Friday, November 30, 2012

நாணயம் எங்கு தயாரிக்கிறாங்க தெரியுமா ?


நம்ம இந்திய ரூபாய் நோட்டுகள் நாசிக் நகரத்தில் அச்சிடப்படுகிறது என்பது உங்களுக்கு எப்போதோ தெரிஞ்சுருக்கலாம் ஆனா இப்போதான் எனக்கு தெரிஞ்சதுங்க,
ஆனால் இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியுமா?
உங்களுக்கு தெரியலைனா நான் சொல்கிறேன் , எனக்கு காசு தருவிங்களா ஹ ஹ ஹ அதெல்லாம் வேண்டாம் சொல்றேன் பரம ரகசியமாக யார்கிட்டயும் சொல்லிடாதிங்க.
டெல்லி, மும்பாய், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய ஊர்லதான் தயாரிக்கிறாங்கலாம்,
ஆனா எந்த நாணயம் எந்த ஊரில் தயாரிக்கப்படுகிறது என்பது அந்த
நாணயதிலேயே ஒரு குறிப்பிட்டு இருக்காங்க அது எங்கே என்று அதையும் சொல்றேன் நாணயங்களின் அடியில் தயாரிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும். அதனைப் பார்த்திருப்பீர்கள்.அத்துடன் ஒரு குறியும் இடம் பெற்றிருக்கும். அந்தக் குறியை வைத்து அந்த நாணயம் எந்த ஊரில் தயாரிக்கப்பட்டது என்பதை அறியமுடியும்.
நாணயத்தில் உள்ள ஆண்டுக்குக் கீழே ஒரு புள்ளி இருந்தால் அது டெல்லியிலும், டைமண்ட் வடிவம் இருந்தால் அது மும்பாயிலும், நட்சத்திர வடிவம் இருந்தால் அது ஹைதராபாத்திலும், எந்தக் குறியீடும் இல்லாமல் இருந்தால் அது கொல்கத்தாவிலும் தயாரிக்கப்பட்டது ஆகும்.
எவ்வளவு முக்கியமான விஷயத்தை சொல்லி இருக்கேன் ஏதாவது கொஞ்சம் போட்டு கொடுங்க.
~மகேந்திரன்
Photo: நம்ம இந்திய ரூபாய் நோட்டுகள் நாசிக் நகரத்தில் அச்சிடப்படுகிறது என்பது உங்களுக்கு எப்போதோ தெரிஞ்சுருக்கலாம் ஆனா இப்போதான் எனக்கு தெரிஞ்சதுங்க,
ஆனால் இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியுமா?
உங்களுக்கு தெரியலைனா நான் ச
ொல்றேன் எனக்கு காசு தருவிங்களா ஹ ஹ ஹ அதெல்லாம் வேண்டாம் சொல்றேன் பரம ரகசியமாக யார்கிட்டயும் சொல்லிடாதிங்க.
டெல்லி, மும்பாய், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய ஊர்லதான் தயாரிக்கிறாங்கலாம்,
ஆனா எந்த நாணயம் எந்த ஊரில் தயாரிக்கப்படுகிறது என்பது அந்த நாணயதிலேயே ஒரு குறிப்பிட்டு இருக்காங்க அது எங்கே என்று அதையும் சொல்றேன் நாணயங்களின் அடியில் தயாரிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும். அதனைப் பார்த்திருப்பீர்கள்.அத்துடன் ஒரு குறியும் இடம் பெற்றிருக்கும். அந்தக் குறியை வைத்து அந்த நாணயம் எந்த ஊரில் தயாரிக்கப்பட்டது என்பதை அறியமுடியும்.
நாணயத்தில் உள்ள ஆண்டுக்குக் கீழே ஒரு புள்ளி இருந்தால் அது டெல்லியிலும், டைமண்ட் வடிவம் இருந்தால் அது மும்பாயிலும், நட்சத்திர வடிவம் இருந்தால் அது ஹைதராபாத்திலும், எந்தக் குறியீடும் இல்லாமல் இருந்தால் அது கொல்கத்தாவிலும் தயாரிக்கப்பட்டது ஆகும்.
எவ்வளவு முக்கியமான விஷயத்தை சொல்லி இருக்கேன் ஏதாவது கொஞ்சம் போட்டு கொடுங்க.
~மகேந்திரன்

Wednesday, November 28, 2012

கம்போடியாவில் தமிழனின் படைப்பு~மகேந்திரன்

கம்போடியா நாடு எங்கு இருகின்றது என்று தெரியுமா ?
சத்தியமா எனக்கு தெரியாதுங்க.
ஆனால் அந்த நாட்டில் உள்ள ஒரு விஷயம் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் சந்தோசபடறேங்க...
என்னனு சொல்லவா...
அந்த நாட்டு தேசிய கோடியில் நம்ம தமிழன் கட்டிய கோவில்தான் பொறிக்கப்பட்டு உள்ளதுங்க.
என்ன அதிசயமா பாக்கறிங்களா..?
உண்மைதானுங்க...
கம்போடியா நாட்டில் நம் தமிழன் ஒருவன் கலை திறமையை உலகிற்கே காட்டி உள்ளார்.
அவர் பெயர் "சூர்யா வர்மன்" கம்போடிய மாகாணத்தில் ஒரு பகுதியை கைப்பற்றிய போது அதன் நினைவாக விஷ்ண

ு பகவானுக்கு கோவிலை கட்டினாராம்,
அந்த கோவில் தான் தற்போது கம்போடியா நாட்டின் தேசிய கோடியில் பொறிக்கப்பட்டு உள்ளது ,
அந்த கோவிலின் பெயர் "அங்கோர் வாட்"
இந்த கோவிலுக்கு இன்னொரு சிறப்பு இருக்குங்க,
உலகிலேயே அதிக பரப்பளவு கொண்ட கோவில் இதுதாங்க , சும்மா இல்லைங்க 402 ஏக்கர் பரப்பளவு நினைச்சே பாக்க முடியாது இல்லைங்களா...
நமக்கு "சூர்யா வர்மன்" என்று ஒருத்தர் இருந்தாரா என்றே சந்தேகமா இருக்குங்களா ?
உண்மைதாங்க.
தமிழன் தமிழன்தாங்க.
~மகேந்திரன்

Sunday, November 25, 2012

வழி என்னும் விழி... ~மகேந்திரன்


இவர் பெயர் R.விஜயகுமார் வயது 25 (9095599719) திருப்பூரை சேர்ந்தவர் இவருடைய அப்பா ராமன், அம்மா கண்ணம்மாள் இவங்க இரண்டுபேருமே கூலி வேலைக்கு போறாங்க, விஜயகுமாருக்கு ஒரு தங்கை ஒரு அக்கா தங்கை இறந்துட்டாங்க அக்காவிற்கு திருமணமாகி குன்னதூ
ர்ல இருக்காங்க , விஜயகுமாருக்கு நான்கு வயது இருக்கும் போது ஏற்ப்பட்ட உடல் நலம் குறைவில் பார்வை பறிபோனது, மருத்துவ பரிசோதனையில் விழிக்கு வரும் நரம்புகள் பாதிக்கப்பட்டதினால் மாற்று விழியும் பொறுத்த முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

"கைரேகை பார்த்து எதிர்காலத்தை தீர்மானிக்கும் வேளையில் கைகளே இல்லாதவனுக்கும் எதிர் காலம் உள்ளது என்பதற்கு ஏற்ப ."விழி இல்லை என்றாலும் வழி எனும் விழி உள்ளது" என்று கூறுகிறார் திரு விஜயகுமார் ,
ஆமாங்க இவருடைய அம்மா அப்பா கூலிவேலைக்கு போய் வரும் சம்பாதனையில் என்ன செய்ய முடியும் அதனாலேயே இவர் சிறு வயதில் இருந்தே பார்வை இல்லை என்றாலும் அதற்க்கு தகுந்த பாதையை பார்த்து சுயமாக பக்குவமாய் முன்னேறி தற்போது M.Phil பட்டப்படிப்பு கோவை அரசு கலை கல்லூரியில் படித்து வருகிறார் , சாலையோரமாக கீசெய்ன் , மொபையில் கவர், இது போன்ற பொருட்களை விற்று வரும் லாபத்தில் தற்போது படிப்பு செலவுக்கு ஈடுகட்டுகிறார். எல்லாம் இருக்கின்றவர்களே கடன ஒடன வங்கி பகட்டை காட்டும் இந்த காலத்தில் பார்வை இல்லை என்பதை பொருட்படுத்தாமல் சுயதொழில் செய்து முன்னேறிவரும் விஜயகுமாரை எவ்வளவு பாராட்டினாலும் போதாதுங்க நீங்க யாராவது அவரை சந்தித்தால் விஜயகுமாரிடம் பேரம் பேசாமல் பொருட்களை வாங்குங்க அது போதும்.

இவரை சந்தித்தபோது நான் இவரிடம் உங்களது லட்சியம் என்னங்கனு கேட்டேன் . அதற்க்கு அவர் சொன்னது "நான் நல்லா பாடுவேன் நிறைய பாட்டு போட்டியில் கலந்து பரிசு பெற்று இருக்கிறேன். நல்ல பாடகனாக வேண்டும் என்ற விருப்பம் உள்ளது" என்றாருங்க. விஜயகுமார் ஆசைப்படி ஒரு இசை குழுவில் சேர்ந்து மக்கள் மத்தியில் வளமும் பெயரும் வளர வேண்டும் என்று விஜயகுமாரது நன்னம்மிக்கையை உங்களோடு நானும் வாழ்த்தி தலை வணங்குகிறேன்.
நன்றி
~ மகேந்திரன்

உங்களுக்கு தெரியுமா ?~ மகேந்திரன்

உங்களுக்கு தெரிஞ்ச விஷயம்
மைனா படம் எடுத்தது "பிரபு சாலமன்"
இந்த மைனாவை படம் பிடித்தது "மகி" நான் தான்.

ஆனால்
உங்களுக்கு தெரியாத விஷயம் மைனாக்கள் பிறப்பிடம் "இந்தியா"

Photo: உங்களுக்கு தெரிஞ்ச  விஷயம்  
மைனா  படம் எடுத்தது "பிரபு சாலமன்"
இந்த  மைனாவை படம் பிடித்தது  "மகி" நான்  தான்.

ஆனால் 
உங்களுக்கு தெரியாத  விஷயம் மைனாக்கள் பிறப்பிடம் "இந்தியா"
~மகேந்திரன் 
உங்களுக்கு தெரியுமா ?
ஒருவர் ஆஸ்திரேலியா காட்டுக்குள் சென்று கொண்டிருந்தார் அப்பொழுது ஒரு வினோதமான விலங்கினை கண்டு அந்த காட்டில் இல்ல காட்டு வாசிகளிடம் இது என்ன விலங்கு என்று கேட்டாராம் அதற்க்கு அந்த காட்டுவாசி "கங்காரு" என்றாராம் . அதனை thodarnthu இந்த நாள்வரை அந்த வினோத விலங்கிற்கு கங்காரு என்றே பெயரிட்டு அழைத்து வருகின்றோம்.
உண்மையில் கங்காரு என்றால் "தெரியாது" என்று அர்த்தமுங்க.

Photo: உங்களுக்கு  தெரியுமா ?
ஒருவர் ஆஸ்திரேலியா  காட்டுக்குள் சென்று கொண்டிருந்தார் அப்பொழுது  ஒரு வினோதமான   விலங்கினை  கண்டு அந்த காட்டில் இல்ல  காட்டு வாசிகளிடம் இது என்ன விலங்கு என்று கேட்டாராம் அதற்க்கு  அந்த  காட்டுவாசி  "கங்காரு" என்றாராம் . அதனை thodarnthu   இந்த நாள்வரை  அந்த வினோத விலங்கிற்கு கங்காரு என்றே பெயரிட்டு அழைத்து வருகின்றோம்.
உண்மையில் கங்காரு என்றால் "தெரியாது" என்று அர்த்தமுங்க. 
~மகேந்திரன் 
இணையதளம் பயன் படுத்தும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில உள்ளதுங்க.
இரண்டாம் இடம் அமெரிக்கா , முதல் இடத்தில சீனா. மிக விரைவில் நம்ம இந்தியா அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் வகிக்க உள்ளதாக ஒரு கருது கணிப்பு கூறியுள்ளது.
சூப்பர் இந்தியா.

Photo: இணையதளம்  பயன் படுத்தும்  நாடுகளில் இந்தியா   மூன்றாவது இடத்தில உள்ளதுங்க.  
இரண்டாம்  இடம் அமெரிக்கா  , முதல் இடத்தில  சீனா.  மிக  விரைவில் நம்ம  இந்தியா  அமெரிக்காவை  பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் வகிக்க உள்ளதாக ஒரு கருது கணிப்பு கூறியுள்ளது. 
சூப்பர் இந்தியா.
~மகேந்திரன்

Wednesday, November 21, 2012

ஈரநெஞ்சம் அமைப்பின் முயற்சி ~தீரத்சிங்

''ஈர நெஞ்சம் சேவைகள்'' / ''EERA NENJAM Services''

******
[For English version, please scroll down]


கோவை ரத்தினபுரி புது பாலம் பகுதியில், 17.11.2012 அன்று, உடல்நலம் சரியில்லாத நிலையில் ஒருவர் உடலில் சிறுநீரகப்பை (சிறுநீரகம் சேமிக்கும் பை) உடன் மிகவும் பரிதாபமான நிலையில் இருப்பதாகவும், அவருடன் மனைவியும் கடும் குளிரில் அவதிப்பட்டு கொண்டு இருப்பதாகவும் சிலர் ''ஈர நெஞ்சம்'' அமைப்பை அணுகி அவர்களுக்கு தக
ுந்த உதவி செய்ய கேட்டுக்கொண்டனர்.

உடனடியாக ''ஈர நெஞ்சம்'' அமைப்பினர், அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது, பொதுமக்கள் சொன்னதுபோல, திரு.தீரத்சிங் (வயது 55), உடலில் சிறுநீரகப்பை இருந்தது. மற்றும் அவரது மனைவி லட்சுமி அவருடன் இருந்தார். அவரிடம் விபரம் கேட்டபோது "தனது கணவர் தீரத்சிங். அவருக்கு இரண்டு சிறுநீரகமும் பழுதடைந்து விட்டது. முடிந்தவரை சிகிச்சை கொடுத்துள்ளோம். மருத்துவமனையில் சிகிச்சை இவ்வளவுதான்.ஆகையால், தீரத்சிங் அவரை டிச்சார்ஜ் செய்கிறோம் என்று கூறி எங்களை டிஸ்சார்ஜ் செய்து வெளியேற்றிவிட்டனர். ஆனால், இவருக்கு கொஞ்சம் கூட முன்னேற்றம் இல்லை. எங்களுக்கு, வீடு வாசல் ஏதும் இல்லை. ஆகவே, இரவு முழுவதும் கொட்டும் பனியில் இங்கேயே தங்கிவிட்டோம். பனியில் இருந்ததால், இன்று காலை எனது கணவருக்கு மேலும் உடல்நலம் பாதித்து வருகிறது என்ன செய்வது என்று தெரியவில்லை" என்றார். இதற்க்கு இடையில், தீரத்திங் அவரை ''அன்பு மலர்'' காப்பகத்தில் சேர்க்க ''ஈர நெஞ்சம்'' அமைப்பினர் முயற்சி செய்தனர். ஆனால், தீரத்சிங் சிறுநீரகப்பையுடன் இருப்பதால், காப்பகத்தில் கொஞ்சம் தயக்கம் காட்டினர்.மேலும், இரவு முழுவதும், பனியில் இருந்ததால், அவரது உடல் மோசமாக இருந்தது. அதனை கருத்தில் கொண்டு அவரை மீண்டும் அரசு மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று RMO டாக்டர். P.சிவப்ரகாசம் அவரை வேண்டி கேட்டுக்கொண்டு, அவரது அனுமதியோடு ஈரநெஞ்சம் அரசு மருத்துவ மனையில் தீரத்சிங்கை சேர்த்தது. தற்சமையம் தீரத்சிங் நல்ல முறையில் அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதற்காக மருத்துவர் RMO P.சிவப்ரகாசம் அவர்களுக்கு "ஈர நெஞ்சம்" நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது .

மேலும் தீரத்சிங், மற்றும் அவரது மனைவி லட்சுமி அவர்களின் பரிதாபமான நிலையை பார்த்த கோவை ரத்தினபுரி புது பாலம் பொதுமக்கள் அனைவரும், அந்த தம்பதியினருக்கு கோவை அரசு மருத்துவமனை RMO, P.சிவப்ரகாசம் மற்றும் "ஈர நெஞ்சம்" அமைப்பினர் முன்னிலையில் நன்கொடையாக Rs. 3,400 வழங்கினர். இதனை பெற்றுக்கொண்ட திருமதி.லட்சுமி அவர்கள், அரசு மருத்துவமனை RMO . P.சிவப்ரகாசம் அவருக்கும், ''ஈர நெஞ்சம்'' அமைப்பிற்கும் மற்றும் பொதுமக்களுக்கும் மனதார நன்றியினை தெரிவித்துக்கொண்டார். தீரத்சிங் உடல்நலம் விரைவில் குணமடைய உங்களோடு சேர்ந்து ஈரநெஞ்சம் இறைவனை பிரார்த்திக்கிறது. இந்த தகவல்களை, வெவ்வேறு நாளிதழ்களில் வந்துள்ளது. அவைகள் உங்கள் பார்வைக்கு.
நன்றி
ஈரநெஞ்சம் /(111/2012)



https://www.facebook.com/eeranenjam
......

''EERA NENJAM'' organization received a call from public that there was a person with Kidney bag and lying down on the streets of Puthuppalam, Rathinapuri area, Coimbatore on 17.11.2012 and asked us to help him. He and his wife were also struggling in cold. When we visited the place, Mr Theerathsingh (Age: 55) was having kidney-bag on his body and his wife informed us that his two kidneys have been spoiled and hospital authorities discharged him as it would be difficult to cure his case. She continued that there were homeless and as no one for them to take care and had been struggling. Our organization was thinking of admitting him at ''Anbu Malar'' Home, Coimbatore but due to his body and health condition, they were hesitating to admit him and hence we requested the RMO Dr.Sivaprakasam of Coimbatore Government Hospital, Coimbatore, to help him to get admitted back. He generously agreed and as of now he is getting the treatment at the hospital.

By looking at his condition, public from Rathinapuri area have generously donated Rs.3,400 (Rupees three thousand four hundred only) to her in presence of RMO, Dr. Sivaprakasam and EERA NENJAM Organization. She thanked the doctor, public and our organization for the timely help. This information was published in many daily newspapers and their clipping are attached herewith for your reference.
~Thanks
EERA NENJAM / (111/2012)


Monday, November 05, 2012

ஈரநெஞ்சம் நூறாவது சேவை...

"ஈர நெஞ்சம் உதவி" /"EERA NRNJAM Help"
******
[For English version, please scroll down]
கோவை பிரபஞ்ச அமைதி சேவை ஆசிரமத்தில் "ஈர நெஞ்சம்" அமைப்பின் மூலம் சேர்க்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகள், பவித்ரா, ரஞ்சித், பூபதி, சிவப்ரகாஷ், தாரிணி என்ற பிள்ளைகளுக்கும் மற்றும் ஆத்மிகா, முரளி என்னும் சிறுவர்களுக்கும் வரப்போகும் தீபாவளிக்காக புதிய உடைகளை இன்று கோவையைச் சேர்ந்த நண்பர் திரு. முனியசாமி அவர்கள் "ஈர நெஞ்சம்" அமைப்பின் மூலமாக வழங்கி உள்ளார்.

சின்ன சிறு வயதில் பண்டிகையைப் புத்தாடை உடு
த்திக் கொண்டாட நினைக்கும் பிஞ்சு உள்ளங்களின் ஆசையை நிறைவேற்ற உதவிய அன்பு நண்பர் திரு.முனியசாமி அவர்களுக்கு ஈர நெஞ்சம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதோடு,அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி /(100/2012)
"ஈர நெஞ்சம்"
......
Mr. Muniyasamy of Coimbatore, has sponsored new clothes/dresses for the forthcoming auspicious day Deepavali through our organization to the unprivileged children, Pavithra, Ranjith, Boopathy, Sivaprakash, Dharani who were admitted into Universal Peace Foundation, Coimbatore with the help of our organization and Aathmika and Murali at the same home.
We thank Mr. Muniyasamy and his family wholeheartedly for this help and wish them a very happy Deepavali too.
~Thanks / (100/2012)
"EERA NENJAM"
Photo: "ஈர நெஞ்சம் உதவி" /"EERA NRNJAM Help" 
******
[For English version, please scroll down]
கோவை பிரபஞ்ச அமைதி சேவை ஆசிரமத்தில் "ஈர நெஞ்சம்" அமைப்பின் மூலம் சேர்க்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகள், பவித்ரா, ரஞ்சித், பூபதி, சிவப்ரகாஷ், தாரிணி என்ற பிள்ளைகளுக்கும் மற்றும் ஆத்மிகா, முரளி என்னும் சிறுவர்களுக்கும் வரப்போகும் தீபாவளிக்காக புதிய உடைகளை இன்று கோவையைச் சேர்ந்த நண்பர் திரு. முனியசாமி அவர்கள் "ஈர நெஞ்சம்" அமைப்பின் மூலமாக வழங்கி உள்ளார்.

சின்ன சிறு வயதில் பண்டிகையைப் புத்தாடை உடுத்திக் கொண்டாட நினைக்கும் பிஞ்சு உள்ளங்களின் ஆசையை நிறைவேற்ற உதவிய அன்பு நண்பர் திரு.முனியசாமி அவர்களுக்கு ஈர நெஞ்சம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதோடு,அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி /(100/2012)
"ஈர நெஞ்சம்"
......
Mr. Muniyasamy of Coimbatore, has sponsored new clothes/dresses for the forthcoming auspicious day Deepavali through our organization to the unprivileged children, Pavithra, Ranjith, Boopathy, Sivaprakash, Dharani who were admitted into Universal Peace Foundation, Coimbatore with the help of our organization and Aathmika and Murali at the same home. 
We thank Mr. Muniyasamy and his family wholeheartedly for this help and wish them a very happy Deepavali too. 
~Thanks / (100/2012)
"EERA NENJAM" 
 -----------------------------------------------------------------------------------------
இந்த பதிவோடு

"ஈர நெஞ்சம்" அமைப்பு ஆரம்பித்த இருநூறு நாட்களில், இரண்டு நாட்களுக்கு ஒரு நிகழ்வு என, நூறு நட்செயல்களை நடத்தி முடித்திருக்கிறோம். உங்களின் கருத்துக்களை eeranenjam@gmail.com என்ற மின்னஞ்சலுக்குத் தயவு செய்து அனுப்பி வைக்கவும்./We have accomplished one hundred activities in two hundred days which is an activity in every two days. Please send us your feedback to eeranenjam@gmail.com * "ஈர நெஞ்சம்" அமைப்பின் சேவைகள் / செயல்பாடுகள் பற்றிய உங்கள் கருத்து: / Your feedback on "EERA NENJAM Services.

https://www.facebook.com/questions/328763563887733/

 

Sunday, November 04, 2012

ரேக்காவின் மறுவாழ்வுக்கு ஈரநெஞ்சம்

"ஈர நெஞ்சம் சேவைகள்" / "EERA NENJAM Services"
......
[For English version, please scroll down]
திருச்சியைச் சேர்ந்த திருமதி. ரேகா (வயது: 26), காதலித்து மணந்த கணவனால் கைவிடப்பட்ட நிலையில், தனது ஒரு வயது ஆண் குழந்தையுடன் ஆதரவின்றி, ஸ்ரீ ரங்கம் கோவிலின் அருகில் மிகவும் கஷ்டப்பட்டு பிறரிடம் கை ஏந்தி வாழும் நிலையில் இருந்தார். அவரது நிலை கண்டு, மனம் இளகிய திருச்சி லால்குடியைச் சேர்ந்த திரு. ஞானசேகர், எங்கள் அமைப்பின் உதவியை நாடினார். அவரைப் பாதுகாப்பான இடத்தில் சேர்த்து வாழவைக்க வ
ேண்டுமென்ற நோக்கத்தில், கோவை பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில் 03.11.2012, அன்று தாயும் சேயும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

கணவனாலும், பெற்றோராலும், சகோதரனாலும் கைவிடப்பட்டு புகலிடம் இன்றித் தவித்தத் தனக்கு நல் ஆதரவு தந்த "ஈர நெஞ்சம்" அமைப்பிற்குத் தனது மனமார்ந்த நன்றியைத் திருமதி.ரேகா தெரிவித்துக் கொண்டார்.
https://www.facebook.com/eeranenjam
~ நன்றி /(99/2012)
"ஈர நெஞ்சம்"
......
Mrs. Rekha, (Age:26), abandoned by her husband and family, was found helpless with her one year old son near Srirangam temple. She is from Trichy and had a love marriage. Considering her situation, Mr. Gnanasekar of Lalgudi contacted our organization. We made arrangement to admit her and her son in the Universal Peace Foundation, Coimbatore on 03.11.2012.

Mrs. Rekha thanked us for our timely help.
~Thanks / (99/2012)
"EERA NENJAM"
Photo: "ஈர நெஞ்சம் சேவைகள்" / "EERA NENJAM Services"
......
[For English version, please scroll down]
திருச்சியைச் சேர்ந்த திருமதி. ரேகா (வயது: 26), காதலித்து மணந்த கணவனால் கைவிடப்பட்ட நிலையில், தனது ஒரு வயது ஆண் குழந்தையுடன் ஆதரவின்றி, ஸ்ரீ ரங்கம் கோவிலின் அருகில் மிகவும் கஷ்டப்பட்டு பிறரிடம் கை ஏந்தி வாழும் நிலையில் இருந்தார். அவரது நிலை கண்டு, மனம் இளகிய திருச்சி லால்குடியைச் சேர்ந்த திரு. ஞானசேகர், எங்கள் அமைப்பின் உதவியை நாடினார். அவரைப் பாதுகாப்பான இடத்தில் சேர்த்து வாழவைக்க வேண்டுமென்ற நோக்கத்தில், கோவை பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில் 03.11.2012, அன்று தாயும் சேயும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

கணவனாலும், பெற்றோராலும், சகோதரனாலும் கைவிடப்பட்டு புகலிடம் இன்றித் தவித்தத் தனக்கு நல் ஆதரவு தந்த "ஈர நெஞ்சம்" அமைப்பிற்குத் தனது மனமார்ந்த நன்றியைத் திருமதி.ரேகா தெரிவித்துக் கொண்டார். 
https://www.facebook.com/eeranenjam
~ நன்றி /(99/2012)
"ஈர நெஞ்சம்"
......
Mrs. Rekha, (Age:26), abandoned by her husband and family, was found helpless with her one year old son near Srirangam temple. She is from Trichy and had a love marriage. Considering her situation, Mr. Gnanasekar of Lalgudi contacted our organization. We made arrangement to admit her and her son in the Universal Peace Foundation, Coimbatore on 03.11.2012. 

Mrs. Rekha thanked us for our timely help. 
~Thanks / (99/2012) 
"EERA NENJAM"