Thursday, August 02, 2018

20 வருட சாபம் மாற்றம்




சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக அழுக்கு நிறைந்த உடுத்திய அதே உடையிலும் , சடை பின்னி ஓட்டி போன முடிகள் , சாலையில் கிடைப்பதை தின்றுக் கொண்டும் உற்றார் உறவினர் என எல்லோரும் கை விட்டதால் வந்த பரிதாபம்.


 

கோவை காரமடையில் சின்னம்மாக்கும், அழகர் சாமிக்கும் பிறந்த கிருஷ்ணசாமி(53), ஒரு அக்கா இரு அண்ணன் , கிருஷ்ணசாமி மூன்றாம் வகுப்பு மட்டும் படித்த நிலையில் , இறந்தவர்களின் வீட்டில் சடலங்களுக்காக செய்யும் சடங்குகளுக்கு சங்கு ஊதியும் பணி செய்து வந்தார். இதனால் ஊரில் உள்ளவர்கள் அனைவரும் பிணத்திற்கு சங்கு ஊதுபவன் என்று ஒதுக்கி வைத்துள்ளனர். சில வருடங்களில் கிருஷ்ணசாமியின் தந்தை காணாமல் போக பிழைப்பை தேடி கோவை காந்திபார்கில் குடி ஏறினர் .
 

அங்கே ஒரு போட்டோ ஸ்டூடியோவில் வேலைக்கு சேர்ந்த கிருஷ்ணசாமி நல்ல ஊதியத்துடன் வாழ்ந்து வந்தார். உடன் பிறந்தவர்களுக்கு எல்லோரும் திருமணம் ஆகி விட்டை விட்டு வெளியேறியதும் தன் அம்மாவை பாசத்துடன் நல்லபடியாக பார்த்துக் கொண்டார் . திடீர் என்று அம்மா வின் இறப்பும், அதன் அடுத்து தான் வேலை செய்து வந்த போட்டோ ஸ்டூடியோ உரிமையாளரின் இறப்பும் இவர் மனதை பெரிதும் பாதித்து உள்ளது.


இருந்த வேலையும் இல்லாமல் போக , தங்கி இருந்த வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்து கிருஷ்ணசாமியை வெளியேற்றி உள்ளார். உடன் பிறந்தவர்களும் இவரை கவனித்துக் கொள்ள மறுத்துவிட்டனர். இதனால் தனிமை மட்டுமே இவருக்கு துணையானது.

யாரிடமும் பிச்சை கேட்க மனம் இல்லை, பசிக்கு உணவு கிடைக்காமல் குப்பை தொட்டியில் தேடும் நிலை , காலப்போக்கில் இவர் தோற்றம் கண்டு அனைவரும் மனநிலை பாதித்தவர் என்றே இச் சமுதாயம் முத்திரைக் குத்தி இருபது வருடங்களாக தெருவோரம் அமர்த்திவிட்டது .
இந்நிலையில் கிருஷ்ணசாமி சாலை ஓரம் உள்ள குப்பை தொட்டியில் உணவை தேடுவதை கண்டு ஈரநெஞ்சம் அறக்கட்டளை கிருஷ்ணசாமியை மீட்டு முதலுதவி வழங்கி ஈரநெஞ்சம் அறக்கட்டளையின் பராமரிப்பில் ஏற்றுக்கொண்டது கொண்டது.



மேலே குறிப்பிட்ட அனைத்தும் கிருஷ்ணசாமி கூறியது , தான் மனிதர்களிடம் பேசியே 20 வருடம் ஆகிடிட்டது. பசிக்காக மனிதர்களிடம் அடிவாங்கியது தான் மிட்சம், இன்று உங்களால் மோட்சம் பெற்றேன் என்று கண்கலங்கும் போது சமுதாயத்தை நினைத்து வேதனைப்பட வைக்கிறது.
~ஈரநெஞ்சம் அறக்கட்டளை
https://www.facebook.com/eeranenjam.organization