Showing posts with label மரணம். Show all posts
Showing posts with label மரணம். Show all posts

Wednesday, September 07, 2016

ஒரு மலரின் வாழ்க்கை ஒருநாள் தான் என்றாலும் மணம் வீசி மகிழ்விக்கிறது

ஒரு மலரின் பயணம்  :
~~~~~~~~~~~~~~~~
ஒரு மலரின் வாழ்க்கை ஒருநாள் தான் என்றாலும் மணம் வீசி மகிழ்விக்கிறது .
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


இறக்கும் நேரம் தெரிந்து விட்டால்
வாழும் காலம் முழுவதும்
நரகம் ஆகிவிடும் ...
அதனால்தான் இறக்கும் நேரத்தை
இறைவன் மறைத்து வைத்தான்.

பிறக்கும் அனைத்து உயிர்களுக்கும் மரணம் என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று தான் . ஆனால் அந்த மரணம் எந்த ரூபத்தில் எப்போது வரும் என்று யார் அறிவார் ?

ஆனால் இங்கே ஒரு தேவதை தான் ஜனிக்கும் முன்பே இறக்கும் தேதியை குறித்து வைத்துக் கொண்டு ஜனித்தவள். ஆயினும் தான்
வாழும் நாட்களில் கலைக்காக தன்னை அர்பணித்துக் கொண்டு தான் வாழும் ஒவ்வொரு நாளினையும் கொண்டாடிக்கொண்டு இருக்கிறாள் .

கடலூர் மாவட்டம், சாவடி பகுதியை சேர்ந்த தம்பதியர் அமிர்தராஜ், ஜீவா. இவர்களது ஒரே மகள் ஏ.ஜே. ஏஞ்சலின் செரில், வயது 15. தந்தை அமிர்தராஜ் தனியார் ஊழியர். தாய் ஜீவா தனியார் பள்ளி ஆசிரியை.  இவர்கள் தங்கள் முதல் பெண்  குழந்தையை  ‘பெயர்’ தெரியாத ஒரு கொடூர நோயால் ஒரு வயதிலேயே பறிகொடுத்தார்கள் . அந்த குழந்தையின் இறப்பில் மருத்துவர்கள்  கொடுத்த மற்றொரு அதிர்ச்சியூட்டும் தகவல் , அடுத்ததும் பெண் குழந்தையே  பிறந்தால் இதே நோய் தாக்கும் என்பது தான் .

அமிர்தராஜ்  ஜீவா தம்பதியர்கள் மருத்துவர்கள் அறிவுறுத்தியதை மனதில் கொண்டு பயத்துடனே வாழ்ந்து வந்தார்கள் .  10 வருடம்  கழித்து  ஜீவா கருவுற்று 90 நாட்கள் கழித்து ஒரு பரிசோதனையில் கரு பெண் குழந்தை என்றும் அவளுக்கும் இதே கொடிய நோய் இருப்பதும்  மருத்துவர்கள் உறுதி படுத்தினர். மேலும் ஆறுதலாக  மருத்துவர்கள்  தற்போது தமிழகத்தில் வேலூரில் உள்ள CMC மருத்துவமனையிலும், சென்னை ராமசந்திரா மருத்துவமனையிலும் மட்டுமே  மருத்துவர்களும் சிகிச்சையும்  உள்ளது என்றனர். மேலும் இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் மருந்து மாத்திரை எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்  . இடையில் நிறுத்தக் கூடாது. அதுவும் உயிர் பிழைக்க  அல்ல மரண தேதியை தள்ளி போட மட்டுமே  என்றனர்.   குழந்தையின் மீது உள்ள ஆசையிலும் கடவுள் மீது உள்ள நம்பிக்கையிலும் கருக்கலைப்பு செய்யாமல் குழந்தை பெற்றனர்.

  இந்த நோயில், நான்கு வகை உள்ளது. ( இதிலும் அரிய வகை பாதிப்புதான் ஏஞ்சலின் செரிலுக்கு உள்ளது )  . இந்த நோய் இருந்தால், ரத்தத்தில் உள்ள உப்பு தன்மை சிறுநீரில் வெளியேறி விடும். சிறுநீரில் வெளியேறாமல் இருக்கவே, மாத்திரை சாப்பிட்டு வரவேண்டும். உடலில் ரத்தத்திலுள்ள வெள்ளை அணுவும் குறைவாக இருக்கும். மாத்திரை நிறுத்தி  விட்டால் ரத்தத்திலுள்ள வெள்ளை அணு குறைவாக இருக்கும் காரணத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்  , அதனால் வெளியிலிருந்து தாக்கும் நோய் பாதிப்பும் அதிகமாக இருக்கும். ஒரு கட்டத்தில், நீர்த்தன்மை முழுமையாக போய், வாந்தி பேதி ஏற்பட்டு  உயிழப்பு ஏற்படும் .  இந்த நோய் வந்து விட்டால் பூரண குணமடைய முடியாது மரணத்தை தள்ளி போடமட்டுமே தற்பொழுதுள்ள   சிகிச்சையில் முடியும்.

அமிர்தராஜ் மற்றும்  ஜீவா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டதால் அவர்களது பெற்றோர் வீட்டில் ஆதரவு இல்லை . மேலும்  போதிய வசதி படைத்தவர்கள் இல்லை என்றாலும் இருவரும் ஏஞ்சலின் செரில் பிறந்தநாள் முதல் தங்களது உழைப்பில்  பெரும் தொகையை தனது குழந்தைக்காக செலவிட்டு கவனித்து வருகிறார்கள் . அவளுக்கென்று எது விருப்பமோ அதில் இவர்களும் கவனத்தை செலுத்தி அவளுக்கு விருப்பமானது அனைத்தும் செய்து கொடுத்து வருகின்றனர்.

தற்பொழுது ஏஞ்சலின் செரில் வயது 15  ,  அவள் விருப்பப்படி பரத நாட்டியம், மேற்கத்திய நடனம், கிராமிய நடனம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, சிலம்பம் என கலைகள் பலவும் கற்றுக் கொண்டு பல மேடைகளை அலங்கரித்து வருகிறாள் .

கடலூர் செயிண்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி பள்ளியில் 11ம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறாள். படிப்பில் எப்போதுமே முதல் மாணவி தான். 

 

சமீபத்தில் IAS சகாயம் அவர்கள் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில்  ஏஞ்சலின் செரிலுடைய நடன நிகழ்ச்சி நடைபெற்றது . அதைப் பார்த்து சகாயம் அவர்கள் ஏஞ்சலின் செரில் பற்றியும் அவளது நடனத்தைப் பற்றியும் புகழ்ந்து இனி வரப்போகும் காலங்களில் எங்களது குழுவின் நிகழ்ச்சிகள் யாவிற்கும் ஏஞ்சலின் செரிலின் நடனம் கண்டிப்பாக இருக்கும் என்று  கூறியதும் ஏஞ்சலின் செரில் பெரும் உற்சாகம் அடைந்துள்ளாள்.

அது மட்டும் இல்லாமல் வைகை நண்பர்கள் உதவியால் மலேசியாவில் உள்ள தமிழ்  கலை சங்கம்  ஒன்றில்   ஏஞ்சலின் செரில் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடும் செய்து வருகிறது.

 

இந்தியாவில் டெல்லி மும்பை போன்ற நகரங்களில்  நடந்த கலை நிகழ்ச்சிகளுக்கு  இவளது நடனம்  சிறப்பு அந்தஸ்த்தை கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை .

எல்லாவற்றுக்கும் மேலாக கடலூரில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து அசத்தி வருகிறாள்.

 

மருத்துவ ரீதியான பல கஷ்டங்கள் தனக்கிருந்தும்  மரணத்தின் தேதி தெரிந்தும் அவற்றையெல்லாம் வென்று எப்போதும் சிரித்த முகத்துடனும் மற்றவர்களை உற்சாகமூட்டும்  வார்த்தை ஜாலங்களை கொண்டும்  கலகலவென சுற்றித்திரியும் இந்த தேவதையிடம் நாம்  கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம்.

ஏஞ்சலின் கூறும் போது, 
" வாழ்க்கை இவ்வளவுதான் தெரியும். நானும் வாழ்ந்து என்  கலையால் மற்றவர்களையும் மகிழ்வித்து பார்க்கலாம். நடனம் என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும் .  டாக்டர்கள் என்னை யோகா கத்துக்க  சொன்னாங்க , அதில்  எனக்கு அவ்வளவா ஆர்வம் இல்லை . நடனம் கத்துக்க  ஆசைப்பட்டேன் , அம்மா அப்பா அதற்கு முறையான குருக்களை கொண்டு எனக்கு கற்றுக் கொடுக்க ஏற்பாடும் செய்து கொடுத்தார்கள் . இப்போ நிறைய மேடைகளில் என்னுடைய நடன நிகழ்ச்சி நடந்து வருகிறது. என்னுடைய நடனத்தை பார்த்து என்னை பிறர் உற்சாகப்படுத்துவது  எனக்கும் என் பெற்றோருக்கும் மேலும் சந்தோஷத்தைக் கொடுக்கிறது . நான் இருக்கும் வரைக்கும் அவங்களை கண் கலங்காம பார்த்துக் கொள்ளணும் என்று ஆசை படறேன் . என்னுடைய மருத்துவ செலவிற்கே ஏகப்பட்ட கடன் வாங்கி இருக்காங்க அது கொஞ்சம் வருத்தமாக இருக்கு . நான் அழும் போதும் வலியால் துடிக்கும் போதும் என்னுடைய அம்மா அப்பா வருத்தப்படுவதை பார்ப்பது தான் என் மற்ற வலிகளை விட பெரும்  வலியாக  இருக்கும் . என்னுடைய வளர்ச்சியில்  மட்டுமே அவங்க பெரும் சந்தோஷப்படறாங்க . 

எனக்கு  என் வாழ்நாளில் ஒருமுறையாவது ராகவா லாரன்ஸ் மாஸ்டர் கூட சேர்ந்து டான்ஸ் பண்ணனும்னு ஒரு ஆசை இருக்கு . என் ஆசையை பற்றி அவருக்கு மெயில் கூட அனுப்பியிருக்கேன் .

( ""Ragava Lawrence uncle,
    நான் "ஏஞ்சல்" கடலூரில் இருந்து, கனவு காணுங்கள் என்ற கலாம் அவர்கள் கூறியதை போல் நான் கனவு காண்கிறேன் உங்களுடன் நடனமாட......
          Uncle நான் பரதம், கதக், கோலாட்டம், கும்மி, கிராமிய நடனம்,கரகம்,கோகாலி, பொய்க்கால் குதிரை,ஒயிலாட்டம் மற்றும் சிலம்பம் ஆடுவேன்.......
    உங்களுக்கு western பிடிககும் என்பதால் இப்போது அந்த வகுப்பிற்கும் போகிறேன் please uncle என் ஆசை கனவு எல்லாம் நீங்க தான்.
          என்னை பார்பீர்களா????"" ) 

இது தான் என்னுடைய மெயில்

 அவரிடம் போய் சேர்ந்ததான்னு தெரியல. இப்போது என்னைப் பற்றிய இந்த கட்டுரை மூலமாவது தெரிந்துக் கொண்டு என் ஆசையை நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன். "

ஏஞ்சலினின் அம்மா ஜீவா கூறும் போது , " எங்களுக்கு எல்லாமே அவள் தாங்க . இவள் எப்போது கண் மூடுவாள் என்பது தெரியாது . ஆனால் அது வெகு தொலைவில் இல்லை என்பதை நினைச்சா ரொம்பவே கஷ்டமா இருக்கு .  அவளுடைய சந்தோஷம் தான் எங்களுக்கு இப்போதிருக்கும் ஒரே ஆறுதல் . அவள் இவ்வளவு சிறப்பு வாய்ந்தவளா வருவாள் என்று நினைத்தும் கூட பார்க்கவில்லை. சில மருத்துவர்கள் இவள் இன்னும் உயிரோடு இருப்பதே ஆச்சர்யமாக இருக்கிறது என்பார்கள் . எல்லாம் கடவுளின் ஆசிர்வாதம்.  எங்களுக்கு நிறைய கடன் இருக்கிறது மாதத்திற்கு இவளுடைய மருத்துவ செலவே 10,000 தாண்டும் போதிய வருமானம் இல்லை என்றாலும் இவளுக்காக நாங்கள் இன்னும் எவ்வளவோ செய்யலாம். தமிழக அரசிடமும பிற தன்னார்வலர்களிடமிருந்தும்   இவளுக்கு என்று தனி சலுகைகளை எதிர்பார்க்கிறோம் .  அது  இவளுடைய கலை வளர்ச்சிக்கும் மன மகிழ்ச்சிக்கும் இன்னும் கொஞ்சம் ஊக்கமாக இருக்கும்  என்பது திண்ணம் " .

இந்த சின்னஞ்சிறு பெண் வாங்கியிருக்கும் பட்டங்களில் சில :-
நாட்டிய பேரொளி
நாட்டிய தேவதை 
நடன மயில்
நாட்டிய சுடர்மணி
பெஸ்ட் சைல்ட்
கிராமத்து மயில்
வளர் இளம் மணி
Inline image 1
இந்த தேவதையை நீங்களும் ஊக்கப்படுத்த எண்ணினால் தொடர்பு கொள்ளுங்கள் 9092142475 ஜீவா ( நாட்டிய தேவதை ஏ.ஜே. ஏஞ்சலின் செரில் அவருடைய தாயார் )

~ஈரநெஞ்சம்

Sunday, October 18, 2015

மரணவாசல்


வாழ்வெனும் புத்தகத்தில் 
கடைசி பக்கத்தில் கொட்டை எழுத்தில் 
மிகப்பெரியதாக முற்றுப்புள்ளி  
வைத்து அதற்கு  
" மரணம் " 
என்று அர்த்தம் கொடுத்திருக்கிறது.

ஏனோ அத்தருணம் வரும் வரை 
பலருக்கு அது தெரிவதில்லை 

சிலர் படிக்கும் பொழுதே  
அர்த்தங்கள் புரியாமல் 
கடைசிப் பக்கம் புரட்டி  
முற்றுப்புள்ளியை 
தொட்டு விடுகிறார்கள்.

சிலருக்கு புத்தகம் 
80 பக்கம் கொண்ட சிறு புத்தகம் போல 
இருக்கிறது .

சிலருக்கு 
வெற்றுத்தாளில் முற்றுப்புள்ளி மட்டும் 
இருக்கிறது.

சிலருக்கு பள்ளி குழந்தைகள் சுமக்கும் 
பொதி மூட்டை போல 
புத்தகம் இருக்கிறது.

சிலருக்கு யாரோ படிக்கும் புத்தகம் 
கை மாறி யாரோ படித்துக் கொண்டு 
இருக்கிறார்கள் .

சரி அதென்ன முற்றுப்புள்ளி?

முற்றுப் புள்ளி என்பதுதான் 
மரணம் என்று சொன்னேனே.

அது கண்ணில் 
படும் பொழுது உணர்த்தப்படுகிறோம் 
புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த வரிகளை  
எழுத்துப் பிழையாய் படித்த 
தவறுகளை.

வாழ்க்கை பக்கங்களை 
பிழை இல்லாமல் படித்தவர் 
என்றும் முற்றுப்புள்ளி 
அடித்து திருத்தப்பட்டது என்றும் 
யாருக்கும் இல்லை 

வாழ்க்கை பக்கங்களை 
கிழித்து விட்டான் என்று 
எவனுக்கும் 
உடனடியாக முற்றுப்புள்ளியை 
கொடுத்ததும்  இல்லை .

புரியவில்லையா..?

வாழ்க்கையை வென்றவன் என்று சொன்னவரையும்  மரணம் விட்டு வைத்தது இல்லை 

பிறர் வாழ்கையை கொன்றவரையும்  மரணம் விட்டு வைத்தது இல்லை .

நல்லவன் கெட்டவன் 
என எவனையும் 
மன்னித்து விட்டு வைப்பது  இல்லை 
மரணம்.

என்ன ..?
நல்லது செய்தும் பயன் இல்லை 
என்றால் 
மரணம் என்பது என்னவாக இருக்கும்?

ஞானிகளும் மேதைகளும் 
மரணத்தை பற்றி விளக்கினாலும் 
" மரணத்திற்கு  பின்? " 
என்ற கேள்வி கேட்டுக் கொண்டே  
தான் இருக்கிறது மனம் .

மரணம் எவனையும் விட்டு வைக்காது என்றால் 
வாழ்க்கை படித்ததற்கு என்னதான் அர்த்தம் இருக்கும்?

படித்தவனும் தேறவில்லை 
படிக்காதவனும் தேறவில்லை 
தேர்வு மட்டும் உறுதி அதில் தோல்வி மட்டும் முடிவாக..
என்ன இது தேர்ச்சி இல்லாத 
பரீட்சை எழுதியே ஆகவேண்டுமா ?

இல்லை... 
இந்த தேர்வில் 
தேரியவரையும் மரணம் அழைத்து செல்கிறது 
தேராதவரையும் மரணம் அழைத்து செல்கிறது 

அப்படி எங்கே அழைத்து செல்கிறது 
சென்றவனை பார்த்தால் கேட்டுவிடலாம்..
எங்கிருந்து வந்தோம் என்ற கேள்விக்கே இன்னும் பதில் 
தெரியவில்லையே ...

ஒன்று மட்டும் புரிகிறது 
மரணம் என்பது 
ஒரு இடத்திற்கு செல்லும் வாசலாகத்தான் இருக்கும். 
அதற்காகத்தான் இந்த தேர்வு போல...

அந்த வாசலை அனைவரும் கடந்துதான் 
போகவேண்டும் என்பது கட்டளையாக இருக்கிறது... 

இன்னொன்று விளங்குகிறது  

வாழும் நாளில் அர்த்தங்களோடு 
வாழ்ந்தவனுக்கு 
மரணவாசல் தலை வணங்கி வரவேற்று அழைத்து செல்கிறது  .

அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்ந்தவருக்கு 
மரணம் ஒரு தலை குனிவாக இருக்கிறது.

~மகி

Wednesday, April 02, 2014

அந்த நாளுக்காக எந்நாளும் தயாராக இரு



ஒரு நாள் வரும் 
அது உனக்காக வரும் 

அந்தநாளில் 
உன்னை எதிர் நோக்கியே அனைவரும் 
வருவார்கள்... 

உன் கூக்குரல் செவி கேளாதவர்களுக்கு
உன் மௌனம் செவியடைக்கும்

உன் மௌனத்தைப் பார்த்து
கதறினாலும்
உன்
செவிக்கு எட்டாது...

யார் அழுதாலும்
கண்ணீர் துடைக்கும் உன் கரங்கள்
உனக்காக அழும் போது
உன் கரம் நீளாது...

அன்று

குளிக்க மாட்டாய்
உன்னைக் குளிப்பாட்டுவார்கள்
உடை மாற்றம் செய்ய மாட்டாய்
உனக்கு உடை மாற்றுவார்கள்...

நீ
யாருக்காகவும் வேண்டமாட்டாய்
உன்னை வைத்தே எல்லோரும் வணங்குவார்கள்...

ஒவ்வொருவரின்
முற்றுப் புள்ளிகளுக்கும்
முகவரி தேடியவன்
உன்னுடைய புள்ளிக்கு
பேரம் நடக்கும்...

நீ
அழைத்துச் சென்றது போதும் என
உன்னை அழைத்துச் செல்ல
ஊரே வரும்...

ஊரே
வரும் அப்போதும் உன்னை
தனிமை படுத்திப் போகும்...

கோடிசொத்து
கோடிசொந்தம்...

தெரு கோடி
தெருவோடு...

இதில் எது உனதாக இருந்தாலும்
அந்த நாளில்
கோடி துணியும்
ஆறடியும்
நீண்ட உறக்கம் மட்டுமே
உனதென
உறுதிப்படுத்தும்...

அந்த நாளுக்காக எந்நாளும் தயாராக இரு...

#மகேந்திரன்

Monday, March 25, 2013

மனித நேயம் மலராதா இந்த சமூகத்தில் ?

மனிதனிடத்தில் அவசியம் இருக்கவேண்டிய பண்புகளில் மிக முக்கியமானப் பண்பு மனிதநேயம். மனிதநேயம் என்றால் மனிதன் மற்ற மனிதர்களை ஆடுமாடுகளைப் போன்று எண்ணாமல் மனிதர்களாக நடத்துவதாகும். இப்பண்பு இல்லாவிட்டால் மனிதன் மிருகத்தை விட மோசமான நிலையை அடைவதை அன்றாட வாழ்வில் அதிகம் அதிகமாக கண்டுவருகிறோம். அதுபோல் இன்று ஒரு துயர சம்பவம் என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியது.

"கோவையில் ஒரு கடை அருகே இருவர் குடி போதையில் கூச்சலோடு சட்டைய பிடித்து சண்டை போட்டு கொண்டு இருந்தனர். அங்கு ஏதோ சுவாரசியமான சம்பவம் நிகழ்வது போல அதை சுற்றி நின்று நூறு பேர் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர். அவர் இடும் சண்டை அந்த கடை சொந்தகாரர் மட்டும் விலக்க முயன்று கொண்டு இருந்தார், அவருக்கு வயது 60 இருக்கும், அந்த வழியே சென்ற நான் அங்கு கூட்டம் இருப்பதை கண்டு அங்கே சென்று நிலமை அறிந்து சண்டைய விலக்க சென்றேன். அவர்கள் மிகவும் வேகமாக முட்டிக்கொள்ள அருகில் நின்று இருந்த கடை சொந்தகாரர் மயங்கி விழுந்தார். விழுந்தவரை தூக்கி விட கூட வேடிக்கை பார்த்த யாரும் முன் வரவில்லை.

பிறகு நான் சண்டை போடுபவர்களை தள்ளி விட்டு,, கிழே விழுந்த முதியவரை நான் தோலில் சுமந்து சென்று அருகில் உள்ள மருத்துவ மனையில் சேர்த்தேன். அங்கு காத்திருந்தது ஒரு அதிர்ச்சியான தகவல், மறுத்தவர் பரிசோதித்ததில் அவர் இறந்துவிட்டார் என்று தெரியவந்தது. ஒரு அற்பமான சண்டைக்கு சமந்தமே இல்லாத ஒரு உயிர் பலியாவது மிகவும் வருந்ததக்கது. அங்கு வேடிக்கை பார்த்த ஒருவர் ஆரம்பத்திலேயே அந்த சண்டையை விலக்கி இருந்தால் ஒரு உயிர் இழப்பு ஏற்பட்டு இருக்குமா.. ??????

மனிதர்கள் இருக்கிறார்கள் ஆனால் மனிதநேயம் அழிந்துகொண்டு வருகிறது. நண்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் இது போன்ற சம்பப்வங்கள் நிகழ்ந்தால் தயவுசெய்து நிறுத்த முயற்சி செய்யுங்கள்..

~மகேந்திரன்

Sunday, March 17, 2013

ஈரநெஞ்சம் அமைப்பின் உதவி ~குட்டி அம்மாள்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]

கோவை உடையாம் பாளையம் பகுதியில் சுமார் 90 மூதாட்டி ஒருவர் நடக்க கூட முடியாமல் ஆதரவற்ற நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் ஈர நெஞ்சம் அமைப்பிற்கு அளித்தத் தகவலின் பேரில் 08/02/2013 அந்த மூதாட்டியைக் கோவை மாநகராட்சி காப்பகத்தில் ஈரநெஞ்சம் அமைப்பு சேர்த்து இருந்த தகவல் நாம் அனைவரும் அறிந்த ஒன்று.
அந்த மூதாட்டி 16/03/13 அன்று இறைவன் திருவடி அடைந்து விட்டார். அந்த தகவலை மாநகராட்சி காப்பகத்தினர் நமது அமைப்பிற்குத் தெரிவித்தும் அந்த மூதாட்டியின் இறுதிச் சடங்குகளை ஈர நெஞ்சம் பொறுப்பேற்று சொக்கம்புதூர் கோவை மாநகராட்சி மயானத்தில் நிறைவேற்றியது .
அந்த மூதாட்டி வாழ்ந்த உடையாம் பாளையம் மக்களும் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு அவரின் ஆன்மா சாந்தி அடையப் பிரார்த்தனை செய்தனர். அவர்களுக்கும்,
அந்த மூதாட்டியை நல்ல முறையில் பராமரித்து அவரது இறுதி காலத்தில் அன்போடு
பார்த்துக்கொண்ட கோவை மாநகராட்சி காப்பகத்துக்கும் ஈர நெஞ்சம் தனது மனமார்ந்த
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி (148/2013)
ஈர நெஞ்சம்

We all are aware that Eera Nenjam got a old lady, aged around 90 and could not even walk and orphaned in the area of Udayam Palayam, Coimbatore, admitted in the Coimbatore Corporation Home on 08/02/2013 as soon as the local people informed us. She passed away on 16/03/2013. As soon as the Corporation Home informed us, Eera Nenjam accepted the responsibility and performed the final rituals at the Chokkam Pudhoor, Coimbatore, Graveyard.
The people from Udayam Palayam where the old lady lived also participated in the last rituals and prayed for her sould rest in peace. Eera Nenjam appreciates them as well as the Coimbatore Corporation Home that took care of her at the last minute.
https://www.facebook.com/eeranenjam
~ Thanks (148/2013)
Eera Nenjam

Wednesday, October 05, 2011

மரணத்திற்கு பிறகு எதற்கு காதல்?

நீயும்
மருத்துவரை போல தான் 
வைதுயம்
பார்ப்பாய ?
மரணத்திற்கு
பிறகு எதற்கு காதல்..?

Friday, September 30, 2011

தெரிந்தும் தொடர்கிறேன்...

என்னை
ஏற்க்க மாட்டை
என்று தெரிந்தும்
தொடர்கிறேன்...
மரணம் வாழ்வினில் 

நிகழ்வது
சகஜம் தானே..!