Tuesday, April 30, 2013

ஈரநெஞ்சம் முதலாம் ஆண்டு கொண்டாட்டம்...

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி (157/2013)

எந்த சுயநலமும் இல்லாமல் சமூக பொறுப்புணர்வோடு மனிநேயம் மிக்க நமது கடமைகளை செய்ய வேண்டும். அப்படி ஒரு எண்ணத்தோடு செயல்பட்டு வந்த நாங்கள் கடந்த ஆண்டு 23-4-2012 அன்று ஒரு அமைப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் துவங்கப் பட்டது தான் எங்கள் ஈரநெஞ்சம் அமைப்பு. முறையாக இது அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டு நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. உலகில் யாரும் தனியாய் இல்லை. உற்ற துணையாய் பராமரிக்க நாங்கள் இருக்கிறோம் என்று செயல்படுவதோடு வரும் காலங்களில் ஆதரவற்றோர் என்று யாரும் இல்லை உறவாய் நாங்கள் இருக்கிறோம் என்ற நிலையை உருவாக்குவது தான் எங்கள் நோக்கம்.

சாலையோரங்களில் ஆதரவின்றி இருக்கும் முதியோர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை, நோய் வாய்ப்பட்ட ஆதரவற்றவர்களை காப்பங்களிலும் மருத்துவமனைகளிலும் சேர்த்து பராமரித்தல், அவர்களில் யாரேனும் இறந்து விட்டால் அவர்களுக்கு இறுதி காரியங்கள் செய்தல், குடும்பத்தை விட்டு தவறுதலாக பிரிந்து விட்டவர்களை அவர்களது குடும்பத்தினருடன் சேர்த்து வைத்தல், ஆதரவற்றோர் காப்பகங்களில் இருந்து பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்குதல், மேலும் அவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்குதல் போன்ற உதவிகள், ரத்த தான முகாம் மற்றும் மரம் நடுதல் நிகழ்வுகள், இலவச கண் சிகிச்சை முகாம்கள் நடத்துதல், உடல் தான விழிப்புணர்வு முகாம்கள், வாரம் தோறும் காப்பங்களுக்கு உணவு வழங்குதல், மளிகை பொருட்கள் வழங்குதல், ஆதரவற்ற மகளிருக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி தொழில் வசதி செய்துகொடுத்தல், போன்ற பல்வேறு சேவைகளை இந்த ஓராண்டில் நிகழ்த்தி இருக்கிறோம்.

தற்போது 23-4-2013 அன்றுடன் எங்கள் ஈரநெஞ்சம் முதல் ஆண்டு வெற்றிகரமாக நிறைவடைந்ததை ஒட்டி பயனுள்ள ஒரு செயல் செய்ய வேண்டும் என முடிவு செய்தோம். எனவே கோவை R.S.புரத்தில் உள்ள மாநகராட்சி முதியோர் காப்பகத்தில் துப்புரவு பணி செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி 28/04/2013 அன்று அங்கே சுவர்களுக்கு வெள்ளை அடித்தல், கழிப்பறைகள் சுத்தம் செய்தல், மரம் நடுதல், அங்கே உள்ள முதியவர்களுக்கு முடி திருத்துதல், நகம் வெட்டுதல், நற்சுவை உணவு வழங்குதல் போன்ற செயல்பாடுகள் ஈரநெஞ்சம் உறுப்பினர்களால் செய்யப்பட்டது. உணவு வழங்க நண்பர்கள் நன்கொடை அளித்தனர் என்பதையும் நந்தியோடும் மகிழ்வோடும் தெரிவித்து கொள்கிறோம்.

மேலும் ஆதரவற்ற இரு பெண்களுக்கு சுயமாய் தொழில் செய்து நல்ல முறையில் வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தையல் எந்திரம் வழங்கப்பட்டது. காப்பகத்தில் உள்ள ஒரு சிறுவனுக்கு சிறுநீரக பிரச்சினைக்காக மருத்துவத்திற்கு பண உதவி செய்யப்பட்டது.

இதில் உறுப்பினர்கள் திரு. மகி மற்றும் உறுபினர்கள் திருமதி.சசிக்கலா, திரு. அன்பு, திரு.பரணி, திரு. அருண், திரு. தபசு ராஜ் திரு. ஜெகதீசன், திரு. கண்ணன், திருநங்கை. வைஷ்ணவி, திருநங்கை. பிரியா திருமதி.அஸ்மிதா, திருமதி.வசந்தா, செல்வி. சுதா ஆகியோர் கலந்து கொண்டனர். மற்றும் கோவை வலைப்பதிவாளர்கள் சங்கத்தை சேர்ந்த நண்பர்கள் கோவை சக்தி, கோவை சரளா, அகிலா, அனுசுயா ஆகியோரும் கலந்து கொண்டு பாராட்டினர்.

எங்கள் செயல்களுக்கு பல்வேறு வகையில் உதவிய நண்பர்களுக்கும், மாநகராட்சி காப்பகத்தில் துப்புரவு பணி செய்ய எங்களுக்கு அனுமதி அளித்த காவல்துறை ஆணையாளருக்கும், பத்திரிகை துறை நண்பர்களுக்கும், ஆதரவு தந்த காப்பக பணியாளர்களுக்கும், துப்புரவு பணிகளில் உதவி புரிந்த ஒரு சில துப்புரவு பணியாளர்களுக்கும், நன்கொடையாளர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

இந்த செயல்பாடுகள் அனைவருக்கும் விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் ஈரநெஞ்சம் அமைப்பின் நோக்கம் ஆகும். ஆதரவற்றவர்களுக்கு மனிநேயத்தோடு இது போன்ற உதவிகள் செய்வது நமது கடமை என்பதை அனைவரும் உணர வேண்டும். மேலும் முதியோர்களை கை விடாமல் பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் வர வேண்டும். மிக கஷ்டமான ஒரு சூழ்நிலையில் வாழ அவர்களை நாம் விட்டு விடக்கூடாது. அப்படி இருப்பவர்களுக்கு நாம் ஆதரவாக இருக்க வேண்டும்.

இது போன்ற செயல்களை பார்த்த பல நண்பர்கள் தாங்களே மனமுவந்து நாங்களும் உங்களோடு இணைந்து செயல்படுகிறோம் என்று சொன்ன போது எங்கள் அமைப்பின் நோக்கம் வெற்றி அடையும் என்ற நம்பிக்கை மேலும் உயர்ந்தது. மனித நேயத்தை வளர செய்ய முடியும் என்ற விதை முளைத்தது போல் மகிழ்வாய் இருந்தது. இந்த விழிப்புணர்வு தான் எங்கள் நோக்கம். சக மனிதனின் துன்பத்தை பார்க்கையில் உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றினாலே போதும். செயல் படுத்த வழி பிறந்து விடும்.

இன்னும் ஆண்டுகள் செல்ல செல்ல எங்கள் செயல் பாடுகள் குறைய வேண்டும் என்பதே எங்கள் மறைமுகமான நோக்கம். ஆதரவில்லாதவர்கள் என்று யாரும் இல்லை என்று ஆகி விட்டால் எதற்கு சேவை?
ஒவ்வொரு மனிதரும் தனால் இயன்றவரை பிறருக்கு உதவி செய்ய வேண்டும். தன்னை சேர்ந்தவர்களை பாதுகாக்க வேண்டும் என்று எண்ணினாலே இந்த லட்சியம் நிறைவடைந்து விட விடும்.



http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/eera-nenjam-celebrates-first-anniversary/article4668910.ece#

~நன்றி
The Hindu

Service to mankind with humanity and without selfishness formed the base on which the Eera Nenjam
trust was built. With this aim our trust was started on 23.4.2012. Eera Nenjam is a government
registered trust and is functioning effectively. No one is alone in this world, now and in the near future
since we are here to take care is our motto.

Eera Nenjam has involved itself in various activities for the past one year like taking care of the old
people who are found on roads, giving care to the mentally challenged, taking care of the diseased
and the desolate by giving them treatment in good hospitals, arranging funeral for the abandoned,
counseling those who have left their families due to various reasons and guiding them to go back to
their family, giving financial help to students who study from orphanages and also providing them with
their needs, blood donation camps, planting trees, free eye check up camps, camps on importance of
organ donation, providing food to old age homes and orphanages every week, providing groceries to
such homes, giving tailoring machines to desolate woman who find it hard to make their living and
many more.

Now since we have stepped in to our first yea, we decided that we should do something useful. Hence
we came up with the idea of doing service at the old age home at R.S Puram, Kovai. Painting the walls,
cleaning the rest rooms, planting of trees, grooming hair and nails of the old people and providing good
food were part of our activity on that day. We express our sincere gratitude with happiness to our
friends who provided funds for the food that was served.

Apart from these two destitute women were given tailoring machines with the aim of giving good life for
them. Fund was also provided for treating a boy who has problem in the kidney.

Members of the trust Mr. Magendran, Mr. Anbu, Mr. Barani, Mr. Arun, Mr. Thabasu Raj, Mr.
Jagadeesan, Mr. Kannan, Thirunangai. Vaishnavi, Thirunangai. Priya, Mrs. Ashmitha,Mrs.Sasikala Mrs. Vasantha, and
Ms. Sudha took part in these activities. Bloggers from Kovai Mr. Sakthi, Ms. Kovai Sarala, Ms. Akila, and
Ms. Anushiya also took part and appreciated the works of the trust.

Eera Nenjam takes this opportunity to express its sincere thanks to our dear friends who helped us
in various ways for our activities, the police officials who gave us permission to clean the corporation
maintained home for destitute, friends from the press, workers who supported us from the home, few
workers who helped us in the cleaning process and the people who provided the funds.

We believe that our activities will be an eye opener for others. Everyone should understand that doing
service to such destitute people is our responsibility. People should also know that forsaking old people
and leaving them to suffer in difficult living conditions is not humane. We should help such people.

Our confidence about the success of our trust grew when many of our friends were gladly willing to
join and be part of the trust on seeing our activities and we are sure that our motto will be successful.
We are happy with the though t that seed of humanity that we sowed will reap soon. Creating this
awareness among others is our aim.

The very thought of giving a helping hand to those who need it will surely show us a way to help them.

As years go by, we wish that the activities of the trust should be lesser. This is the hidden intention of
the trust because when there is no one left uncared there is no question of our service being needed.
Every human being should help the other person to his or her ability. If people are willing to take care of
their kith and kin then our aim will be achieved soon.

~ Thank you
EERANENJAM

Wednesday, April 24, 2013

ஈரநெஞ்சம் "இரண்டாம் ஆண்டு துவக்கம்"

"இரண்டாம் ஆண்டு துவக்கம்"

https://www.facebook.com/eeranenjam?ref=hl

கடந்த ஓராண்டாக சமூக சேவையில் ஈடுபட்டு குறுகிய காலத்தில் எண்ணற்ற பல சேவைகளை நமது ஈர நெஞ்சம் அறக்கட்டளை செய்துள்ளது. சுயநலமில்லாமல் பொது நலத்தில் அக்கறை கொண்டு இந்த சமூகத்துக்காக நம்மால் இயன்ற வரை ஆதரவற்றோருக்கும் பிறருக்கும் உதவி செய்வதே நமது அறக்கட்டளையின் நோக்கமாகும். இதுவரையில் அது போல பல்வேறு காரியங்களை ஈரநெஞ்சம் அறக்கட்டளை செய்துள்ளது ஆதரவற்றோர் என்று யாரும் இல்லை என்று உணர்த்தும் விதமாக நமது அறக்கட்டளையும் அதன் உறுப்பினர்களும் அவர்களுக்கு உறவாக உள்ளனர்.

சாலையோரங்களில் ஆதரவின்றி இருக்கும் முதியோர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை காப்பகங்
களில் சேர்த்து பராமரித்தல், குடும்பத்தை விட்டு தவறுதலாக பிரிந்து விட்டவர்களை அவர்களது குடும்பத்தினருடன் சேர்த்து வைத்தல், ஆதரவற்றோர் காப்பகங்களில் இருந்து பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்குதல், இரத்த தான முகாம் மற்றும் மரம் நடுதல் நிகழ்வுகள், இலவச கண் சிகிச்சை முகாம்கள் நடத்துதல், உடல் தான விழிப்புணர்வு முகாம்கள், காப்பங்களுக்கு உணவு வழங்குதல், மளிகை பொருட்கள் வழங்குதல், தையல் இயந்திரங்கள் வழங்கி தொழில் வசதி செய்துகொடுத்தல், போன்ற பல்வேறு சேவைகளை இந்த ஓராண்டில் செய்துள்ளனர்

அதுமட்டுமில்லாமல் அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளைய்ம் தங்களால் இயன்றவரை கல்வி உதவி, சீருடைகள் வழங்குதல், காலணிகள் வழங்குதல், பள்ளிப்பைகள் வழங்குதல், மருத்துவ உதவிகள், போன்ற சேவைகளையும் செய்து வருகின்றனர். மற்றவர்களை போல் காப்பகங்களில் உள்ள சிறுவர் சிறுமியரை பொழுதுபோக்குகளில் மகிழ்விக்க சுற்றுலா, சர்க்கஸ், நல்ல திரைப்படங்களுக்கு அழைத்து செல்லுதல், தீபாவளி பண்டிகை காலங்களில் புத்தாடை வழங்குதல் போன்ற காரியங்களை செய்து குழந்தைகளின் மகிழ்ச்சியில் நமது அறக்கட்டளையும் பங்கு கொண்டுள்ளது.

தாய் தந்தையை இழந்து தவித்த ரஞ்சித், பவித்ரா ஆகிய பிள்ளைகளில் கல்வி செலவை நமது அறகட்டளை முழுவதுமாக ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும் மதன்குமார், விகாசினி போன்ற எளியகுடும்பத்தினரை சேர்ந்த பிள்ளைகளின் கல்விக்கான உதவிகளையும் அறக்கட்டளை செய்துள்ளது. மேலும் பவித்ராவுக்கு குடல் வால் அறுவை சிகிச்சை ஈரநெஞ்சம் அமைப்பின் மூலம் செய்யப்பட்டு தற்போது சிறுமி நலமாக உள்ளாள்.

ஆதரவற்றோர் இல்லங்களில் இருந்து கல்வி பயிலும் பிள்ளைகளின் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த மாணவர்களில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த பிள்ளைகளுக்கு ஊக்கத்தொகை வழங்குதல், ஆதரவற்றோர் இல்லங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு இலவச கண் சிகிச்சை முகாம், மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் இரத்த தான முகாம் போன்ற பல்வேறு நிகழ்வுகளையும் நமது ஈரநெஞ்சம் அறகட்டளை செய்துள்ளது.

முதியோர் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த பார்வதி அம்மாள் என்பவரின் அறுவை சிகிச்சைக்கு இரத்த தானம், மற்றும் பல்வேறு ஊர்களில் இரத்தம் தேவைப்படுகிற நோயாளிகளுக்கு இரத்த தானம் வழங்க ஏற்பாடு செய்தல், சூரியா என்ற ஏழைப்பெண்ணுக்கு இலவச கண் அறுவை சிகிச்சை, காளியம்மாள் என்பவருக்கு கண்பார்வை சிகிச்சை போன்ற மருத்துவ உதவிகளை நமது ஈரநெஞ்சம் அறக்கட்டளை உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

தங்கள் குடும்பத்தினரை இழந்து ஆதரவின்றி இருந்த நாகம்மாள் பாட்டி, கண்ணம்மாள் பாட்டி, வேணுகோபால், ஜேகப், கண்ணன், சாமிநாதன், மனநிலை பாதிக்கப்பட்ட முத்துகுமார், சேதுலட்சுமி போன்ற பலரை தங்கள் குடும்பத்தினருடன் இணைய நமது ஈரநெஞ்சம் அறக்கட்டளை உதவியுள்ளது.

மேலும் ஆதரவற்ற நிலையில் பல்வேறு இடங்களில் இருந்த கண்ணம்மாள் , ஜானகியம்மாள், தங்கவேலு, பாப்பம்மாள், மணிக்குமார் தாத்தா, வடுவாம்பாள், திரு ஹுசைன், குழந்தைகளுடன் கணவனால் கைவிடப்பட்ட ரேகா, ருக்மணி அம்மாள் , மோதி பாய் , கந்தசாமி, லட்சுமி அம்மாள் மற்றும் பலர் பாதுகாப்பாக காப்பகங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் மனநிலை பாதிக்கப்பட்டு காப்பகத்தை விட்டு காணாமல் ஜோதி மீண்டும் ஈரநெஞ்சம் அமைப்பினரால் கண்டு பிடிக்கப்பட்டு காப்பகத்தில் சேர்த்து பராமரிக்கபட்டுள்ளார்.

சாலைகளில் மருத்துவ வசதி இன்றி நோய்வாய்ப்பட்டிருந்த குமார், முகமது அலி , தீரத்சிங், நடராஜ், தாமஸ் போன்ற பலரை முறையாக அனுமதி பெற்று மருத்துவ மனைகளில் சேர்த்து சிகிச்சை அளிப்பதோடு அவர்கள் இறந்து போய்விட்டால் நமது ஈரநெஞ்சம் அறக்கட்டளையே அவரது இறுதி சடங்குக்கான அனைத்து காரியங்களையும் செய்தது.

இது போல பல்வேறு சேவைகளை செய்து வரும் ஈரநெஞ்சம் அமைப்பு பொது சேவைகளை செய்து வருவதோடு மண்ணில் மனித நேயம் பெருக வேண்டும், ஆதரவற்றோர் என்று யாரும் இருக்க கூடாது என்ற விழிப்புணர்வை சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியிலும் ஏற்படுத்தி வருகிறது.

மேலும் அமைப்பின் செயல்களுக்கும் , சமூதாய விழிப்புணர்வுக்கும் உறுதுணையாக இருக்கும் மாணவர்கள், பொதுமக்கள், காப்பகங்கள். காவல்துறை, மருத்துவத்துறை , தொலைதொடர்புத்துறை, மற்றும் அணைத்து துறை மக்களுக்கும் ஈரநெஞ்சம் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது...

~ஈரநெஞ்சம்

Friday, April 19, 2013

நல்லது செய்தாய் சுதா ~ ஈரநெஞ்சம்


Eera Nenjam Charity
''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]

கோவை தனியார் நிறுவனத்தில் பணி புரிந்துவரும் செல்வி சுதா கடந்த மூன்று நாட்களாக கோவை செல்வபுரம் அருகில் LIC காலனி என்ற பஸ் ஸ்டாப்பில் ஒரு வயதானவர் உடுத்த உடை கூட இல்லாமல், காலில் காயங்களுடன் எழுந்து நடக்க முடியாமல், படுத்த படுக்கையாய் இருப்பதாகக் கொடுத்தத் தகவலின் படி ஈரநெஞ்சம் அமைப்பினர் 17/04/2013 அன்று உடனடியாக அந்த முதியவரை கோவை B10 காவல் நிலைய அதிகாரிகளின் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, கோவை அரசு காப்பகத்தில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார் . அவருக்குச் சிகிச்சையைத் தொடர்ந்த மருத்துவர்கள் முதியவரின் உடல் நிலை மோசமாக இருப்பதாகவும், இடது காலில் விபத்தின் காரணமாக எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதால் காலில் மாவுகட்டு போட்டு மேல் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர் .

"எல்லோரும் வந்து செல்லும் ஒரு பேருந்து நிலையத்தில் ஒரு முதியவர் உடலில் ஆடை கூட இல்லாமல் இருப்பதை யாரும் பொருட்படுத்தாத நிலையில் இளம் பெண்ணான செல்வி சுதா என்பவர் மேற்கொண்ட முயற்சியால் முதியவருக்கு இன்று மருத்துவச்சிகிச்சை கிடைத்துள்ளது.
செல்வி சுதாவின் இந்த முயற்சிக்கு ஈரநெஞ்சம் மனதாரப் பாராட்டுகிறது.
https://www.facebook.com/eeranenjam
~ நன்றி (156/2013)
ஈர நெஞ்சம்
Miss Sudha, working in a private company in Coimbatore, had been seeing an old man near the LIC colony bus stop for three days. He did not have any clothes, had leg injuries and was lying down since he could not walk. She informed Eera Nejnam and our volunteers got him admitted in the Government Home, Coimbatore with the help of Coimbatore B10 Police Statiion and 108 Ambulance. The doctors informed us that the old man had a fracture in his left leg and his condition is serious and so they are giving treatment to fix his leg.
There are so many people coming to the bus stand but nobody noticed the suffering old man. It was Miss Sudha who was kind enough and took the initiative to contact Eera Nenjam and that helped the old man to get admitted and receive treatment. We appreciate the timely help of Miss Sudha.

~ Thanks (156/2013)
Eera Nenjam
Photo: ''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]

கோவை தனியார் நிறுவனத்தில் பணி புரிந்துவரும் செல்வி சுதா கடந்த மூன்று நாட்களாக கோவை செல்வபுரம் அருகில் LIC காலனி என்ற பஸ் ஸ்டாப்பில் ஒரு வயதானவர் உடுத்த உடை கூட இல்லாமல், காலில் காயங்களுடன் எழுந்து நடக்க முடியாமல், படுத்த படுக்கையாய் இருப்பதாகக் கொடுத்தத் தகவலின் படி ஈரநெஞ்சம் அமைப்பினர் 17/04/2013 அன்று உடனடியாக அந்த முதியவரை கோவை B10 காவல் நிலைய அதிகாரிகளின் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, கோவை அரசு காப்பகத்தில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார் . அவருக்குச் சிகிச்சையைத் தொடர்ந்த மருத்துவர்கள் முதியவரின் உடல் நிலை மோசமாக இருப்பதாகவும், இடது காலில் விபத்தின் காரணமாக எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதால் காலில் மாவுகட்டு போட்டு மேல் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர் .

"எல்லோரும் வந்து செல்லும் ஒரு பேருந்து நிலையத்தில் ஒரு முதியவர் உடலில் ஆடை கூட இல்லாமல் இருப்பதை யாரும் பொருட்படுத்தாத நிலையில் இளம் பெண்ணான செல்வி சுதா என்பவர் மேற்கொண்ட முயற்சியால் முதியவருக்கு இன்று மருத்துவச்சிகிச்சை கிடைத்துள்ளது.
செல்வி சுதாவின் இந்த முயற்சிக்கு ஈரநெஞ்சம் மனதாரப் பாராட்டுகிறது.

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி (156/2013)
ஈர நெஞ்சம்
Miss Sudha, working in a private company in Coimbatore, had been seeing an old man near the LIC colony bus stop for three days. He did not have any clothes, had leg injuries and was lying down since he could not walk. She informed Eera Nejnam and our volunteers got him admitted in the Government Home, Coimbatore with the help of Coimbatore B10 Police Statiion and 108 Ambulance. The doctors informed us that the old man had a fracture in his left leg and his condition is serious and so they are giving treatment to fix his leg.
There are so many people coming to the bus stand but nobody noticed the suffering old man. It was Miss Sudha who was kind enough and took the initiative to contact Eera Nenjam and that helped the old man to get admitted and receive treatment. We appreciate the timely help of Miss Sudha.
https://www.facebook.com/eeranenjam
~ Thanks (156/2013)
Eera Nenjam

Sunday, April 14, 2013

இவங்க என்ன பண்றாங்க முருகா..? ~மகேந்திரன்





இவ்வளவு கூட்டத்தில் இவங்க மட்டும்  கேமரா வைத்துக்கொண்டு எதை படம் பிடிக்கின்றார்கள் பார்க்கறிங்களா ...

கீழ போய் பாருங்க ....












கோவையில்  அமைனுள்ள முருகனின்  ஏழாவது படை என அழைக்கப்படும்  மருதமலை ராஜ கோபுரம் தாங்க கடந்த பத்து  ஆண்டுகளாக  கட்டப்பட்டு  கட்டுமானப்பணி நிறைவடைந்து தற்போது அழகிய தோற்றத்துடன் காணும் மருதமலை  ராஜகோபுரத்தை பக்தர்கள்  தங்களது  கேமராவில் படம் பிடிக்கிறார்கள் .









~மகேந்திரன்

Thursday, April 11, 2013

சாலையோரமாக பரிதாபமான நிலையில் காணப்பட்ட ஜோதி ~ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]

கோவை மாநகராட்சி காப்பகத்தில் இருந்து 03/04/2013 அன்று ஜோதி என்கிற சுமார் 40 வயது பெண்மணி காணாமல் போனதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, நேற்று (10/04/2013) கோவை டவுன் ஹால், மணிக்கூண்டு பகுதியில் சாலையோரமாக பரிதாபமான நிலையில் காணப்பட்ட ஜோதி ஈரநெஞ்சம் குழுவினரால் மீட்கப்பட்டு, மீண்டும் கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

காணாமல் போன ஜோதியை மீட்டுக் கொடுத்ததற்கு கோவை மாநகராட்சி காப்பகத்தினர் ஈரநெஞ்சம் குழுவினருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி (154/2013)
ஈர நெஞ்சம்

Jothi, about 40 years old, got lost on 03/04/2013 from Coimbatore Corporation Home. On hearing this, voluteers from Eera Nenjam were searching and found her in a very weak condition near the Town Hall Clock Tower, Coimbatore on 10/04/2013 and then admitted back in Coimbatore Corporation Home.
Coimbatore Corporation Home appreciated Eera Nenjam for finding the missing Jothi.

~ Thanks (154/2013)
Eera Eera Nenjam

Saturday, April 06, 2013

மயானத்தில் ஒரு மனுஷி ~நன்றி தினமலர்


  • http://www.dinamalar.com/news_detail.asp?id=683910
    பெண்ணாகப்பட்டவர்கள், இன்றைக்கும் சுடுகாட்டின் சூழலை தாங்கக்கூடிய பக்குவம் இல்லாதவர்கள், அங்கு எரியூட்டப்படும் அல்லது புதைக்கப்படும் பிணத்தை பார்க்கும் சக்தி கொண்டவர்கள் கிடையாது.
    இப்படி சொல்லப்படும் காரணங்களினால்... எவ்வளவுதான் தனக்கு பிரியப்பட்ட கணவர், தந்தை, தனயன் என்ற உறவாக இருந்தாலும், மரணம் என்ற பிரிவு வரும்போது, வீட்டு வாசலோடு நின்று, இறந்த உறவுகளை வழியனுப்பி வைக்க வேண்டிய நிலையில்தான் இருக்கிறார்கள்.
    இந்த சூழ்நிலையில், இரவு நேரங்களில் வரும் பிணத்தைக்கூட எரிக்கும், புதைக்கும் பக்குவத்துடன் ஒரு பெண் இருக்கிறார் என்றால் ஆச்சரியம்தானே.
    ஆச்சரியமூட்டும் அந்த பெண்ணின் பெயர் வைரமணி, கோவை சொக்கம்புதூர் சுடுகாட்டில் வெட்டியான்(ள்) வேலை பார்த்து வருகிறார்.
    இரவு பத்து மணியளவில் சுடுகாட்டில் எரிந்து கொண்டு இருக்கும் ஒரு பிணத்தை சரிவர எரிகிறதா என்று அருகே இருந்த பார்த்தபடியும், அவ்வப்போது நெருப்பை தூண்டிவிட்டபடியும் தன்னந்தனியாக நிற்கிறார்.
    பிணத்தை எரித்து முடித்த பிறகே பேசத்துவங்குகிறார்.
    என் அப்பா கருப்பசாமிதான் இந்த வெட்டியான் வேலை பார்த்துக் கொண்டிருந்தார், எனக்கு எழுதப் படிக்க தெரியாது, ரொம்ப சின்ன வயசிலேயே எனக்கு கல்யாணமாகிருச்சு, மூணு குழந்தைகள் இருக்காங்க, வீட்டுக்காரருக்கு போதுமான வருமானம் இல்லை, இந்த நிலையில் திடீர்னு அப்பா இறந்துட்டாரு, அவர் பார்த்த வெட்டியான் வேலையை எடுத்துப் பார்க்க யாரும் முன்வரலை, குடும்ப சுமையை குறைச்சுக்கலாம், பிள்ளைகள நல்லா படிக்க வைக்கலாம் அப்படிங்ற எண்ணத்துல இந்த வெட்டியான் வேலையை நான் எடுத்துக்கிட்டேன்.
    அப்பா பக்கத்துலயே இருந்து இந்த வேலைய பல நாள் பார்த்ததுனால, எனக்கு எந்த பயமோ, தயக்கமும் இல்லை, இந்த பேய், பிசாசு மேலே துளியும் நம்பிக்கை இல்லை, உண்மைய சொல்லப் போனா இந்த சுடுகாட்டை சிவன் வாசம் செய்யும் கோயிலாத்தான் நான் பார்க்கிறேன்., இந்த தொழிலுக்கு வந்து இப்ப பதினைந்து வருஷமாகப் போகுது.,
    பிணத்தை புதைக்கணும்னாலும் சரி, எரிக்கணும்னாலும் சரி இரண்டாயிரம் ரூபாய் கூலி வாங்குகிறேன். இதுல விறகு மற்றும் உதவியாள் கூலி போக எனக்கு ஐநூறு ரூபாய் மிஞ்சுனா அதிகம்.
    ஒரு பிணத்தை எரிக்கணும்னாலும் சரி, புதைக்கணும்னாலும் சரி ஆறு மணி நேரம் எங்களுக்கு வேலை எடுக்கும். சாயந்திரம் பிணத்தை கொண்டுவர்ரோம், எரிக்கணும், எல்லா ஏற்பாடும் செஞ்சு வையுங்க என்று சொல்லி முன்பணம் கொடுத்து செல்பவர்கள், திடீர்னு நள்ளிரவு நேரத்திற்கு பிணத்தை கொண்டு வந்து கொள்ளிவச்சுட்டு போயிடுவாங்க, நான் தனியாள நின்னு எரிச்சு முடிப்பேன்.
    செத்தது கோடீசுவரான இருக்கும், ஆன எனக்கு கொடுக்கவேண்டிய கூலியை கொடுக்க ரொம்பவே பேரம் பேசுவாங்க, "கொடுக்கிறத கொடுங்கப்பான்னு கேட்டு வாங்கிப்பேன்'. குழந்தைகள் பிணத்தை பார்க்கும் போது மட்டும் மனசு வேதனையா இருக்கும், மற்றபடி பிணங்களை பார்த்து, பார்த்து பழகிப்போச்சு.
    பிணத்தை எரிக்கும் போது நூல் கயிறு கூட இருக்காது, ஆனாலும் அந்த பிணத்தின் கையில இருந்து கழட்டின கால் பவுன் மோதிரத்தை யாரு எடுத்துக்கிறதுன்னு சுடுகாட்டிலேயே சண்டைபோட்டு மண்டைய ஒடைச்சுக்குவாங்க, போகும் போது எதையும் கொண்டு போகமுடியாதுங்கிறத கண் எதிரே பார்த்துக்கிட்டே, இந்த ஜனங்க கால் பவுனுக்கு சண்டை போடுறத பார்க்கும் போது வேடிக்கையாத்தான் இருக்கும்.
    உலகம் ரொம்ப அவசரமாயிடுச்சு இப்ப யாருக்கும் ஆற அமர சுடுகாட்டில் நின்று பிணத்தை எரிக்கவோ, புதைக்கவோ பொறுமையில்லை, அதுனால மின் மயானத்திற்கு போய் பத்து நிமிடத்துல வேலையை முடிக்கத்தான் விரும்புறாங்க, இதன் காரணமா இப்ப எனக்கு கொஞ்சம் தொழில் "டல்' தாங்க...மாதத்திற்கு நாலோ, ஐந்தோ பிணங்கள் வர்றதே அதிகம் என்று கூறிய வைரமணியை மூன்று விஷயத்திற்காக பாராட்டியே ஆக வேண்டும்.
    முதல் விஷயம் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள எந்த வெட்டியானை எடுத்துப் பார்த்தாலும் குடிப்பழக்கம் இருக்கும், கேட்டால் பிணத்தோடு கிடக்கிறோம் அதுனால குடியை விடமுடியாதுங்க என்பார்கள்"அதற்கும்' தனியாக பணம் கேட்டு வாங்கிக் கொள்வார்கள்,ஆனால் வைரமணிக்கு அப்படி பழக்கம் எதுவும் கிடையாது,எல்லாம் மனசு தாங்க காரணம் என்கிறார் எளிமையாக., ஒன்று, ஆதரவில்லாமல் அனாதையாக இறந்து போனவர்களின் பிணங்களை, கூலி கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி, பணத்திற்கு முக்கியத்துவம் தராமல், இறந்து போன பிணத்திற்கு முக்கியத்துவம் தந்து, உறவினர்கள் செய்வது போல காரியம் எல்லாம் செய்து உரிய மரியாதையுடன் பிணத்தை புதைக்கிறார்.
    இரண்டாவதாக, குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த தொழிலை செய்து வருகிறார், இருந்தாலும் இதற்கென நிர்ணயம் செய்த தொகையைத் தவிர கூடுதலாக வாங்குவதில்லை, உழைக்காமல் மற்றவர்கள் பணத்தை உதவியாக பெறுவதிலும் விருப்பமில்லை, ஆகவே என்னைப் பற்றி எழுதுங்க, ஆனா நான் ரொம்ப கஷ்டப்படுறேன் யாராவது உதவுங்களேன் என்றெல்லாம் அர்த்தம் வரும்படியா எழுதிராதீங்க என்றவர் இதனாலேயே தனது தொடர்பு எண் வேண்டாம் என்று தவிர்த்துவிட்டார்.
    எவ்வளவு இருந்தாலும் இன்னும் யாராவது,ஏதாவது கொடுப்பார்களா என்று ஏங்கித் தவிக்கும் இந்த உலகத்தில் தனக்கு சிரமம் என்ற போதிலும், தனது உழைப்பில் கிடைக்கும் பணம் மட்டுமே போதும் என்ற வைராக்கியத்துடன் வாழும் வைரமணி சந்தேகமே இல்லாமல் ஒரு வித்தியாசமான நம்பிக்கை மனுஷிதான்.

    - எல்.முருகராஜ்

Thursday, April 04, 2013

மாடியில் திராட்சை தோட்டம்



சுற்றுப்புற சூழல் பாதுகாப்புக்கு மரங்களின் பங்கு மிக இன்றியமையாத ஒன்று அந்த மரங்களை பாதுகாப்பதும் ஒவ்வொருவருக்கும் மிகவும் அவசியமான கடமை ஒன்றுங்க ,

அவரவர் வாசலை சுத்தம் செய்தாலே போதுமானதுங்க. ஊர் சுத்தமாகிடும் , ஆனாலும் தன் வாசலை கூட சுத்தம் செய்யாமல் இருப்பதால்தான் மாசுபாடு நிறைந்த ஊர்களில் முதல் ஐந்து இடங்களில் கோவை நகரமும் இடம்பிடித்து விட்டது , இதனை உணர்ந்த அச்சகதொளிலாளி திரு . M . ரகுநாத், கடந்த பல வருடமாக சிறுதுளி அமைப்போடு இணைந்து காணும் இடங்களில் எல்லாம் மரங்களை நட்டுவருகிறார் தான் வசிக்கும் கோவை காந்திபுரம் 2 வது வீதியில் அதன் அடுத்த அடுத்த வீதிகள் முழுவதும் இவர் ஒருவராகவே சாலையின் இருபுறமும் மரங்களை நட்டு அந்த பகுதி முழுவதும் நிழலை படரவைதுள்ளார்.


அதுமட்டும் இல்லைங்க இவர் வசிக்கும் வீட்டின் மொட்டை மாடியில் ஒரு திராட்சை தோட்டம் அமைத்து இருக்கிறார் , பொதுவாகவே திராட்சை சாகுபடியில் விதை நட்டு பழங்கள் கிடைக்க வேண்டுமானால் . நட்ட நாளில் இருந்து ஒருவருடம் நான்கு மாதங்கள் ஆகும் , ஆனால் M . ரகுநாத் தனது மொட்டை மாடியில் வளர்க்கும் திராட்சை தோட்டத்தில் ஒன்பது மாதங்களிலேயே திராட்சை பழங்கள் கொத்துக்கொத்தாக காய்த்துள்ளது, அதுவும் சுமார் 200 சதுர அடியில் ஒன்பது மாதங்களில் திராட்சை 150 Kg சாகுபடி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரு . M . ரகுநாத் தனது வீட்டின் மாடியில் பயிரிட்டுள்ள திராட்சை தோட்டத்தை அப்பகுதி மக்களும் பள்ளி மாணவர்களும் கல்லூரி மாணவர்களும் வந்து பார்வையிட்டு தங்களது அறிவுத்திறனை வளர்த்துக்கொள்கிறார்கள். அவர் இப்படி விளைந்த திராட்சை பழங்களை அனைவருக்கும் இலவசமாகவும் கொடுத்துவருகிறார்.

இவர் சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே அவருடைய கொள்கை விரும்பி என்பதால் இந்த திராட்சைகளை அண்ணா ஹசாரே அவர்களுக்கும் அனுப்பி இருக்கிறார்.

மேலும் இவர் எதிர்பார்ப்பது எல்லாம் கோவை நகருக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இருந்த இயற்கையான குளிர்ந்த சூழலை உருவாக்கிக் கொடுப்பதே ஆகுமாம்.

இப்படிப்பட்ட இயற்கை பாதுகாவலரை பாராட்டாமல் இருக்க முடியுமாங்க அதற்காகவே வருகின்ற 28/04/13 அன்று ஒரு அமைப்பு இவருக்கு கோவையில் பாராட்டு விழா நடத்த இருக்கிறார்கள் என்பது நமக்கும் மகிழ்ச்சி அளிகிறது. சுற்று சூழலை காப்பாற்ற நாமும் முயற்சி எடுப்போம் என்பதில் மாற்றம் இல்லைங்க.

~மகேந்திரன்


"மாணவர்கள் நினைத்தால் மாற்றங்கள் உருவாகும்" இந்த மாணவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]

ஆதரவற்ற ஒரு பெண்ணும், சுமார் 30 வயதான, மனநலம் பாதிக்கப்பட்ட உடைகூட இல்லாமல் இன்னொரு பெண்ணும் கோவை சுங்கம் பகுதியில் பலமாதங்களாகச் சுற்றித் திரிவதை கோவை கிருஷ்ணா பொறியியல் கல்லூரி பேராசிரியர் பிரின்ஸ் பார்த்து , நமது ஈரநெஞ்சம் அமைப்புக்குத் தகவல் வழங்க, ஈரநெஞ்சம் அமைப்பு கிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் பிரசன்னா மற்றும் சமீர் உதவியுடன் அந்த இரண்டு பெண்களையும் 04/04/2013 அன்று கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்தோம்.

மாணவர்களுக்குப் படிப்பு மட்டும் சமுதாயம் மேன்பட போதாது. அதற்கு மேலும் கடமை இருப்பதைக் கல்லூரி பேராசிரியர் பிரின்ஸ் மாணவர்களுக்குப் புரியவைக்க, மாணவர்கள் பிரசனா மற்றும் சமீர் அதைப் புரிந்து கொண்டு ஈரநெஞ்சம் அமைபிற்கும், பாதிக்கப்பட்ட அந்த இருபெண்களின் பாதுகாப்புக்கும் உதவியதை ஈரநெஞ்சம் மனதார பாராட்டுகிறது.

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி (153/2013)
ஈர நெஞ்சம்
Prof. Prince of Krishna Engineering College, Coimbatore informed Eera Nenjam about two young women, one of them mentally challenged wearing hardly any clothes on her, wanderiing in the area of Sungam, Coimbatore for many months. On hearing this, our volunteers Mr. Prasanna and Sameer from the same college helped them to get admitted in the Coimbatore Corporation Home on 04/04/2013.
Prof. Prince taught them an important lesson that just the college education is not enough and everyone has responsibility in helping the fellow citizens. Eera Nenjam appreciates the timely help of Prof. Prince, Mr. Prasanna and Mr. Sameer for helping those two women.
https://www.facebook.com/eeranenjam
~ Thanks (153/2013)
Eera Nenjam

Tuesday, April 02, 2013

ஆதரவற்ற மூதாட்டி காலமானார் ஈரநெஞ்சம் அடைக்கலம்



''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]

கோவை காட்டூர் பட்டேல் சாலை பகுதியில் சுமார் 80 வயதான மூதாட்டி ஒருவர் யாரும் ஆதரவு இல்லாத நிலையில் சாலையிலேயே பல மாதங்களாக இருப்பதாக காட்டூர் காவல் நிலைய போலீசார் ஈரநெஞ்சம் அமைப்பிற்குத் தகவல் தர, அந்த மூதாட்டியை 28/03/2013 அன்று கோவை மாநகராட்சி காப்பகத்தில் ஈரநெஞ்சம் அமைப்பு சேர்த்தது. அந்த மூதாட்டி உடல் நலமின்மை காரணமாக 31/03/2013 அன்று இறைவன் அடி சேர்ந்தார். ஈர நெஞ்சம் அமைப்பினர் அந்த மூதாட்டியின் உடலை 01/04/2013 அன்று சொக்கம்புதூர் மயானத்தில் நல்லடக்கம் செய்தனர். அவரின் ஆத்மா சாந்தியடைய ஈரநெஞ்சம் இறைவனை வேண்டுகிறது.

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி (152/2013)
ஈர நெஞ்சம்
Eera Nenjam was contacted by the Kattoor Police Station about a old lady, aged around 80, living in the area of Patel Road, Kattoor, Coimbatore for many months without any help and so we got her admitted in the Coimbatore Corporation Home on 28/03/2012. She became ill and died on 31/03/2013. Our volunteers helped to do the last rituals for her at the Chokkampudhoor Graveyard on 01/04/2013. May her soul rest in peace.

~ Thanks (152/2013)
Eera Eera Nenjam