Thursday, September 01, 2011

மண்ணைவிட்டு மறைந்த மணியம்மா



 ஒருநாள் காலை பொழுது   108 ஆம்புலன்ஸ் நண்பர்கள் என்னை அழைத்து ஒரு பெண் கோவை பேருந்து நிலையத்தில் இரவெல்லாம் படுத்து இருக்கிறார் அவர் பெயர் மணியம்மா என்றும், அவரால் நடக்க முடியாத நிலை மற்றபடி உடலுக்கு வேறொன்று இல்லை கொஞ்சம் நேரில் வந்து பாருங்க மகேந்திரன் என்று...
அதனை தொடர்ந்து நான் பேருந்து நிலையம் சென்று அந்த 50 வயது மதிக்கத்தக்க மணியம்மாவை சந்திக்க சென்றேன்,
108 ஆம்புலன்ஸ் நண்பர்கள் சொன்னாற்போல் அந்த பெண்ணால் நடக்க முடியாதநிலையில் தான் இருந்தால் , பிறகு அந்த மணியம்மாவை தூக்கி மடியில் சாய்த்துக்கொண்டு அவரை பற்றி விசாரித்தேன் , அபோது அவர்...
"குன்னூரில் ஒரு முதியோர் காப்பகத்தில் நல்லபடியாக  இருந்ததாகவும் , ஒரு வருடத்திற்கு முன் உடல்நலம் சரியில்லாமல் போனதில் தன்னால் நடக்க முடியாமல் போனது ,
தன்னை வைத்து பராமரிக்க முடியாததால் குன்னூரில் இருந்து காரில் இங்குகொண்டுவந்து விட்டுவ்ட்டார்கள் , அனால் மருத்துவரிடம் அலைத்துபோவதாக சொல்லி அழைத்து வைத்து இவ்விடத்தில் விட்டுவிட்டார்கள், என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்"
 என்று அழுதார்.
அவரை பார்ப்பதார்க்கு பாவமாக இருந்தது சாப்பிட்டு இரண்டு நாள் ஆனதால் பசியோடு இருந்தார் அவருக்கு அருகில் இருந்த உணவு கடையில் இரண்டு இட்லி வாங்கி குடுக்க மனியம்மாவால் கையால் சாப்பிட முடியவில்லை ஆகையால் நானே ஊதிவிட்டு அவரை வேறு ஒரு
ஆம்புலன்சில்  அழைத்துக்கொண்டு ஸ்ரீ அன்பாலயம் மறுவாழ்வு இல்லத்தில் அனுமதி கேட்டு மணியம்மாவை அங்கு தங்கவைத்து பராமரித்து வந்தோம்,
பிறகு ஒரு சில நாளில் மணியம்மா குன்னூரில் இருந்த அவர் சொன்ன ஆசரமத்தை தேடி சென்றேன், அந்த இடத்தை கண்டுபிடித்து சென்றபோது அங்கு மணியம்மாவை ஏற்றுக்கொள்வதாக இல்லை , அது மட்டுமல்லாமல் மணியம்மாவின் தங்கை வீட்டை சேர்ந்தவர்கள் மணியம்மாவின் கணவர் இறந்த பிறகு மணியம்மாவை பாத்துக்கொள்ள முடியாததால் இங்கு செத்து விட்டார்கள் , பிறகு யாரோ வந்து மணியம்மாவை மருத்துவரிடம் அலைத்துபோகிறோம் என்ர்று சொல்லி அழைத்து கொண்டு போய்விட்டார்கள் இனி எங்களுக்கும் மனியம்மாவிர்க்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சொல்லி என்னை அனுப்பிவிட்டார் , மேலும் அவர்கள் மணியம்மாவின் தங்கை முகவரி குடுத்ததினால் அவர்கள் வீட்டையும் தேடினேன் குன்னூரில் நல்ல மழை நேரம் போய்கொண்டே இருந்தது கோவையில் என் வீட்டிலும் சொல்லாமல் வந்து விட்டேன் , அதிர்ஷ்டவசமாக 
மணியம்மாவின் தங்கை முகவரியை கண்டு பிடித்துவிட்டேன் கொட்டும்மழையில்,
விபரத்தை சொன்னேன் அவர்கள் வீட்டிலும் மணியம்மாவை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார்கள்,
எவ்வளவோ சொல்லியும் அவர்கள் விட்டார்கள் மணியம்மாவை ஏற்றுக்கொள்ள மறுத்ததால் ஏமாற்றத்துடன் கோவை திரும்பினேன்...
 அன்பாலயத்தில் நல்லபடியாக சந்தோசமாக இருந்தார் நான் அன்பாளையம் செல்லும் போதெல்லாம் மணியம்மாவிற்கு வேண்டிய உதவிகளை செய்து வந்தேன்...

காலம் கடந்தது, கடந்த மாதம் மணியம்மா இந்த மண்ணை விட்டு சாம்பலாக காற்றில் கலந்து விட்டார். அவருடைய இறுதி சடங்கிற்கு கூட என்னோடு வந்த அன்பாலயம்  நண்பர்கள் மட்டுமே வேறு யாரு இருக்காங்க மணியம்மாவிற்கு  ,
பாவம் மணியம்ம அவருடைய ஆத்மா சாந்தியடைய கடவுளிடம் வேண்டிக்கோங்க.
~மகேந்திரன்
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment