Tuesday, December 05, 2017

பேசு சசி பேசு


கோவை வெரைட்டி ஹால் பகுதியில் கடந்தமாதம் 19/11/2017 அன்று சசிகலா 30 வயது மனநிலை பாதித்த நிலையில் தனியாக சுற்றித்திரிந்ததை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் உதவியுடன் மீட்டு ஈரநெஞ்சம் அறக்கட்டளை பராமரிப்பிலுள்ள மாநகராட்சி முதியோர் இல்லத்தில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டார் .


 



மனநிலை பாதித்த சசிகலாவிற்கு முறையான பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக அதற்கான அதிகாரிகளின் அனுமதி பெற்று காரமடையில் உள்ள கருணை இல்லம் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து சசிகலாவின் உறவினர்களை தேடும் முயற்சி ஈரநெஞ்சம் அறக்கட்டளை மேற்கொண்டது.
தொடர்ந்து ஈரநெஞ்சம் அறக்கட்டளை குழுவினர் சசிக்கலாவிற்கு கவுன்சிலிங் வழங்கி வந்த நிலையில் 10 நாட்களுக்கு பிறகு சற்று நினைவுகள் திரும்பியது.
அதன் மூலம் நேற்று முன் தினம் 1/12/2017 அன்று சசிக்கலா தன் கணவரின் அலைபேசி எண் கூற , அந்த எண்ணில் தொடர்பு கொண்டபோது ஆந்திரா மாநிலம் விஜயவாடா பகுதியில் வசிப்பவர் ஜானகிராமன் என்பவர் சசிகலாவின் கணவர் என்பது இறுதி செய்யப்பட்டு அவரிடம் சசிக்கலாவை பற்றி தெரிவிக்கப்பட்ட போது .



ஜெயராம் அழுது கொண்டே அவர் என்னுடைய மனைவிதான் திடீர் என்று அவளுக்கு மனநிலை பாதித்து விட்டது, எங்கு இருக்கிறாள் எப்படி இருக்கிறாள் , எங்களுக்கு இரண்டு மாத பெண் குழந்தை இருக்கிறது எல்லாவற்றையும் தவிக்க விட்டு காணாமல் போய் விட்டாள். உடனடியாக கிளம்பி வருகிறேன் அவளை அழைத்துச் செல்ல என்று ரயில் மூலம் கிளம்பி இன்று காலை 3/12/2017 தன் இரண்டு மாத குழந்தையுடன் கோவைக்கு வந்த ஜானகிராமன் ,ரயில் நிலையத்தில் இருந்து ஈரநெஞ்சம் அறக்கட்டளை குழுவினர் அவரை அழைத்துக்கொண்டு காரமடை கருணை இல்லத்திற்கு அழைத்து சென்று சசிகலாவை காட்டியது.



ஜானகிராமன் சசிக்கலாவை கட்டி தழுவி கண்ணிற் விட்டு அழுத காட்சி மெய் சிலிர்த்தது.




பிறகு தனது குழந்தையை சசிக்கலாவிடம் கொடுத்து பேசு சசி , இதோ பார் நம் குழந்தை பால் கூட குடிக்காமல் தவிக்கிறாள் ,இதோ நானும் வந்து விட்டேன் இனி உன்னை பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன் பேசு சசி என்று அவர் மனைவியை அனைத்துக் கொண்டு அழுதது பார்ப்பவர் கண்களில் கண்ணீர் கசிந்தது.



அதன் பிறகு அருகில் இருந்தவர்கள் ஜானகிராமனுக்கு அறிவுரை வழங்கி அவரது மனைவியை அவருடன் அவரது ஊருக்கு அனுப்பி வைத்ததில் அனைவருக்கும் பெரும் சந்தோசமும் நிம்மதியும் அடைந்தது.



ஜானகிராமன் தன் மனைவியை பத்திரமாக மீட்டு தன்னோடு சேர்த்து வைத்த அனைவருக்கும் மனதார நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
~ஈரநெஞ்சம் அறக்கட்டளை
https://www.facebook.com/eeranenjam.organization