Monday, September 30, 2013

இறந்தவர்களின் ஆத்மசாந்திக்காக ~ ஈரநெஞ்சம்


Inline image 1
''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
******
[For English version, please scroll down]
(208/29-09-2013)

அடையாளம் தெரியாமல் அகால மரணம் அடைந்தவர்கள் மற்றும் ஆதரவற்ற நிலையில் இயற்கையாக இறந்தவர்களையும் தனது உறவினராக எண்ணி அவர்களது உடலை ஈரநெஞ்சம் அமைப்பு நல்லடக்கம் செய்து வருகிறது. அப்படி இறந்தவர்களின் ஆத்மசாந்திக்காக கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் இன்று 29.09.13 காருண்யா பாவ பூஜை ஈரநெஞ்சம் அமைப்பு மூலம் நடத்தப்பட்டது.
இதில் ஈரநெஞ்சம் உறுப்பினர்கள் கலந்து கொண்டு இறந்தவர்களின் ஆத்மசாந்திக்காக பிராத்தனை செய்தனர்.

~நன்றி
ஈரநெஞ்சம்

Saturday, September 28, 2013

மீண்டும் ஒரு உறவை ஈரநெஞ்சம் சேர்த்து வைத்தது.



''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
******
[For English version, please scroll down]
(207/28-09-2013)

கடந்த 16/09/2013 அன்று கோவை நஞ்சப்பா ரோடு பகுதியில் 80 வயது மதிக்கத்தக்க லக்ஷ்மி அம்மாள் என்ற மூதாட்டி ஒருவர் மனநில பாதிக்க பட்ட நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் மற்றும் B3 காவல் துறையினரால் ஈரநெஞ்சம் அமைப்பிற்கு தகவல் கொடுக்கப்பட்டு , கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

https://www.facebook.com/photo.php?fbid=271635149628114&set=a.143756775749286.13398.100003448945950&type=1&theater

அதனை தொடர்ந்து லக்ஷ்மி அம்மாவின் உறவினரை தேடும் முயற்சியில் , லக்ஷ்மி அம்மாளின் புகை படத்துடன் காணவில்லை என்ற அறிவிப்பு காலை 28/09/2013 கோவை நகர பேருந்தில் கண்ட ஈரநெஞ்சம் அமைப்பினர் , அதில் இருந்த அலைபேசி என்னுடன் தொடர்புகொண்டு லக்ஷ்மி அம்மாளை பற்றி விளக்கம் கேட்டு , அந்த எண் லக்ஷ்மி அம்மாளின் மகளான தமிழ் செல்வி என்பதை உறுதி படுத்திக்கொண்டு
ஈரநெஞ்சம் லக்ஷ்மி அம்மாளை அவரது மகள் தமிழ் செல்வியுடன் இணைத்து வைத்தது.

மேலும் தமிழ் செல்வி அவர்கள் கூறு பொழுது என்னுடைய அம்மா லக்ஷ்மிஅம்மாள் தான் என்றும், சற்று மனநலம் சரியில்லாதவர் மற்றும் காதும் சரியாக கேட்காது என்றும் கூறினார். மேலும் தாங்கள் உறவினர் ஒருவரின் இறப்பிற்க்கு சென்று இருந்த பொழுது காணாமல் போய் விட்டர் . கடந்த பத்து நாட்களாக காணவில்லை எங்கு தேடியும் கிடைக்கவில்லை அம்மாவை பத்திரமாக பார்த்துக்கொண்ட மாநகராட்சி காப்பகதிர்க்கும் ஈரநெஞ்சம் அமைபிர்க்கும் நன்றியை தெரிவித்து கொண்டார்.

இதன் மூலமாக மேலும் ஒரு உறவை சேர்த்து வைத்த மகிழ்ச்சியை ஈர நெஞ்சம் தாங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறது.
நன்றி
~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

B3 police station and public informed Eeraneanjam about 80 years old lady who is mentally ill & roaming in Koavai Nanjappa road alone and no one knows about her.
Meanwhile members of Eeraneanjam saw the posters about that lady that she is Lakshmi Ammal, with her photo and contact number. Eeraneanjam contacted that number, that was her daughter tamil selvi s number, and she was informed about her mother, that she is in the care of Eeraneanjam.
Tamil selvi said her mother is mentally ill and she lost her hearing power also, 10 days back she was gone out when we were went to one funeral, they were searching everwhere and posted the posters with photo and contact number. She extended her heartfelt thanks to Corporation home and Eeraneanjam who taken care of her.
Eeraneanjam is also happy that one more person has been reunion with her family.

Thank you
~Eera Nenjam
Photo: ''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
******
[For English version, please scroll down]
(207/28-09-2013)

கடந்த 16/09/2013 அன்று கோவை நஞ்சப்பா ரோடு பகுதியில் 80 வயது மதிக்கத்தக்க லக்ஷ்மி அம்மாள் என்ற மூதாட்டி ஒருவர் மனநில பாதிக்க பட்ட நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் மற்றும் B3 காவல் துறையினரால் ஈரநெஞ்சம் அமைப்பிற்கு தகவல் கொடுக்கப்பட்டு , கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

https://www.facebook.com/eeranenjam.organization#!/photo.php?fbid=271635149628114&set=a.143756775749286.13398.100003448945950&type=1&theater

அதனை தொடர்ந்து லக்ஷ்மி அம்மாவின் உறவினரை தேடும் முயற்சியில் , லக்ஷ்மி அம்மாளின் புகை படத்துடன் காணவில்லை என்ற அறிவிப்பு காலை 28/09/2013  கோவை நகர பேருந்தில் கண்ட ஈரநெஞ்சம் அமைப்பினர் , அதில் இருந்த அலைபேசி என்னுடன் தொடர்புகொண்டு லக்ஷ்மி அம்மாளை பற்றி விளக்கம் கேட்டு , அந்த எண் லக்ஷ்மி அம்மாளின் மகளான தமிழ் செல்வி என்பதை உறுதி படுத்திக்கொண்டு
ஈரநெஞ்சம் லக்ஷ்மி அம்மாளை அவரது மகள் தமிழ் செல்வியுடன் இணைத்து வைத்தது.

மேலும் தமிழ் செல்வி அவர்கள் கூறு பொழுது என்னுடைய அம்மா லக்ஷ்மிஅம்மாள் தான் என்றும், சற்று மனநலம் சரியில்லாதவர் மற்றும் காதும் சரியாக கேட்காது என்றும் கூறினார். மேலும் தாங்கள் உறவினர் ஒருவரின் இறப்பிற்க்கு சென்று இருந்த பொழுது காணாமல் போய் விட்டர் . கடந்த பத்து நாட்களாக காணவில்லை எங்கு தேடியும் கிடைக்கவில்லை அம்மாவை பத்திரமாக பார்த்துக்கொண்ட மாநகராட்சி காப்பகதிர்க்கும் ஈரநெஞ்சம் அமைபிர்க்கும் நன்றியை தெரிவித்து கொண்டார்.

இதன் மூலமாக மேலும் ஒரு உறவை சேர்த்து வைத்த மகிழ்ச்சியை ஈர நெஞ்சம் தாங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறது.
நன்றி
~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

B3 police station and public informed Eeraneanjam about 80 years old lady who is mentally ill & roaming in Koavai Nanjappa road alone and no one knows about her.
Meanwhile members of Eeraneanjam saw the posters about that lady that she is Lakshmi Ammal, with her photo and contact number. Eeraneanjam contacted that number, that was her daughter tamil selvi s number, and she was informed about her mother, that she is in the care of Eeraneanjam.
Tamil selvi said her mother is mentally ill and she lost her hearing power also, 10 days back she was gone out when we were went to one funeral, they were searching everwhere and posted the posters with photo and contact number. She extended her heartfelt thanks to Corporation home and Eeraneanjam who taken care of her.
Eeraneanjam is also happy that one more person has been reunion with her family.

Thank you
~Eera Nenjam


Monday, September 23, 2013

ரயிலில் அடிப்பட்டு தான் யாரென்றே தெரியாத ஷேக் சலீம் ~ ஈரநெஞ்சம்***



***ஷேக் சலீம் ~ ஈரநெஞ்சம்***


ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்த  நிலையில் தலை, கை, கால் மற்றும் உடம்பில் பல்வேறு பகுதிகளில் பலத்த காயங்கள் அடைந்த வட மாநில சிறுவன் குறித்து ரயில்வே காவல்துறை அதிகாரி திரு. சபரி அவர்கள் குடுத்த தகவலின் அடிப்படையில் ஈரநெஞ்சம் அமைப்பினர் மூலம் சிறுவன் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 11 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தான்.

அந்த சிறுவன் சுமார் 15 வயது இருக்கும். வீட்டில் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டான்.  பிறகு எங்கே செல்வது என்று தெரியாமல் ஏதோ ஒரு ரயிலில் ஏறி பயணித்துள்ளான். எங்கெங்கோ சென்ற அவனுக்கு எத்தனையோ பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கிறது.

ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்து அவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. எப்படி விழுந்தான் அல்லது யாராவது தள்ளி   விட்டார்களா என்ற விவரம் ஏதும் தெரியவில்லை. பொதுமக்கள் சிலர் அவனை மீட்டு வேறு ஒரு ரயிலில் ஏற்றி அனுப்பி உள்ளனர். இந்த நிலையில் ஈரோட்டில் இருந்து கோவை வந்த ரயிலில் இருந்து தான் திரு. சபரி அவர்கள் மூலம் இந்த சிறுவனை ஈரநெஞ்சம் அமைப்பினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

முதலில் சுயநினைவு இன்றி இருந்த சிறுவனுக்கு முதலுதவி மற்றும்  ஸ்கேன் போன்ற அனைத்து சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டது.  அப்போது சிறுவனுக்கு எந்த ஆபத்தும்  இல்லை என்றும் காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் மனநிலையும் நன்றாக  இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும் அவன் தன்னை பற்றிய தகவல்களை சொல்ல தெரியாமல் மறந்து விட்டிருந்தான். கொஞ்சம் நினைவு திரும்பிய நிலையில் அவனை பற்றி விசாரித்த பொது ஒரு சில தகவல்கள் மட்டுமே அவனால் சொல்ல முடிந்தது.

அவன் பெயர் சலீம், ஒரிஸ்ஸாவில் உள்ள கட்டாக் என்ற பகுதியை சேர்ந்தவன், அவன் தந்தை சதுஜின் பெயிண்டராக      இருக்கிறார், தாய் கெத்தாம் பீபீ, இவன் அவர்களுக்கு இரண்டாவது பையன், அங்குள்ள ஒரு பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கிறான் போன்ற தகவல்களை மட்டும் சொன்னான். ஐந்து மாதங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறான். தற்போது அவனுக்கு தனது முகவரி, தொலைபேசி எண் போன்ற எந்த விவரங்களும் சொல்ல தெரியாமல் இருந்ததால் அவனது குடும்பத்தினரை  கண்டுபிடிப்பது பெரும் சிரமமாக இருந்தது.

எனினும் இணையதளம் மூலம் ஒரிஸா, கட்டாக் பகுதி காவல் நிலையத்தின் தொலைபேசி எண்  மற்றும் மின்னஞ்சல் முகவரி கண்டறியப்பட்டு அவனது புகைபடங்கள் அங்கே அனுப்பட்டது. மேலும் முகநூல் மற்றும் இணையதளங்களில் புகைப்படம் வெளியிட்டு அவனது குடும்பத்தினரை தேடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அப்போதுதான் அந்த காவல் நிலைய காவல் துறை அதிகாரி திரு. அஸ்வின் அவர்கள் மூலம் அவனது பெற்றோர் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர்  தங்கள் மகன் காணாமல்  போனதாக  புகார் அளித்துள்ளது தெரிய வந்தது. அவனது புகைபடத்தை கண்டு அவர்கள் அது தங்கள் மகன் தான் என்பதையும் உறுதி செய்துள்ளனர். தங்கள் மகன் பலத்த காயங்களுடன் இருந்ததை பார்த்து கதறி அழுதுள்ளனர்.

பின்னர் அவர்கள் உடனடியாக ரயில் மூலம் கோவை வர அங்குள்ள காவதுறையினர் ஏற்பாடு செய்தனர். இரண்டு நாட்களுக்கு முன்னர் கிளம்பிய அவர்கள் இன்று 22-09-2013 மதியம் சுமார் 2 மணிக்கு கௌஹாத்தி ட்ரெயினில் அவனது பெற்றோர் கோவை வந்தடைந்தனர். உடனடியாக அவர்கள் ஈரநெஞ்சம் அமைப்பினர் மூலம் சிறுவன் இருந்த அரசு மருத்துவமனைக்கு  அழைத்து செல்லப்பட்டனர். அங்கு தங்கள் மகனை கண்ட அவர்கள் அவனது காயம்பட்ட நிலை கண்டு வருந்தி கண்ணீர் சிந்திய போதும் தங்கள் மகனை திரும்ப பெற்று விட்ட நிம்மதியில் ஆனந்த கண்ணீரும் வடித்தனர்.மருத்துவமனையில்  இருந்த அனைவரும் கூடி அவர்களை தேற்றினார்.

மருத்துவமனையில் இருந்த போது அவன் சக நோயாளிகளிடம் சென்று உணவு வாங்கி உண்டு வந்தான். அவர்களும் அனைவரும் இவனிடம் நல்ல முறையில் பழகி விட்டனர். இவன் நிலை புரிந்து கொண்டு இவனிடம் இரக்கம் காட்டி முட்டை, ஆப்பிள்,  அப்பளம், சாதம் என இவனுக்கு வேண்டிய எல்லம்வழங்கி பார்த்துக் கொண்டனர். மருத்துவமனை ஊழியர்களும் செவிலியர்களும் இவனுக்கு நல்ல முறையில் பராமரிப்பும் சிகிச்சையும் அளித்தனர். ஓரிரு முறை சிறுவனுக்கு வலிப்பு வந்துள்ளது. அப்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து நல்ல முறையில் சிகிச்சை அளித்து வந்தனர். அவனுக்கு பாதுகாப்பும் சிகிச்சையும் அளிக்க மாவட்ட ஆட்சிசியர்   அவர்களும் வலியுறுத்தினார். ஈரநெஞ்சம் அமைப்பை சேர்ந்த திருநங்கைகள் அவனுக்கு உதவியாக அருத்துவமனையில் இருந்தனர். அவர்களும்  அவன் நல்ல முறையில் அன்போடு பார்த்துக்  கொண்டனர்.

இதனை தொடர்ந்து 23/09/13 அன்று ஷேக் சலீமிற்கு தொடர்ந்து   இங்கு சிகிச்சை பெறுவதற்கு  தங்களுக்கு மொழி பிரச்சனை இருக்கிறது அதனால்  அவனது தாய் தந்தை    தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தனர். அதற்க்கு இணங்க  மருத்துவமனையில் இருந்து சலீமை டிஸ்சார்ஜ் செய்து அன்று மதியமே ஈரநெஞ்சம் அமைப்பு சலீம் , மற்றும் அவனது பெற்றோரை ரயிலின் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.

சிறுவனின் பெற்றோர் வரும் வரையில் அவனுக்கு மருத்துவமனையில் நல்ல முறையில் சிகிச்சை அளிக்க உதவிய மருத்துவமனை தலைமை அதிகாரி, மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், அவனுக்கு சிறப்பு சிகிச்சைக்கு அனுமதி அளித்து உதவிய மாவட்ட ஆட்சியர் மற்றும் அவனுக்கு உணவு வழங்கி உதவிய உடன் இருந்த நோயாளிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் அவனுக்கு உணவு வழங்கிய கடைக்காரர்கள் அனைவருக்கும் ஈரநெஞ்சம் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

மேலும் ஈரநெஞ்சம் உறுப்பினர்களான  திருநங்கைகள் உடன் இருந்து அந்த சிறுவனை பராமரித்து வந்தனர். அவர்களுக்கும் சிறுவனை பெற்றோருடன் சேர்த்து வைக்க உதவிய காவல் துறை அதிகாரி திரு. அஸ்வின் மற்றும் ஈரநெஞ்சம் உறுப்பினர்களுக்கும் நன்றி.



~ஈரநெஞ்சம்

Thursday, September 19, 2013

வேலூரில் ஆதரவற்று இருந்தவரை காப்பகத்தில் சேர்ப்பு~ ஈரநெஞ்சம் .


''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
******
[For English version, please scroll down]
(204/18-09-2013)

வேலூர் அருகம்பாரை அரசு மருத்துவமனை அருகே ஆதரவற்று இருவர் ரோட்டில் கிடப்பதை அவ்வூரை சார்ந்த ஜெய்சங்கர் என்பவர் பார்த்துள்ளார் மேலும் அவர்களிடம் பேசியதில் அந்த இருண்டு நபரில் ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்டு பேச இயலாத நிலையிலும் மற்றோவர் பெயர் மணி என்றும் அவருக்கு யாரும் இல்லை என்பதையும் அறிந்த அவர் அவர்களை காப்பகத்தில் சேர்க்க கடந்த ஐந்து நாட்களாகமுயற்சித்து வந்து இருக்கிறார் , அவருக்கு போதிய உதவி கிடைக்காத நிலையில் அவர் ஈரநெஞ்சம் அமைப்பை தொடர்பு கொண்டு அவருக்கு உதவி அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்பு மேற்கொண்ட முயற்சியுடன் அந்த இரண்டு நபர்களையும் செங்கல்பட்டு பாலேஸ்வரத்தில் உள்ள புனித ஜோசெப் கருணை இல்லத்தில் நேற்று 17.09.13 சேர்கப்படர்கள் என்பதை ஈரநெஞ்சம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறது. மேலும் அவர்களுக்கு உதவ நினைத்த ஜெய்சங்கர் அவர்களின் நல்ல உள்ளதை ஈரநெஞ்சம் பாராட்டுகிறது.

நன்றி
~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Near Vellore Arumbaarai government hospital two unknown people were identified by Mr Jaishankar. He came to know that one is mentally ill and can’t speak as well, another one Mr. Mani is aged and no one to take care of him, so Mr.Jaishankar wants to admit both of them in a home, he searching the home for past 5 days. At last he approached Eeraneanjam to help to admit both in a home. Eearaneanjam helped him to admit both in St Josephs home at Paaleshvaram, Sengalpattu, on 17/09/13. Eeraneanjam appreciate the initiative taken by Mr Jaishankar to help them.

Thank you
~Eera Nenjam
Photo: ''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
******
[For English version, please scroll down]
(204/18-09-2013)

வேலூர் அருகம்பாரை அரசு மருத்துவமனை அருகே ஆதரவற்று இருவர் ரோட்டில் கிடப்பதை அவ்வூரை சார்ந்த ஜெய்சங்கர் என்பவர் பார்த்துள்ளார் மேலும் அவர்களிடம் பேசியதில் அந்த இருண்டு நபரில் ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்டு பேச இயலாத நிலையிலும் மற்றோவர் பெயர் மணி என்றும் அவருக்கு யாரும் இல்லை என்பதையும் அறிந்த அவர் அவர்களை காப்பகத்தில் சேர்க்க கடந்த ஐந்து நாட்களாகமுயற்சித்து வந்து இருக்கிறார் , அவருக்கு போதிய உதவி கிடைக்காத நிலையில் அவர் ஈரநெஞ்சம் அமைப்பை தொடர்பு கொண்டு அவருக்கு உதவி அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்பு மேற்கொண்ட முயற்சியுடன் அந்த இரண்டு நபர்களையும் செங்கல்பட்டு பாலேஸ்வரத்தில் உள்ள புனித ஜோசெப் கருணை இல்லத்தில் நேற்று 17.09.13 சேர்கப்படர்கள் என்பதை ஈரநெஞ்சம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறது. மேலும் அவர்களுக்கு உதவ நினைத்த ஜெய்சங்கர் அவர்களின் நல்ல உள்ளதை ஈரநெஞ்சம் பாராட்டுகிறது.

நன்றி
~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Near Vellore Arumbaarai government hospital two unknown people were identified by Mr Jaishankar. He came to know that one is mentally ill and can’t speak as well, another one Mr. Mani is aged and no one to take care of him, so Mr.Jaishankar wants to admit both of them in a home, he searching the home for past 5 days. At last he approached Eeraneanjam to help to admit both in a home. Eearaneanjam helped him to admit both in St Josephs home at Paaleshvaram, Sengalpattu, on 17/09/13. Eeraneanjam appreciate the initiative taken by Mr Jaishankar to help them.

Thank you
~Eera Nenjam

மனிதாபிமானம் மரிக்கவில்லை:-

மனிதாபிமானம் மரிக்கவில்லை:-

சக மனிதர்களிடம் குறிப்பாக துயரத்தில் சிக்கி தவிப்போரிடம் காட்டும் அன்பு,இரக்கம் போன்றவைகளை மனிதாபிமானம் எனக் கூறலாம்.விபத்தில் அடிபட்டு சாகக்கிடப்பவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தால், அங்கே மனிதாபிமானம் வாழ்கிறது. இவ்வகையில் மனிதபிமானதிற்க்கு உதாரணமாக இருப்பவர்தான் 'கோவை ஆம்புலன்ஸ் முருகேசன்'.

தமிழகத்தில் வாழும் கோடிக்கணக்கான மனிதர்களில் இவரும் ஒருவர்.கோவையில் அவசர ஊர்தியில் வாகன ஒட்டுனராக பணியாற்றி வரும் முருகேசன்,கடந்த செப்டம்பர் மாதம் 12 ம் தேதி இரவு வழக்கம் போல தன் பணியை முடித்துக்கொண்டு இரவு 8 மணியளவில் கோவை-தடாகம் சாலையில் வந்து கொண்டிருந்தார்.அங்கே அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சிக்குள்ளாகியது.ஒரு இளைஞரை பத்துக்கும் மேற்பட்டோர் அடித்துக்கொண்டிருந்தனர். கூட்டத்தை விலக்கிப் பார்த்தால் அந்த இளைஞர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் போலத் தெரிந்தது.உண்மைதான் அவர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்தான்.அங்கிருந்தவர்களை பாவம் அவரை அடிக்காதிர்கள் இவரை அடிக்கிறீர்கள் என வினவ, அந்த இளைஞர் பொதுமக்களுக்கு இடையூறு செய்வதாகவும், அவ்வழியே செல்லும் ஆட்டோ போன்ற வாகனங்களை பிடித்து இழுப்பதாகவும் அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.

பிறகு மெதுவாக கோவை முருகேசன் அந்த இளைஞரிடம் பேசினார்.ஹிந்தி கோவை முருகேசனுக்கும் தெரியும் என்பதால் அந்த வாலிபரை கூட்டத்தில் இருந்து மீட்டு காவல் நிலையத்தில் சேர்த்தார் காவலர்கள் உதவியுடன் .பாதிக்கப்பட்ட இளைஞர் பின்பு R.S.புரத்தில் உள்ள முதியோர் காப்பகத்தில் சேர்த்தார்.பாதிக்கப்பட்ட நபர் இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே கட்டிக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.கோவை முருகேசனுக்கு உதவியாக அவரது நண்பர்கள் ஜோதிமணி
மற்றும் M.P.K.முருகேசன் உடனிருந்தனர்.பிறகு சகஜ நிலைக்கு வந்த அந்த இளைஞரை விசாரித்ததில் அவர் பெயர் சிண்டு என்றும்,வயது 28 ஆகிறது என்றும் திருமணமாகி மனைவியும்,4 வயதில் குழந்தையும் இருப்பதாக அந்த வாலிபர் கூறினார்.உடனடியாக கல்கத்தாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சிந்துவின் அப்பாவும்,பக்கத்து வீட்டுக்காரரும் வரவழைக்கப்பட்டனர்.பின்னர் பத்திரமாக சிண்டுவை
அவர்கள் கரங்களில் ஒப்படைத்தனர்.

கோவை முருகேசன் கூறிய கருத்துக்கள் நம்மை ஆச்சர்யத்தில் மூழ்கடித்தன.ஈரநெஞ்சம் என்னும் சமூக சேவை அமைப்பின் செயல்பாடுகளும்,மனிதாபிமானச் செயல்களும் தன்னை வெகுவாகக் கவர்ந்து தன்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறினார்.மேலும் சமூகத்திற்கு தானும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாகவும் கூறினார்.

ஒரு மனிதன் சமுதாயத்தில் கொலை,கொள்ளைப் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கூட சட்டப்படி தண்டிக்கின்றார்கள் .அப்படிப்பட்ட ஒரு சூழலில் ஏதோ தன் விதிவசத்தால் வீட்டை விட்டு
வெளியேறி அங்கும் இங்கும் அலைந்து திரிந்து உணர்ச்சிவசப்பட்ட நிலையில் செய்வதறியாது செய்த குற்றத்திற்கு அவரை ஒன்று கூடி அடித்தல் முறையாகுமா? நாம் ஒவ்வொருவரும் முடிந்த வரையில்
மனிதபிமானதொடு வாழ்வோம்.மேலும் கோவை முருகேசனைப் போன்றோர் இருப்பதாலும்,இவர்களைப் போன்ற சாதாரண மனிதர்களையும் மனிதபிமானதோடு நடந்து கொள்ளச் செய்யும் தாக்கத்தை ஏற்படும் 'ஈரநெஞ்சம்' போன்ற சமுதாய அக்கறை கொண்ட அமைப்புகளாலும் 'மனிதாபிமானம் இன்னும் மரிக்கவில்லை' வாழ்ந்து கொண்டுதான் உள்ளது என்பதை கண்கூடாக காணமுடிகிறது.REAL லைப் HERO,கோவை முருகேசனுக்கும் அவர் நண்பர்களுக்கும் ஈரநெஞ்சத்திற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மனித நேயத்தை வளர்ப்போம்..மனிதாபிமானத்தைப் போற்றுவோம்!

-எழுத்தாளர்,என்.டி.சரவணன்



Wednesday, September 04, 2013

"சா. முத்துக்குமார் . - கிராமியக் கலைகளின் காவ(த)லன்" ~மகேந்திரன்


"மாறிவரும் நாகரிக வளர்ச்சியில், கிராமிய கலைகளை அழிந்துவிடாமல் காத்துவரும் கலைமாமணி"

எந்த ஒரு செயலும் சாமான்ய மக்களிடம் எளிதில் சென்றடைய உதவியாக இருந்தது இந்தக் கிராமியக்கலை. சுதந்திர போராட்ட காலத்தில் விடுதலை உணர்வை ஊட்டியதில் கிராமியக் கலைக்கும் அதிக பங்குண்டு. கிராமிய கலைகள் மூலமே தேசிய ஒருமைப்பாடு, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்த முடிந்தது அக்காலத்தில். ஆனால் தற்போது மேற்கத்திய கலாசாரத்தில் உள்ள மோகத்தினால் கிராமிய கலைகளில் ஆர்வம் குறைகிறது .அடியோடு புதைந்துவிடுமோ என அஞ்சவேண்டியுள்ளது. எங்கும் எதிலும் சினிமா மோகங்கள் சினிமா துறையில் உள்ள ஒரு மதிப்பும் மரியாதையும் கிராமியக்களைகளுக்கு இல்லையே..? அழிந்து வரும் கிராமிய கலையை ஓரளவாவது மீட்டு எடுக்க வேண்டும் . அதற்கு கிராமிய கலைகளை மேம்படுத்தியாக வேண்டும் என்ற நோக்கத்தில் இன்னும் பண்பாடு மாறாமல் கிராமிய கலைகளை மிக தத்ரூபமான வேடம் அணிந்து மக்களையும் அரசாங்கத்தையும் மட்டும் இல்லைங்க மேல் நாட்டவரையும் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறார் இந்த அரிய கிராமத்தான் கலைமாமணி சா.முத்துக்குமார்.
47 வயதாகும் இவர் சாமி ஐயா, தரணி அம்மாள் தம்பதியருக்கு மகன். மிகவும் பின்தங்கிய வகுப்பை சேர்ந்தவர், 25 வருடங்களாக இந்த கிராமியக்கலையில் ஈடுபட்டுள்ளார். திருவாரூரில் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த அவர் அப்பகுதியில் கோவில் திருவிழாக்களில் நடக்கும் கிராமிய கலைகளில் மிகுந்த மோகம் கொண்டவர்.அந்த மோகத்தினாலேயே அக்கலையை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் தனது படிப்பை பத்தாம் வகுப்புவரை முடித்துக்கொண்டு தஞ்சையில் பொன்னையா நாட்டியக் கல்லூரியில் பரதம் கற்றுக்கொண்டார் அதன் பிறகு பிழைப்பிற்க்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணியாற்றிக்கொண்டே தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு நாட்டிய குழு உருவாக்கினார் .
நேரு யுவகேந்திரா மூலமாக "தேசிய இளைஞர் கலைவிழா" துவக்கப்பட்ட காலத்தில் , கிராமிய கலை நடத்த தமிழகத்தின் சார்பாக இவரது குழுவிற்கு போபாலில் கலைநிகழ்ச்சி நடத்த அழைப்புவந்தது. அதை ஏற்றுக்கொண்டு அங்கு கிராமிய கலையான காளியாட்டம் அரங்கேற்றினர், அதை பற்றி இவர் கூறும்போது சிறுவயதில் திருவாரூரில் கோவில்களில் இந்த காளியாட்டம் நடத்துவார்கள் அதை நான் காணவேண்டும் என்பதற்காகவே பல சமயம் பள்ளிக்கு செல்லாமல் காளியாட்டதை காண போய் இருக்கிறேன் . போபாலில் கிராமிய கலை மட்டுமே நடத்தவேண்டும் என்பதற்காக திருவாரூர் காளியாட்ட குழுவிடம் அலங்கார உடைகளை வாங்கிக்கொண்டு சென்றேன். நல்லவரவேற்ப்பு கிடைத்தது அப்போது இருந்தே பரதநாட்டியத்தை விட்டுவிட்டு இது போன்ற கிராமியகலையை மேம்படுத்த முயற்சி மேற்கொண்டேன் என்றார்.
அதனை தொடர்ந்து இவரது கிராமிய கலை நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்ப்பு கிடைக்க ஒருகட்டத்தில் தான் பணியாற்றிய அரசு வேலையான தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக் பணியையும் விட்டுவிட்டு நண்பர்களோடு சிவசக்தி கிராமிய கலை குழு என்று முழுநேரமும் கிராமிய கலையில் ஈடுபட துவங்கினார் சா. முத்துக்குமார். கிராமிய கலையில் பல புதுமைகளை புகுத்த வேண்டும் என்பதற்காக சிவன் பார்வதி, விநாயகர், காளி போன்ற வேடங்களுக்கு கைகளும், முகங்களும் இயற்கையாக இருக்கவேண்டும் என்பதற்காக பல இடங்களில் தேடி கேரளாவிற்கு சென்று இயற்கையாக காட்சிதரும் கை, முகம் உருவங்களுக்கு ஆர்டர் செய்து வாங்கி தற்போது பெரும் மாற்றம் செய்துள்ளார் , மூன்றுமணிநேரம் ஒரே இடத்தில அமர்ந்து காளி போன்ற வேடம் அணிந்த பிறகு இவரை பார்க்கும் போது காளி உருவம் மிகதத்ரூபமாக இருப்பதை காணமுடிகிறது.
நமது கிராமிய கலைகளுக்கு நாம் மதிப்பு கொடுக்காவிட்டாலும் சுவிட்சர்லாந்தில் கிராமியகலைகளுக்கு அதுவும் இந்திய கலைகளுக்கு சா.முத்துக்குமார் அவர்களின் முயற்சியால் நல்ல வரவேற்ப்பும் மரியாதையும் ஏற்படுத்தி இருக்கிறார். சுவிட்சர்லாந்தில் வருடா வருடம் "ஆசிய உணவு மற்றும் கலைவிழா" நிகழ்ச்சி 40 நாட்கள் தொடர்ந்து நடத்தப்படுகிறார்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இந்தியாவில் இருந்து சா. முத்துக்குமார் மட்டுமே தொடர்ந்து 4 முறை பங்கேற்று இருப்பது மிக குறிப்பிடத்தக்கது. அதுபோல ஜெர்மன், ஓமன் , சிங்கப்பூர், போன்ற நாடுகளில் நமது இந்தியாவின் பாரம்பரிய கிராமிய கலைகளின் பெருமைகளை அந்த நாடுகளில் நிலைநாட்டி உள்ளார் .
மேலை நாடுகளில் நமது கிராமிய கலைகளின் பெருமையை பறைசாற்றியதர்க்காகவே சா. முத்துக்குமார் அவர்களுக்கு சல்யூட் அடிக்கனும்.
சா.முத்துக்குமார் அவர்களின் அயராத அர்ப்பணிப்பை கவுரவ படுத்தும் விதமாக தமிழக அரசு இவரை கவுரவப்படுத்தியது, இவரது கலை பணிக்காக கடந்த 2007 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் திரு. மு. கருணாநிதி அவர்கள் கையால் கலைமாமணி விருது பெற்று கௌரவிக்கப்பட்டார். ஒரு கலைஞனுக்கு என்னங்க வேண்டும் நல்ல பாராட்டுக்களும் , நல்ல ஊக்கங்களுமே போதுமானது அந்த ஊக்கங்களும் பாராட்டுக்களும் அவனது வெற்றிக்கு மட்டும் இல்லை நாட்டின் பெருமைக்கும் ஒரு ஊன்றுகோலாகும் என்பது உண்மைங்க. கலைமாமணி சா.முத்துக்குமார் , கலைமாமணி விருது பற்றி கூறும்போது இந்த விருது கிராமிய கலையான காளியாட்டதிற்க்காக எனக்கு வழங்கப்பட்டுள்ளது. கலைமாமணி விருது மிக சிறந்த கலைஞர்களுக்காக வழங்கப்படுவது கடந்த 40 ஆண்டுகளில் காளியாட்டதிற்க்காக எனக்கு மட்டுமே கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது என்பதில் பெருமைபடுகிறேன். அவர் மட்டுமா நாமும் தான் பெருமைபடுகிறோம் இல்லைங்களா.
இறுதியாக இவரிடம் நான்கேட்டேன் நீங்க கிராமகலை கலை பற்றி இவ்வளவு விஷயம் அறிந்திருக்கின்றிர்கள் . மேல் நாடுகளில் புகழ் பெற்ற நமது கிராமிய கலைகள் தமிழகத்தில் உள்ள நகரங்களில் அவ்வளவு வளர்ச்சி இல்லையே என்ன காரணம் கேட்டபோது கடந்த சிலவருடங்களுக்கு முன் சென்னையில் "சங்கமம்" என்று கலைவிழா, கிராமிய கலைஞர்களை அறிமுகப்படுத்தவும் அவர்களின் கலைகளை வெளிக்கொண்டுவரவும் அமைந்திருந்தது. அதில்தான் நானும் முதல்முறையாக தமிழகத்தில் இவ்வளவு கிராமிய கலைஞர்களா என என்னை ஆச்சர்யப்பட வைத்தது. அதுபோன்ற நிகழ்சிகளை எல்லா நகரங்களிலும் அறிமுகப்படுத்தலாம். அது மட்டும் இல்லைங்க எல்லா நாட்டிலும் தமிழ் சங்கம் உள்ளது அதில் எல்லாம் சினிமாவுக்கே மிக முக்கியத்துவம் தருகிறார்கள் கிராமியகலைகளை கண்டுகொள்வது இல்லை. அங்கெல்லாம் கிராமிய கலைகளை அறிமுகப்படுத்தினால் கிராமங்களின் வளர்ச்சிக்கும் பயனுடையதாக இருக்கும் என்றார்.
உண்மைதானுங்க நான் கூட கேட்டிருக்கிறேன் கிராமிய கலைகளுக்காக கல்லூரிகளில் தனி பாடம் கூட இருகின்றதாம், அங்கெல்லாம் 40 பேர் படிக்கும் பள்ளி அறையில் 4 பேர் கூட படிப்பது இல்லையாம் . கலைமாமணி அந்தஸ்து பெற்றிருக்கும் இந்த கலைகளை மேம்படுத்த மேற்க்கத்திய நடனங்களை கற்றுகொள்ளும் இன்றைய இளைஞர்கள் இதுபோன்ற கிராமிய நடனங்களையும் கற்றுக்கொண்டால் என்ன ?

~மகேந்திரன்