Saturday, September 17, 2011

எங்க போனாங்களோ பழனியம்மாள்

நாளைய பொழுது பழனியம்மளுக்காக விடியுமா?
இன்று மாலை கோவை ஆவரம்பாளயம் சோபா நகரில் உள்ள எனக்கு தெரிந்த ஒரு நிறுவனத்தில் இருந்து ஒரு அழைப்பு வந்தது,
அதில் அவர்களுடைய அலுவலக வாசலில் சாலையோரமாக
ஒரு பெண் உடல் நலம் சரியில்லாமல் படுத்திருக்கிறாள் மகேந்திரன் சார் நீங்கள் வந்து அந்த பெண்ணிற்கு ஏதாவது உதவி செய்யுங்கள் என்று,
உடனே நான் அந்த பகுதிக்கு சென்று அந்த பெண் இருந்த நிலையை பார்த்தேன் ஏதோ பழைய துணிகளை சுருட்டி ஓரத்தில் போட்டது போன்று இருந்தார் , மேலும் அந்த பெண் சற்று மயங்கிய நிலையில் இருந்தார் , அதுமட்டும் அல்லாது அவருடைய வலது கழுத்து பகுதியில் ஒரு பெரிய கட்டி உடைத்து அதில் இருந்து சீல் (ஜாலம்) வந்து அவருடைய உடையெல்லாம் நனைந்து பெரும் துர்நாற்றம் அடித்துக்கொண்டு இருந்தது ,
அதை பொறுத்துக்கொண்டு அந்த பெண்ணை தொட்டு நீ யார் , எங்கிருந்து வருகிறாய் என்றதற்கு சிரம்மப்பட்டு பழனியம்மாள் என்று மட்டும் சொல்லி மயங்கிவிட்டாள்,  பிறகு 108 ஆம்பலான்ஸ் வரவழைத்து அந்த பழனியம்மாளை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல எனக்கு மிகவும் உறுதுணையாக நண்பர் கென்னடி துணைக்கு வந்தார்.
GH அழைத்து சென்றோம் அங்கு அந்த பழனியம்மாள் யார் என்றார்கள் நடந்ததை சொன்னேன் , ஆனால்  GH ல் இவருக்கு துணைக்கி யாரேனும்  இருந்தால் தான் பழனியம்மாளுக்கு வைத்தியம் செய்வோம் என்றார்கள் அதற்க்கு நான்  அவர்களிடம்
மிகவும் போராடி  இன்று இரவு உங்கள் பாதுகாப்பில் வைத்துக்கொள்ளுங்கள் எனக்கு கொஞ்சம் வேலை உள்ளது உங்கள் வைத்தியம் முடிந்ததும் நான் நாளை வந்தது ஏதாவது ஒரு காப்பகத்தில் சேர்த்து விடுகிறேன் அதற்க்கு அரை மனதுடன் சம்மதித்தனர் ஆனால் அதன் உள்ளருத்தம் எனக்கு புரியவில்லை கடவுள் மீது பாரத்தை போட்டுவிட்டு வெளியே வந்து , எனக்கு தெரிந்த இரண்டு காப்பகத்தில் பழனியம்மாளுக்காக இடம் கேட்க ஒரு காப்பகத்தில் நிர்வாகி  ஊரில் இல்லை என்றும் மற்றொன்றில் மாதம் மாதம் பணம் வேண்டும் என்று கேட்க எனக்கும் நண்பர் கென்னடிக்கும் பழனியம்மாளை பற்றி கவலை அதிகமானது , என்ன செய்யபோகிறோம் என்று யோசிக்கும் போது நினைவுக்கு வந்தது பாரத அன்னை இல்லை ஒன்று அவர்களை தொடர்பு கொண்டு பழநியம்மாவை பற்றி சொல்ல அதற்க்கு பாரத அன்னை நிர்வாகி நாளை காவல் துறை அனுமதியோடு அழைத்து வாருங்கள் என்றார்கள்.
பெரும் நிம்மதியோடு காப்பக நிர்வாகிக்கு நன்றி சொல்லிவிட்டு நம்பிக்கையோடு வீடு திரும்பினோம் நானும் எனது நண்பர் கென்னடியும்.
நாளைய பொழுது பழனியம்மளுக்காக விடியுமா?
~மகேந்திரன்
 இன்று  என்னுடைய இன்னொரு நண்பர் கண்ணன்  அவரை தொடர்புகொண்டு மருத்துவமனைக்கு சென்று பலனியம்மாவை பார்த்து மருத்துவமனையில் இருந்து டிச்சார்ஜ் செய்தது பாரத அன்னை இல்லை இல்லத்தில் சேர்த்துவிட்டு வரலாம் என்று சொன்னதும் கண்ணன் உடனே வந்து விட்டார்,
மருத்துவனை சென்று நேற்று  பழநியம்மாவை அனுமதித்து இருந்த வார்டிற்கு சென்று பார்த்தோம் பெரும் அதிர்ச்சி...
அந்த வார்டில் பழநியம்மாவை காணவில்லை அங்கு இருந்த GH முழுவதும் தேடிப்பார்த்து விட்டு நேற்று நேற்று அவர் இருந்த வார்டில் உள்ள மருத்துவ உதவியாளரை பழநியம்மாவை பற்றி கேட்டபோது அந்த பழனியம்மாள் யார் அது போன்று ஒருவரும் இங்கு அனுமதிக்க வில்லையே என்று அங்கு இருக்கும் கோப்புகளை பார்த்துவிட்டு என்ங்களை வெளியே அனுப்பிவிட்டார் மீண்டும் மருத்துவமனை முழுவதும் தேடிப்பார்த்துவிட்டு , அந்த உடல் நோய்வாய் பட்ட பழனியம்மாள் எங்கு போனார்களோ இப்போது எங்கு , எப்படி இருக்கிறார்களோ தெரியவில்லை மீண்டும் யாராவது கண்ணில் அவர் தேன் பட்டால் மறக்காமல் 9843344991 மகேந்திரன் என்னை தொடர்புக்கொள்ளுங்கள்...

கோவில் போல எண்ணித்தான் மருத்துவமனைக்கு வருகிறார்கள், நேரில் வராத கடவுள் மருத்துவராய் வருகிறார் என்று தான் மருத்துவரை நம்புகின்றனர், இந்த எண்ணத்தில் தான் பழநியம்மாவை GH ல் விட்டு வந்தேன் , ஆனால் இப்போது பழனியம்மாள் 
எங்கே... கடவுள் என்ன செய்தது ?????
பாவம் பழனியம்மாள்
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment