Showing posts with label உதவி. Show all posts
Showing posts with label உதவி. Show all posts

Saturday, September 24, 2022

இவர்களை தேடி பார்த்து வியாபாரம் பண்ணனும்

நேத்து நைட்டு வீட்டுக்கு திரும்புறப்ப இந்த அம்மா விக்கிறதுக்கு வச்சிருந்த எல்லா காய்கறியுமே நான் வாங்கிட்டேன் வெறும் 200 ரூபாய் தான்...
நான் அந்த பக்கமா போறப்ப காய்கறியவே வெறிச்சுப் பார்த்துக்கிட்டு உட்கார்ந்து இருந்தாங்க அவங்க... ஒருத்தரும் இவங்ககிட்ட வந்து காய் வாங்கல போல... 😒

இந்த 200 ரூபாயில அந்த அம்மாக்கு அப்படி என்ன லாபம் கிடைச்சிடும்..?!




கடைசியா அந்த அம்மா, "பசிக்குது தம்பி, அந்தக் கடையில இந்த காசுல ஒரு டீ வாங்கி குடுத்துட்டு போங்க ப்பா" ன்னு சொல்லி நான் குடுத்த அந்த ரெண்டு நூறு ரூபா நோட்டுல இருந்து ஒரு நோட்ட எடுத்து குடுத்தாங்க...


"ஏனுங்க பாட்டி வேற காசு இல்லையா"ன்னு கேட்டேன்...

" அட போங்க தம்பி ... நீங்க வேற , இந்த காசுக்காக தான் சாயங்காலம் 5 மணியில இருந்து இங்கன தேமேன்னு உட்கார்ந்து இருக்கேன்"னு சொல்லுச்சு பாருங்க...

நெஞ்சு பாரமானாலும், இந்த அம்மா வச்சிருந்த காய் எல்லாத்தையும் மொத்தமா வாங்குனது என்னமோ பெரிய சாதனை  செஞ்சது போல இருந்துச்சி எனக்கு ...

அதே சந்தோஷத்துல காசு வேணாங்க பாட்டின்னு இதை நீங்களே வெச்சுக்கோங்கனு சொல்லிட்டு அந்த பாட்டிக்கு டிபன் வாங்கி கொடுத்துட்டு என்னை அறியாமலேயே எனக்குள்ள ஒரு கம்பீர நடை போட்டுட்டு வந்தேன்.

Tuesday, March 27, 2018

குப்பைத் தொட்டி

குப்பைத் தொட்டி !?!?
~~~~~~~~~~~~~~~



அந்த ஊருல இருபது பேர் கொண்ட ஒரு முதியோர் காப்பகம் இருந்தது ...

காலை விடிந்தது வயோதிகம் நிறைந்த முகங்கள், பசி படர்ந்த வயிறு வாடிய தோற்றம் விருந்தினர் உணவை எதிர்பார்த்து எதிர்பார்த்து மணி 11 தாண்டியது...

ஒரு சிலர் பகட்டுடை உடுத்து காப்பகத்திற்கு வந்தனர் யார் நிர்வாகம் என்றனர், வெளிநாட்டு உதவியா என்றனர், யாருடைய உதவி, என்ன நோக்கம் என்று இன்னும் பல கேள்விகள் கேட்டனர். வயிறு நிறைய பசி மட்டுமே இருந்தும் எல்லாவற்றிற்கும் பணிந்த குரலில் பதில் தந்தனர்...

சந்தேகங்கள் தெளிவானதும் பழைய துணி இருக்கிறது எடுத்துக் கொள்ளுங்கள் என்று கொண்டுவந்த மூட்டையாக கட்டிய துணியை தானம் செய்து கிளம்பினர்...

உள்ளே ஒரு வயதான பாட்டி வாடிய குரலில் " அப்போ அவங்க சாப்பாடு கொடுக்க வரலையா " என்று முனங்கியது...

காலை பசி தாண்டி மதிய பசி வேளை வந்தது...

பசி மயக்கத்தில் இருந்த முதியவர்களை தேடி மற்றும் சிலர் வந்தார்கள் ...

அவர்களும் அதே கேள்விகளை வெவ்வேறு விதமாகக் கேட்டு விசாரணைக்கு பிறகு , காலையில் சமைத்த உணவு 10 பேருக்கு மீதம் இருக்கும் அதை கொடுக்க வந்தோம் தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று தானம் செய்து விட்டு கிளம்பினர். நல்ல வேளை உணவு கெடாமல் இருந்தது அதை இருபது பேரும் பங்கிட்டு தங்களது பாதி வயிற்றை நிறைத்தனர்...

மாலை வந்தது ஒரு குடும்பம் வந்தது , அவர்களும் முன்பு வந்தவர்கள் கேட்ட கேள்வியை காட்டிலும் இன்னும் கூடுதலாக தங்களை தெளிவு படுத்திக் கொள்ள பல விளக்கங்களை கேட்டு விட்டு முடிவில் , தங்கள் வீட்டுக்கருகில் இருக்கும் ஒரு பாட்டியை தங்கள் காப்பகத்தில் சேர்க்க வந்துள்ளோம் இங்கே இலவசமாக பார்த்துக் கொள்வதாக கேள்விப்பட்டோம் ஆதரவற்ற பாட்டியை பராமரிக்க சொந்தமென்று யாருமில்லை என்று கூறி மூன்று தலை முறை கண்ட முப்பது சொந்தங்களுக்கு சொந்தக்காரியை சொந்தங்களே காப்பகத்தில் விட்டு சென்றனர்.

முதிய வயதில் புதிய தோழிகள் கிடைத்த மன ஆறுதலில் தன் கதையைப் பகிர்ந்து சோகத்தை ஓரளவு கரைத்துக் கொண்டது அந்த புது பாட்டி.

சற்று நேரத்தில் ஒரு தம்பதியினர் வந்தார்கள் தங்கள் குழந்தைக்கு இந்த தேதியில் பிறந்தநாள் வருகிறது, அதனால் ஊரில் உள்ள பெரிய ஹோட்டலில் உயர்தர உணவுக்கு ஏற்பாடு செய்கிறோம் என்றனர். ஆனால் வயோதிகத்திற்கு அந்த உணவு ஏற்காது வேறு ஏதாவது என்று வேண்டுகோள் முன் வைக்க . நாங்கள் வேறு இடம் செல்கிறோம் என்று வருத்தத்தில் விடை பெற்றனர்.

இரவு பசி வேளை வந்தது கூடவே கூடுதலாக பசியும். கூட..

கண் உறங்குவதற்கு முன் வாசலில் ஒரு வாகனம் வந்தது அதில் இருந்து வந்தவர்கள் திருமண விழாவில் 50 பேர் சாப்பிடும் அளவிற்கு உணவு மீதியாகி விட்டது அதை கொடுக்க வந்துள்ளோம் என்று சொல்லி முடிப்பதற்குள் , பசி முந்திக் கொண்டு வாய் திறந்து கண்டிப்பாக ஏற்றுக் கொள்கிறோம் என்று அந்த உணவை பெற்றுக் கொண்டது.

கல்யாண வீட்டில் சாப்பாடு மதியம் செய்தது போல சாதம் தவிர மற்ற பதார்த்தங்கள் எல்லாம் கெட்டுப்போய் லேசான வாடையால் காட்டிக் கொடுத்தது , பதார்த்தங்களை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, வெறும் சாதத்தில் தண்ணீர் ஊற்றி கரைத்து காப்பகத்தில் உள்ள 21 பேரும் குடித்து விட்டு அன்றைய பொழுதை நிறைவு செய்தனர். அடுத்த நாள் காலையுணவுக்கு மீந்து போன சாதம் இருக்கும் நிம்மதியுணர்வுடன் அனைவரும் உறங்க சென்றனர்.

முதல் நாள் வந்த கந்தல் துணியோடும், மீதம் இருந்த கல்யாண வீட்டு கஞ்சியோடும் விடியலுக்காக காத்திருந்தது அந்த காப்பகம்..!!!

தங்கள் வீடுகளில் தேவையில்லாத குப்பையாக கருதிய முதியவர்களை , காப்பகத்தை குப்பைத் தொட்டியாக எண்ணி விட்டுச் செல்லும் நபர்களுக்கு தெரிவதில்லை தாங்கள் விட்டுச் செல்வது முதிய உறவினரை அல்ல "அனுபவம் உரைக்கும் நூல்" என்றும்... முதியோர் காப்பகங்கள் எல்லாம் குப்பைத் தொட்டிகள் அல்ல, "பல்கலைக்கழக நூலகங்கள்" என்பதும்...

~மகேந்திரன்

Tuesday, November 03, 2015

மனைவியால் கைவிடப்பட்ட மாற்றுதிரனாளி குடும்பத்திற்கு ஈரநெஞ்சம் உதவி

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services
" ******
(559 / 28-10-2015)


திருப்பத்தூரை சேர்ந்த 39 வயதான கலைசெழியன் என்ற ஆட்டோ ஓட்டுனர் சர்க்கரை நோயின் காரணமாக கடந்த ஜனவரி 2015 ல் தனது இரு கால்களையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவரது மனைவி பிரிந்து விடவே தனது இரண்டு குழந்தைகளுடன் தன பெற்றோருடன் வசித்து வந்தார். வறுமை மற்றும் வயது காரணமாக அவரது பெற்றோராலும் கவனித்து கொள்ள முடியா சூழ்நிலை ஏற்பட்டது. எனவே அவர் தனக்கு உதவுமாறு ஈரநெஞ்சம் அறக்கட்டளையை தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டார்.
அவருக்கு செயற்கை கால்கள் பொருத்தியும் நடக்க இயலாது என்ற காரணத்தால் அவருக்கு வேறுவகையில் உதவி செய்ய முயற்சி மேற்கொள்ளப்படது. அதன்படி அவருக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்தி தரும் வகையில் ஈரநெஞ்சம் அறக்கட்டளை மூலம் மளிகைக்கடை வைத்து தர முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று 28-10-2015 திருப்பத்தூரில் அவருடைய இருப்பிடத்திற்கு அருகிலேயே கடை மற்றும் மூலதனம் உதவி வழங்கப்பட்டது. மற்றும் அவரது குழந்தைகளுக்கு தீபாவளி பண்டிகைக்காக புத்தாடைகளும் வழங்கப்பட்டது.
ஒருவருக்கு தாமாக முன்வந்து செய்யும் உதவி என்பது தவமின்றி கிடைக்கும் வரம் போன்றது. அந்த வகையில் கலைசெழியனின் நிலை பற்றி அறிந்ததும் இவருக்கு உதவிட ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்கு உறுதுணையாக நிதி உதவி செய்ய முன்வந்த திரு. வெங்கடேஷ், திரு. சிவா மற்றும் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பில் உரித்தாக்குகிறோம். இவர்களில் உதவிக்கு வெறும் நன்றி மட்டும் ஈடாகாது. கலைசெழியன் அவர்களின் மகிழ்வில் ஈரநெஞ்சம் அறக்கட்டளை பங்கு கொள்கிறது இதற்கு முழு காரணமும் உதவி செய்த இந்த நண்பர்களையே சேரும்.
~ஈரநெஞ்சம்
www.facebook.com/eeranenjam

Mr. Kalaichezhiyan, age 39 was an Auto driver. Due to Dialysis he was lost his both legs in last January, 2015. So his wife left him. He was living with his parents with two children. Due to poor and old age, they unable to taking care of them. He has no source or survive. So, he requested Eeranenjam trust to help for his life.
As per the requisition, Eeranenjam trust decided to help him. But helping artificial legs was failure to him. So Eeranenjam decided to arrange a provisional shop to economy source. As per the same today 28-10-2015 a provision near by his home was arranged and investment of provisional things also sponsored. And new dresses were sponsored to his children for Diwali.
We have express our express our heartiest thanks to Mr. Venkatesh & Mr. Siva and friends who were helped Eeranenjam trust to arrange this shop for Mr. Kalaichezhiyan. When they know about him, they voluntarily sponsor fund to help him. Its really appreciable and we wish them once again.
Eeranenjam trust.

 நன்றி தினமலர்.காம் 
~~~~~~~~~~~~~~~~~~~

கலைச்செல்வன் வீட்டில் தீபாவளி...

http://www.dinamalar.com/news_detail.asp?id=1375425

Thursday, January 01, 2015

ஆதரவற்றவர்களுக்கு சுகிசிவம் உதவி ஈரநெஞ்சம்





கோவைக்கு மற்றுமொரு சிறப்பு RS புரம் பகுதியில் அமைந்திருக்கும் மாநகராட்சி ஆதரவற்றோர் காப்பகம். சுமார் 100 பேர் இருக்கும் இந்த காப்பகத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும் தங்கள் குடும்பத்தாரால் ஒதுக்கப்பட்ட நிலையில் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதை இந்த காப்பகத்தில் காணலாம். அதுமட்டும் இல்லாமல் சாலையோரம் பிச்சை எடுக்கக்கூட முடியாத நிலையில் இருப்பவர்களுக்கும் வயதான நிலையில் ஞாபக மறதியால் தன்னிலை அறியாது இருப்பவர்களுக்கு உறவுகள் கிடைக்கும் வரை உணவு, உடை, பாதுகாப்பு அனைத்தும் கொடுக்கும் இடம் இந்த மாநகராட்சி பாதுகாப்பு மையமே.


 



இந்த காப்பகம் மாநகராட்சி உதவியால் மட்டும் இல்லாமல் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடனும் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் கடந்த 14/12/2014 அன்று ஈரநெஞ்சம் அறக்கட்டளையின் சேவைகளை பார்வையிட நேரில் வந்த ஆன்மீக சொற்பொழிவாளர் கலைமாமணி திரு.சுகிசிவம்அவர்கள் காப்பகத்தில் இருப்பவர்களுக்காக தாமும் ஏதாவது பயனுள்ள உதவி செய்வதாக உறுதி அளித்து அதன்படி திருப்பூரில் இருக்கும் அவரது நண்பர்கள் திரு. கிரிபிரபு, திரு. நந்தகோபால் அவர்களுடன் இணைந்து காப்பகத்தில் வாழும் ஆதரவற்றவர்களுக்காக தண்ணீரை கொதிக்கவைத்து சுத்தம் செய்யும் அதி நவீன குடிநீர் சுத்திகரிப்பு உபகரணம் [ Water Purifier ] தானமாக வழங்கி உள்ளார்கள்.

இந்த உபகரணத்தினால் காப்பகத்தில் வாழும் ஆதரவற்றவர்களுக்கு இதுநாள் வரையில் தூய்மையான குடிநீர் கிடைக்காமல் இருந்த நிலை மாற்றப்பட்டு கொதிக்கவைத்த சுத்தமான குடிநீர் கிடைக்கிறது .

 


கொடை வழங்க இன்று (26.12.2014) நேரில் வந்த திரு. சுகிசிவம்அவர்களது நண்பர்களான திரு. கிரிபிரபு அவர்களும் திரு. நந்தகோபால் அவர்களும் " ஆதரவற்றவர்களுக்கு உதவுவது என்பது, அந்த ஆண்டவனுக்குத் தொண்டு செய்வதைக் காட்டிலும் உயர்வானதொரு தொழுகை. அது அவ்வளவு எளிதில் யாருக்கும் வாய்த்திடாது அந்த வாய்ப்பினை எங்களுக்கு அளித்த கோவை ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்கும், மாநகராட்சி ஆதரவற்ற காப்பகத்திற்கும் முதற்கண் அங்கு வாழும் ஆதரவற்றவர்களுக்கும் மனதார நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் " என்றார்கள்.

என்ன தான் அவர்கள் நன்றி தெரிவித்தாலும், இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் சில முக்கியமான உதவிகள் கனவாக இருப்பதை நனவாக்குவது என்பதும் கனவாகவே இருக்கிறது.. இந்நிலையில் அதிக பொருள் செலவில் நவீன உபகரணம் வழங்கிய ஆன்மீக சொற்பொழிவாளர் கலைமாமணி திரு.சுகிசிவம் மற்றும் அவரது நண்பர்கள் திரு. கிரிபிரபு, திரு.நந்தகோபால் இவர்களுக்கும் நன்றிகளையும் வணக்கங்களையும் உங்கள் சார்பாக தெரிவிப்பது இறையாண்மை என்று ஈரநெஞ்சம் அமைப்பு மனதார நன்றியை தெரிவிக்கிறது.


  


~ ஈரநெஞ்சம்

Wednesday, March 19, 2014

விபத்தில் காயமடைந்தவருக்கு ஈரநெஞ்சம் உதவி.

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services
" ****** 
[For English version, please scroll down] 
(280/19-03-2014)

திரு. மணிகண்டன், விருதுநகர், சாத்தூர், புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர். வயது 19, இவர் தந்தை சேகர், ஓட்டுனராக பணி புரிகிறார். தாயார் மகேஸ்வரி.
இவருக்கு இரண்டு சகோதரிகள். குடும்பத்தின் சூழ்நிலை காரணமாக மணிகண்டனும் வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை. எனவே இவரும் தந்தையை போலவே ஓட்டுனராக பணி புரிந்தார். கடந்த 7 மாதங்களுக்கு முன் சேலத்தில் இருந்து பெங்களூருக்கு இவர் லாரி ஒட்டி செல்லும் பொது வண்டியில் பழுது ஏற்பட்டதால் வண்டிக்கு அடியில் சென்று அதை சரி செய்து கொண்டு இருந்திருக்கிறார். அப்போது பின்னல் வந்த பேருந்து லாரியில் மோதியதால் பலத்த விபத்துக்கு உள்ளான மணிகண்டனுக்கு முதுகு தண்டுவடம் முழுதுமாக பாதிக்கப் பட்டு படுத்த படுக்கையானார். சேலம் தரன் பல்நோக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. தற்போது ஒன்றரை மாதங்களாக கோவை சிறுவாணியில் உள்ள ஷீஷா காருண்யா ரூரல் கம்யுனிட்டி ஹெல்த் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அவருக்கு தற்போது பிசியோதெரபி சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது.

அவர் மீண்டும் எழுந்து நடமாட வேண்டுமென்றால் இரு கால்களிலும் காலிபர் என்ற கருவி பொருத்தப்பட்டு நடப்பதற்கு தொடர்ந்து பயிற்சி அளிக்க வேண்டும் என்றும், அதற்கு 8000 ரூபாய் செலவாகும் என்றும் மருத்துவர்கள் சொல்லி விட்டனர். அதற்கு வசதி இல்லாததால் அந்த கருவியை வாங்க பணம் தந்து தங்கள் குடும்பத்திற்கு உதவி செய்யும் படி அவரது பெற்றோர் ஈரநெஞ்சம் அமைப்பை கேட்டுக் கொண்டனர்.
அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் திரு. ஜெஷ்பர் தாஸ் அவர்களிடம் மணிகண்டனின் நிலை மற்றும் சிகிச்சை , மேலும் அவரது குடும்ப சூழ்நிலை பற்றி கலந்தாலோசித்து, அவருக்கு உதவி செய்ய ஈரநெஞ்சம் அறங்காவலர்கள் முடிவு செய்தனர். அதன்படி 12-03-2014 அன்று அவருக்கு காலிபர் கருவி ஈரநெஞ்சம் அமைப்ப்பின் மூலம் வழங்கப்பட்டது.

தற்போது அவர் மூலம் நடை பயிற்சி மேற்கொண்டு வருகிறார். எதிர்காலமே கேள்விக் குறியாய் ஆன நிலையில் அவர் மீண்டும் நடமாட உதவியதாக அவரது பெற்றோர் ஈரநெஞ்சம் அமைப்புக்கு நெகிழ்வுடன் நன்றி தெரிவித்துக் கொண்டனர். அவர் சிகிச்சை பலன் பெற்று நல்ல முறையில் நடமாடி மீண்டும் அவர்களது குடும்பத்திற்கு உறுதுணையாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Mr. Manikandan lives in Viruthu Nagar, Sathur, Puthupalaiyam area. He is 19 years old, his father Sekar working as a driver, mother Maheswary and has two sisters. Due to the family situation Manikandan also needed to work and he also became a driver as his father. Seven months ago while he was driving his lory from Selam to Bangalore, the vehicle broke down. He went underneath the vehicle and tried to fix it. At that time a bus came so fast and crashed into the lory. Manikandan injured so badly and his whole spinal code got injured which made him bed ridden. He had a surgery at the Selam Multipurpose Hospital. One and a half months ago he has been admitted and receiving treatment at Sheesha Karunya Rural Community Health center in Coimbatore. After the surgery he is currently undergoing physio therapy treatment. If Manikandan wants to get up on his two feet and walk around, he needs to have the equipment called caliber fixed to his both legs and be trained to get used to it. Doctors said that it would cost 8000 rupees for it. Having financial difficulties,his parents requested the Eera Nenjam Trust to help them.

The trustees of Eera Nenjam trust contacted Manikandan's treating doctor Mr. Jesfer Dhas and discussed with him about Manikandan's treatment, current condition and about his family situation. After the discussion The trustees of the Eera Nenjam Trust decided to help him. According to that on 12.03.2014 the caliber equipment was donated to Manikandan by the Eera Nenjam Trust. Now he is equipped with it and getting the training to walk with them. The parents of Manikandan gratefully thanked the Eera Nenjam Trust for getting him back on his legs when his future was in question.

Let us pray to God that Manikandan gets full recovery from the treatment and gets back on his feet again and be supportive to his family.

~thank you
Eera Nenjam

Friday, February 07, 2014

ஆடை இன்றி சுற்றி திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு ~ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services


" ****** 
[For English version, please scroll down] 
(266/07-01-2014)
இன்று 07/02/2014 காலை கோவை இரயில் நிலையம் அருகே மன நலம் பாதிக்க பட்ட 30 வயது மதிக்க தக்க உடலில் ஆடைகள் கூட சரியான முறையில் இல்லாமல் துர்நாற்றத்துடன் அப்பகுதியில் சுற்றி திரிவதை அப்பகுதி பொதுமக்கள் கண்டு அந்த பெண்ணிற்கு பாதுகாப்பான இடம் தேடி தரும் படி ஈரநெஞ்சம் அமைபிற்கு வேண்டுகோள் விடுத்தனர்.அதனை தொடர்ந்து உடனடியாக அப்பகுதிக்கு ஈரநெஞ்சம் அமைப்பினர் சென்று அந்த மனநிலை பாதிக்க பட்ட பெண்ணை மீட்டு கோவை மாநகராட்சி காப்பகத்திற்கு அழைத்து வரபட்டு அவரை குளிக்கவைத்து மாற்று உடை அணிவித்து மாநகராட்சி காப்பகத்தில் அனுமதி கேட்டு மீட்கப்பட்ட பெண்ணை காப்பகத்தில் சேர்த்தனர்.
தற்போது காப்பகத்தின் பொறுப்பில் இருக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட அந்த பெண் பேசுவதை வைத்துப்பார்க்கும் பொழுது பெண்ணிற்கு தாய் மட்டும் இருக்கலாம் எனவும் கோவை சொக்கம்புதூர் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் தெரியப்படுகிறது.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Today 07/02/14 morning, 30 years old mentally ill without proper dressing was roaming near Koavai Railway station. General public approach Eeraneanjam to protect that lady and requested to give proper shelter for her. Immediately Eeranenjam reached the spot and took her to corporation home and she was given a bath and new cloths and admitted in the home. Eeranenjam spoke to her regarding her family background, from her talk we guess she has a mother near Koavai Soakkamputhur area.

~Thank you
Eera nenjam

ஆதரவற்றவர் இறப்பு ஈரநெஞ்சம் நல்லடக்கம் ~ ஈரநெஞ்சம்


''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "


******
[For English version, please scroll down] (264-06/02/2014)

28/01/2014 அன்று பாப்பநாயக்கன் பாளையம் நியூ ஸ்கீம் சாலையோரமாக சரோஜினி என்ற 80 வயது மதிக்கத்தக்க வயதான மூதாட்டி நடக்க முடியாத நிலையில் ஈரநெஞ்சம் அமைப்பினர் மீட்டு கோவை மாநகராட்சி முதியோர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்
https://www.facebook.com/photo.php?fbid=521816107915810&set=a.249582201805870.51248.199260110171413&type=1&theater தொடர்ந்து உடல்நலம் குன்றி காணப்பட்ட சரோஜினி பாட்டி நேற்று இரவு காலமானார் .
சரோஜினி பாட்டி இறுதி சடங்கினை ஈரநெஞ்சம் பொறுப்பேற்றுக்கொண்டு இன்று 06/02/2014 சரோஜினி பாட்டியின் உடலை கோவை சொக்கம்புதூர் மாநகராட்சி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சரோஜினி பாட்டியின் ஆத்மா சாந்தியடைய ஈரநெஞ்சம் உங்களோடு சேர்ந்து பிரார்த்தனை செய்கிறது .
ஆதரவற்று யாரும் இருக்க கூடாது சாலையில் இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு நிழல் தேடிக்கொடுப்பது மட்டும் இல்லாமல் அவர்களை உறவினர்களாகவே பாவித்து அவர்களது இறுதி காலத்தையும் ஈரநெஞ்சம் பொறுப்பேற்று கொள்வது அமைப்பின் கடமையாகிறது , அமைபிற்கு ஆதரவுதரும் அனைவருக்கும் மனமார்ந்த வணக்கங்கள் .

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

28/01/14, Sarojini aged 80 was seen at New scheme road, Papanayakkan palayam by Eeraneanjam, she was sick and cannot able to walk, was admitted at Kovai corporation home by Eeraneanjam.Due to her illness and age, she passed away yesterday night. Eeraneanjam took incharge of her last rituals and today 06/02/14 she was buried at Koavai Sokkamputhur graveyard. Eeraneanjam prays for her and let her soul rest in peace.
Eeraneanjam wishes there should not be any orphan and eeraneanjam will treat as relative for orphans, until their last rituals. Eeraneanjam extends its heartfelt thanks to all supporters.

thank you 

eeranenjam

Wednesday, July 24, 2013

காயத்துடன் இருந்தவரை ஈரநெஞ்சம் மருத்துவமனையில் சேர்த்தது

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(184/23.07.2013)
இன்று 23.07.13 காலை கோவை அரசு மருத்துவமனை அருகே சுமார் 60 வயது நிரம்பிய ஒருவர் கால் அழுகிய நிலையில் காயத்துடன் சாலையோரம் ஆதரவற்று இருபதாக பொதுமக்கள் ஈரநெஞ்சம் அமைப்பிற்கு தகவல் கொடுத்தனர். அதனை தொடர்ந்து ஈரநெஞ்சம் அவ்விடத்திற்கு விரைந்து சென்று 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஈரநெஞ்சம் அவரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளது.
அவரின் உடல்நலம் விரைவில் குணமடைய நாம் அனைவரும் இறைவனிடம் வேண்டிகொள்வோம்.



http://www.youtube.com/watch?v=5QImvChl0WI&feature=youtu.be

~நன்றி
ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Today morning 23.07.2013, the civilians passed a message to Eera Nenjam that there was a man around age 60 with the decomposed leg, was lying down helplessly by the roadside beside the Kovai Government Hospital. Eera Nenjam rushed to that place and admitted him to the hospital for treatment with the help of 108 Ambulance Service.
Let us all pray to god for his recovery.

~Thank You
Eeranenjam






Friday, April 19, 2013

நல்லது செய்தாய் சுதா ~ ஈரநெஞ்சம்


Eera Nenjam Charity
''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]

கோவை தனியார் நிறுவனத்தில் பணி புரிந்துவரும் செல்வி சுதா கடந்த மூன்று நாட்களாக கோவை செல்வபுரம் அருகில் LIC காலனி என்ற பஸ் ஸ்டாப்பில் ஒரு வயதானவர் உடுத்த உடை கூட இல்லாமல், காலில் காயங்களுடன் எழுந்து நடக்க முடியாமல், படுத்த படுக்கையாய் இருப்பதாகக் கொடுத்தத் தகவலின் படி ஈரநெஞ்சம் அமைப்பினர் 17/04/2013 அன்று உடனடியாக அந்த முதியவரை கோவை B10 காவல் நிலைய அதிகாரிகளின் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, கோவை அரசு காப்பகத்தில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார் . அவருக்குச் சிகிச்சையைத் தொடர்ந்த மருத்துவர்கள் முதியவரின் உடல் நிலை மோசமாக இருப்பதாகவும், இடது காலில் விபத்தின் காரணமாக எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதால் காலில் மாவுகட்டு போட்டு மேல் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர் .

"எல்லோரும் வந்து செல்லும் ஒரு பேருந்து நிலையத்தில் ஒரு முதியவர் உடலில் ஆடை கூட இல்லாமல் இருப்பதை யாரும் பொருட்படுத்தாத நிலையில் இளம் பெண்ணான செல்வி சுதா என்பவர் மேற்கொண்ட முயற்சியால் முதியவருக்கு இன்று மருத்துவச்சிகிச்சை கிடைத்துள்ளது.
செல்வி சுதாவின் இந்த முயற்சிக்கு ஈரநெஞ்சம் மனதாரப் பாராட்டுகிறது.
https://www.facebook.com/eeranenjam
~ நன்றி (156/2013)
ஈர நெஞ்சம்
Miss Sudha, working in a private company in Coimbatore, had been seeing an old man near the LIC colony bus stop for three days. He did not have any clothes, had leg injuries and was lying down since he could not walk. She informed Eera Nejnam and our volunteers got him admitted in the Government Home, Coimbatore with the help of Coimbatore B10 Police Statiion and 108 Ambulance. The doctors informed us that the old man had a fracture in his left leg and his condition is serious and so they are giving treatment to fix his leg.
There are so many people coming to the bus stand but nobody noticed the suffering old man. It was Miss Sudha who was kind enough and took the initiative to contact Eera Nenjam and that helped the old man to get admitted and receive treatment. We appreciate the timely help of Miss Sudha.

~ Thanks (156/2013)
Eera Nenjam
Photo: ''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]

கோவை தனியார் நிறுவனத்தில் பணி புரிந்துவரும் செல்வி சுதா கடந்த மூன்று நாட்களாக கோவை செல்வபுரம் அருகில் LIC காலனி என்ற பஸ் ஸ்டாப்பில் ஒரு வயதானவர் உடுத்த உடை கூட இல்லாமல், காலில் காயங்களுடன் எழுந்து நடக்க முடியாமல், படுத்த படுக்கையாய் இருப்பதாகக் கொடுத்தத் தகவலின் படி ஈரநெஞ்சம் அமைப்பினர் 17/04/2013 அன்று உடனடியாக அந்த முதியவரை கோவை B10 காவல் நிலைய அதிகாரிகளின் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, கோவை அரசு காப்பகத்தில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார் . அவருக்குச் சிகிச்சையைத் தொடர்ந்த மருத்துவர்கள் முதியவரின் உடல் நிலை மோசமாக இருப்பதாகவும், இடது காலில் விபத்தின் காரணமாக எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதால் காலில் மாவுகட்டு போட்டு மேல் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர் .

"எல்லோரும் வந்து செல்லும் ஒரு பேருந்து நிலையத்தில் ஒரு முதியவர் உடலில் ஆடை கூட இல்லாமல் இருப்பதை யாரும் பொருட்படுத்தாத நிலையில் இளம் பெண்ணான செல்வி சுதா என்பவர் மேற்கொண்ட முயற்சியால் முதியவருக்கு இன்று மருத்துவச்சிகிச்சை கிடைத்துள்ளது.
செல்வி சுதாவின் இந்த முயற்சிக்கு ஈரநெஞ்சம் மனதாரப் பாராட்டுகிறது.

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி (156/2013)
ஈர நெஞ்சம்
Miss Sudha, working in a private company in Coimbatore, had been seeing an old man near the LIC colony bus stop for three days. He did not have any clothes, had leg injuries and was lying down since he could not walk. She informed Eera Nejnam and our volunteers got him admitted in the Government Home, Coimbatore with the help of Coimbatore B10 Police Statiion and 108 Ambulance. The doctors informed us that the old man had a fracture in his left leg and his condition is serious and so they are giving treatment to fix his leg.
There are so many people coming to the bus stand but nobody noticed the suffering old man. It was Miss Sudha who was kind enough and took the initiative to contact Eera Nenjam and that helped the old man to get admitted and receive treatment. We appreciate the timely help of Miss Sudha.
https://www.facebook.com/eeranenjam
~ Thanks (156/2013)
Eera Nenjam

Friday, March 22, 2013

ஆறுமுகம் ஆத்மா சாந்தியடையட்டும் ~ஈரநெஞ்சம்




''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
கோவை டவுன் ஹால் பகுதியில் தாமஸ் தெருவில் சாலையோரமாக திரு. ஆறுமுகம் என்ற முதியவர் உடல்நலம் குன்றி இருந்த நிலையில் இருந்தார். அவரை 11/03/2013 அன்று 108 ஆம்புலன்ஸ் உதவியோடு கோவை அரசு பொது மருத்துவமனையில் ஈர நெஞ்சம் அமைப்பு சிகிச்சைக்காகச் சேர்த்தது. அவரது ஊர் மதுரை என்பது மட்டுமே அவரால் சொல்ல முடிந்தது.
அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திரு. ஆறுமுகம் கடந்த 13/03/2013 அன்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார்.
பின்பு மருத்துவ அதிகாரிகள் இவரது இறப்பைப் பற்றி கோவை B8 காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுக்க, காவல்துறையினர் 20/03/2013 திரு. ஆறுமுகத்தைப் பற்றி பதிவு செய்து அவரது உறவினர்களைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். எந்த தகவலும் கிடைக்காததால் 20/03/2013 அன்று திரு. ஆறுமுகத்தின் உடலை ஈரநெஞ்சம் அமைப்பின் உதவியோடு சொக்கம்புதூர் மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.
முதியவர் திரு. ஆறுமுகம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய ஈரநெஞ்சம் இறைவனை வேண்டுகிறது.

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி (150/2013)
ஈர நெஞ்சம்

Mr. Arumugam, an aged man was found unhealthy on the street near Kovai Town Hall area. Eera Nenjam got him admitted in the Government Hospital, Coimbatore, with the help of 108 Ambulance Service on 11/03/2013. When enquired, he was able to recollect only that he was from Madurai and nothing else.
While having treatment at the hospital, Mr. Arumugam died on 13/03/2013. When the doctors reported it to the B8 Police Station, they enquired about him and his relatives but could not get any information. Since no additional information was found, his body was buried in Chockampudhoor graveyard with the help of Eera Nenjam on 20/03/2013.
Eera Nenjam prays for his soul rest in peace.

~ Thanks (150/2013)
Eera Nenjam

Wednesday, March 20, 2013

மனநிலை பாதித்தவருக்கு அடைக்கலம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]

(19/03/13) கோவை வ. உ. சி. பூங்கா அருகில் மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அகோரமான உருவத்துடன் சுற்றித் திரிந்த திரு. சுப்பிரமணி என்பவரைக் கண்ட ஈர நெஞ்சம் அமைப்பினர் அவருக்கு முடி திருத்தி உடல் சுத்தம் செய்து புதிய உடை அணிவித்து கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்து அவருக்கு புனர் வாழ்வு அளித்துள்ளனர்.
ஈர நெஞ்சம் அமைப்பு அவருக்கு உடல் சுத்தம் செய்வதை கண்ட அப்பகுதியில் துணிக்கடை வைத்துள்ள திரு. ராஜேஷ் என்னும் மனித நேயம் மிக்க நண்பர் . அவர் திரு சுப்பிரமணிக்கு மாற்று உடை வழங்கி உதவி செய்தார். அவருக்கு ஈர நெஞ்சம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது .

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி (149/2013)
ஈர நெஞ்சம்

Eera Nenjam volunteers found Mr. Subramani, being mentally challenged, today (19/03/2013) near V. O. C. Park, Coimbatore and then gave him a haircut, a bath and new clothers and also got him admitted in Coimbatore Corporation Home. Mr. Rajesh who has a textile store in that area, after seeing our volunteers’ service, donated new clothes to Mr. Subramani. Eera Nenjam appreciates his help.

~ Thanks (149/2013)
Eera Nenjam

Sunday, March 17, 2013

ஈரநெஞ்சம் அமைப்பின் உதவி ~குட்டி அம்மாள்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]

கோவை உடையாம் பாளையம் பகுதியில் சுமார் 90 மூதாட்டி ஒருவர் நடக்க கூட முடியாமல் ஆதரவற்ற நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் ஈர நெஞ்சம் அமைப்பிற்கு அளித்தத் தகவலின் பேரில் 08/02/2013 அந்த மூதாட்டியைக் கோவை மாநகராட்சி காப்பகத்தில் ஈரநெஞ்சம் அமைப்பு சேர்த்து இருந்த தகவல் நாம் அனைவரும் அறிந்த ஒன்று.
அந்த மூதாட்டி 16/03/13 அன்று இறைவன் திருவடி அடைந்து விட்டார். அந்த தகவலை மாநகராட்சி காப்பகத்தினர் நமது அமைப்பிற்குத் தெரிவித்தும் அந்த மூதாட்டியின் இறுதிச் சடங்குகளை ஈர நெஞ்சம் பொறுப்பேற்று சொக்கம்புதூர் கோவை மாநகராட்சி மயானத்தில் நிறைவேற்றியது .
அந்த மூதாட்டி வாழ்ந்த உடையாம் பாளையம் மக்களும் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு அவரின் ஆன்மா சாந்தி அடையப் பிரார்த்தனை செய்தனர். அவர்களுக்கும்,
அந்த மூதாட்டியை நல்ல முறையில் பராமரித்து அவரது இறுதி காலத்தில் அன்போடு
பார்த்துக்கொண்ட கோவை மாநகராட்சி காப்பகத்துக்கும் ஈர நெஞ்சம் தனது மனமார்ந்த
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி (148/2013)
ஈர நெஞ்சம்

We all are aware that Eera Nenjam got a old lady, aged around 90 and could not even walk and orphaned in the area of Udayam Palayam, Coimbatore, admitted in the Coimbatore Corporation Home on 08/02/2013 as soon as the local people informed us. She passed away on 16/03/2013. As soon as the Corporation Home informed us, Eera Nenjam accepted the responsibility and performed the final rituals at the Chokkam Pudhoor, Coimbatore, Graveyard.
The people from Udayam Palayam where the old lady lived also participated in the last rituals and prayed for her sould rest in peace. Eera Nenjam appreciates them as well as the Coimbatore Corporation Home that took care of her at the last minute.
https://www.facebook.com/eeranenjam
~ Thanks (148/2013)
Eera Nenjam

Tuesday, March 12, 2013

தக்க நேரத்தில் குழந்தையை காப்பாற்ற உதவியவர்களுக்கு நன்றி ~ஈரநெஞ்சம்


''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]

ஈர நெஞ்சம் அமைப்பின் மூலம் கல்வி உதவி பெற்று பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில் வளர்ந்து வரும் சிறுமி பவித்ரா குடல் வால்வு அறுவை சிகிச்சைக்காக அவரது மாமா இராவணன் அவர்களால் திருப்பூர் அரசுமருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு போதிய வசதி இல்லை என்பதால் சிகிச்சைக்குக் கோவை அழைத்து செல்ல வேண்டும் என்று அங்குள்ள மருத்துவர்களின் அறிவுரைக்குப் பிறகு ஈரநெஞ்சம் வேண்டுகோளுக்கு இணங்க, கோவைக்கு அழைத்து வரப்பட்டாள். பவித்ராவைக் கோவை தனியார் மருத்துவமனையில் பரிசோதித்தத் தலைமை மருத்துவர் பவித்ராவிற்கு மோசமான, உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது என்று கூறவே அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு நேற்று மாலை (05/03/13) சிறுமி பவித்ராவிற்கு குடல் வால்வு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டு உடல் நலம் தேறி வருகிறாள்.
அவளுக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் ஈர நெஞ்சம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
மேலும் தனியார் மருத்துவமனைக்குச் செலுத்த வேண்டிய மருத்துவ கட்டணத்துக்கு
நிதி உதவி செய்த திரு அருண் குமார் அவர்களுக்கும், பழங்கள் மற்றும் மேல் மருத்துவ சிகிச்சைக்கு உதவிய பாண்டிச்சேரியைச் சார்ந்த செல்விக்கும் ஈர நெஞ்சம் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. சிறப்பாக அறுவை சிகிச்சை செய்து அவளது காக்க உதவிய மருத்துவர்களை ஈர நெஞ்சம் வணங்குகிறது.
பெற்றோர் அற்ற அந்தக் குழந்தையை அருகில் இருந்து கவனித்து கொள்ளும் அவளது மாமா ஈர நெஞ்சம் அமைப்பிற்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
https://www.facebook.com/eeranenjam
~ நன்றி (146/2013)
ஈர நெஞ்சம்

Eera Nenjam is taking care of the educational expenses of Selvi Pavithra, who is living in the Prabhancha Peace Home. She was admitted in Government Hospital, Tiruppur, for appendicitis, by her uncle. Since there was not enough facility, the doctors advised him to take her to Coimbatore. The private doctors in Coimbatore recommended her to be admitted in the Government Hospital since her condition was very critical. The surgery was performed on 05/03/2013 at the Government Hospital, Coimbatore and she is recovering very well. We thank all the good souls that prayed for her health. We also appreciate the help of Mr. Arun Kumar who paid the fee to the private hospital, Ms. Selvi from Pondichery who helped to buy fruits and also the doctors at the Government Hospital, Coimbatore, who performed the surgery and saved her. Selvi Pavithra’s uncle thanked Eera Nenjam for our timely help.

~ Thanks (146/2013)
Eera Nenjam

Friday, January 11, 2013

திருநங்கைகள் ஆனாலும் எங்களாலும் நல்லது செய்ய முடியும் ~ஈரநெஞ்சம்


கோவை காந்திமாநகர் பகுதியில் வயதான ஒரு பெரியவர் (கந்தசாமி) தெருவில் ஆதரவற்று இருந்ததைக் கண்ட திருநங்கைகள் ப்ரியா மற்றும் வைஷ்ணவி 09.01.2013 அன்ற...ு எங்கள் அமைப்பிற்குத் தகவல் கொடுத்தனர். எங்கள் அமைப்பு அவரை, கோவை B6 காவல் துறையின் அனுமதி பெற்று, கோவை சாய் ஆதரவற்றோர் காப்பகத்தில் அந்த திருநங்கைகள் மூலமாகவே சேர்த்துள்ளது.
மேலும் ஒதுக்கப்பட்ட இனம் என்று யாரும் இல்லை என்பதை நிருபிக்கும் வகையில் ஈரநெஞ்சம் செயல்பாடுகளைக் கண்டு தாங்களாலும் சமூக பணியில் ஈடுபட முடியும், என்று தங்களை ஈடுபடுத்திக்கொண்ட திருநங்கைகள் ப்ரியா மற்றும் வைஷ்ணவி இருவரையும் ஈரநெஞ்சம் மனதார பாராட்டுகிறது.
~ நன்றி 129/2013
(ஈர நெஞ்சம்)
https://www.facebook.com/eeranenjam


Both Priya and Vaishnavi, thirunangais, informed Eera Nenjam on 09.01.2013 about an old orphaned (Mr. Kanthasamy) man on the street of Gandhimanagar, Coimbatore. We, after getting the proper permission from B6 Police Station, helped him admitted in Sai Home, Coimbatore, through Priya and Vaishnavi. After seeing the secular activities of Eera Nenjam, both of them have involved in such public help and we appreciate their timely help.
Thanks 129/2013

Monday, December 03, 2012

மாற்றுதிறனாளிகளை ஆதரிப்போம் , மனித நேயத்தோடு வாழ்வோம் மனிதராய்.

கோவை கிராஸ் கட் சாலையில் உள்ள லக்ஷ்மி காம்ளக்ஸ் முன் சாலையோரமாக கீசெய்ன் , மொபைல் கவர் விற்று கொண்டு இருந்த பார்வை இழந்த R. விஜயகுமாரை சந்தித்து பேசியதும் , அவர் M.Phil பட்டப்படிப்பு படித்து வருகிறார் என்பதை கேட்டதும் பத்தாம் வகுப்பிற்கே தா
ளம் போட்ட என் பழைய நியாபகம்
என்னுள் என்னை கேலி செய்துக்கொண்டது,
ஒரு மாற்றுத் திறனாளிக்கு உதவவேண்டும் என்ற விருப்பம் என்னை அன்று அவரை பற்றி முகநூலில் நான் எழுதியதன்
https://www.facebook.com/photo.php?fbid=439543019436102&set=a.156690734388000.32695.100001412246659&type=3&theater
தொடர்ச்சி இன்று 03/12/12 மாற்று திறனாளிகள் தினத்தை ஒட்டி கோவை ரேடியோ மெர்சி தொகுப்பாளர் திரு கிருஷ்ணா என்னை தொடர்பு கொண்டு ஒரு நிகழ்ச்சிக்கு விபரத்தை கூறி அதற்க்கு ஒருவர் வேண்டும் என்று கேட்டு கொண்டதும் R.விஜயகுமாரை பரிந்துரைத்தேன். இன்று அவர் ரேடியோ மெர்சி நிலையத்தில் நேரடியாக சென்று விஜயகுமார் மக்களுக்கு "மாற்று திறனாளிகளும் மனிதர் தாங்க , எங்களை புறக்கணிக்காதீர்கள் நாங்களும் வாழ்ந்து காட்டுவோம்" என்ற உரை உங்களுக்கு எப்படியோங்க என்னை இன்னும் தெளிவுபட வைத்துள்ளது,
நிகழ்ச்சியில் விஜயகுமார் பாடிய பாடல் " ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி" உண்மையில் நாம் அனைவருமே தொளிலாளிதானங்க .. , உயர்வு என்ன தாழ்வு என்ன மண்ணுக்குள் போகும் மனிதனுக்கு....?
திரு , R.விஜயகுமாருக்கு இந்த வாய்ப்பளித்த ரேடியோ மெர்சி தொகுப்பாளர் திரு கிருஷ்ணா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வணக்கங்கள் தெரிவித்துக்கொள்கிறேன் .
மாற்று திறனாளிகள் தினமான இன்று ஒன்னு சொல்றேங்க , நமக்கு எல்லாம் இருக்கு என்று நினைக்காதிங்க எந்த நேரமும் எதுவும் ஆகலாம் .
மாற்றுதிறனாளிகளை ஆதரிப்போம் , மனித நேயத்தோடு வாழ்வோம் மனிதராய்.
ஒன்னு சொல்ல மறந்துட்டேங்க திரு R.விஜயகுமார் நல்ல பலகுரல் மன்னரும் கூட, இதை நான் நிகழ்ச்சியை கேட்க்கும் பொது தெரிந்து கொண்டேன் .
~மகேந்திரன்

Sunday, November 25, 2012

வழி என்னும் விழி... ~மகேந்திரன்


இவர் பெயர் R.விஜயகுமார் வயது 25 (9095599719) திருப்பூரை சேர்ந்தவர் இவருடைய அப்பா ராமன், அம்மா கண்ணம்மாள் இவங்க இரண்டுபேருமே கூலி வேலைக்கு போறாங்க, விஜயகுமாருக்கு ஒரு தங்கை ஒரு அக்கா தங்கை இறந்துட்டாங்க அக்காவிற்கு திருமணமாகி குன்னதூ
ர்ல இருக்காங்க , விஜயகுமாருக்கு நான்கு வயது இருக்கும் போது ஏற்ப்பட்ட உடல் நலம் குறைவில் பார்வை பறிபோனது, மருத்துவ பரிசோதனையில் விழிக்கு வரும் நரம்புகள் பாதிக்கப்பட்டதினால் மாற்று விழியும் பொறுத்த முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

"கைரேகை பார்த்து எதிர்காலத்தை தீர்மானிக்கும் வேளையில் கைகளே இல்லாதவனுக்கும் எதிர் காலம் உள்ளது என்பதற்கு ஏற்ப ."விழி இல்லை என்றாலும் வழி எனும் விழி உள்ளது" என்று கூறுகிறார் திரு விஜயகுமார் ,
ஆமாங்க இவருடைய அம்மா அப்பா கூலிவேலைக்கு போய் வரும் சம்பாதனையில் என்ன செய்ய முடியும் அதனாலேயே இவர் சிறு வயதில் இருந்தே பார்வை இல்லை என்றாலும் அதற்க்கு தகுந்த பாதையை பார்த்து சுயமாக பக்குவமாய் முன்னேறி தற்போது M.Phil பட்டப்படிப்பு கோவை அரசு கலை கல்லூரியில் படித்து வருகிறார் , சாலையோரமாக கீசெய்ன் , மொபையில் கவர், இது போன்ற பொருட்களை விற்று வரும் லாபத்தில் தற்போது படிப்பு செலவுக்கு ஈடுகட்டுகிறார். எல்லாம் இருக்கின்றவர்களே கடன ஒடன வங்கி பகட்டை காட்டும் இந்த காலத்தில் பார்வை இல்லை என்பதை பொருட்படுத்தாமல் சுயதொழில் செய்து முன்னேறிவரும் விஜயகுமாரை எவ்வளவு பாராட்டினாலும் போதாதுங்க நீங்க யாராவது அவரை சந்தித்தால் விஜயகுமாரிடம் பேரம் பேசாமல் பொருட்களை வாங்குங்க அது போதும்.

இவரை சந்தித்தபோது நான் இவரிடம் உங்களது லட்சியம் என்னங்கனு கேட்டேன் . அதற்க்கு அவர் சொன்னது "நான் நல்லா பாடுவேன் நிறைய பாட்டு போட்டியில் கலந்து பரிசு பெற்று இருக்கிறேன். நல்ல பாடகனாக வேண்டும் என்ற விருப்பம் உள்ளது" என்றாருங்க. விஜயகுமார் ஆசைப்படி ஒரு இசை குழுவில் சேர்ந்து மக்கள் மத்தியில் வளமும் பெயரும் வளர வேண்டும் என்று விஜயகுமாரது நன்னம்மிக்கையை உங்களோடு நானும் வாழ்த்தி தலை வணங்குகிறேன்.
நன்றி
~ மகேந்திரன்

Sunday, August 05, 2012

ஈரநெஞ்சம் உதவி தங்கவேல் தாத்தா நல்லா இருக்கட்டும்,

கோவை கணுவாய் பகுதியில் கடந்த பத்து நாட்களாக உணவு உடை இல்லாத நிலையில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க மனிதர் (தங்கவேலு) சாலையோரமாக இருப்பதாக கணுவாயை சேர்ந்த நமது நண்பர் திரு. ரஞ்சித் அவர்கள் "ஈர நெஞ்சம்" அமைப்பிற்கு தகவல் குடுத்து, அவர் மேலும் அவருக்கு ஏதாவது தக்க பாதுகாப்பு கொடுக்கும்படியும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, "ஈர நெஞ்சம்" அமைப்பு உறுப்பினர்கள், கோவை துடியலூர்  காவல் நிலைய ஆய்வாளர் அனுமதியுடன், அவருக்கு முதலுதவி செய்து, கோவை மாநகராட்சி ஆதரவற்ற காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். மேலும், அவருக்கு ஒரு மகள் இருப்பதாகவும் அவர் எங்கு இருக்கிறார் என்றவிபரமும் தெரியவில்லை. திரு. தங்கவேல் அவர்களுக்கு, எந்த ஊர் எப்படி இந்த பகுதிக்கு வந்தார் என்பதும் தெரியவில்லை  மேலும் அந்த முதியவருக்கு "ஈர நெஞ்சம்" உறுப்பினர்கள் முதல்  உதவி செய்வதை நேரில் பார்த்தவர்கள் ஈரநெஞ்சம் அமைப்பை மனதார பாராட்டினர். இதைப்பற்றிய காணொளி உங்கள் பார்வைக்கு.http://youtu.be/qPxIPL5e6VA
நன்றி (51/2012)
------
An elder man, Mr.Thangavelu (~70) was found, unattended and without proper foods, at the roadside near Kanuvai, Coimbatore for the past ten (10) days.  Mr.Ranjth, one of the members of our organization, has informed and requested us to take care of him. Hence, we have got a permission from Thudiyalur police inspector, gave him first aid and made arrangements to admit him into Coimbatore corporation home. It was also found from him that he has a daughter and did not know whereabouts of her.  He was not sure himself how he has come here. Many people praised our services. The video clipping on the same is attached herewith for your kind reference.Thanks (51/2012).