''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"****** [For English version, please scroll down] (185/23.07.2013)கோவை மாநகராட்சி காப்பகத்தில் காவல்துறையினரால் ஒரு மாதத்திற்கு முன் சேர்க்கப்பட்டு ஆதரவற்றோருடன் இருந்த தொண்ணூறு வயது நிரம்பிய மூதாட்டிக்கு பழனியில் இருக்கு அவரது உறவினரை ஈரநெஞ்சம் தேடிக்கொடுத்தது, பாட்டியின் உறவினரான பேரன் முத்துராமலிங்கம் , மனைவி முத்து செல்வி ஆகியோருக்கு நேரில் வந்து, ஈரநெஞ்சம் அமைப்பிற்கு நன்றி தெரிவித்து பாப்பாத்தி அம்மாவை இன்று 23/07/2013 அழைத்து சென்றனர்.
http://www.youtube.com/watch?v=nKN7o2VlRi4&feature=em-upload_owner
பிரிந்த உறவினை தங்கள் குடும்பத்திடம் சேர்த்து வைத்த திருப்தியில் ஈரநெஞ்சம் அமைப்பு மனநிறைவு அடைகிறது.
~நன்றி
ஈரநெஞ்சம் https
://www.facebook.com/eeranenjam
A ninety year old elderly lady Pappathi Amma, was put in Coimbatore Coporative Orphanage home by the police about a month ago. She was under the care with other helpless people in that home. Eera Nenjam made the effort to find her relatives and was successful to find them from Palani. Muthuramalingam the grandson of Pappathi Amma and his wife Muthu Selvi came in person and brought Pappathi Amma back to their home today 23.07.2013. They thanked Eera Nenjam for reuniting their grandmother with them.
Eera Nenjam is pleased with the fact that they have reunited another lost person back with their families.
~Thank You
Eera Nenjam

[For English version, please scroll down]
நெருநல் உளனொருவன் இன்றில்லை.
நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம்.
கோவை
உக்கடம் பகுதியில் 15 நாள்களுக்கு முன், மயக்கமடைந்த நிலையில் திரு நா.
இராமசாமி என்பவர் காணப்பட்டார். அவரை யாரோ சில நல்லவர்கள், கோவை மாநகராட்சி
ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்த்துவிட்டுச் சென்றனர். அங்கு அவருக்குப்
பாதுகாப்பும், மருத்துவ உதவியும் வழங்கப்பட்டன. இந்நிலையில், கோவை
மாநகராட்சி ஆதரவற்றோர் காப்பகம் அமைப்பில் இருந்து, "ஈர நெஞ்சம்" அமைப்பின்
நிர்வாக அறங்காவலர் திரு. மகேந்திரனுக்கு, நேற்று (19.09.2012) அவரது
உறவினர்களைக் கண்டு பிடித்துத் தர உதவும்படி, தகவல் அளிக்கப்பட்டது. அந்த
பெரியவர் கூறிய நெய்காரன்பட்டி துளசி ராஜன், 12 ஆம் வகுப்பு என்ற தகவலைக்
கொண்டு "ஈர நெஞ்சம்" அமைப்பு, பள்ளி முதல்வர்களின் தொலை பேசி எண்களை விடா
முயற்சியோடு தொடர்பு கொண்டது. அந்த முயற்சிக்குப் பலனும் கிடைத்தது. இன்று
முழு கடை அடைப்பின் காரணமாக துர்க்கா தேவி பள்ளி விடுமுறை விடப்பட்ட
நிலையிலும் அந்த மாணவன் படிக்கும் பள்ளி முதல்வரின் முயற்சியால் அவரது
வீட்டிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. துளசி ராஜனும் அவனது அம்மா திருமதி.
ஜெயாவும், திரு. ராமசாமி அவர்கள் இருக்கும் இடம் தேடி விரைந்தோடி வந்தனர்.
ஆனால் காலன் அவர்களை முந்திக் கொள்ள அவர்களை காண்பதற்கு முன்னமே அவரது
உயிர் பிரிந்தது. திருமதி. ஜெயா, பழனியில் சத்துணவு கூடத்தில் ஆயாவாக
பணியாற்றும் சூழ்நிலையையும், அவரது மகன் 10 ஆம் வகுப்பு தேர்வில் 480
மதிப்பெண்கள் பெற்றவர் என்ற செய்தியும் அறிந்த எங்கள் அமைப்பு, இந்தக்
குடும்பத்தை ஒன்று சேர்த்து பார்க்கத்தான் முடியாத நிலை என்ற போதும் அவரது
நல்லடக்கமாவது அவரது குடும்பத்தார் முன்னிலையில் நடை பெற இறைவன் துணை
செய்தாரே என்ற நினைப்போடு அந்த மனிதரின் இறுதிச் சடங்கை இன்று கோவை
சொக்கம்புதூர் மயானத்தில் செய்து முடித்தது.
திருமதி. ஜெயா
மற்றும் அவரது மகன் துளசி ராஜன் இருவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக் கொள்வதோடு திரு. இராமசாமி அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை
பிரார்த்திப்போம்.
https://www.facebook.com/eeranenjam
~ நன்றி /(81/2012)
ஈர நெஞ்சம்
......
No one lives forever.
Mr. N. Ramasamy, was admitted to "Coimbatore Corporation Home" by some
well-wishers about fifteen days before due to his indisposed condition.
He was given due care and medical treatment for those days. The said
home requested, Mr.Mahendiran, the Managing Trustee of EERA NENJAM
organization, to find out his address and his kith & kin on
19.09.2012. He just provided us minimum information such as
Neikaranpatti, Thulasirajan, 12 standard. Based on this information, our
organization acted immediately and tried that school principal
continuously. Though, it was state's strike, the principal provided the
address of Mr. Ramasamy based on Master. Thulasi Rajan, the said school
student. After hearing the news, he and his mother Mrs. Jeya rushed to
the home.
Unfortunately Mr.Ramasamy had passed away before they
arrived. Though Mrs. Jeya is working as a Domestic helper [Ayah] in
Noon-meals scheme programme, she has been educating her son. We came to
know that her son Master Thulasi Rajan has scored 480 marks in his 10th
standard state board examinations. We could satisfy ourselves that at
least they could see him at the end and attend the final rituals. Our
organization performed the final rituals in presence of her and son at
Sokkamputhur burial ground, Coimbatore.
We consoled them and we request the almighty for his soul rest in peace.
~Thanks (81/2012)
EERA NENJAM
http://eerammagi.blogspot.com/2011/09/blog-post_29.html
அன்று பழனி சந்தித்துவந்தமுதல் இன்று வரை மனம் பழனி சாலையோரம் இருப்பதையே வருத்திக்கொண்டு இருந்தது... பலபேரிடம் பழனியை பற்றி விபரம் சொல்லி தயவு கேடு பயன் இல்லாமல் , நானும்,பழனியப்பன்,மற்றும் மகேஷ் குமார் அவரிடம் பழனியை பற்றி சொல்லி எனக்கு இன்று 07 /11 /11 விஜயதசமி விடுமுறை ஆகையால் பழனியின் உறவினரை தேடி நம்பியூர் செல்லலாமா என்று முடிவு செய்து நம்பியூர் சென்றோம் ,
நம்பியூர் சென்றதும் நாங்கள் முதலில் பார்த்தது மைல் பலகையில் "விடாமுயற்ச்சி வெற்றி நிச்சயம்" எழுதப்பட்டதை பார்த்ததுமே மனதுக்கு கடவுள் அருள் கிடைத்தது போல இருந்தது , தொடர்ந்தூம் அந்த கிராமத்தில் ஒரு டீ கடையில் இருந்த ஒரு பெண்ணிடம் பழனி சொன்ன குறிப்புகளை வைத்து விசாரிக்கும் பொழுது , பழனி என்பவருடைய அப்பா ரங்கன் அவர் கடலை மொத்த வியாபாரி அவர் தற்போது நம்பியூரில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் மீட்டுக்கடை என்னும் கிராமத்தில் வசிக்கின்றனர் , தற்போது அவர் வியாபாரத்திற்கு சென்று இருப்பார் வருவதற்கு 2,3 மணிநேரம் ஆகலாம்,பொறுத்திருந்து பாருங்கள் அனால் பழனி என்பவர் அவருடைய மகனா என்று தெரியாது என்று பேச்சை நிறுத்திக்கொண்டார் , கால்கடுக்க காத்திருந்த பயனால் ரங்கனை நான்கு மணிநேரம் கழித்து சந்தித்தோம் , ரங்கன் அவருக்கு வயது 70 , அவரிடம் அவர் குடும்பத்தை பற்றி கேட்கும் பொது மூன்று மகன் அதில் பட்டான் என்பவர் பத்து
http://youtu.be/8YEtXW50GhY
வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார் , ஒரு பெண் என்றார் தற்போது மூவரும் தன் பார்வையில் தான் இருக்கின்றனர் என்றதும் எங்கள் மனம் சற்று சோர்ந்தது , சரி வேறு யாரையாவது கேட்கலாம் என்று முடிவு செய்யும் பொது , என்னை அறியாமலே இறந்து போனதாக சொன்ன பட்டான் அவரை பற்றி கேட்க அவர் இறந்ததை தாம் பார்க்கவில்லை உறவினர்கள் மூலம் தெரிய வந்தது என்றார் , உடனே அவரிடம் பழனியின் உருவப்படம் காட்ட இவர்தான் பட்டான் என்றும் தனது இறந்ததாக கூறப்படும் நபர் என்றார் , அபோது தான் ஒன்று விளங்கியத் பட்டான் என்பவரும் பழனி என்பவரும் இரண்டு பெயர் கொண்ட ஒரு நபர் என்று...
பிறகு ரங்கன் அவர்களிடம் உங்கள் மகன் பட்டான் இறக்கவில்லை உங்களுக்கு தவறாக செய்தி கிடைத்ததால் அதை நீங்கள் நம்பிவிடீர்கள் என்றதும் அவர் நம்ப முடியாத ஆச்சர்யம் சந்தோஷம் மகிழ்ச்சியில் மூழ்கவே உடனே பட்டானியை பார்த்து அழைத்துவந்து பார்த்துக்கொள்ள தயாராகி விட்டார் ,
அவரை நாங்கள் அழைத்து வந்து கோவை நவஇந்திய பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கல்லூரி வளாகம் முன்பு மூன்று வருடமாக பரிதாபமான நிலையில் இருக்கும் பழனி காண்பிக்க , அந்த நிகழ்வு கண்களை கலங்கவைத்தது ஆனந்தத்தில் , பிறகு எனது நண்பர் அருள் ராஜ் , மற்றும் ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவர்களையும் வரவழைத்து பலவருடமாக சாலையே கதி என்று இருந்த பழனியை அவருடைய தந்தை ரங்கனிடம் ஒப்படைத்தோம் , யாரும் தொடுவதற்கே அருவருப்பாக காச்சியளித்த பழனி இன்று நண்பர் அருள் ராஜ் ஏற்பாடு செய்து தந்த இண்டிகா காரில் அவரது சொந்த ஊரான நம்பியூருக்கு கை அசைத்து செல்வதை பார்க்கையில் 
>
ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் இவரை காணாது இருந்தால் இன்னமும் தெய்வம் தந்த வீடே (வீதி) யில் தான் இருந்து இருப்பார் ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவர்களுக்கு மகத்தான வாழ்த்துக்களை சொல்லி விடை பெற்றோம் .
~மகேந்திரன்
பழனி என்பவர் ஒரு விபத்தில் கால் முறிந்து நடக்க முடியாமல் கோவை நவஇந்திய பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கல்லூரி வளாகம் முன்பு மூன்று வருடமாக பரிதாபமான நிலையில் இருக்கிறார் ,
ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் அவ்வப்போது பழனிக்கு உணவு குடுத்து வந்தனர் , இன்று காலை ஈரம் நிறைத்த ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபரும்,எனது நண்பருமான பழனியப்பன் மூலம் என்னை (மகேந்திரன்) அழைத்து இவரது நிலையை சொல்லி ஏதாவது ஒரு உதவி கிடைக்க கேட்டுக்கொண்டனர் ,
நான் நேரில் அவரை பார்க்கும் பொழுது அதிக முடியுடனும் பலவருடமாக குளிக்காமலும் மிகுந்த துர்னாற்றதுடன் நடக்க முடியாத நிலையில் பார்க்க பரிதாபமான நிலையுடன் இருந்தார் .
பிறகு ஹிந்துஸ்தான் மாணவர்கள் உதவியுடன் பழனி அவர்களுக்கு அதே இடத்தில் முடிவெட்டி ,குளிக்க வைத்து அங்கோம் அளவிற்கு வளர்ந்து இருந்த கை,கால் நகங்களை வெட்டிவிட்டு , வேறு உடை அணிவிக்கப்பட்டு தற்போது புதிய மனிதராக மாறியுள்ளார் ,



அதன் பிறகுதான் பழனி பேசத்துவங்கினார் அவர் சாலை பராமரிப்பு பணிசெய்து வந்தவராம் , சத்தியமங்கலம் செலும் வழியில் உள்ள நம்பியூர் என்றும் மனைவி நான்கு வருத்திற்கு முன் இறந்து விட்டதாகவும் ஒரு விபத்தில் நடக்கமுடியாத நிலைக்கு வந்ததாகவும் ,ஒரு மகள் அவள் பெயர் விஜயலக்ஷ்மி திருமணம் ஆகிவிட்டது ,என்றார் , தனது மனைவியின் பெயர், மருமகன் பெயரும் தெரியவில்லை என்றார், நம்பியூர் ADMK பிரசிடன்ட் ரங்கன் இவருக்கு தெரியும் என்றார் ,
கல்லூரி மாணவர்கள் இவரிடம் உங்களை ஏதாவது ஒரு காப்பகத்தில் சேர்த்து விடுகிறோம் அங்க உங்களை நல்லபடியாக பார்த்துகொல்வார்கள் என்றதற்கு வரமறுத்துவிட்டார் , மேலும் பழனி கூறும் போது தான் இங்கு இருப்பது மகள் விகயலக்ஷ்மி க்கு தெரிந்தால் நேரில் வந்து தன்னை அழைத்து சென்று விடுவாள் நான் இங்கு இருப்பது அவளுக்கு தெரியாது ,
மாணவர்களுக்கு மட்டும் அல்ல நமக்கும் பழனியின் மகள் விஜயலக்ஷ்மிக்கு விபரம் தெரிந்து வந்து அழைத்து போக மாட்டாளா என்ற எண்ணமே தூக்கத்தை கெடுக்கிறது...
ஹிந்துஸ்தான் மாணவர்கள் மூலம் உருவாக்கிய இந்த புதிய மனிதருக்கு உறவு கிடைக்குமா...
~மகேந்திரன்