Saturday, August 23, 2014

மனநலம் பாதித்த சிறுவன் மீட்பு ~ஈரநெஞ்சம்

ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM" Services.
*******************************************************************
(347 / 21-08-2014)

கோவை சரவணம்பட்டி பகுதியில் கடந்த 11-08-2014 இரவு 16 வயது S. சிவபாரத் என்ற சிறுவன் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித்திரிவதை பார்த்த கோவை B9 காவல் காவலர்கள் பரிந்துரைக்க அந்த சிறுவனை தொன்போஸ்கோ சிறுவர் காப்பகத்தில் சேர்த்தனர் . மேலும் சிவபாரத்திடம் இருந்து பெறப்பட்ட தகவலை கொண்டு அவனது பெற்றோரை தேடும் முயற்சியில் ஈரநெஞ்சம் அமைப்பு முயற்சித்து 18-08-2014 அன்று சிவபாரத்தின் தந்தை செந்தூர் பண்டி , தாயார் லலிதா இருவரையும் கண்டுபிடித்து கோவை உக்கடத்தில் உள்ள தொன்போஸ்கோ காப்பகத்தில் இருக்கும் சிவபாரத்திடம் அழைத்து சென்றபோது அவன் அங்கிருந்து அதற்கு முதல்நாள் காணாமல் போய்விட்டதாக தகவல் தெரிவித்தனர் .




https://www.facebook.com/eeranenjam/photos/a.249582201805870.51248.199260110171413/609563489141071/?type=1&theater

தங்கள் மகன் கிடைத்துவிட்டான் என்ற மகிழ்ச்சியில் வந்த சிவபாரத்தின் பெற்றோருக்கு அவன் மீண்டும் காணாமல் போனது தெரிந்து மிகுந்த வேதனை அடைந்தனர் . ஈரநெஞ்சம் அமைப்பினர் அவர்களுக்கு ஆறுதல் சொல்லி சிவபரத் காணாமல் போனதற்கு அமைப்பே பொறுப்பேற்றுக்கொண்டு சிவபாரத்தை கண்டுபிடித்து தருவதாக உறுதியளித்து அவர்களை அனுப்பிவைத்தனர்.

https://www.facebook.com/eeranenjam/photos/a.249582201805870.51248.199260110171413/612734938823926/?type=1&theater

  


அதனை தொடர்ந்து மீண்டும் ஈரநெஞ்சம் அமைப்பின் முயற்சியால் சிவபாரத் 21-08-2014 கண்டு பிடிக்கப்பட்டான். பின்னர் கோவை மாநகராட்சி காப்பகத்தில் பாதுகாப்பாக சேர்க்கப்பட்டான். உடனடியாக அவன் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் மகனை அழைத்துச் செல்ல உடனே வந்தனர். பெற்றோர்களை கண்டதும் சிவபாரத் ஓடி வந்து கட்டிக்கொண்டு முத்தமிட்ட காட்சி காண்பவர் விழிகளில் கண்ணீரை பெருக்கியது.
 



அவனது பெற்றோர் கூறும்போது தங்கள் மகனை பிரிந்து மிகவும் வேதனை அடைந்து வந்ததாகவும் , அவனைத் தேடி எங்கெல்லாமோ அலைந்ததாகவும் தெரிவித்தனர். ஈரநெஞ்சம் அமைப்பினர் தங்கள் மகன் கிடைத்து விட்டதாக தகவல் தெரிவித்த போது மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்ததாகவும் பின்னர் மீண்டும் மகனை காணவில்லை என்ற போது மிகவும் கவலை கொண்டதாகவும் தெரிவித்தனர். ஆனாலும் எல்லோருமே ஈரநெஞ்சம் அமைப்பினரின் முயற்சியில் கண்டிப்பாக உங்கள் மகன் கண்டிப்பாக கிடைத்து விடுவான் என்றும் இது போல் குடும்பத்தை விட்டு பிரிந்த பலரையும் ஈரநெஞ்சம் அமைப்பினர் குடும்பத்துடன் சேர்த்து வைத்துள்ளனர் என்று கூறியது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியதயது . அதேபோல ஈரநெஞ்சம் அமைப்பினர் தங்கள் மகனை மீட்டுக் கொடுத்து தங்கள் மனதிற்கு நிம்மதியை கொடுத்துள்ளனர் என்று கூறி கண்ணீர் மல்க ஈரநெஞ்சம் அமைப்பினருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

சிவபாரத் தனது பெற்றோருடன் சேர எடுத்துக்கொண்ட பெருமுயற்சியில் அமைப்புக்கு உதவிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் ஈரநெஞ்சம் அமைப்பு தனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது .
   




மீண்டும் ஒரு உறவை இணைத்து வைத்த மகிழ்ச்சியில் ஈரநெஞ்சம்.

~ ஈரநெஞ்சம்.