Showing posts with label உறவினர்கள். Show all posts
Showing posts with label உறவினர்கள். Show all posts

Tuesday, June 09, 2015

கர்னாடக மாநில பார்வை இழந்த பெண் உறவினர்களுடன் ஒப்படைப்பு.

ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM" Services
*********************************************************************
( 475 / 09-06-2015 )

பெரும் முயற்சிக்கு பின் லட்சுமியின் உறவினர்கள் கோவைக்கு அழைத்து வரப்பட்டது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கடந்த 30/05/2015 அன்று கோவை ரயில் நிலையத்தில் பார்வை இல்லாத   15 வயது மதிக்கத்தக்க  லட்சுமி என்ற பெண்  அழுதுக்  கொண்டு ரயில் நிலையத்தில் தடுமாறிக்கொண்டு இருப்பதைகண்டு  கோவை ரயில் நிலைய காவலர்கள் மீட்டு அவளுக்கு பாதுகாப்பு கொடுக்கும் படி கோவை மாநகராட்சி காப்பகத்தில் அனுமதித்தனர்.

இதனை தொடர்ந்து ஈரநெஞ்சம் அறக்கட்டளை லட்சுமியிடம்  விசாரித்து அவளுடைய  உறவினர் கர்னாடக மாநிலத்தில் யாத்கிர் என்ற ஊரில்  இருப்பதை அறிந்து அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியை மேற்கொண்டது.

https://www.facebook.com/eeranenjam/photos/a.536357046461716.1073741832.199260110171413/741035142660571/?type=1&theater



அதன் பயனாக லட்சுமியின் தந்தை மஞ்சுநாத் மற்றும் உறவினர்கள்  தொடர்பு கிடைத்தது . அவர்களிடம் லட்சுமியை பற்றி விபரம்  தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கு படிப்பறிவும் போதிய வருமானமும் இல்லாததால் அவர்களால் கோவை வரை வருவதற்கு முடியாமல் இருந்து வந்தது.  அதுமட்டும் இல்லாமல் தொடர்ந்து  இவர்களிடம் தொடர்புகொள்ள மொழி பிரச்சினை இருந்துக் கொண்டே இருந்தது. இதனால் லட்சுமி அவளது உறவினர்களுடன் இணைவதில் தாமதமாகிக் கொண்டிருந்தது.

இதனால் லட்சுமிக்கு தாய் தந்தையுடன் இணையவேண்டும் என்று ஏக்கம் அதிகமாகி காப்பகத்தில் சரிவர உறங்காமல் உணவும் உண்ணாமல் அழுதுக் கொண்டே இருப்பது  மனதையும் கலங்க வைத்துக் கொண்டிருந்தது.

இந்த இக்கட்டான நிலையில் பட்டுக் கோட்டையில் மிகவும் பிரபலமான ராஜா க்ரூப்ஸ் நிறுவனரும் முகநூல் நண்பருமான  சிதம்பரம்



அவர்கள் ஈரநெஞ்சம் அறக்கட்டளையுடன் தொடர்புகொண்டு லட்சுமியின் நிலையை பற்றி விபரம் கேட்டு அவளுக்காக நாங்களும் உங்களோடு சேர்த்து அவளது உறவினரை  அழைத்துவர முயற்சி எடுக்கின்றோம் என்று கேட்டுக் கொண்டு அதன்டடி . ஈரநெஞ்சம் அறக்கட்டளை மற்றும் பட்டுக் கோட்டை  ராஜா க்ரூஸ் இணைத்து கர்னாடக மாநிலம் யாதிர் ஊரில்  உள்ள லட்சுமியின் உறவினர்களை அழைத்துவரும் முயற்சியை மேற்கொண்டது.

இதில் ராஜா க்ரூப்ஸ் பணியாளர் விக்னேஷ் அவர்கள்  05/06/2015 அன்று  நேரடியாக யாத்கிர் சென்று லட்சுமியின் தந்தை மஞ்சுநாத் மற்றும் அவளது மாமா நாகப்பாவை அழைத்துக் கொண்டு நேற்று 08/06/2015 கோவைக்கு அழைத்து வந்தார்.

காப்பகத்தில் இருக்கும் லட்சுமி அவர்களைக் கண்டதும் கட்டித்தழுவியா அந்த பாசம் நிறைந்த  காட்சி காண கண்கோடி வேண்டும்.

இந்த அத்தனை வெற்றியும்  லட்சுமிக்காக பெரும்  சிரமமும்  முயற்சியும் எடுத்துக் கொண்ட பட்டுக் கோட்டை சேர்ந்த ராஜாக்ரூப்ஸ் பணியாளர் விக்னேஷ்



அவருக்கே  சேரும்.

லட்சுமியின் மாமா நாகப்பா கூறும்பொழுது :
நாங்கள் மிகவும் வருமையானவர்கள் ஊசி பாசி விற்று பிழைப்பவர்கள் ,  லட்சுமி என்றால் எங்களுக்கு மிகவும் பிடிக்கும் செல்லப்பிள்ளை. எப்படி இங்கு வந்தால் என்று தெரியவில்லை எங்களால் முடிந்தவரை எங்கெல்லாமோ தேடினோம் கிடைக்கவில்லை இனியும் கிடைப்பாள என்ற நம்பிக்கை குறைந்து கொண்டு இருந்தது. இந்த நிலையில்  கடந்த 20 நாட்களுக்கு முன் ஈரநெஞ்சம் அரக்கட்டளையிடம் இருந்து லட்சுமியை பற்றியும் அவள் கோவையில் இருப்பதை பற்றியும் தகவல் வந்தது. எங்களுக்கு கோவை எங்கு இருக்கிறது என்றே தெரியாது எப்படி அவளை மீட்பது என்றும் தெரியாது இருந்தது. இந்த நிலையில்  விக்னேஷ் என்பவர் கடவுளைப்போல இங்கு வந்து எங்களை அழைத்துக்கொண்டு லட்சுமியிடம் சேர்த்தார். அவருக்கும் இங்குள்ள அனைவருக்கும் நாங்கள் எந்த வழியில் நன்றியை தெரிவிப்பது என்று தெரியவில்லை என்று கூறினார்.

மேலும் .வழி தடுமாறி கோவையில் தஞ்சமான பார்வை இல்லாத  லட்சுமிக்கு  கண் பார்வை சிகிச்சை மேற்கொள்வதற்கு பட்டுக் கோட்டை ராஜா க்ரூப்ஸ் உதவுவதாகவும் கூறியது  தமிழ் நாட்டில் தடுமாறி வந்தவர்களுக்கு தமிழ் மக்கள் எவ்வளவு தூரம் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

அதோடு காப்பகத்தில் இருப்பவர்கள் மற்றும் ஈரநெஞ்சம் அறக்கட்டளை லட்சுமிக்கு தேவையான உடைகளும் மற்ற பொருட்களும் வழங்கி அவளது சொந்த ஊருக்கு சந்தோசமாக வழியனுப்ப உள்ளார்கள் இன்று கோவை PSG மருத்துவமனையில் லட்சுமியின் கண்களுக்கு முதல்கட்ட பரிசோதனை முடித்துக் கொண்டு இன்று 09/06/2015 இரவு ரயிலில் சொந்த ஊரான யாத்கிர் செல்கிறார்கள்.

ஈரநெஞ்சம் அறக்கட்டளை லட்சுமியின் சார்பாக பட்டுக் கோட்டை ராஜா க்ரூப்ஸ் நிறுவனத்திற்கும் . அதன் பணியாளர் விக்னேஷ் அவர்களுக்கும் . கோவை மாநகராட்சி காப்பகதிர்க்கும் மற்றும் லட்சுமியின் உறவு கிடைப்பதற்காக முயற்சி எடுத்துக் கொண்ட நண்பர்களுக்கும்  நன்றியோடு  வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.



~ஈரநெஞ்சம்
www.facebook.com/eeranenjam

Friday, April 18, 2014

ஒரு சில மணிநேரத்தில் பூவம்மாள் உறவினர் கண்டுபிடித்து ~ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services
" ******
(294/18-04-2014)
கோவை லாலி சாலையில் இன்று 18/04/2014 ஒரு பூவம்மாள் (சுமார் 90 வயது) என்ற மூதாட்டி வழிதவறி எங்கு செல்வது என்று தெரியாத நிலையில் 3 நாட்களாக சுற்றிதிரிவதை கண்ட கோவையை சேர்ந்த தோழர் அறக்கட்டளை உறுப்பினர்கள் மூதாட்டியை மீட்டு கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்தனர் . அதனைதொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்பு அந்த பாட்டிக்கு உறவினர்கள் இருக்கிறார்களா என கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டது ஒருசில மணிநேரத்தில் அந்த பாட்டியின் மகன் காசிலிங்கம் கண்டு பிடிக்கப்பட்டு அவர்கள் வந்து அந்த பாட்டியை அழைத்து சென்றனர் .
இதை பற்றி பூவம்மாள் மகன் காசிலிங்கம் கூறும் போது நாங்கள் சௌரிபாளையம் பகுதியில் வசித்து வருகிறோம் எனது அம்மாவிற்கு கொஞ்சம் ஞாபக மறதி , கடந்த திங்கட்கிழமை 14/04/2014 அன்று காலை வீட்டில் இருந்து காணாமல் போய்விட்டார். எங்களது சொந்த ஊர் தூத்துக்குடி அருகில் இருக்கும் ஆத்தூர் , ஒருவேளை அங்கு என்னுடைய சகோதரர் வீட்டிற்கு சென்றிருக்கலாம் என்றும் நாங்கள் அனைவரும் எல்லா இடத்திலும் தேடியபடி இருக்கிறோம் . கோவை B6 காவல் நிலையத்திலும் இவரை காணவில்லை என்ற புகார் கொடுத்துள்ளோம் . என்றும் இன்று 18/04/2014 ஈரநெஞ்சம் அமைப்பை சேர்ந்தவர்கள் உதவியால் எங்களுடைய அம்மா கிடைத்து விட்டார்கள் என்றும் தங்களது மகிழ்ச்சியை நன்றியையும் வெளிப்படுத்தி ஈரநெஞ்சம் அமைபிற்கும் மாநகராட்சி காப்பகத்திற்கும் மற்றும் தோழர் அறக்கட்டளைக்கும் தெரிவித்துக் கொண்டனர்.
மீண்டும் ஒரு உறவை குடும்பத்தினருடன் இணைத்து வைத்த மகிழ்ச்சியில் ஈரநெஞ்சம் அமைப்பினர்.
நன்றி
~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

தேவராஜ் உறவினர்கள் கண்டுபிடிப்பு ~ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services
" ******
(293/18-04-2014)

கோவை 17-04-2014: திரு தேவராஜ், வயது 90, இவர் புலியகுளம், அன்னை தெரசா மகளிர் பள்ளி அருகில் கண் சரி இல்லாமல் பசி மயக்கத்துடன், துணைக்கு யாருமின்றி இருப்பதாக பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் திரு தேவராஜை மீட்டு ஈரநெஞ்சம் அமைப்பு கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்தனர் , அதனைதொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்பு திரு தேவராஜ் அவருக்கு மகன்களும் மகளும் இருப்பதை அறிந்து அவர்களை தேடி கண்டறியும் முயற்சியில் இறங்கியது அதன் பலனாக அவரது மகன் கந்தசாமி மற்றும் வேங்கடராஜன் தொடர்பு கிடைத்தது. அவர்களிடம் அவர்களுடைய தந்தை திரு தேவராஜ், நிலையை பற்றி தெரிவித்து வந்து அழைத்து செல்லுமாறு ஈரநெஞ்சம் அமைப்பினர் கேட்டுக் கொண்டனர்.
https://www.facebook.com/photo.php?fbid=319653774826251&set=a.143756775749286.13398.100003448945950&type=1&theater

அதனை தொடர்ந்து இன்று 18-04-2014 இன்று திரு தேவராஜின் மகன் வேங்கடராஜன் , மகள் விஜயா இருவரும் கோவை வந்து தங்களின் தந்தையை அழைத்து சென்றனர். இதை பற்றி அவர்கள் கூறும் போது " நாங்கள் இனி இவரை நல்லபடி பார்த்துக்கொள்கிறோம் இந்நாள்வரை கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார் ஆனால் இப்போது இவருக்கு இப்படி பட்ட நிலை ஏற்படும் என்று தெரியாது என்றும் இவரை காப்பாற்றி பாது காப்பு கொடுத்து எங்களிடம் ஒப்படைதமைக்கு ஈரநெஞ்சம் , அமைப்பிற்கும் கோவை மாநகராட்சி காப்பகத்திற்கும் மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் . என்றனர் "

மீண்டும் ஒரு உறவை குடும்பத்தினருடன் இணைத்து வைத்த மகிழ்ச்சியில் ஈரநெஞ்சம் அமைப்பினர்.

நன்றி
~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Wednesday, December 25, 2013

புதுக்கோட்டை ஸ்ரீ ராமலு உறவினருடன் ஒப்படைப்பு~ ஈரநெஞ்சம்







''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
******
[For English version, please scroll down]
(245/25-12-2013)
புதுகோட்டையில் ஸ்ரீராமலு என்ற 75 வயதான முதியவர் தனது மகனுடன் நடந்த குடும்ப தகராறில் வீட்டிலிருந்து வெளியேற்றபட்டார். எங்கு செல்வது என்று தெரியாமல், தன் மகளின் முகவரியும் தெரியாமல், கோவையில் தனது நண்பர்களை சந்திக்க வந்த ஸ்ரீராமுலு உடல் நிலை சரி இல்லாத நிலையில் மருத்துவமனையில் நடக்க இயலாத நிலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகும் நடக்க முடியாமல் எங்கு செல்வது என்று தெரியமால் மழையில் நனைந்து சாலையோரம் கிடந்த அவரை B3 காவல் துறையினர் ஈரநெஞ்சம் அமைப்பிற்கு தகவல் கொடுத்தனர். அதனைதொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்பு அந்த முதியவரை மீட்டு கோவை மாநகராட்சி காப்பகத்தில் (22/10/13) அன்று சேர்த்தது.

https://www.facebook.com/photo.php?fbid=279912475467048&set=pb.100003448945950.-2207520000.1387979573.&type=3&theater


ஸ்ரீ ராமலு மருத்துவ உதவியுடன் காப்பகத்தில் நல்லமுறையில் பராமரிக்கப்பட்டுவந்தனர்.
மேலும் ஸ்ரீராமலு கொடுத்த தகவலை வைத்து அவருடைய உறவினர்களை தேடும் முயற்சியில் ஈர நெஞ்சம் மற்றும் புதுகோட்டை காவல் துறையினர் ஈடுபட்டனர். ஸ்ரீராமலு கொடுத்த தொலைபேசி எண் தவறாக இருந்தது. அனால் தொடர்ந்து அவருடைய மகள் ஹேமாவை தேடும் முயற்சி நடந்து வந்தது. நேற்று ஈர நஞ்சம் அமைப்பினர் சண்முகம் என்ற நகர காவல் துறை துணை ஆய்வாளர் உதவியினால் ஸ்ரீராமுலுவின் மகள் ஹேமாவின் விலாசத்தை கண்டுபிடித்தனர். இதைடுத்து இன்று (25.12.13)அவரை ஈர நெஞ்சம் அமைப்பினர் ஹேமாவிடம் ஒப்படைத்தனர். கணவரை இழந்து தனியாக வாழும் ஹேமாவுக்கு தன் தந்தை திரும்ப கிடைத்ததில் அளவற்ற மகிழ்ச்சி. ஸ்ரீராமலுவின் மனைவி திருமதி பிரேமாவும் தன் கணவர் திரும்ப கிடைத்ததற்கு ஈர நெஞ்சம் அமைபிற்கு நன்றியை தெரிவித்தார்.

http://youtu.be/y117XG1FDW0

யாரும் உதவாத நிலையில் தன்னை மீட்டு காப்பகத்தில் சேர்த்ததற்கும் மேலும் தன் மகளுடன் தன்னை சேர்த்ததற்கும் ஸ்ரீராமலு ஈரநெஞ்சம் அமைப்பிற்கு நன்றியை தெரிவிதுகொண்டார். இதற்க்கு பெரிதும் உதவி செய்த காவல் துறை அதிகாரி திரு. சண்முகம் அவர்களுக்கும் ஈர நெஞ்சம் உறுபினர்களுக்கும், ஈர நெஞ்சம் தன்னுடைய நன்றிகளை தெரிவித்துகொண்டது.
~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Sri Ramalu the 75 year old man was abused by his sons and was chased away from pudhukottai. He was unable to walk and admitted to be treated at the hospital in Coimbatore. After the treatment he didn't know where to go and was drenched in the rain. The B3 Police service noticed his situation and contacted Eera Nenjam. following that Eera Nenjam rescued him and admitted him at Coimbatore City Corporation Home. Now he is feeling better but could not remember any details properly. The phone number that he gave to the police as his daughter’s number was also wrong. But still eera nanjam was constantly taking efforts to find out his daughter’s address. At last his daughter Hema’s address was found out with the help of S.I Mr. Shanmugam of pudhukottai. He showed interest in helping sriramalu and was very helpful. Hema was very happy to have found her father and expressed her willingness to take care of her father. She lives alone after her husband’s death and she was happy to have her father back with her. Mr. Sriramalu’s wife Mrs. Prema also came along with her daughter and was extremely happy about her husband’s safety. The entire family was happy and they sincerely thanked Eera nenjam for this noble service. Eera nenjam sincerely thanks Mr. Shanmugam (S.I of Police, Pudhukottai) and the members of eera enjam who has helped Mr. Sriramulu to find his family.

~Thank You
Eera Nenjam