Showing posts with label சமூதாயம். Show all posts
Showing posts with label சமூதாயம். Show all posts

Friday, October 07, 2011

பழனிக்கு உறவு கிடைச்சாச்சு ...~மகேந்திரன்

http://eerammagi.blogspot.com/2011/09/blog-post_29.html


அன்று பழனி சந்தித்துவந்தமுதல் இன்று வரை மனம் பழனி சாலையோரம் இருப்பதையே வருத்திக்கொண்டு இருந்தது... பலபேரிடம் பழனியை பற்றி விபரம் சொல்லி தயவு கேடு பயன் இல்லாமல் , நானும்,பழனியப்பன்,மற்றும்  மகேஷ் குமார் அவரிடம் பழனியை பற்றி சொல்லி  எனக்கு இன்று 07 /11 /11  விஜயதசமி விடுமுறை ஆகையால் பழனியின் உறவினரை தேடி நம்பியூர் செல்லலாமா என்று முடிவு செய்து நம்பியூர் சென்றோம் ,
நம்பியூர் சென்றதும் நாங்கள் முதலில் பார்த்தது மைல் பலகையில் "விடாமுயற்ச்சி வெற்றி நிச்சயம்" எழுதப்பட்டதை பார்த்ததுமே மனதுக்கு  கடவுள் அருள் கிடைத்தது போல இருந்தது , தொடர்ந்தூம் அந்த கிராமத்தில் ஒரு டீ கடையில் இருந்த ஒரு பெண்ணிடம் பழனி சொன்ன குறிப்புகளை வைத்து விசாரிக்கும் பொழுது , பழனி என்பவருடைய அப்பா ரங்கன் அவர் கடலை மொத்த வியாபாரி அவர் தற்போது நம்பியூரில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் மீட்டுக்கடை என்னும் கிராமத்தில் வசிக்கின்றனர் , தற்போது அவர் வியாபாரத்திற்கு சென்று இருப்பார் வருவதற்கு 2,3 மணிநேரம் ஆகலாம்,பொறுத்திருந்து பாருங்கள் அனால் பழனி என்பவர் அவருடைய மகனா என்று தெரியாது என்று பேச்சை நிறுத்திக்கொண்டார் , கால்கடுக்க காத்திருந்த பயனால் ரங்கனை நான்கு மணிநேரம் கழித்து சந்தித்தோம் , ரங்கன் அவருக்கு வயது 70 , அவரிடம் அவர் குடும்பத்தை பற்றி கேட்கும் பொது மூன்று மகன் அதில் பட்டான் என்பவர் பத்து
http://youtu.be/8YEtXW50GhY
வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார் , ஒரு பெண்  என்றார் தற்போது மூவரும் தன் பார்வையில் தான் இருக்கின்றனர் என்றதும் எங்கள் மனம் சற்று சோர்ந்தது , சரி வேறு யாரையாவது கேட்கலாம் என்று முடிவு செய்யும் பொது , என்னை அறியாமலே இறந்து போனதாக சொன்ன பட்டான் அவரை பற்றி கேட்க அவர் இறந்ததை தாம் பார்க்கவில்லை உறவினர்கள் மூலம் தெரிய வந்தது என்றார் , உடனே அவரிடம் பழனியின் உருவப்படம் காட்ட இவர்தான் பட்டான் என்றும்  தனது இறந்ததாக கூறப்படும் நபர் என்றார் , அபோது தான் ஒன்று விளங்கியத் பட்டான் என்பவரும் பழனி என்பவரும் இரண்டு பெயர் கொண்ட ஒரு நபர் என்று...
பிறகு ரங்கன் அவர்களிடம் உங்கள் மகன் பட்டான் இறக்கவில்லை உங்களுக்கு தவறாக செய்தி கிடைத்ததால் அதை நீங்கள் நம்பிவிடீர்கள் என்றதும் அவர் நம்ப முடியாத ஆச்சர்யம் சந்தோஷம் மகிழ்ச்சியில் மூழ்கவே உடனே பட்டானியை பார்த்து அழைத்துவந்து பார்த்துக்கொள்ள தயாராகி விட்டார் ,அவரை நாங்கள் அழைத்து வந்து கோவை நவஇந்திய பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கல்லூரி வளாகம் முன்பு மூன்று வருடமாக பரிதாபமான நிலையில் இருக்கும் பழனி காண்பிக்க , அந்த நிகழ்வு கண்களை கலங்கவைத்தது ஆனந்தத்தில் , பிறகு எனது நண்பர் அருள் ராஜ் , மற்றும் ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவர்களையும் வரவழைத்து பலவருடமாக சாலையே கதி என்று இருந்த பழனியை அவருடைய தந்தை ரங்கனிடம் ஒப்படைத்தோம் , யாரும் தொடுவதற்கே அருவருப்பாக காச்சியளித்த பழனி இன்று நண்பர் அருள் ராஜ் ஏற்பாடு செய்து தந்த இண்டிகா காரில் அவரது சொந்த ஊரான நம்பியூருக்கு கை அசைத்து செல்வதை பார்க்கையில் >ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் இவரை காணாது இருந்தால் இன்னமும் தெய்வம் தந்த வீடே (வீதி) யில் தான் இருந்து இருப்பார் ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவர்களுக்கு மகத்தான வாழ்த்துக்களை சொல்லி விடை பெற்றோம் .
~மகேந்திரன்

Saturday, October 01, 2011

என்னுடைய முதல் மேடை ...


என்னுடைய முதல் மேடை ஸ்ரீ நேரு வித்யாலய NSS   மாணவர்களுக்காக சிறப்பு சொற்பொழிவு ஆற்ற எனது நண்பர் பழனியப்பன் பரிந்துரைக்க மறுக்க மனம் இல்லாமல் சென்றேன் .
அங்கு 70  மாணவர்கள் படைக்கு முன்னாள் நான் என்ன பேச போகிரோமோ என்ற சிறு தயக்கம் , பேச என்னை ஒரு மாணவி அழைக்க மைக் முன்னாள் நான், எனக்கு முன்னாள் மாணவர்கள் , தயக்கத்துடன் உரையை துவக்கினேன் ,நான் பேசுவதை மாணவர்கள் கவனிப்பதை நான் கவனித்தபடியே உரையை  தொடர்ந்தேன்  . நான் செய்த  சேவைகளை சொல்லிக்கொண்டு இருந்தேன்

15 வருடம் கழித்து வீடு சென்ற அசோகன

பழனிக்கு உறவு கிடைக்கவேண்டும்...

வீடு திரும்பிய சண்முகம் தாத்தா

என்ன செய்தேன்

மரண நேரத்தில் மகனை சந்தித்த அம்மா

மண்ணைவிட்டு மறைந்த மணியம்மா

நான்கு வருடத்திற்கு பிறகு பெற்றோருடன் இணைந்த நிர்மலா

மணிகண்டனின் மறுவாழ்வு

ஆதரவற்றவர்களின் ஆதரவு

எங்க போனாங்களோ பழனியம்மாள்

இதை  மாணவர்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டேன் . அதனை தொடர்ந்து மாணவர்களிடம் முகத்தில் மாற்றம்  காணமுடிந்தது , தாங்களும் மனிதகுலத்தை காக்கும் இந்த சேவைக்கு வருகிறோம் என்ற மாற்றம் அதில் கண்டேன் ,
இறுதியில் மனித நேயம் தினம் ஒன்றை உருவாக்குவோம் உலகமெங்கிலும் கொண்டாடுவோம் என்ற உறுதியுடன் மாணவர்களிடம் இருந்து விடை



 
பெற்றேன் .விடை பெரும் வேளையில் எனக்கு இராமாயணம் புத்தகம் ஒன்றும் மாணவர்கள் பரிசளித்தனர் ...

Friday, September 30, 2011

ஜாதி சண்டை ஒழிய...

முத்தச்
சண்டைக்கு
அனுமதி
கொடுங்கள்...
ஜாதி  சண்டை
ஒழிய வேண்டும்..♥