Tuesday, October 21, 2014

சாலையில் தவித்த 85 வயது பாட்டியின் உறவினர் கண்டுபிடிப்பு

ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM" Services.
******************************************************************
(368 / 20-10-2014)

கடந்த 18/10/2014 அன்று கோவை B9 காவலர்கள் உதவியுடன் சரவணம் பட்டி பகுதியில் இருந்து சுப்பம்மாள் 85 என்ற பாட்டியை மீட்டு கோவை மாநகராட்சிக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார் , அதனை தொடர்ந்து பாட்டியின் உறவினர்களை கண்டுப்பிடிக்கும் முயற்சியை ஈரநெஞ்சம் மேற்கொண்டது ,

https://www.facebook.com/eeranenjam/photos/a.249582201805870.51248.199260110171413/643014075796012/?type=1&theater

அதன் பலனாக வீரமநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு செந்தாமரைக் கண்ணன் அவர்கள் மூலமாக கோவையில் சிங்காநல்லூர் பகுதியில் சுப்பம்மாள் பாட்டியின் மகன் முருகன் என்பவர் தொடர்பு கிடைத்து. உடனடியாக அவருக்கு தகவல் அளிக்கப்பட்டது. , தகவல் அறிந்ததும் முருகன் உடனடியாக காப்பகத்திற்கு வந்து சுப்பம்மாள் பாட்டியை அழைத்துச் சென்றார்.
 




பாட்டியின் மகன் முருகன் கூறும்பொழுது :
அம்மாவிற்கு சற்று ஞாபகமறதி இருப்பதாகவும் சிங்காநல்லூரில் எங்களது வீட்டில் இருந்து கடந்த 16/10/2014 அன்று காலை முதல் காணவில்லை , எங்கெல்லாமோ தேடினோம் எங்கு தேடியும் கிடைக்காததால் இன்று 20/10/2014 அம்மாவைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் கொடுக்க காவல் நிலையம் சென்றவேளையில் ஈரநெஞ்சம் அமைப்பினர் அம்மாவைப்பற்றிக் கூறி நேரடியாக வந்து அழைத்துச் செல்லும்படிக் கேட்டுக்கொண்டனர் , அதை கேட்டதும் பெரும் மகிழ்ச்சி அடைந்தோம் , அம்மாவை நான்குநாட்களாக காணாமல் குடும்பத்தில் யாரும் சரிவர உணவுகூட உண்ணாமல் அம்மாவைத் தேடி அலைந்துக்கொண்டே இருந்தோம் இன்று அவர் கிடைத்ததும் பெரும் நிம்மதி அடைந்தோம் , அம்மாவை கண்டுபிடித்துக் கொடுத்த ஈரநெஞ்சம் அமைப்பிற்கும் அம்மாவை பராமரித்துக் கொண்ட மாநகராட்சிக் காப்பகத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகக் கூறி தனது அம்மாவை அழைத்துச் சென்றார்.

மேலும் சுப்பம்மாள் பாட்டியை கண்டுப்பிடிக்க பெரிதும் உதவிய வீரமநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு செந்தாமரைக் கண்ணன் அவர்களுக்கும் மற்றும் ஈரநெஞ்சம் அமைப்பைச் சேர்ந்த நண்பர்களுக்கும் , கோவை B9 காவல் நிலைய காவலர்களுக்கும், மாநகராட்சிக் காப்பகத்திற்கும் மற்றும் நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது ஈரநெஞ்சம் அறக்கட்டளை.

~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam?ref=hl

Due to those efforts and with the help of Mr. Senthaamarai kannan, Veermanallur police station Inspector, we can found her son Mr. Murugan, who is living in Singanallur. We informed to him and immediately he came to Coporation home and brought her with him to their home.

Mr. Murugan told that his mother Subbammaal is absent minded some times. Last 16-10-2014 she was missed from their home. They tried to find her in all places. When we decided to give complaint in police station today 20-10-2014, Eeranenjam trust people contacted us to bring our mother. We felt very happy, For past 4days we didn’t take even proper food too and continuously we were searching our mother. Now we feel very happy and peaceful. So we wish to say thanks to Eeranenjam trust for find out mother and Corporation home for taken care of her.

Our Eeranenjam trust giving our thanks to Police Inspector Mr, Senthamarai kannan, Veeramanallur station, and Eeranenjam trust people, B9 police station police officers, Friends and Corporation home for giving their helping hand to find Subammal family.

Thanks,

Eeranenjam.
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

1 comment:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
தங்களின் பணி அழப்பெரியது... சொல்ல வார்த்தைகள் இல்லை...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment