

~Thank You
Eera Nenjam

Sunday, December 22, 2013

ஆதரவற்ற மூதாட்டி மீட்பு

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
******
[For English version, please scroll down]
(244/21-12-2013)

21/12/2013 கோவை, சுந்தராபுரம் பகுதியில் 90வயது மதிக்கத்தக்க தங்கம்மாள் என்பவர் பல வருடமாக சாலையில் வசித்துவந்தார் , பொதுமக்கள் மூதாட்டிக்கு உணவும் மற்றும் உதவியும் செய்துவந்தனர் , தற்சமையம் குளிர்காலமாக இருப்பதனால் மிகவும் அவதிப்பட்டு வந்தார், இதனை அறிந்த அப்பகுதிவாழ் மக்கள் ஈரநெஞ்சம் அமைபிற்கு தொடர்புகொண்டு தங்கம்மாள் பாட்டிக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்தனர் , அதனை தொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்பினர் அந்த தங்கம்மாள் பாட்டியை தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துவந்து கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்கள்.

மேலும் தங்கம்மாள் பாட்டி கூறும்போது தனக்கு யாரும் இல்லை என்றும் பலவருடமாக இந்த பகுதியில் தான் குப்பைகளை பொருக்கி  விற்று அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்துவந்ததாகவும். இப்போது வயதாகிவிட்டதால் இந்த பகுதி மக்களிடம் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்ததாகவும் கூறினார்.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Thangammal age about 90yrs has been living on the streets of Coimbatore Suntharapuram area for many years. The public used to provide food and help her. She struggled a lot because now it is a cold season. After noticing her struggle the public contacted Eera Nenjam and requested them to assist Thangammal Paati. Following that today 21.12.2013 Eera Nenjam rescued Thamgammal Paati and brought her to Coimbatore City Corporation home by ambulance and admited her at the home. When Thangammal Paati spoke about her background, she mentioned that she has no one to go to and survived these years by selling stuff from the waste. Now that she got old she survived by begging.

Once again Eera Nenjam is pleased about the fact that it rescued another homeless needy person and made a little difference. Eera Nenjam also want to share this information with you.

~Thank You
Eera Nenjam
Photo: ''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
******
[For English version, please scroll down]
(244/21-12-2013)

 21/12/2013 கோவை, சுந்தராபுரம் பகுதியில் 90வயது மதிக்கத்தக்க தங்கம்மாள் என்பவர் பல வருடமாக சாலையில் வசித்துவந்தார் , பொதுமக்கள் மூதாட்டிக்கு உணவும் மற்றும் உதவியும் செய்துவந்தனர் , தற்சமையம் குளிர்காலமாக இருப்பதனால் மிகவும் அவதிப்பட்டு வந்தார், இதனை அறிந்த அப்பகுதிவாழ் மக்கள் ஈரநெஞ்சம் அமைபிற்கு தொடர்புகொண்டு தங்கம்மாள் பாட்டிக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்தனர் , அதனை தொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்பினர் அந்த தங்கம்மாள் பாட்டியை தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துவந்து கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்கள்.

மேலும் தங்கம்மாள் பாட்டி கூறும்போது தனக்கு யாரும் இல்லை என்றும் பலவருடமாக இந்த பகுதியில் தான் குப்பைகளை போருக்கு விற்று அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்துவந்ததாகவும். இப்போது வயதாகிவிட்டதால் இந்த பகுதி மக்களிடம் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்ததாகவும் கூறினார்.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Thangammal age about 90yrs has been living on the streets of Coimbatore Suntharapuram area for many years. The public used to provide food and help her. She struggled a lot because now it is a cold season. After noticing her struggle the public contacted Eera Nenjam and requested them to assist Thangammal Paati. Following that today 21.12.2013  Eera Nenjam rescued Thamgammal Paati and brought her to Coimbatore City Corporation home by ambulance and admited her at the home. When Thangammal Paati spoke about her background, she mentioned that she has no one to go to and survived these years by selling stuff from the waste. Now that she got old she survived by begging. 

Once again Eera Nenjam is pleased about the fact that it rescued another homeless needy person and made a little difference. Eera Nenjam also want to share this information with you. 

~Thank You
Eera Nenjam

Wednesday, December 11, 2013

மூன்றாண்டுகளுக்குப் பிறகு கிடைத்த உறவு

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
******
[For English version, please scroll down]
(242/10-12-2013)

திரு.ராஜசேகர் வயது 38 கடந்த ஒருவருடத்திற்கு முன்பு காவல்துறையினரால் கோவை மாநகராட்சி காப்பகத்தில் மனநிலை சரி இல்லாத நிலையில் சேர்க்கப்பட்டு காப்பகத்தின் பாதுகாப்பில் இருந்துவந்தார்.
https://www.facebook.com/photo.php?fbid=498754583555296&set=a.249582201805870.51248.199260110171413&type=1&theater
ஈரநெஞ்சம் மூலம் இவரை பற்றிய இந்த தகவல்களை கடந்த 6 ஆம் தேதி முகநூலில் மற்றும் வலைதளங்களில் பதிவிடப்பட்டது. பின்னர் ஈரநெஞ்சம் அமைப்பு எடுத்துக் கொண்ட முயற்சியின் மூலம், சாயர்புரம் காவல் நிலைய உதவியுடன் அவரது உறவினர்கள் கண்டு பிடிக்கப்பட்டனர். அதன் மூலம் அவரது உறவினர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக தூத்துக்குடியில் இருந்து கிளம்பி இன்று 10-12-2013 காலை கோவை வந்தடைந்தனர். அவரது அண்ணன் திரு. பாலசுப்ரமணியமும், மாமா மோகன சுந்தரம் அவர்களிடமும் ஈரநெஞ்சம் அமைப்பின் மூலம் திரு. ராஜ்குமார் ஒப்படைக்கப்பட்டார்.
அவர்கள் கூறும்போது தனது தம்பி ராஜ்குமார். B.Com படித்திருப்பதாகவும், அவருக்கு திருமணமாகி விட்டது என்றும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் தெரிவித்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அவர் காணாமல் போய் விட்டதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்து முதல் தகவல் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது என்றும் கூறினார். . மேலும் 3 வருடங்களாக பல இடங்களில் அவரை தேடி அலைந்ததாகவும் கடந்த 7-12-2013 அன்று ஈரநெஞ்சம் அமைப்பினர் அழைத்து இவரை பற்றிய தகவல் தெரிவித்ததாகவும் கூறினார். இதில் மிகவும் வேதனையான விஷயம் என்னவென்றால் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு தான் அவரது தநதையார் காலமானார். இன்னும் சில நாட்களுக்கு முன்பு இவரை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்திருந்தால் அவரது தந்தையையும் அவர் பார்த்திருப்பார். எனவே இப்படி தாமதம் ஆனதை நினைத்து ஈரநெஞ்சம் அமைப்பு வருத்தம் அடைகிறது என்றாலும் உறவினர்களை இப்போதாவது கண்டு பிடித்து சேர்த்து வைத்ததில் கொஞ்சம் திருப்தியாக உள்ளது.
தனது சகோதரனை தேடி தந்த ஈரநெஞ்சம் அமைப்புக்கு அவர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இனி அவரை நல்ல முறையில் பாதுகாப்பதாக கூறினார். இங்கு வந்த பின்பு தான் ஈரநெஞ்சம் அமைப்பினர் இது போல மேலும் பலரை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்திருப்பதை அறிந்து கொண்டதாகவும் கூறினார்.
http://youtu.be/AU4gA2w8yew
மீண்டும் ஒரு உறவை தேடித் தந்த மகிழ்வில் அவர்களோடு ஈரநெஞ்சம் அமைப்பு, இவரது உறவினர்களை கண்டுபிடிக்க உதவிய காவல் துறையினருக்கும் நண்பர்களும் தன நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam


Mr. Rajasekar age 38, a mentally disturbed man was admitted at Coimbatore City Corporation home by the police last year. Since then he has been under the care of the charity home. Information about him was posted on Facebook last 6th by Eera Nenjam. Later with the effort taken by Eera Nenjam, his relatives were found with the assistance of Sayarpuram police. Information about Mr. Rajasekar was sent to his relatives. They left Thoothukudi immediately and arrived Coimbatore today 10.12.2013 morning. Mr. Rajasekar was handed over to his big brother Mr. Balasubramaniyam and uncle Mr. Mohanasuntharam.
When they talked about his brother Rajasekar, they mentioned that he studied B.Com, married and was mentally disturbed. 3 years before he disappeared and they gave a complaint at the police station said that the FIR was filed. Also mentioned that they have been searching for him for the past 3 years, later Eera Nenjam contacted them and provided information about him last 07.12.2013. The most painful thing in this is that his father passed away 3 weeks ago. If he was reunited with his family little earlier, he could have seen his father. Eera Nenjam feel terrible about the delay in finding his family, but feel little satisfaction that atleast they found his relatives and reunited him with his family.
They expressed gratitude to Eera Nenjam for finding their brother and assured that they will protect him well. They also mentioned that they came to know about Eera Nenjam's services in rescuing others who were in the same situation as Mr. Rajasekar.
Eera Nenjam is satisfied and being glad about the fact that another helpless individual is being reunited with his family. They are also thanking the Police service and friends for their assistance in finding the family.
~thank you
Eera Nenjam

வடநாட்டவரின் இறப்புக்கு ஈரநெஞ்சம் அஞ்சலி

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
******
[For English version, please scroll down]
(241/06-12-2013)

கோவையில் உள்ள ஒரு தனியார் உருக்காலையில் கடந்த சில வருடங்களாக வடநாட்டில் உள்ள ஜார்க்கண்ட்டை சேர்ந்த திரு. பிரதீப் ஓரன் என்பவர்பணி புரிந்து வந்தார். அவருடன் அவரது தந்தை திரு. பன்சி ஓரன் அவர்களும் இருந்து வந்தார். நேற்று 5-12-2013 மாலை எதிர்பாராத விதமாக திரு. பன்சி ஓரன் அவர்கள் இயற்கை எய்தினார். பொருளாதார சூழ்நிலை காரணமாகவும், தங்கள் சொந்த ஊர் வெகு தொலைவில் இருக்கும் காரணத்தாலும் அவர்களால் அவரது உடலை ஊருக்குக் கொண்டு சென்று இறுதிக் காரியங்கள் செய்ய இயலாது என்றும் தனது தந்தையின் நல்லடக்கம் மற்றும் இறுதி காரியங்களைச் செய்ய ஈரநெஞ்சம் அமைப்பை கேட்டுக் கொண்டார். அதன்படி இன்று 6-12-2013, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரது உடல் சொக்கம்புதூர் மைதானத்தில் அவர்கள் ஊர் வழக்கபடி தகனம் செய்யப்பட்டு இறுதிக் காரியங்களும் நல்ல முறையில் செய்யப்பட்டது. இதில் அவரது மகன் மற்றும் சிலர் கலந்து கொண்டனர். அவரது ஆத்மா சாந்தியடைய ஈரநெஞ்சம் சார்பில் வேண்டிக் கொள்கிறோம்.
~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Mr. Pradip Oran from the town Jharkhand in north, worked at a private steel mill for the last few years. His father Mr. Pancy Oran also lived with him. Yesterday 05.12.2013 Mr. Pancy passed away unexpectedly. Due to their financial situation and living too far from home town Mr. Pradip couldn't bring his father's body to their town to do the last rituals. Mr. Pradip requested Eera Nenjam to do the final rituals for his father. According to his request, today 06.12.2013 Eera Nenjam reported the death of Mr. Pancy to the police and did the last rituals, then cremated his body according to the custom of their home town at Sokkamputhur cemetery. His son and some other people attended the funeral ceremony.
We would like to share this with you all and request you to pray for Mr. Pancy's soul to rest in peace.
~Thank you
Eera Nenjam
Photo: ''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
******
[For English version, please scroll down]
(241/06-12-2013)

கோவையில் உள்ள ஒரு தனியார் உருக்காலையில் கடந்த சில வருடங்களாக வடநாட்டில் உள்ள ஜார்க்கண்ட்டை சேர்ந்த திரு. பிரதீப் ஓரன் என்பவர் பணி புரிந்து வந்தார். அவருடன் அவரது தந்தை திரு. பன்சி ஓரன் அவர்களும் இருந்து வந்தார். நேற்று 5-12-2013 மாலை எதிர்பாராத விதமாக திரு. பன்சி ஓரன் அவர்கள் இயற்கை எய்தினார். பொருளாதார சூழ்நிலை காரணமாகவும், தங்கள் சொந்த ஊர் வெகு தொலைவில் இருக்கும் காரணத்தாலும் அவர்களால் அவரது உடலை ஊருக்குக் கொண்டு சென்று இறுதிக் காரியங்கள் செய்ய இயலாது என்றும் தனது தந்தையின் நல்லடக்கம் மற்றும் இறுதி காரியங்களைச் செய்ய ஈரநெஞ்சம் அமைப்பை கேட்டுக் கொண்டார். அதன்படி இன்று 6-12-2013, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரது உடல் சொக்கம்புதூர் மைதானத்தில் அவர்கள் ஊர் வழக்கபடி தகனம் செய்யப்பட்டு இறுதிக் காரியங்களும் நல்ல முறையில் செய்யப்பட்டது. இதில் அவரது மகன் மற்றும் சிலர் கலந்து கொண்டனர். அவரது ஆத்மா சாந்தியடைய ஈரநெஞ்சம் சார்பில் வேண்டிக் கொள்கிறோம்.
~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Mr. Pradip Oran from the town Jharkhand in north, worked at a private steel mill for the last few years. His father Mr. Pancy Oran also lived with him. Yesterday 05.12.2013 Mr. Pancy passed away unexpectedly. Due to their financial situation and living too far from home town Mr. Pradip couldn't bring his father's body to their town to do the last rituals. Mr. Pradip requested Eera Nenjam to do the final rituals for his father. According to his request, today 06.12.2013 Eera Nenjam reported the death of Mr. Pancy to the police and did the last rituals, then cremated his body according to the custom of their home town at Sokkamputhur cemetery. His son and some other people attended the funeral ceremony.
We would like to share this with you all and request you to pray for Mr. Pancy's soul to rest in peace.
~Thank you
Eera Nenjam

Tuesday, December 10, 2013

கையேந்திபவன் இருக்க கவலை இல்லையே

பேருந்துநிலையம் , ரயில்நிலையம், திரையரங்கு, தொழில் நிறுவனங்கள். போன்ற இடங்களில் எல்லாம் சாலையோர இட்லிக்கடை தற்போது அதிகம் காணமுடிகிறது. முதலில் எல்லாம் காளான் கடைகள் மட்டுமே எங்கு பார்த்தாலும் அதிகமாக காணப்படும். அப்படியே இட்லி கடைகள் இருந்தாலும் சாலையோர கடைகளில் சாப்பிடுவது வயிற்றுக்கோளாறுகளையும் நோய்களையும் உண்டாக்கும் என்ற நினைப்பு இருக்கும் . ஆனால் இன்று எல்லாமே தலைகீழாக... எங்குபார்த்தாலும் கூட்டம் கூட்டமாக சாலையோர கடைகளில் மதிய உணவு மற்றும் மாலைநேர சிறுண்டி என மக்கள் சாப்பிடுவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

இப்பொழுதெல்லாம் வட இந்தியாவிலிருந்தும் தென் தமிழகத்திலிருந்தும் சாதாரண வேலைகள் பார்க்க மக்கள் தினந்தோறும் கணிசமாக வந்துகொண்டேயிருக்கிறார்கள்.அவர்கள் உட்பட மூட்டை தூக்குபவர்கள், இரவு நேர பணிக்கு செல்பவர்கள் பெரும் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் , வெளியூரில் இருந்து வந்து வேலைப்பார்ப்பவர்கள், அலுவகங்களில் இருந்து தாமதமாக வருபவர்கள், திருமணமாகாத, குடும்பத்தை விட்டு வேலைக்காக வந்து தனியே வசிக்கும் ஆண்களுக்கு என் வருவாய் குறைந்த மக்களே இந்த சாலையோர கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் , இவர்களால் பெரிய நட்சத்திர உணவு விடுதியில் அதிகப்பணம் கொடுத்து தொடர்ந்து சாப்பிட முடியாது. ஆகையினால் இந்த சாலையோர தட்டுக்கடைகளே இவர்களுக்கு வரப்ரசாதம்.

மேலும் சாலையோர கடைகள் எல்லாமே வீட்டுசமையல் என்கிற பெயரிலும் மகளிர் சுய உதவிக்குழு பெயர்களிலும் இயங்கி வருகின்றன. சாம்பார் சாதம், தயிர்சாதம் என வெரைட்டி ரைஸ், இட்லி ,தோசை , பொங்கல், பணியாரம் என அன்றாடம் வீட்டில் செய்யும் உணவுகளையே செய்து மக்களின் பசியை போக்கி தங்களுடைய வருமானத்தை பெருக்குகின்றனர். குறைந்த விலையில் உணவு கிடைப்பதனாலும் ,வீட்டு சமையல் போன்ற தரத்துடனும் சுவையான இருப்பதனாலும் பசிகேற்ற உணவு என்று இதையே அதிகம் விரும்புகின்றனர். பிரபல ஹோட்டல்களில் எல்லாம் உணவை ஆர்டர் கொடுத்துவிட்டு காத்துக் கொண்டு இருக்க வேண்டும். பணமும் அதிகமாக செலவாகும். மேலும் தினமும் தொடர்ந்து இது போன்ற ஹோட்டல்களில் உணவு எடுத்துக்கொள்வது என்பது பொருளாதார ரீதியாக உசிதமாக இருக்காது. சாலையோர கடைகளில் குறைந்த விலையில் சுவையான உணவு சுட சுட தருகிறார்கள். எத்தனை பேர் வந்தாலும் மின்னல் வேகத்தில் பரிமாறுகிறார்கள். மின்னல் வேகத்தில் சமைக்கிறார்கள். நிறைய பேர் தொடர்ந்து இவர்களது வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள்.அது மட்டும் இல்லாமல் வாடிக்கையாளர்கள் இவர்களது குடும்ப உறுப்பினர்கள் போல பழகுகிறார்கள் , அதனால் இவர்கள் சமைப்பதற்கு நல்ல தரமான பொருட்களையே வாங்கி பயன்படுத்துவதாக சொல்கிறார்கள். நம்பிக்கையுடன் சம்பளம் வரும் வரை கடனும் கொடுக்கிறார்கள் .

தேவையான பொருட்களை காலை முதலே வாங்கி தேங்காய் சட்னி, சாம்பார், குருமா, புளிசட்னி போன்ற வித விதமான பதார்த்தங்களை வீட்டிலேயே செய்து எடுத்து வருகின்றனர். இங்கே வந்து இட்லி, பணியாரம், தோசை போன்றவை மட்டும் சூடாக செய்து தருகின்றனர். மாலை 7 மணி முதல் இரவு 11 மணிவரையிலும் இவர்கள் கடை திறந்து வைத்திருப்பார்கள். இவர்கள் சமைக்கும் பதார்த்தங்கள் மிச்சமாகவோ வீனாகவோ ஆவதில்லை. தினமும் சமைப்பது சரியாக போய்விடும் என்கிறார்கள். . ஆனால் தாமதமாக வருபவர்களுக்கு இருக்காது. சில சமயங்களில் மீதமாக இருந்தாலும் அதை அவர்கள் வெளியே கொட்டி விடுவதனால் அதை அடுத்தநாள் பயன்படுத்துவது இல்லை .

5 முதல் 15 வருடங்களாக கடை நடத்துபவர்களும் இருக்கிறார்கள். வருமானம் மிக அதிகமாக வருவதில்லை என்றாலும் சம்பளம் வருவது போல் அளவு வருகிறது என்கிறார்கள். சுவைக்காக ஏதும் தனியாக சேர்ப்பது இல்லை . எல்லாமே வழக்கமாக செய்வது போலத்தான் செய்வதாகவும் சொல்கிறார்கள். கடை வாடகை, அலங்கார செலவுகள் போன்றவை இல்லை, சுவைக்காகவோ அல்லது பார்வை வசீகரிக்கவோ இவர்கள் சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் பொருட்களையோ, வண்ணங்களையோ எதுவும் இவர்கள் சேர்ப்பதில்லை. எனவே இவர்களால் மலிவான நல்ல தரமான உணவை தர முடிகிறது என்கிறார்கள்.

இப்படி எல்லா வகையிலும் சாதாரண மக்களுக்கு பயன்படும் இது போன்ற கடைகளில் இன்னும் கூட சில விசயங்களை மேம்படுத்தினால் இன்னமும் வாடிக்கையாளர்கள் நிறைவார்கள் என்கின்றன இவர்களிடம் உணவு வாங்கும் பொது மக்கள். பொதுவாக இது போன்ற கடைகளில் பணியாட்கள் என்று யாரும் இருப்பதில்லை. குடும்ப உறுப்பினர்களே வேலைகளை பார்த்துக் கொள்கின்றனர். பெண்கள் காலை முதல் வீட்டிலும் வேலை பார்த்து விட்டு அதே நிலையில் கடைக்கும் வருவதை விட மீண்டும் மாலை சுத்தமாக குளித்து நல்ல முறையில் தூய்மையாக வருவதை விரும்புகிறார்கள். மேலும் கைகளுக்கு கையுறை, முகக்கவசம், தலைமுடிகள் விழுகாமல் இருக்க தலையில் உறை போன்றவை அணிந்து சமைத்தார்கள் என்றால் இன்னும் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் பெருக வாய்ப்பாக இருக்கும்.

மேலும் பிளாஸ்டிக் கவர்களில் சட்னி, குழம்பு போன்றவைகளை ஊற்றும்போது இவர்கள் அந்த காகித பையை வாயால் ஊதி திறப்பதை தவிர்க்க வேண்டும். தினமும் என்ன உணவு வகைகள் அன்றைக்கு செய்திருக்கிறார்கள் என்பதை ஒரு மெனு போல எழுதி வைத்தல் இன்னும் சிறப்பாக இருக்கும். மேலும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் தட்டுகள் போன்றவற்றை தவிர்த்து வாழை இல்லை மற்றும் பாக்கு மட்டைகளை உபயோகப்படுத்தினால் சிறப்பாக இருக்கும். சில கடைகளில் மட்டும் வாழை இலைகளை உபயோகப் படுத்துகிறார்கள். சுவை மற்றும் தரத்தின் உடன் சுகாதாரத்திலும் இவர்கள் கவனம் செலுத்தினால் இது போன்ற கடைகள் இன்னும் நல்ல முறையில் செயல்படும். அடுத்தவர்களின் பசியை போக்கி ,அவர்கள் மனமார்ந்த வாழ்த்துப் பெற்று , உண்ணும் உணவிற்கு உகந்த ஊதியம் பெறும்போது அதில் அடையும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை இல்லைங்களா..!

~மகேந்திரன்.

Sunday, December 01, 2013

மைசூர் அருண் சிற்பி ~மகேந்திரன்

கட்டிடக் கலைக்கு அடுத்தபடியாக உள்ளது சிற்பக் கலை. கட்டிடக்கலையை விட சிற்பக் கலை நுட்பமானது. மனிதன், விலங்கு, பறவை, மரம், செடி, மலை, கடல் முதலிய இயற்கை உருவங்களையும், கடவுள், தெய்வம், தேவர், அரக்கர், அரசியல்வாதிகள்  என  முதலிய கற்பனை உருவங்களையும் அழகுபட அமைப்பதே சிற்பக் கலையாகும். புலவர் கற்பனைகளை அமைத்து நூல் எழுதுவது போலவே, சிற்பக் கலைஞரும்   தமது கற்பனைகளினாலே பலவகையான சிற்பங்களை அமைக்கிறார்கள்.


அதுமட்டும் அல்ல உடலை உருவாக்கி அதற்கு உயிரை தருவது தாய்மை. ஒரு சிலையை உருவாக்கி அதற்க்கு உயிர்ப்பை தருவது சிற்பக்கலை. எனவே இந்த கலையும் ஒரு தாய்மை தான். சிலையை உருவாக்கி காண்பவர் கண்களுக்கு அதை உயிர்ப்புடையதாக காட்டும் சிற்பியும் தாய்தான். அப்படி உயிரோட்டமுள்ள சிலையை உருவாக்கும் சிற்பிதான் திரு. அருண். இவரைப்பற்றியும் இவரது சிற்பக்கலை பற்றியும் நேரில் கூறும்போது.
திரு. பசவண்ண சிற்பி மைசூர் அரண்மனையில் ராஜா திரு. ஜெயச்சந்திர ராஜேந்திர உடையார் அவர்களின் அரசவையில் ஆஸ்தான அரசாங்க சிற்பியாக கி.பி. 1938 முதல் கி.பி.1952 வரை பணி பண்புரிந்து தேசிய மற்றும் மாநில விருதுபெற்ற புகழ்வாய்ந்த திரு. பசவண்ண சிற்பி அவர்களின் பேரன்தான் இவர். "அருண் சிற்பி" தொடர்ந்து ஐந்து தலைமுறைகளாக இவர்களது குடும்பத்தினர் சிற்பக்கலையில் ஈடுபட்டு வருகின்றனர்.



1958 ஆம் ஆண்டு கர்நாடகாவில் முதலமைச்சராக இருந்த திரு,. அனுமந்தையா அவர்கள் அரசாங்க சிற்பியாக இருந்த திரு. பசவண்ண சிற்பி அவருடைய சிற்ப்பக்கலையின் சிறப்பை நமது முன்னாள் இந்தியர் பிரதமர் திரு. ஜவஹர்லால் நேரு அவரிடம் அறிமுகம் செய்ததில் பிரதமர் திரு. ஜவஹர்லால் நேரு அவர்கள் பசவண்ண சிற்ப்பியை நேரு நேரில் வந்து அவரது இல்லத்தை அலங்கரிக்க சிற்பம் வாங்கி உள்ளாராம் . இந்த நிகழ்வு மிகப்பெரிய கவுரவமும் பெருமை தரும் நிகழ்வாக கருதுகின்றனர்.




இப்படி பெருமைக்குரிய பசவண்ண சிற்பியின் வம்சாவழியில் இன்று ஒரு இளம் வயதிலேயே அனுபவம் வாய்ந்த சிற்பியாக 29 வயதாகும் " திரு அருண்". இவரது சகோதரர்களும் பல வருடங்களாக சிற்பக்கலையில் இருந்தாலும் இவரது சிற்பங்கள் மிகவும் சிறப்பாக பேசப்பட்டு வருகிறது , இவர் சிற்பங்கள் உள்ள மிகுந்த ஆர்வத்தினாலேயே MBA படித்து விட்டு சிற்பக் கலையில் சுவாசிக்க வந்து விட்டார் . எழு ஏழுவயதில் இந்த கலைக்குள் நுழைந்த அருண் சிற்பி படிப்பு முடித்த பிறகு முழு நேர சிற்பியாக இருக்கிறார். இதுவரை ஆயிரக்கணக்கான சிற்பங்களுக்கு உயிர்தந்துள்ளதாக கூறும் இவர் . மைசூர் மாவட்டத்தில் K.R. நகர் தாலூக்காவில் 800 வருடங்கள் பழமை வாய்ந்த கோவிலில் இவர் வடித்த 8 அடி உயர யோக நரசிம்மர் சிலை, தும்கூர் மாவட்டத்தில் 6 அடி உயரத்தில் இவர் அமைத்துள்ள நந்தி சிலை, ஆந்திரபிரதேசத்தில் 9 அடி உயரத்தில் அமைத்துள்ள பெண் தெய்வம் மகேஸ்வரியின் சிலை போன்றவை சிலைகள் மக்களால் மிகவும் போற்றப்பட்டு வருகிறது . மேலும் ஒரு சிற்பம் உருவாக சிலையின் அளவு, வடிவமைப்பு, நேர்த்தி மற்றும் நுணுக்கங்களை பொறுத்து சிலை செய்ய தேவைப்படும் காலம் மாறும் என்கிறார். குறிப்பிட்ட சிலைகள் உருவாக 3 முதல் 4 மாதங்களும் ஆகும் ஒரு சில சிலைகளுக்கு பல வருடங்களும் ஆகும் என்கிறார்.
சிற்பங்கள் செய்ய எந்த வகையான கற்களை பயன்படும் என்று கேட்டதற்கு. ஆங்கிலத்தில் "Syst " என்று அழைக்கப்படும் இந்த கற்கள் வடமொழியில் " கிருஷ்ணசிலா" என்றும் சொல்லப்படுகிறது. இந்த கற்கள் வெளிர் நீல / சாம்பல் நிறத்தில் இருக்குமாம். இந்த கற்கள் கனடாவில் இருந்து வரவழைக்கப்பட்டு சிலைகள் செய்ய பயன்படுத்த படுகிறது.கற்களில் மட்டும் அல்லாது கண்ணாடியிலும் சிலைகள் செய்து வருகிறோம் . நாங்கள் உருவாக்கிய சிற்ப்பங்கள் ஜப்பான், US, ஆஸ்திரேலிய, சுவீடன், ஸ்ரீலங்கா மற்றும் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அங்கு உள்ள கோவில்களில் பூஜை புனஷ்க்காரம் செய்யப்பட்டு வருகிறதாம்.
மேலும் அருண் சிற்பி கூறும்போது சிலைகள் செய்வதில் பல்வேறு விதங்கள் இருக்கிறது , ஹொய்சாலா , சாளுக்கியா, தஞ்சாவூர், மைசூர் போன்ற பல வித முறைகள் இருக்கிறது. அதில் இவர்களது முறை "ஹொய்சாலா " என்று அழைக்கப்படுகிறது. தமிழர் முறையில் இது "திராவிட" முறை என்றும் சொல்கிறார்.
மேலும் சிற்பக் கலைகளை ஊக்குவிப்பதற்காகவே இளைஞர்களுக்கு இந்த சிற்ப கலையை இலவசமாக கற்றுத் தருகின்றோம் என்றும் கலையில் ஆர்வமுடைய இளைஞர்கள் மாணவர்களுக்கு சவுகரியமான நேரத்தில் வந்து கற்று கொண்டு இருக்கிறார்கள் . இதுவரை பல மாணவர்கள் முழுமையாக பயிற்சி முடித்து சிலை செய்யும் கலையில் மிகப்பெரிய சிற்பியாக விளங்குகின்றனர். .
நல்ல தரமான சிலைகளை செய்ய வேண்டும், வாழ்நாள் முழுதும் இந்த கலையை மேம்படுத்த வேண்டும், காலத்தால் அழியாக கலை அம்சம் கொண்ட சிலைகளை உருவாக்குவதே தனது வாழ்நாள் லட்சியம் என்கிறார் இந்த இளம் சிற்பி அருண்.
கலைகளிலே  மிகச் சிறந்த்து சிற்பக்கலை. வரலாற்றுக்
கு முற்பட்ட காலத்திலிருந்தே இக்கலை வளர்ந்து வருகின்றது. மனித நாகரீகத்தையும் அதன் வளர்ச்சியையும் எடுத்துக்காட்டும் சான்றுகளின்  சிற்பக்கலையைவிட சிறந்தது வேறொன்றில்லை. அக்கலைகளை இந்நாளிலும் உயிர்ரூட்டிக்கொண்டு இருக்கும்  சிற்பி அருண் வாழ வாழ்த்துக்கள்.

~மகேந்திரன் 

Friday, November 29, 2013

நலம் வாழ என் வாழ்த்துக்கள் ~ ஈரநெஞ்சம்



Eera Nenjam Charity/

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
****** 
[For English version, please scroll down]
(238/29-11-2013)

கோவை, பாப்பநாயக்கன்பாளையம், லக்ஷ்மி மில் அருகில் பல வருடங்களாக சுமார் 40 வயது மதிக்கத்தக்க, மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் சாலையோரமாக இருந்து வந்தார். உடலில் மிக அழுக்கு, எண்ணை பிசுக்கு, கோரமாக, கிழிந்த உடையுடன் வெய்யிலிலும் மழையிலும் சாலையிலேயே இருந்து வந்தார். ஒரு சில முறை சிறு விபத்துக்களும் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்பதற்கு பலமுறை ஈரநெஞ்சம் அமைப்பினர் அங்கு சென்றபோதெல்லாம் அங்கே கிடைப்பதில்லை. இன்று 28/11/13 அவர் தனியார் அவசர சிகிச்சை ஊர்தி மூலம் ஈரநெஞ்சம் அமைப்பினர் அவரை மீட்டு கோவை மாகராட்சி காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு தேவையான அனைத்து முதலுதவியும் செய்து அவரை குளிக்க வைத்து சுத்தம் செய்து நல்ல உடை அணிவித்து உணவும் வழங்கப்பட்டது.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

There was a mentally disabled person in his 40s lived on the streets of Coimbatore Pappanayakkan Palayam. He continued to live on the streets in the sun and rain with dirty, and oily body. He had torn clothes and looked horrible. He also had little accidents few times. Whenever Eera Nenjam went there to rescue him, he was missing in the area. Today 28.11.2013 Eera Nenjam rescued him and brought to admit at Coimbatore City Corporation Home by the private emergency vehicle. There he was given necessary first aid, bath, food and clean good clothes. Eera Nenjam is very pleased about the fact that one more homeless mentally disabled person is rescued from the streets to make a difference. We would like to share that with you all.

~Thank you
Eera Nenjam

Thursday, November 28, 2013

லட்சுமி அம்மாவிற்கு உறவு கிடைச்சாச்சு ~ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
****** [For English version, please scroll down]
(237/27-11-2013)

26.11.13 அன்று முகநூலில் ஈரநெஞ்சம் அமைப்பு கொடுத்த தகவலை தொடர்ந்து லட்சுமி அம்மாள் பாட்டியின் பேரன் சிவகுமார் அவர்களின் தொடர்பு கிடைத்தது.

https://www.facebook.com/photo.php?fbid=494572107306877&set=a.249582201805870.51248.199260110171413&type=1&theater

அதனை தொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்பினர் சிவகுமார் அவர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தவுடன் சிவக்குமார் 27-11-2013 இன்று கோவை வந்தார். அவரிடம் லட்சுமி அம்மாள் ஒப்படைக்கப்பட்டார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம். சிவகுமார் கூறுகையில் தனது பாட்டி தூத்துக்குடியில் 30.09.13 அன்று காணமல் போனதாகவும். அவரை பற்றி காவல் துறையில் தகவல் கொடுத்து கடந்த ஒரு மாதமாக தேடி வருவதாகவும் தெரிவித்தார். பிரிந்த தனது பாட்டியை மீட்டு தந்த ஈரநெஞ்சம் அமைப்பிற்கு அவர் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார். அவரை அவரது குடும்பத்தினருடன் சேர்க்கவும் உதவிய அனைத்து நண்பர்களுக்கும் ஈரநெஞ்சம் சார்பில் நன்றிகள்.

மீண்டும் ஒரு உறவை சேர்த்து வைத்ததில் ஈரநெஞ்சம் மகிழ்ச்சியடைகிறது.

~ நன்றி

ஈர நெஞ்சம்

https://www.facebook.com/eeranenjam

On 26-11-13, Eeranenjam's post in Facebook as Mrs. Lakshmiammal's detail, we came to know about his grand son Mr. Sivakuamr. As soon as Eeranenjam contacted and let him know about Mrs. Lakshmiammal. He came to Coimbatore and taken care of her. He told that she was missed in Thoothukudi on 30-10-2013 and they registered a complaint in police and searched her for a month. He told thanks to Eeranenjam to rescue his Grandmother. We thank you all who are helped to collect the details and rescue her. Eeraemjam feels happy to join one more person with family.

~thank you.
Eera Nenjam Charity
Photo: Eera Nenjam Charity
''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
****** [For English version, please scroll down]
(237/27-11-2013)

26.11.13 அன்று முகநூலில் ஈரநெஞ்சம் அமைப்பு கொடுத்த தகவலை தொடர்ந்து லட்சுமி அம்மாள் பாட்டியின் பேரன் சிவகுமார் அவர்களின் தொடர்பு கிடைத்தது.

https://www.facebook.com/photo.php?fbid=494572107306877&set=a.249582201805870.51248.199260110171413&type=1&theater

அதனை தொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்பினர் சிவகுமார் அவர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தவுடன் சிவக்குமார் 27-11-2013 இன்று கோவை வந்தார். அவரிடம் லட்சுமி அம்மாள் ஒப்படைக்கப்பட்டார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம். சிவகுமார் கூறுகையில் தனது பாட்டி தூத்துக்குடியில் 30.09.13 அன்று காணமல் போனதாகவும். அவரை பற்றி காவல் துறையில் தகவல் கொடுத்து கடந்த ஒரு மாதமாக தேடி வருவதாகவும் தெரிவித்தார். பிரிந்த தனது பாட்டியை மீட்டு தந்த ஈரநெஞ்சம் அமைப்பிற்கு அவர் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார். அவரை அவரது குடும்பத்தினருடன் சேர்க்கவும் உதவிய அனைத்து நண்பர்களுக்கும் ஈரநெஞ்சம் சார்பில் நன்றிகள்.

மீண்டும் ஒரு உறவை சேர்த்து வைத்ததில் ஈரநெஞ்சம் மகிழ்ச்சியடைகிறது.

~ நன்றி

ஈர நெஞ்சம்

https://www.facebook.com/eeranenjam

On 26-11-13, Eeranenjam's post in Facebook as Mrs. Lakshmiammal's detail, we came to know about his grand son Mr. Sivakuamr. As soon as Eeranenjam contacted and let him know about Mrs. Lakshmiammal. He came to Coimbatore and taken care of her. He told that she was missed in Thoothukudi on 30-10-2013 and they registered a complaint in police and searched her for a month. He told thanks to Eeranenjam to rescue his Grandmother. We thank you all who are helped to collect the details and rescue her. Eeraemjam feels happy to join one more person with family.

~thank you.
Eera Nenjam Charity

Sunday, November 24, 2013

பிணவறை உழைப்பாளிகள்




"இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்" ~ குறள் 1035

"தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர், பிறரிடம் சென்று கையேந்த மாட்டார், தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவார்.

இந்த குறளுக்கு ஏற்ப தொழில் செய்து வாழ்ந்து வரும் மனிதர்கள் பலர். கைத்தொழில் செய்பவர், சிறு தொழில் முனைவோர், சொந்த தொழில் நடத்துவோர் என்று ஏராளமானோர் , எல்லாம் நாம் நினைத்ததுபோல அமைவது இல்லை , தமக்கு வாய்த்த விதிப்படி தொழிலை அமைத்துக்கொண்டு செய்யும் தொழிலை தெய்வமாக வணங்கி வாழ்ந்து வருகிறார்கள். ஒருவர் செய்யும் வேலையை பொறுத்தும் அதில் வரும் வருவாயைப் பொறுத்துமே இந்த சமுதாயம் அவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கிறது. அழகான உடைகள் அணிந்து கொண்டு, காரில் மிடுக்காய் வேலைக்கு செல்பருக்கு ஒரு விதமான மரியாதை என்றால், சாலை ஓரம் இருக்கும் குப்பைகளை அகற்றும் துப்புரவு தொழிலாளிக்கு அந்த தொழிலுக்கு ஏற்ற மரியாதை தான் கிடைக்கிறது.

" பிணவறை பணியாளர்கள் " இவர்களைப் பற்றி நாம் நினைத்துக்கூட பார்த்திருக்க வாய்ப்பில்லை .

நமக்கென தருணம் வரும் வரை இப்படி சற்றும் நம் கவனத்திற்கு வராதவர்கள் தான் இந்த பிணவறையில் வேலை செய்யும் பணியாளர்கள். தமது உறவினர் இறந்தாலே அந்த உடலை பார்ப்பதற்கு பலருக்கு பயம், இறப்பு செய்தி கேட்டாலோ அல்லது இறந்த வீட்டுக்கு சென்றாலோ அங்கு இறந்தவர்களின் உடலை தொடவோ அல்லது பார்ப்பதற்க்கோ கூட சிலர் அச்சப்படும் நிலையும் இருக்கிறது. இப்படி இருக்க சடலங்களை குவித்து வைத்திருக்கும் கிடங்கு என்றால் எப்படி இருக்கும், அந்த கிடங்கில் சடலங்களை கையாளும் உழைப்பாளி மனிதர்களை பற்றியதுதான் இந்த கட்டுரை.

அந்த உழைப்பாளிகள் அப்படி என்ன தான் செய்கிறார்கள்.

பிணவறை வேலை செய்பவர்கள் என்று சொல்லும்போதே பலருக்கு பயம் இருக்கும். உயிருக்கு உயிராய் பழகிய நண்பன் ஆனாலும் என்ன ? பத்து மாதம் கருவில் சுமந்த தாயாயினும் என்ன ?உயிருடன் இருக்கும் வரை கட்டித்தழுவிய உறவுகள் கூட இறந்த பிறகு அவர்களது சடலங்களை தொட முன் வருவது இல்லை , இந்த உழைப்பாளிகள் அவற்றைக் கையாள்கிறார்கள். தற்கொலை செய்து கொண்ட உடல், முழுவதும் எரிந்து
போன உடல், நோயால் அவதிப்பட்டு உயிரிழந்த உடல், இறந்து பல மாதங்களான உடல், அடையாளம் தெரியாத உடல் என அனைத்து சடலங்களையும் வெட்டுதல், தேவை இல்லாத பாகங்களை அகற்றுதல், விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழந்து சிதைந்து வரும் உடலுக்கு உருவம் கொடுத்தல் போன்ற வேலைகளை இவர்கள் செய்கிறார்கள். ஒருவர் இறந்து பல மாதங்கள் ஆகி அழுகிய உடலானாலும் அந்த உடலை பிரேத பரிசோதனை செய்யும் போது இவர்களே வரவேண்டும். மருத்துவர்கள் பார்வை சோதனை மட்டுமே நடத்துவார்கள் . அது முடித்த பிறகு மீண்டும் அந்த உடலை கோரமாக இல்லாமல் நல்ல முறையில் சீர்படுத்தி உறவினர்கள் கையில் ஒப்படைக்கிறார்கள்.

பொதுவாக சடலங்களை குளிரூட்டப்பட்ட அறை அல்லது குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் வைத்து பராமரிப்பார்கள் . தற்போது ஏற்படும் மின் தட்டுப்பாட்டால் , சடலங்கள் விரைவில் அழுகி புழுக்கள் வர ஆரம்பித்து விடுகின்றன. அவற்றை சுத்தப்படுத்துதல் மிகவும் கடினம் அவற்றை
கையாளுவதில் கொஞ்சமும் அருவருப்பு பயம் இல்லாமல் அவர்கள் கையாள்வதை பார்க்கும்போது அவர்களுக்குள் இருக்கும் சகிப்புத் தன்மை நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

தங்கள் கைகளுக்கு கவசம் அணியும் இவர்களைல் சிலர் சுவாசக் கவசம் அணிவதில்லை. இந்த வாடை பழகிப் போனதே அதற்குக் காரணம் . நாற்றத்தை சமாளிக்க மது அருந்த காரணம் தேடும் துப்புரவு தொழிலாளிகள் மத்தியில் இப்படி பிணங்களை தூய்மைபடுத்தும் சிலர் மதுவை தொடாதவர்கள் என்பது ஆச்சரியமாகவே உள்ளது.

பொதுவாக எட்டாம் வகுப்பு வரை தான் இவர்கள் படித்திருக்கிறார்கள். வேலைக்கு சேரும் போது இவர்கள் மருத்துவ வளாகங்களை சுத்தபடுத்தும் துப்புரவு பணியாளர்களாகவே சேர்க்கப்படுகின்றனர். பின்னர் சடலங்களை கையாள்வது , அப்புறப்படுத்துவது போன்றவையும் மருத்துவ துறையில் துப்புரவு பணிகளில் ஒன்றே என்பதை புரிந்து கொண்டு அதைச் செய்வதில் அவர்கள் தயக்கம் காட்டவில்லை. காரணம் வருமானத்திற்கு வேறுவழி இல்லை என்கிறார்கள் அதுவும் இல்லாமல் இந்த பணியிலும் ஒரு ஆத்மார்த்தத்தைக் காண்கிறார்கள். புதிய தொழிலாளர்களுக்கு ஆரம்பத்தில் இந்த வேலை கொஞ்சம் பயமாக இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல அதுவே பழகி கொள்கிறார்கள். தினமும் சடலங்களுடன் இருப்பதால் பேய் பிசாசு, மரணம், பற்றிய பயம் இவர்களுக்கு அறவே இல்லை.

துப்புரவுத் பணியாளர்கள் என்று வெளியே சொல்லிகொண்டாலும் மருத்துவமனையில் இப்படி சடலங்களை கையாளும் வேலையை தாங்கள் செய்வதாக ஒரு நாளும் வெளியில் சொல்லுவதில்லை. தங்களின் மனைவி மற்றும் குழந்தைகளிடம் கூட இவர்கள் தாங்கள் செய்யும் வேலையை பற்றி சொன்னதில்லை. ஏனென்றால் சடலங்களை சடலங்களை கையாளுகிறார்கள் என்று தெரிந்தால் மனைவி மக்கள் பக்கத்தில் வரக் கூட யோசிப்பார்கள் என்ற காரணமே. அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், நண்பர்கள் கூட இவர்கள் செய்யும் தொழில் பற்றி தெரிந்தால் உடனே பேசுவதை நிறுத்தி விடுவார்கள் என்ற அச்சத்தால் இவர்கள் தங்களை பிணவறை பணியாளராக சொல்லிக்கொள்வது இல்லை . அப்படி இவர்களைப் பற்றி தெரிந்த சிலர்கள் சடலங்களுடன் பழகும் ஒரு கொடுரமான மனிதனாகவே இவர்களை சித்தரிக்கிறார்கள் . இவ்வளவு சகிப்புத்தன்மையுடன் வேலை செய்யும் இவர்களை எப்படி பாராட்டுவது என்று நாம் வியந்து பாராட்டினாலும் இவர்களுக்கு இந்த சூழ்நிலை ஏற்பட்டிருப்பது கொஞ்சம் வருத்தமாகவே இருக்கிறது.

தற்கொலை செய்துகொண்டவர்கள் , குழந்தைகள், விபத்தில் உயிர் இழந்த சடலங்களை இவற்றைப் பார்க்கும் போது மனம் வருத்தப்படும் இவர்கள் வயதானவர்களின் சடலங்கள் வந்தால் அவர்களுக்காக வேண்டிக்கொள்கிறார்கள் . ஆதரவற்றோர் அடையாளம் தெரியாத சடலங்கள் காவல்துறை விசாரணை முடியும் வரை கிடங்கிலேயே மாதக்கணக்கில் இருக்கும் அப்படிப்பட்ட சடலங்களை தினமும் பார்த்து "உனக்கென்று முழு விடுதலை எப்போது வரும் என்ற ஏக்கமும் வேண்டுதலும் இருக்கிறது இவர்களுக்கு" அப்படிப்பட்ட சடலங்களைக் கையாளும்போது இவர்கள் மிகுந்த ஆத்ம திருப்தி அடைகிறார்கள். வாங்கும் சம்பளம் குறைவாக இருந்தாலும் இவர்கள் யாரிடமும் வற்புறுத்திப்
பணம் கேட்பதில்லை. விருப்பப்பட்டுக் கொடுப்பதை வாங்கிக்கொள்கிறார்கள். ஆதரவற்ற சடலங்கள் வரும்போதும் அதை நல்லடக்கம் செய்யும் சமூக அமைப்புகளுடன் இணைந்து அந்த உடலின் ஆத்மாக்களை மகிழ்ச்சியடையச் செய்கிறார்கள். சடலங்களுடனும் ரத்தங்களுடனும் வாழ்ந்து பழகியதால் இவர்கள் அந்த சடலங்கள் இருக்கும் இடத்தில் தான் உணவும் உண்கிறார்கள் . தொற்றுநோய் பரவும் அபாயம் இல்லையா என்ற சந்தேகத்தைத் தீர்க்க அவர்கள் கூறும்போது, இறந்த உடலை அன்றே கையாள்வதுதான் ஆபத்து , ஒருவர் இறந்து குறைந்தது மூன்று நாட்களுக்குள் அந்த உடலில் இருக்கும் தோற்று நோய்க் கிருமிகளும் இறந்து விடும் புதிய கிருமிகள் தோன்ற மேலும் சிலநாள் ஆகும் அதற்குள் அந்த உடலை கையாண்டுவிடலாம் என்கிறார்கள்.

உழைப்பே தெய்வமாக வணங்கி இந்த பணியை மேற்கொள்ளும் இவர்கள் சடலத்தை கையாள்வதற்கு முன் இறந்தவரின் கால்களை
தொட்டுக் கும்பிட்ட பின்னரே வேலையை செய்யத் தொடங்குவார்கள். இவர்கள் தொடும் ஒவ்வொரு உடலின் ஆத்மாக்களும் அவர்களது உறவினர்களை ஆசிர்வதிக்கிறதோ இல்லையோ இவர்களை நிச்சயம் ஆசிர்வதிக்க வேண்டும்.

இப்படிப்பட்ட "பிணவறை பணியாளர்கள் " இல்லை என்றால் நாம் கட்டி அணைத்து அழ நமக்கு நம் சொந்தங்களின் உடல் முழுமையாக கிடைக்காது . அனால் எல்லாம் தனியார் மயமாக்கப்பட்டு வரும் நிலையில் எப்போது வேலை போகும் என்று அச்சத்துடன் வாழும் இவர்களின் நிலைமையோ மிகவும் மோசமானது தான். எத்தனையோ சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி அங்கீகாரம் கொடுக்கும் நாம், இறந்தபின் நமக்கு அங்கீகாரம் கொடுக்கும் இவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து தர எண்ண வேணாமா..?

~மகேந்திரன்

"மயான தொளிலாளியையும் அவர்களின் ஆத்மார்த்தமான பணிகளைப்பற்றியும் எழுதிய நான்
"பிணவறை பணியாளர்கள்' அவர்களோடும் அவர்களுடைய உணர்வுகளையும் உடன் இருந்து
அறிந்து எழுதியது இந்த கட்டுரை.

அவர்களைக்கண்ட பிறகு ஒன்று மட்டும் நன்றாக உணர்ந்து கொண்டேன்.

"முற்றுப்புள்ளிக்கு முகவரிதரும்
இந்த
மனிதர்களைப் பற்றி அறிந்தால்
தொடர் புள்ளிக்கு பின்னால்
போடும் ஆட்டங்கள்
சீர்ப்படுதப்படும் "







Saturday, November 23, 2013

தனம் அம்மாவின் உறவினர் கண்டுபிடிப்பு ~ஈரநெஞ்சம்


''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services
" ******
[For English version, please scroll down]
(235/23-11-2013)

கோவை உக்கடம் பகுதியில் நேற்று 21/11/2013 தனம் வயது 80 என்னும் மூதாட்டி மயங்கிய நிலையில் இருந்தவரை கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்க்கப்பட்டு நிலையில் இன்று 22/11/2013 அவரது உறவினரை தேடும் பணியில் ஈரநெஞ்சம் முயற்சி மேற்கொண்டது ,

https://www.facebook.com/photo.php?fbid=286072094851086&set=a.143756775749286.13398.100003448945950&type=1&theater

அதன் பலனாக இன்றையதினமே 22/11/2013 B13 காவல்துறை உதவியுடன் தனம் அம்மாவின் மகனான குப்பாசாரியர் கண்டுபிடிக்கப்பட்டு காப்பகத்தில் இருக்கும் தனம் அம்மாவை மகன் குப்பாசாரியருடன் ஒப்படைக்கப்பட்டது .

தனம் அம்மாவின் மகனான குப்பாசாரியர் கூறும்போது தனது தாய் நேற்று 21/11/2013 வீட்டில் இருந்த நிலையில் ஒரு உறவினரது வீட்டிற்கு சென்று வருவதாக சொல்லிச் சென்றார். அவருக்கு ஞாபகமறதி இருப்பதால் வெளியே சென்றவர் உறவினரது வீட்டிற்கும் செல்லவில்லை , இரவெல்லாம் தேடிக்கொண்டு இருந்தோம் , இன்று பிற்பகல் காவல்துறையினர் வந்து சொன்னபிறகுதான் இங்கு காப்பகத்தில் இருப்பது தெரியவந்தது, மேலும் அம்மாவை கண்டுபிடித்து தந்த ஈரநெஞ்சம் அமைப்பிற்கு மனதார நன்றியினை தெரிவித்துக் கொண்டார். அவரை அழைத்து சென்று நல்லமுறையில் கவனிதுக் கொள்வதாகவும் உறுதி அளித்தார்.

மேலும் ஒரு உறவை தேடித்தந்த ஈரநெஞ்சம் மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறது

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam


On 21.11.2013, Thanam an elderly lady age 80 was rescued from Coimbatore Ukkadam area and admitted at Coimbatore City Corporation Home. She was found unconscious. Yesterday Eera Nenjam attempted to search her relatives. As a result, with the help of the police they found Thanam Amma’s son Kuppachariyar yesterday 22.11.203 and handed his mom over to him. When Thanam Amma’s son Kuppachariyar spoke, he mentioned that his mother left home on 21.11.2013 to go to one of the relatives. She has poor memory power, because of that she neither went to the relative house nor returned home. They were searching for her through the night. They came to know that Thanam Amma is in the city home when the police came in the afternoon and told them. He thanked Eera Nenjam for finding his mom and assures that he will take good care of his mother.

Once again Eera Nenjam reunited a lost person back with her family and sharing that good news with you all.

~thank you.
Eera Nenjam

Thursday, November 21, 2013

இறந்தாலும் ஈரநெஞ்சம் இருக்கிறது. ~ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(233/21/11/2013)

கோவை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ஒரு வார காலமாக உடலில் ஆடை இல்லமால் எறும்பு மொய்த்த நிலையில் முதியவர் ஒருவர் கிடப்பதாக அப்பகுதி மக்கள் ஈரநெஞ்சம் அமைப்பிற்கு அளித்தத் தகவலின் பேரில் 03/11/13 அன்று அந்த முதியவரை மீட்டு தேவையான முதலுதவிகளை அளித்து மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
https://www.facebook.com/photo.php?fbid=484791868284901&set=a.249582201805870.51248.199260110171413&type=1&theater
அந்த முதியவர் சிகிச்சை பலன் இல்லாமல் 6.11.13 அன்று காலமானார். B4 காவல் நிலையம் அந்த முதியவரை பற்றி விசாரணை நடத்தியது. விசாரணைக்கு பிறகு இன்று 21.11.13 அவரின் பிரேத உடல் ஈர நெஞ்சம் அமைப்பிடம் கொடுக்கப்பட்டது.
ஈர நெஞ்சம் அமைப்பினர் அவரின் உடலை சொக்கம்புதூர் மயானத்தில் நல்ல முறையில் அடக்கம் செய்தனர். அந்த பெரியவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Eera Nenjam was informed by the public about an elderly man who was lying at Coimbatore General hospital premises without any clothes on him and ants crawling all over his body. Following the information that was given on 03.11.2013, Eera Nenjam rescued the elderly man and gave him first aid, later admitted him at the general hospital for treatment. Unfortunately the elderly man passed away on 6.11.13. Since there was no information about this elderly man, B4 police station was trying to get some information about him. Later today 21.11.13, the elderly man’s body was given to Eera nenjam trust. Eera Nenjam trust did the final funeral services to his body with due respect.
Let us pray for his soul to rest in peace.

Thank you.
~Eera Nenjam


Photo: ''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(233/21/11/2013)

கோவை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில்  ஒரு வார காலமாக உடலில் ஆடை இல்லமால் எறும்பு மொய்த்த நிலையில் முதியவர் ஒருவர் கிடப்பதாக அப்பகுதி மக்கள் ஈரநெஞ்சம் அமைப்பிற்கு அளித்தத் தகவலின் பேரில் 03/11/13 அன்று அந்த முதியவரை மீட்டு தேவையான முதலுதவிகளை அளித்து மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
https://www.facebook.com/photo.php?fbid=484791868284901&set=a.249582201805870.51248.199260110171413&type=1&theater
அந்த முதியவர் சிகிச்சை பலன் இல்லாமல் 6.11.13 அன்று காலமானார். B4 காவல் நிலையம் அந்த முதியவரை பற்றி விசாரணை நடத்தியது. விசாரணைக்கு பிறகு இன்று 21.11.13 அவரின் பிரேத உடல் ஈர நெஞ்சம் அமைப்பிடம் கொடுக்கப்பட்டது.
ஈர நெஞ்சம் அமைப்பினர் அவரின் உடலை சொக்கம்புதூர் மயானத்தில் நல்ல முறையில் அடக்கம் செய்தனர். அந்த பெரியவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Eera Nenjam was informed by the public about an elderly man who was lying at Coimbatore General hospital premises without any clothes on him and ants crawling all over his body. Following the information that was given on 03.11.2013, Eera Nenjam rescued the elderly man and gave him first aid, later admitted him at the general hospital for treatment. Unfortunately the elderly man passed away on 6.11.13. Since there was no information about this elderly man, B4 police station was trying to get some information about him. Later today 21.11.13, the elderly man’s body was given to Eera nenjam trust. Eera Nenjam trust did the final funeral services to his body with due respect.
Let us pray for his soul to rest in peace.

Thank you.
~Eera Nenjam

Tuesday, November 19, 2013

"உலகமே உன்னைக் கண்டு வியக்குதம்மா வைரமணி"

"உலகமே உன்னைக் கண்டு வியக்குதம்மா வைரமணி"

பெண்கள் எல்லோருமே அவரவர் தகுதிக்கேற்ப உழைக்கின்றார்கள். ஆண்களை காட்டிலும் பெண்களது சாதனை தற்போது விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து உள்ளது . பெண்ணின் துணிச்சலும் அந்த அளவிற்கு உயர்ந்துவருகிறது . அந்த வரிசையில் ஆச்சரியமூட்டும் ஒரு துறையிலும் ஒரு பெண் சாதித்து வருகிறார்.
பிணம் என்றாலே பெண்களை அருகில் விடுவது இல்லை, இறந்தவர்களை அடக்கம் செய்ய சுடுகாட்டிற்கு போவதென்றால் கூட ஆண்கள் மட்டும் தான் செல்வார்கள். இந்த காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது. புலியை முறத்தால் விரட்டிய பெண்ணின் வம்சம் கொண்டவளோ... இவள் நடு சாமத்தில் தனி ஒருத்தியாக சிதையை எரியூட்டுகிறாள். கோவையில் சொக்கம் புதூர் மயானத்தில் வெட்டியானாக (வெட்டியாள்) 30வயது வைரமணி என்னும் பெண்மணி.
நான் இவரை சந்தித்த சூழ்நிலை என்னால் மறக்க முடியாத ஒன்று. மிக இக்காட்டான ஒரு சூழ்நிலையில் எனக்கு பெரும் உதவி புரிந்தவர் இந்த வைரமணி. சுட்டாலும் இவரை மறக்காது அப்படி ஒரு உதவி , ஒரு ஆதரவற்ற சடலத்தை அடக்கம் செய்ய வழக்கமாக நல்லடக்கம் செய்துவரும் அமைப்பில் கூட அந்த தினத்தில் எனக்கு உதவ கைவிரித்து விட்டனர் , உதவிக்கு அழைத்த உடன் இருந்த நண்பர்கள் கூட உதவ முன்வரவில்லை, சடலத்தை நடு வீதியில் வைத்துக்கொண்டு அல்லல் பட்ட நிலையில் வைரமணியை அழைக்க "அண்ணா நான் இருக்கேன்... நீங்க கொண்டுவாங்க... நான் செய்து தரேன் பார்த்து கொள்ளலாம்" என்ற வார்த்தை .
அப்போது அவர் கூறிய இந்த வார்த்தைக்கு நான் என்ன கைம்மாறு செய்தாலும் மிகையாகாது. அந்த உதவிக்கு எந்த அளவுக்கு பணம் கொடுப்பது... அப்படி கொடுத்தால் மட்டும் அதற்கு நிகராகிடுமா ? . எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் கடவுள் நேரில் வந்து உதவுவது இல்லை , ஆனால் அவர் சொன்ன "அண்ணா நான் இருக்கேன்" என்ற வார்த்தை கடவுளின் குரல் ஒலித்தது போல இருந்தது .
இந்த பெருந்தன்மையான வார்த்தைக்கு தகுந்த பலனை அவர் பெற வேண்டும் . என்று அன்றே என் மனதில் தோன்றியது. என்னுடைய நம்பிக்கையும் அவரது புனிதமான பணியும் உன்னதமானதாக இருந்தால் அவர் சொன்ன வார்த்தைக்கும் உதவிக்கும் இறைவனால் மட்டுமே தகுந்த ஊதியம் கொடுக்க முடியும் .
இவரது துணிச்சல் , இவரது பணியைப்பற்றி என்னுடைய பத்திரிக்கை நண்பர்களிடம் கூறியதில் , இவரைப்பற்றி கோவை முழுவதும் பல நாளேடுகளிலும் தொலைக்காட்சிகளிலும் இந்த பெண்ணின் சிறப்பை அறிமுகப்படுத்தினார்கள் . அதன் மூலம் வைரமணிக்கு அவரது பணியை ஊக்குவிக்கும் அளவில் "நேசம்" என்ற அமைப்பு ஆயிரம் பேர் மத்தியில் கவுரவித்து விருதும் வழங்கியது.
எதுவும் இறைவனது அருள் இல்லாமல் நடந்திடாது , இறைக்கு இணையான பணியை மேற்கொள்ளும்போது இறைவனே இறங்கிவரமாட்டானா என்ன , எல்லாம் அவன் செயல் .
அமெரிக்க பத்திரிகையில் வைரமணி
"அண்ணா நான் இருக்கேன்" என்ற வார்த்தைக்கு அவ்வளவு சக்தி இருக்கிறதா என்ன இவரது உன்னதத்தை இன்னும் உலக மக்களுக்கும் அறிந்தாகவேண்டும் என்று அமெரிக்காவில் மிகவும் பிரபலமான "தென்றல்" தமிழ் மாத இதழில் இவருடைய பேட்டிக்கு இடம் கிடைத்தது அதுவும் வைரமணியை நான் நேர்க்காணல் செய்து.
நானாக ஒருவரை நேர்க்காணல் செய்து பத்திரிக்கையில் எழுதுவது அதுவும் அமெரிக்க " தென்றல் " மாத இதழில் வெளிவந்தது எனக்கு அந்த பத்திரிக்கை கொடுத்த மரியாதையாகவே எண்ணுகிறேன் . அந்த வாய்ப்பை எனக்களித்த அரவின் சுவாமிநாதன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்
"தென்றல்" மாத இதழில் முகப்பு அட்டையில் வைரமணியின் புகைப்படத்துடன் , அமெரிக்காவில் தென்றல் மாத இதழில் இடம் பிடிப்பது என்பது மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. அதிலும் முகப்பு அட்டையில் புகைப்படம் கிடைப்பது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட இடமும் அறிய கவுரவம் ஆகும். அதில் வைரமணி செய்தி நவம்பர் 1 ஆம் தேதி பிரசுரத்தில் வெளிவந்துள்ளது.



இந்த சூழ்நிலையில் எனக்கு உதவ அவர் கூறிய "அண்ணா நான் இருக்கேன்" என்ற வார்த்தைகளுக்கான வெகுமதி இறைவன் அவருக்கு கொடுத்து விட்டதாகவே நான் எண்ணுகிறேன். எங்கோ ஒரு மூலையில் சொக்கம்புதூரில் மயானத்தில் இருக்கும் வைரமணி இன்று அமெரிக்க மக்கள் முதல் ஒவ்வொரு தமிழரின் மனதிலும் நிச்சயம் இடம் பிடித்திருப்பார் என்று திருப்தியும் எனக்கு ஏற்படுகிறது. இவரை போன்றவர்களை தாழ்த்தப்பட்டவர்களாக எல்லோரும் எண்ணும் நிலையில் வைரமணி மிக உயரிய இடத்தை அடைந்து விட்டார். இவரை பற்றி படிக்கும் எல்லோருக்கும் நிச்சயம் பெண்கள் மீதான மதிப்பு மேலும் கூடும், இதை எல்லோரும் படிக்க வேண்டும் என்று நான் கட்டாயப் படுத்தவில்லை
ஆனால் படித்து பாருங்கள். இவரை போன்றவர்களை பற்றி தெரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

நன்றி
~மகேந்திரன்

Sunday, November 10, 2013

காப்பகத்தில் இருந்த முத்துராஜ் உறவினர்களை கண்டுபிடிக்கப்பட்டது~ ஈரநெஞ்சம்


''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(230/10/11/13)

முத்துராஜ் வயது 32 கோவை குனியமுத்தூர் காவல் துறையினரால் கடந்த 3/11/13 அன்று கோவை மாநகராட்சி காப்பகத்தில் மனநிலை சரி இல்லாத நிலையில் சேர்க்கப்பட்டார் . காப்பகத்திற்கு வந்த முத்துராஜ் மனநிலை சரி நிலையால் அங்கு இருப்போர்களை தொடர்ந்து துன்புறுத்தி வந்தார் , இதனால் அவர் யார் என்ன விபரம் எதனால் இப்படி வந்தார் என்ற நிலை அறியாததால் , ஈரநெஞ்சம் அமைப்பினரை கோவை மாநகராட்சி காப்பகத்தினர் தொடர்பு கொண்டு முத்துராஜ் பற்றி தெரிவித்தனர். மேலும் அவரது குடும்பத்தினரை தேடி கண்டுபிடிக்குமாறு கேட்டு கொண்டனர். ஈரநெஞ்சம் அமைப்பினர் முத்துராஜ் நேரில் கண்டு நீண்ட நேரம் அவரிடம் பேசி விசாரித்த போது அவரிடம் இருந்து இவர் பெயர் முத்துராஜ், தந்தை பெயர் ஐயப்பன், மனைவி பெயர் சிந்து மோல், மகன் சிவா மாமா சந்தோஷ், முகவரி என. நடுதுருத்தி பள்ளம், கல்லார் போஸ்ட், வட்டையார் பகுதி, மூணார் , தேவிகுளம், இடுக்கி மாவட்டம், என்ற விபரம் திரட்டப்பட்டது, அதை வைத்துக்கொண்டு கடந்த 7 தேதி ஈரநெஞ்சம் முகநூல் போன்ற சமூக வலைதளங்களிலும் தகவலை வெளியிட்டு முத்துராஜின் உறவினரை தேடும் முயற்சியில் இறங்கியது. https://www.facebook.com/photo.php?fbid=486144431482978&set=a.249582201805870.51248.199260110171413&type=1&theater

அதனை தொடர்ந்து நேற்று 9/11/13 அன்று கேரளா மாவட்டம் வட்டையார் பகுதி காவல்துறையினர் மூலம் முத்துராஜ் அவரின் சகேதரர் சசுதர்சனன் தொடர்பு கிடைக்கப்பட்டு அவரிடம் முத்துராஜ் பற்றி விபரம் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் வரவழைக்கப்பட்டார். தனது அண்ணன் இருப்பதை அறிந்த மகிழ்ச்சியில் விரைந்த சுதர்சனனிடம் மனநிலை பாதித்த முத்துராஜ் ஈரநெஞ்சம் அமைப்பால் ஒப்படைக்கப்பட்டார்.



இதை பற்றி முத்துராஜ் அவர்களின் சகோதரர் சுதர்சனன் கூறும் போது.http://youtu.be/BtykhsfHQZM இவர் தனது அண்ணன் என்றும் கடந்த ஒருமாதகாலமாக அவருக்கு மனநிலை சரி இல்லாமல் போனதாகவும் அதற்காக மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்ததாகவும் , கடந்த 1 /11/13 அன்று திடீர் என்று வட்டையார் பகுதியில் அவரது மாமனார் வீட்டில் இருந்தபடி காணாமல் போனதாகவும் கூறினார் , இவரை காணாமல் வீட்டார் அனைவரும் பல இடங்களில் தேடி வந்ததாகவும், ஈரநெஞ்சம் அமைப்பினர் மூலம் தற்போது கிடைக்கப்பட்டார். , இவரை அழைத்து சென்று தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்போவதாகவும் கூறினார். மேலும் தனது சகோதரரை மீட்டு கொடுத்ததற்கு ஈரநெஞ்சம் அமைப்பிற்கு , கோவை மாநகராட்சி காப்பகத்திற்கும் பெரும் நன்றி தெரிவித்து கொண்டார் .

மீண்டும் ஒரு உறவை தேடி தந்த மகிழ்ச்சியோடு விடை பெற்று கொண்டது ஈரநெஞ்சம்.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Mr. Muthuraj, Age 32, was admitted in Coimbatore corporation home with mentally disordered condition by Kuniyamuthur police on 3-11-2013, Due to mentally disordered stage he torturing the all the people in home. Home management didnt know about him and so they informed to Eeranenjam trust to find the details about him. Also they requested hm to find his family. After a long time inquiry of Eeraenjam with him, they knew the details that his father's name is Mr. Iyyappan, wife Mrs. Sinthu mol, Son Siva and his uncle Mr. Santhosh and his address is Naduthuruthi pallam, Kallar post, Vattaiyaar, Moonaar, Devi kulam, Idukki districrt. With these details Eeranenjam tried to find his family using internet webpages such as facebook.

Further to their effort, Eeranenjam found his brother Mr. Sutharsanan with the help of Vattaiyaar police and Eeranenjam informed the details about Muthuraj with his brother Sutharsanan. Immediately he came and felt very happy when he saw his brother. Eeranenjam handed over Mr. Muthuraj to his brother.

When Mr. sutharsanan told about his brother, He was mentally disordered for a month and he was taking treatment for the same. Unexpectedly he was missed from his Uncle's home on 1-11-2013 from Vattaiyaru. They searched him in so many places and they got him by Eeranenjam trust. He assured that he will give the treatment to his brother. He told thanks to Eeranenjam to found his brother. Eeranenjam also felt very happy to joined one more person with his family.

Thanks,
Eeranenjam.