Saturday, March 09, 2024

காலத்தின் கட்டாயம்

காலத்தின் கட்டாயம் .


வயது கூடக் கூட 
நம் பெற்றோரும் குழந்தைகளாகி விடுவார்கள்.

முதுமையும் இனியொரு 
குழந்தைப்பருவமே 

சொன்னது மறக்கும். சொன்னதையே திரும்பச்சொல்ல வைக்கும்.

நிறையப் பேச வைக்கும்.
பேசாமல் அடம் பிடிக்கவும் வைக்கும்.

உணவின் மீது அதீத பிரியம் வெறுப்பு இரண்டும் வரும்.

நோய் கூடும்.
நோய் கூடியதை போல
காட்டத்தோன்றும்.

நோய் வந்ததை மறைக்க
கூடத்தோன்றும்.

கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் முதிர்ந்த குழந்தைகளை.

உங்களை வளர்த்தோரை நீங்கள் வளர்க்க இது ஒரு வாய்ப்பாக எண்ணுங்கள்.

அவர்களுடன் பழங்கதைகள் பேசுங்கள். 
பிடித்தவற்றைத் தேடிச் செய்யுங்கள். 
வாங்கிக் கொடுங்கள்.

நானிருக்கிறேன் என்று பாதுகாப்பை உணர செய்யுங்கள். 

எக்காரணம் கொண்டும் யாரிடத்திலும் அவர்களை விட்டுக் கொடுக்காதீர்கள்.

எங்கும் விட்டு விடாதீர்கள்.

எது எப்படியோ தாய் தகப்பன் வழியே நாம் வந்தோம்.
அந்த நன்றி மறவாமை வேண்டும்.

பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் முதிர்ந்த குழந்தைகளை.

காலங்கடந்த பச்சாதாபத்திலும், புகைப்படத்திற்கு விருந்து படைத்து கண்ணீர் விடுவதில் எந்தப் பயனுமில்லை.

இந்த வரிகள் என்னைப் பெற்ற தாய் தந்தை உட்பட அனைத்து தாய் தந்தை  மனம் குளிர அவர்களின் 
பாதங்களில்
சமர்ப்பிக்கப்படுகிறது.

~ ஈரநெஞ்சம்