Showing posts with label ஆதரவற்றவர்கள். Show all posts
Showing posts with label ஆதரவற்றவர்கள். Show all posts

Saturday, December 27, 2014

தற்கொலைக்கு முயன்ற முதியவரை மீட்ட இளைஞர்கள்

ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM" Services .
****************************************************************
( 400 / 26 - 12 - 2014 )
நேற்று 25/12/2014 கோபால் சுமார் 70 வயதிருக்கும் ஒருவர் தன்னுடைய தனிமை நிலை வெறுப்பின் காரணமாக மனம் உடைந்து செய்வதறியாது தான் வசிக்கும் நாமக்கல்லில் இருந்து ஊர் ஊராக சுற்றி இறுதியில் கோவை வந்த அவர் சாலையில் போகும் வாகனங்களின் முன் விழுந்து தற்கொலைக்கு முயற்சி செய்துக் கொண்டிருந்தார் . இதில் ஒரு வாகனத்தில் மோதி காலில் பலத்த காயம் வேறு ஏற்பட்டு காலில் ரத்தம் கொட்டிக் கொண்டிருந்திருக்கிறது . இதையெல்லாம் கோவை தண்டுமாரியம்மன் கோவிலை சுற்றி உள்ளவர்களும் அந்தவழியாக சென்ற போலீசாரும் வேடிக்கை பார்த்தபடி சென்றுக் கொண்டிருந்தனர்.
அந்த வழியாக கோகுல்.A, லலித்ப்ரகாஷ்.U, சசிகுமார்.A ஆகிய மூன்று இளைஞர்கள் திரைப்படம் பார்த்துவிட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் இந்த முதியவர் செய்யும் செயல்களை பார்த்துவிட்டு மனம் பரிதவித்து அவரை மீட்டு சமாதானம் செய்திருக்கிறார்கள் . அவர்களிடம் அம்முதியவர் தனக்கு யாரும் இல்லை என்றும் திருமணம் ஆகவில்லை, வேலைக்கு செல்ல உடல் நலம் ஒத்துவரவில்லை, கையில் பணமும் இல்லை, சாப்பாட்டிற்கு வழி இல்லை, பிச்சை எடுக்கவும் மனம் ஒப்பவில்லை, இதனால் எனக்கு மரணம் தான் தீர்வு என்றுக் கூறி புலம்பி இருக்கிறார்.
இதை கேட்ட அந்த மூன்று இளைஞர்களும் அந்த முதியவருக்கு காலில் ஏற்பட்டிருக்கும் காயத்திற்கு உதவும் நோக்கில் 108 ஆம்புலன்ஸ் அழைத்துள்ளனர். ஆனால் நீண்டநேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வராத நிலையில், அவர்கள் ஈரநெஞ்சம் அறக்கட்டளையுடன் தொடர்பு கொண்டு அம்முதியவருக்கு உதவும் படிக் கேட்டுக் கொண்டார்கள் .
அதனைத் தொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்புடன் இணைந்து தற்கொலைக்கு முயன்ற அந்த பெரியவரை நள்ளிரவில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவருக்கு காலில் ஏற்பட்டிருந்த பலத்த காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின் அவரை தற்காலிகமாக கோவை மாநகராட்சிக் காப்பகத்தில் பாதுகாப்பிற்கு சேர்த்து விட்டு வந்தனர்.
இளைஞர்கள் என்றால் இரவு நேரத்தில் ஊரை சுற்றிக் கொண்டும் நேரம் கழித்தும் வீடு திரும்புவதே வழக்கமாக கொண்டிருப்பர். அது போன்ற இளைஞர்கள் மத்தியில் கோகுல், லலித்பிரகாஷ், சசிகுமார் என்னும் இந்த மூன்று இளைஞர்களின் இந்த முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது.
இப்படிப் பட்ட இளைஞர்களை நம்பியே நாளைய இந்தியா காத்துக் கொண்டிருக்கிறது என்று ஈரநெஞ்சம் அறக்கட்டளை அவர்களை உங்கள் சார்பாக அம்மூவரையும் பாராட்டுகிறது.
~ ஈரநெஞ்சம்

Saturday, August 23, 2014

மனநலம் பாதித்த சிறுவன் மீட்பு ~ஈரநெஞ்சம்

ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM" Services.
*******************************************************************
(347 / 21-08-2014)

கோவை சரவணம்பட்டி பகுதியில் கடந்த 11-08-2014 இரவு 16 வயது S. சிவபாரத் என்ற சிறுவன் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித்திரிவதை பார்த்த கோவை B9 காவல் காவலர்கள் பரிந்துரைக்க அந்த சிறுவனை தொன்போஸ்கோ சிறுவர் காப்பகத்தில் சேர்த்தனர் . மேலும் சிவபாரத்திடம் இருந்து பெறப்பட்ட தகவலை கொண்டு அவனது பெற்றோரை தேடும் முயற்சியில் ஈரநெஞ்சம் அமைப்பு முயற்சித்து 18-08-2014 அன்று சிவபாரத்தின் தந்தை செந்தூர் பண்டி , தாயார் லலிதா இருவரையும் கண்டுபிடித்து கோவை உக்கடத்தில் உள்ள தொன்போஸ்கோ காப்பகத்தில் இருக்கும் சிவபாரத்திடம் அழைத்து சென்றபோது அவன் அங்கிருந்து அதற்கு முதல்நாள் காணாமல் போய்விட்டதாக தகவல் தெரிவித்தனர் .




https://www.facebook.com/eeranenjam/photos/a.249582201805870.51248.199260110171413/609563489141071/?type=1&theater

தங்கள் மகன் கிடைத்துவிட்டான் என்ற மகிழ்ச்சியில் வந்த சிவபாரத்தின் பெற்றோருக்கு அவன் மீண்டும் காணாமல் போனது தெரிந்து மிகுந்த வேதனை அடைந்தனர் . ஈரநெஞ்சம் அமைப்பினர் அவர்களுக்கு ஆறுதல் சொல்லி சிவபரத் காணாமல் போனதற்கு அமைப்பே பொறுப்பேற்றுக்கொண்டு சிவபாரத்தை கண்டுபிடித்து தருவதாக உறுதியளித்து அவர்களை அனுப்பிவைத்தனர்.

https://www.facebook.com/eeranenjam/photos/a.249582201805870.51248.199260110171413/612734938823926/?type=1&theater

  


அதனை தொடர்ந்து மீண்டும் ஈரநெஞ்சம் அமைப்பின் முயற்சியால் சிவபாரத் 21-08-2014 கண்டு பிடிக்கப்பட்டான். பின்னர் கோவை மாநகராட்சி காப்பகத்தில் பாதுகாப்பாக சேர்க்கப்பட்டான். உடனடியாக அவன் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் மகனை அழைத்துச் செல்ல உடனே வந்தனர். பெற்றோர்களை கண்டதும் சிவபாரத் ஓடி வந்து கட்டிக்கொண்டு முத்தமிட்ட காட்சி காண்பவர் விழிகளில் கண்ணீரை பெருக்கியது.
 



அவனது பெற்றோர் கூறும்போது தங்கள் மகனை பிரிந்து மிகவும் வேதனை அடைந்து வந்ததாகவும் , அவனைத் தேடி எங்கெல்லாமோ அலைந்ததாகவும் தெரிவித்தனர். ஈரநெஞ்சம் அமைப்பினர் தங்கள் மகன் கிடைத்து விட்டதாக தகவல் தெரிவித்த போது மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்ததாகவும் பின்னர் மீண்டும் மகனை காணவில்லை என்ற போது மிகவும் கவலை கொண்டதாகவும் தெரிவித்தனர். ஆனாலும் எல்லோருமே ஈரநெஞ்சம் அமைப்பினரின் முயற்சியில் கண்டிப்பாக உங்கள் மகன் கண்டிப்பாக கிடைத்து விடுவான் என்றும் இது போல் குடும்பத்தை விட்டு பிரிந்த பலரையும் ஈரநெஞ்சம் அமைப்பினர் குடும்பத்துடன் சேர்த்து வைத்துள்ளனர் என்று கூறியது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியதயது . அதேபோல ஈரநெஞ்சம் அமைப்பினர் தங்கள் மகனை மீட்டுக் கொடுத்து தங்கள் மனதிற்கு நிம்மதியை கொடுத்துள்ளனர் என்று கூறி கண்ணீர் மல்க ஈரநெஞ்சம் அமைப்பினருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

சிவபாரத் தனது பெற்றோருடன் சேர எடுத்துக்கொண்ட பெருமுயற்சியில் அமைப்புக்கு உதவிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் ஈரநெஞ்சம் அமைப்பு தனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது .
   




மீண்டும் ஒரு உறவை இணைத்து வைத்த மகிழ்ச்சியில் ஈரநெஞ்சம்.

~ ஈரநெஞ்சம்.

Wednesday, May 07, 2014

ஒரே நாளில் மூன்று உறவுகளை குடும்பத்தினருடன் இணைத்து வைத்ததில் ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services
" ******
(303/07-05-2014)

கோவையில் 05/05/2014 நேற்று அரசு மருத்துவமனை ,ரயில் நிலையம் கலெக்டர் அலுவலகம் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக சுற்றித் திரிந்த மனநிலை பாதிக்கப்பட்டோர் மற்றும் பிச்சைக்காரர்கள் 12 பேரை போலீசார் மீட்டு கோவை மாநகராட்சி காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இதனை தொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்பினர் அவர்களிடம் விசாரித்தனர். அதில் சிலருக்கு வீடும் உறவினர்களும் இருப்பதை அறிந்து அவர்களது உறவினர்களை தேடும் முயற்சியில் இறங்கினர். அதன் தொடர்பாக போலீசார் அழைத்து வந்த 12 பேரில் ராஜன் (33) திருச்சி , வேலு (50) திருநெல்வேலி , தியாகராஜன் (60) முசிறி , மாரப்பன் (38) விஜயமங்கலம் , கோபால் (70) கோவை ஆகிய 5 பேர்களின் உறவினர்களை கண்டுபிடித்து அவர்களிடம் . இவர்களைப்பற்றிய விபரம் கூறியதில் ,திருச்சியிலிருந்து ராஜனின் சகோதரர் தாமோதரன், திருநெல்வேலியில் இருந்து வேலுவின் சகோதரர் முருகன் , முசிறியில் இருந்து தியாகராஜன் அவர்களின் மருமகன் சுந்தரராஜன் ஆகியோர் உடனடியாக இன்று 06/05/2014 கோவைக்கு வந்தனர் அவர்களிடம் அந்த மூவரையும் மாநகராட்சி காப்பக ஆய்வாளர் கங்காதரன் ஒப்படைத்தார்.

ராஜனைப்பற்றி அவரது சகோதரர் தாமோதரன் கூறும்போது :
"தனது தம்பி ராஜனுக்கு அவ்வப்போது காக்காய் வலிப்பு வரும் அதனால் சற்று ஞாபகமறதி ஏற்பட்டது கடந்த மூன்று மாதங்களுக்கு முன் காணாமல் போய்விட்டார் நாங்கள் எங்குத் தேடியும் கிடைக்கவில்லை நேற்று ஈரநெஞ்சம் அமைப்பு மூலமாக காவல் நிலையத்தில் இருந்து போலீசார் வந்து தம்பி கோவையில் இருக்கிறார் என்று கூறினார்கள் அதனை தொடர்ந்து அவனை அழைத்துப்போக வந்துள்ளேன் " என்றுக் கூறினார் .
வேலுவின் சகோதரர் முருகன் கூறும்போது :
" எனது தம்பி வேலு டிரைவராக பணிபுரிந்து வந்தார் அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றது இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் வேலுவிற்கு எதோ விபத்து ஏற்பட்டு உள்ளது என்று திருச்சியில் இருந்து அலைபேசி மூலம் தகவல் வந்தது நாங்கள் அங்கு சென்று பார்த்தபோது வேலு அந்தபகுதியில் இல்லை, அதன் பிறகு நாங்கள் திருநெல்வேலி காவல் நிலையத்தில் காணவில்லை என்று புகார் தெரிவித்திருந்தோம் ஆனால் இதுவரை வேலுவை கண்டுபிடித்து கொடுக்கவில்லை . இன்று ஈரநெஞ்சம் அமைப்பு மூலமாக கோவையில் தம்பி இருப்பதை அறிந்து அவரை அழைத்துப்போக வந்துள்ளோம்" என்றார்.
தியாகராஜன் அவர்களின் மருமகன் சுந்தரராஜன் கூறும்போது :
"எனது மாமாவின் குடும்ப சூழ்நிலை வறுமையானது அவரது மகன் அருண் குமார் MBA படித்து வருகிறார் அவரை நல்லபடியாக படிக்கவைக்க வேண்டும் என்று வீட்டை விட்டு வெளியேறி கூலி வேலை செய்து அவ்வப்போது பணம் அனுப்பி வைப்பார் . ஆனால் கடந்த 3 மாதமாக பணம் அனுப்பவில்லை , அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவலும் தெரியவில்லை நாங்கள் எங்குதேடியும் கிடைக்கவில்லை எங்கு இருக்கிறார் என்ற தகவலும் தெரியவில்லை . நேற்று இரவு ஈரநெஞ்சம் அமைப்பினர் கொடுத்த தகவலின் படி உடனடியாக கோவைக்கு வந்துள்ளேன் " என்றார்.
மேலும் இவர்களை மீட்டு பத்திரமாக ஒப்படைத்ததற்கு உறவினர்கள் ஈரநெஞ்சம் அமைப்பிற்கும் , கோவை காவல் துறைக்கும் , மாநகராட்சி காப்பகத்திற்கும் மனதார நன்றியை தெரிவித்துக்கொண்டு அழைத்துச் சென்றனர்.
ஒரே நாளில் மூன்று உறவுகளை குடும்பத்தினருடன் இணைத்து வைத்ததில் ஈரநெஞ்சம் மகிழ்கிறது.
நன்றி
~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Yesterday 05.05.2014 the police have rescued the mentally ill and the beggers from the government hospital, railway station and the collectors office where they disturbed the traffic and the general public. There were 12 of them rescued and admitted at Coimbatore City Corporation Home. Following that the members of the Eera Nenjam Trust questioned those helpless individuals. The members have found out that some of them had families and homes. The members started searching for the relatives and out of those 12 who were rescued by the police, Rajan (33) Trichy, Velu (50) Thirunelveli, Thiyagarajan (60) Musiri, Marappan (38) Vijayamangalam, Gopal (70) Coimbatore’s relatives were found and they were informed about their lost ones. When the members members of the Eera Nenjam Trust informed informed about these individuals, Rajan’s brother from Trichy, Velu’s brother Murugan from Thirunelveli, Thiyagarajan’s nephew Sundararajan came rushing down to Coimbatore today 06.05.2014. Citi Corporation Inspector Gengatharan handed those three over to their relatives.
When Rajan’s brother Thamotharan spoke, he said “my brother Rajan periodically suffered from epilepsy that caused him poor memory. He went missing three months ago. We searched for him everywhere but couldn’t find him. Yesterday through the Eera Nenjam Trust, the police came and informed that our brother was in Coimbatore. I came to bring him with me.”
When Velu’s brother Murugan spoke, “my brother Velu worked as a driver. He was married and have two children. Six months ago we received a cell phone message from Trichi that he had an accident. When we went to see him he wasn’t there. We reported a missing complaint at the Thirunelveli police station. But they haven’t found Velu . Today through the Eera Nenjam Trust we found that our brother Velu was in Coimbatore and came here to bring him with me.”
When Thiyagarajan’s nephew Sundararajan spoke, “my uncle’s family has financial difficulties. His son Arun Kumar is studying MBA. Just to support him in his studies uncle left home to earn labor job and sent money time to time. But the last 3 months money wasn’t sent by him and also there was news of his whereabout. We searched for him everywhere and couldn’t located him. Upon the messaged received last night from the members of the Eera Nenjam Trust I came to Coimbatore immedietly.”
They all thanked the Eera Nenjam Trust, Coimbatore police service, and the Coimbatore City Corporation Home for rescued them and handed over safely. They all left with their loved ones.
The Eera Nenjam Trust is very very pleased about the fact they have reunited three helpless individuals back with their families and happy to share that with you all.

~thank you
Eera Nenjam Trust

Thursday, March 27, 2014

TV நேரடி நிகழ்ச்சியில்... ஒரு உறவை கண்டுபிடிதுகொடுத்த ஈரநெஞ்சம்


''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services
" ******
[For English version, please scroll down]
(284/27-03-2014)
22-03-2014 அன்று பொதிகை தொலைக்காட்சியின் " காற்றுச் சிம்மாசனம் " என்ற நிகழ்ச்சி பதிவுக்கு ஈரநெஞ்சம் அமைப்பு சார்பாகக் குழந்தைகள் மற்றும் ஈரநெஞ்சம் திரு.மகேந்திரன் அழைப்பின் பேரில் கலந்துக்கொண்டனர் . நிகழ்ச்சியில் சேவாலயம் குழந்தைகள் சேவாலயம் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி சுதா, சிறப்பு அழைப்பாளராகத் தோழர் அறக்கட்டளை சாந்தகுமார் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சி தொகுப்பாளராகக் கோவை பொதிகை தொலைகாட்சி நிலைய தலைவர் கலைமாமணி ஆண்டாள் பிரியதர்ஷினி ஆகியோர் பங்குபெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் சேவாலயம் அமைப்பில் இருந்து வந்து பங்கு பெற்ற பேபி ஷாலினி என்ற 13 வயது சிறுமியின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் அனைவரையும் கண் கலங்க செய்தது. ஒன்றரை வருடத்திற்கு முன் சிறுமி பேபி ஷாலினியும் அவளது தம்பியும் ஒரு காப்பகத்தில் வசித்து வந்தனர். அப்போது தவிர்க்க முடியாத சில காரணங்களால் அந்த காப்பகத்தில் இருந்து எல்லா குழந்தைகளையும் வெளியேற்றப்பட்டு வேறு வேறு காப்பகங்களில் அனுமதிக்கப் பட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக பேபி ஷாலினியும் அவளது தம்பி ஆரோக்கியதாசும் பிரிந்து விட்டனர். பேபி ஷாலினி கோவை சேவாலயம் வந்து சேர்ந்தாள். தன் தம்பி எங்கு இருக்கிறான் என்று தெரியாத நிலையில் அன்று முதல் அவள் பலரிடமும் தன் தம்பியை கண்டு பிடித்து தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கேட்டுக் கொண்டால். அதை தொடர்ந்து மாநில குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திலும் அவளது வேண்டுகோள் பரிசீலிக்கப்பட்டு அவளது தம்பியை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் தம்பியை கண்டு பிடிக்க முடியவில்லை. கண்களில் நீர் மல்க தனக்கு இருந்த ஒரே ஆதரவான உறவையும் பிரிந்து விட்ட பேபி ஷாலினியின் நிலையை கண்டு அங்கு கூடியிருந்த அனைவருமே கண் கலங்கினர். அவளுக்காக எல்லோரும் பரிதாபப் பட்டு அவளது தம்பி கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர்.
ஆனால் இதுவரை உறவை பிரிந்து தவித்த பலரையும் உறவுகளுடன் சேர்த்து வைத்த ஈரநெஞ்சம் அமைப்பினர் பேபி ஷாலினியை அவளது தம்பியுடன் சேர்த்து வைத்தாக வேண்டும் என்ற உத்வேகத்துடன் உடனே முயற்சியை தொடங்கினர். முயற்சியின் பலனாக ஷாலினியின் தம்பி ஆரோக்கியதாஸ் ஊட்டியில் ஒரு காப்பகத்தில் இருப்பதை கண்டறிந்தனர். அதை தொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்பின் தலைமையில் பொதிகை தொலைகாட்சி ஊழியர்கள், சேவாலயம் அமைப்பின் நிர்வாகத்தினர் மற்றும் மாநில குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக ஊழியர்கள் ஆகியோர் பேபி ஷாலினியையும் அழைத்துக் கொண்டு இன்று 26-03-2014 ஊட்டிக்கு சென்று பேபி ஷாலினியின் தம்பியை கண்டுபிடித்து மீட்டனர். பேபி ஷாலினியை அவளது ஒரு உறவான அவளது தம்பியுடன் இணைத்து வைக்கும் வகையில் தம்பி ஆரோக்கியதாஸ் மாநில குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப் பட்டான்.
இதுவரை உறவை பிரிந்த பலரையும் ஈரநெஞ்சம் அமைப்பினர் அவர்களின் குடும்பத்தினருடன் இணைத்து வைத்துள்ளனர். ஆனால் ஆதரவற்ற, பிரிந்து விட்ட இரு உறவுகளை இணைத்து அவர்களுக்கு மீண்டும் ஆதரவை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது ஈரநெஞ்சம் அமைப்பு. ஆதரவற்றவர்கள் என்ற நிலையே யாருக்கும் இருக்கக்கூடாது என்பதே ஈரநெஞ்சம் அமைப்பின் நோக்கமாகும்.
அவ்வகையில் இன்று பேபி ஷாலினியின் தம்பி ஆரோக்கியதாசை அவளுடன் இணைத்து வைத்ததற்காக ஈரநெஞ்சம் அமைப்பு மிகவும் மகிழ்ச்சி அடைவதோடு அதற்கு உதவிய பொதிகை தொலைகாட்சி மற்றும் அதன் "காற்று சிம்மாசனம்" நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், சேவாலயம் அமைப்பு நிர்வாகிகள், மாநில குழந்தைகள் பாதுகாப்பு அலவலக ஊழியர்கள் ஆகிய அனைவருக்கும் ஈரநெஞ்சம் அமைப்பு நன்றியை தெரிவித்து கொள்கிறது.
ஈர நெஞ்சம் அமைப்பின் இந்த அரிய முயற்சியை அனைவரும் மனதார பாராட்டினர்.
~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

On22.03.2014 on behalf of the Eera Nenjam Trust, Mr. Mahendran and the children from the trust participated upon the invitation in the recording of "Katru Simmasanam" a program of Pothigai TV. The principal Mrs. Sutha of Sevalayam School with the children, Mr. Shanthakumar from Thozhar Trust as a special invitee, and as a coordinator of the program, Kalai mamani Aandal Priyatharshini the head of Pothigai TV station also participated in this program.
During this program, an incident happened in the life of 13 year old Baby Shalini from Sevalayam organization made tears come out of everyone's eyes. One and a half years ago Baby Shalini and her brother Arockiyadas lived in a charity home. For some unavoidable reason, all the children of that trust had to be transferred to other charity homes. During that process unexpectedly baby Shilini and her brother Arockiyadas got separated. Baby Shalini ended up living in Sevalayam organization. Without knowing where her brother was living, baby Shalini asked many individuals to find her brother and reunited with her. Later her request was taken into consideration by the state children's safety operation office and they started trying to find her brother, but her brother couldn't be found. Everyone was in tears seeing the sorrowful situation of tearful Shalini who got separated from the only family she had. They all sympathized and prayed god for her to be reunited with the brother.
But, the members of the Eera Nenjam Trust who had reunited many individuals who lost their families in the past, determined to reunite Shalini back with her brother and started the search with the enthusiastic effort. Because of the tremendous effort they took, they found out that Shalini's brother is living in a charity home in Ooty. Following that information, under the leading of the Eera Nenjam trust the employees of Pothigai TV, the administrators of Sevalayam organization, and employees of the state children's safety operation went to Ooty. Earlier today 26.03.2014 baby Shalini was reunited with her brother Arockiadas. Now Arockiyadas is being handed over to the office of the state children's safety operation.
So far the Eera Nenjam Trust made many efforts and reunited many individuals back with their families. Now once again it made the difference by reuniting two siblings and found shelter for them. The mission of the Eera Nenjam Trust is that " there should be no individual that suffer from not being cared". According to its mission the Eera Nenjam Trust is very pleased of the fact that the siblings are reunited and being cared. The trust is also thanking the Pothigai TV, the program coordinators of the "Katru Simmasanam" program, administrators of Sevalayam organization and the officials from the state children's safety operation for their assistance in the search of the separated brother.
Everyone praised the tremendous effort of the members of Eera Nenjam Trust that made to find Arockiyadas in a very short time period.
The Eera Nenjam Trust is very pleased to share its experience with you all.
~thank you
Eera Nenjam


Wednesday, March 05, 2014

திருப்பூர் லெச்சுமி பாட்டி உறவினர் கண்டுபிடிக்கப்பட்டு ஒப்படைப்பு

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services
" ****** 
[For English version, please scroll down] 
(277/04-03-2014)


கோவை காந்திபுரம் பேருந்துநிலையத்தில் லெட்சுமி வயது 75   மூதாட்டி ஒருவர் சுற்றித்திரிவதாகவும் , அவர் யார் எங்கிருந்து வந்துள்ளார் ? என்ற விபரம் சரிவர தெரியாத நிலையில் அவருக்கு பாதுகாப்பு கொடுக்கும்படி கோவை காட்டூர் காவல் B3 காவல் நிலையம் வேண்டுகோளுக்கு இணங்க  02-03-2014 அன்று ஈரநெஞ்சம் அமைபினரால்  அழைத்துவரப்பட்டு கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.

காப்பகத்தில் சேர்க்கப்பட்ட 
லெட்சுமி பாட்டி தனது வீடிற்கு போகவேண்டும் என்ற ஏக்கத்தை அறிந்து பாட்டியின்  உறவினர்களை  கண்டறியும் முயற்சியில் ஈரநெஞ்சம் பலவழிகளில்  முயற்சி  எடுத்தது.

https://www.facebook.com/photo.php?fbid=308745359250426&set=a.287928837998745.1073741826.100003448945950&type=1&stream_ref=10

காப்பகத்தில் இருந்த  லெட்சுமி  பாட்டி இடம் இருந்த ஒரு துண்டு காகிதத்தில் இருந்த முகவரியை கொண்டு அந்த பாட்டி நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என்று அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள், பொதுநல அமைப்புகள்  மற்றும்  காவல்துறையினர் உதவியுடன்  தேடப்பட்டது , அதன் பயனாக அந்த முகவரியில் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு லெட்சு மற்றும் அவரது குடுமதினர் வாழ்ந்து வந்ததாகவும்  அதன் பிறகு  திருப்பூரி சென்று விட்டதாகவும்  அறியப்பட்டது . திருப்பூரில் உள்ள அவரது முகவரி தெரியாத நிலையில் இருந்த நிலையில் ஈர நெஞ்சம் அமைப்பு பாட்டியை பற்றி வெளியிட்ட தகவலை அறிந்து  திருதரை பூண்டி , பல்லாங்கோவில் பகுதியை சேர்ந்த   k .சந்திரசேகரன்  bsnl அவர்கள் அமைப்பை தொடர்புகொண்டு  திருப்பூரில் வசித்துவரும்  லெட்சுமி பாட்டியின் மகள் சித்ரா மருமகன் கோவிந்தன் பற்றிய தகவலை தெரிவித்தார் .

அதனை தொடர்ந்து  
லெட்சுமி பாட்டியின் மகள் சித்ரா மருமகன் கோவிந்தன் அவர்களை தொடர்புகொண்டு லெட்சுமி பற்றி விபரம் கூறி அவர்களை உடனடியாக 04/03/2014 அன்று வரவழைக்கப்பட்டு லெட்சுமி பாட்டியை அவர்களுடன் ஒப்படைக்கப்பட்டனர்.லெட்சுமி பாட்டியின் மகள் சித்ரா  கூறும்போது திருதரை  பூண்டியில் இளைய மருமகள்  தனம்  வீட்டில்  லெட்சுமி அம்மா  இருந்தார்கள் , தனம் அவர்களுக்கு தெரியாமல் லெட்சுமி  அம்மா கடந்த 27/02/2014 அன்று காணாமல் போய்விட்டதாகவும் அன்று முதல் அம்மாவை  தேடிவருகிறோம் , திருதரைபூண்டி  காவல் நிலையத்திலும் லெட்சுமி  அம்மாள் காணவில்லை என்று தெரியபடுத்தி உள்ளோம் ,மேலும்  உறவினர்கள் நண்பர்கள் என அனைவரும் அம்மாவை  தேடி கொண்டிருந்தோம் , ஈரநெஞ்சம் அமைப்பு லெட்சுமி அம்மா கோவையில் இருப்பதாக தகவல் அளித்ததை தொடர்ந்து அவரை அழைத்து செல்ல வந்துள்ளோம் , லெட்சுமி  அம்மாவை கிடைத்தது பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அடைகிறோம் , லெட்சுமி  அம்மாவை காணாது மிகவும் தவித்து விட்டோம் , அம்மாவை பாதுகாத்து எங்களையும் தேடி கண்டுபிடித்து தந்ததற்கு ஈரநெஞ்சம் அமைபிற்க்கும் காவல்துறையினருக்கும் , கோவை மாநகராட்சி காப்பகத்திற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு லெட்சுமி பாட்டியை அழைத்து சென்றனர் .

தனது  உறவினரை தொலைத்து விட்டு  தவித்து கொண்டிருந்த லெட்சுமி  பாட்டி அவர்களின் உறவினரை கண்டு பிடிக்க உதவிய அணைத்து நண்பர்களுக்கும் , லெட்சுமி  பாட்டியை காப்பகத்தில் நல்லமுறையில் கவனித்துக்கொண்ட கோவை மாநகராட்சி காப்பகத்திற்கும் , பாட்டியை ஈரநெஞ்சம் அமைப்பிடம்  பாதுகாக்கும்படி  ஒப்படைத்த கோவை B3 காவல் நிலையத்திற்கும் ஈரநெஞ்சம் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவிதுக்கொல்கிறது. 

மீண்டும் ஒரு உறவை குடும்பத்தினருடன் இணைத்து வைத்த மகிழ்ச்சியில் ஈரநெஞ்சம் அமைப்பினர்.

~ நன்றி
ஈர நெஞ்சம்

Sunday, February 23, 2014

சாலையில் காயத்துடன் ஆதரவற்று இருந்தவருக்கு முதலுதவி ~ மகேந்திரன்

சில நாட்களுக்கு முன்பாக உக்கடம் பகுதியில் சாலையில் ஆதரவற்று ஒரு மூதாட்டி வலது கை இழந்த நிலையில் பரிதாபமாக இருந்தார், அவருக்கு பாதுகாப்புக் கொடுக்க அந்த மூதாட்டியை அழைத்துவந்து மாநகராட்சி காப்பகத்தில் அனுமதி கேட்டு அங்கு சேர்க்கப்பட்டது. அதன் பிறகு அந்த அம்மாவின் தலையில் எதோ காயம் இருக்கும் போல தலை வலியால் துடித்துக்கொண்டு இருந்தார். முடி நிறைய இருந்ததால் காயம் தெரியவில்லை தலையில் ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தது அதிக துர்நாற்றம் வீச, தலையில் முடி வெட்டி விடலாம் என்று முடியை வெட்டும் போதுதான் தெரிந்தது அத்தலையில் இருந்த காயத்தில் புழுக்கள் இருந்தது, பாவம் அந்த அம்மா வலியை எப்படி பொறுத்துக்கொண்டு இருந்தார் என்று தெரியவில்லை , முடிதிருத்தம் செய்து காயத்தில் இருந்த புழுக்களை எல்லாம் எடுத்துவிட்டு காயத்திற்கு மருந்து போடப்பட்டு உள்ளது, இப்படி ஒரு வேதனை யாரும் அனுபவிக்க கூடாது. அந்த வயதான அம்மா விரைவில் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.







நன்றி...

Wednesday, December 11, 2013

மூன்றாண்டுகளுக்குப் பிறகு கிடைத்த உறவு

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
******
[For English version, please scroll down]
(242/10-12-2013)

திரு.ராஜசேகர் வயது 38 கடந்த ஒருவருடத்திற்கு முன்பு காவல்துறையினரால் கோவை மாநகராட்சி காப்பகத்தில் மனநிலை சரி இல்லாத நிலையில் சேர்க்கப்பட்டு காப்பகத்தின் பாதுகாப்பில் இருந்துவந்தார்.
https://www.facebook.com/photo.php?fbid=498754583555296&set=a.249582201805870.51248.199260110171413&type=1&theater
ஈரநெஞ்சம் மூலம் இவரை பற்றிய இந்த தகவல்களை கடந்த 6 ஆம் தேதி முகநூலில் மற்றும் வலைதளங்களில் பதிவிடப்பட்டது. பின்னர் ஈரநெஞ்சம் அமைப்பு எடுத்துக் கொண்ட முயற்சியின் மூலம், சாயர்புரம் காவல் நிலைய உதவியுடன் அவரது உறவினர்கள் கண்டு பிடிக்கப்பட்டனர். அதன் மூலம் அவரது உறவினர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக தூத்துக்குடியில் இருந்து கிளம்பி இன்று 10-12-2013 காலை கோவை வந்தடைந்தனர். அவரது அண்ணன் திரு. பாலசுப்ரமணியமும், மாமா மோகன சுந்தரம் அவர்களிடமும் ஈரநெஞ்சம் அமைப்பின் மூலம் திரு. ராஜ்குமார் ஒப்படைக்கப்பட்டார்.
அவர்கள் கூறும்போது தனது தம்பி ராஜ்குமார். B.Com படித்திருப்பதாகவும், அவருக்கு திருமணமாகி விட்டது என்றும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் தெரிவித்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அவர் காணாமல் போய் விட்டதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்து முதல் தகவல் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது என்றும் கூறினார். . மேலும் 3 வருடங்களாக பல இடங்களில் அவரை தேடி அலைந்ததாகவும் கடந்த 7-12-2013 அன்று ஈரநெஞ்சம் அமைப்பினர் அழைத்து இவரை பற்றிய தகவல் தெரிவித்ததாகவும் கூறினார். இதில் மிகவும் வேதனையான விஷயம் என்னவென்றால் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு தான் அவரது தநதையார் காலமானார். இன்னும் சில நாட்களுக்கு முன்பு இவரை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்திருந்தால் அவரது தந்தையையும் அவர் பார்த்திருப்பார். எனவே இப்படி தாமதம் ஆனதை நினைத்து ஈரநெஞ்சம் அமைப்பு வருத்தம் அடைகிறது என்றாலும் உறவினர்களை இப்போதாவது கண்டு பிடித்து சேர்த்து வைத்ததில் கொஞ்சம் திருப்தியாக உள்ளது.
தனது சகோதரனை தேடி தந்த ஈரநெஞ்சம் அமைப்புக்கு அவர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இனி அவரை நல்ல முறையில் பாதுகாப்பதாக கூறினார். இங்கு வந்த பின்பு தான் ஈரநெஞ்சம் அமைப்பினர் இது போல மேலும் பலரை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்திருப்பதை அறிந்து கொண்டதாகவும் கூறினார்.
http://youtu.be/AU4gA2w8yew
மீண்டும் ஒரு உறவை தேடித் தந்த மகிழ்வில் அவர்களோடு ஈரநெஞ்சம் அமைப்பு, இவரது உறவினர்களை கண்டுபிடிக்க உதவிய காவல் துறையினருக்கும் நண்பர்களும் தன நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam


Mr. Rajasekar age 38, a mentally disturbed man was admitted at Coimbatore City Corporation home by the police last year. Since then he has been under the care of the charity home. Information about him was posted on Facebook last 6th by Eera Nenjam. Later with the effort taken by Eera Nenjam, his relatives were found with the assistance of Sayarpuram police. Information about Mr. Rajasekar was sent to his relatives. They left Thoothukudi immediately and arrived Coimbatore today 10.12.2013 morning. Mr. Rajasekar was handed over to his big brother Mr. Balasubramaniyam and uncle Mr. Mohanasuntharam.
When they talked about his brother Rajasekar, they mentioned that he studied B.Com, married and was mentally disturbed. 3 years before he disappeared and they gave a complaint at the police station said that the FIR was filed. Also mentioned that they have been searching for him for the past 3 years, later Eera Nenjam contacted them and provided information about him last 07.12.2013. The most painful thing in this is that his father passed away 3 weeks ago. If he was reunited with his family little earlier, he could have seen his father. Eera Nenjam feel terrible about the delay in finding his family, but feel little satisfaction that atleast they found his relatives and reunited him with his family.
They expressed gratitude to Eera Nenjam for finding their brother and assured that they will protect him well. They also mentioned that they came to know about Eera Nenjam's services in rescuing others who were in the same situation as Mr. Rajasekar.
Eera Nenjam is satisfied and being glad about the fact that another helpless individual is being reunited with his family. They are also thanking the Police service and friends for their assistance in finding the family.
~thank you
Eera Nenjam

Saturday, November 23, 2013

தனம் அம்மாவின் உறவினர் கண்டுபிடிப்பு ~ஈரநெஞ்சம்


''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services
" ******
[For English version, please scroll down]
(235/23-11-2013)

கோவை உக்கடம் பகுதியில் நேற்று 21/11/2013 தனம் வயது 80 என்னும் மூதாட்டி மயங்கிய நிலையில் இருந்தவரை கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்க்கப்பட்டு நிலையில் இன்று 22/11/2013 அவரது உறவினரை தேடும் பணியில் ஈரநெஞ்சம் முயற்சி மேற்கொண்டது ,

https://www.facebook.com/photo.php?fbid=286072094851086&set=a.143756775749286.13398.100003448945950&type=1&theater

அதன் பலனாக இன்றையதினமே 22/11/2013 B13 காவல்துறை உதவியுடன் தனம் அம்மாவின் மகனான குப்பாசாரியர் கண்டுபிடிக்கப்பட்டு காப்பகத்தில் இருக்கும் தனம் அம்மாவை மகன் குப்பாசாரியருடன் ஒப்படைக்கப்பட்டது .

தனம் அம்மாவின் மகனான குப்பாசாரியர் கூறும்போது தனது தாய் நேற்று 21/11/2013 வீட்டில் இருந்த நிலையில் ஒரு உறவினரது வீட்டிற்கு சென்று வருவதாக சொல்லிச் சென்றார். அவருக்கு ஞாபகமறதி இருப்பதால் வெளியே சென்றவர் உறவினரது வீட்டிற்கும் செல்லவில்லை , இரவெல்லாம் தேடிக்கொண்டு இருந்தோம் , இன்று பிற்பகல் காவல்துறையினர் வந்து சொன்னபிறகுதான் இங்கு காப்பகத்தில் இருப்பது தெரியவந்தது, மேலும் அம்மாவை கண்டுபிடித்து தந்த ஈரநெஞ்சம் அமைப்பிற்கு மனதார நன்றியினை தெரிவித்துக் கொண்டார். அவரை அழைத்து சென்று நல்லமுறையில் கவனிதுக் கொள்வதாகவும் உறுதி அளித்தார்.

மேலும் ஒரு உறவை தேடித்தந்த ஈரநெஞ்சம் மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறது

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam


On 21.11.2013, Thanam an elderly lady age 80 was rescued from Coimbatore Ukkadam area and admitted at Coimbatore City Corporation Home. She was found unconscious. Yesterday Eera Nenjam attempted to search her relatives. As a result, with the help of the police they found Thanam Amma’s son Kuppachariyar yesterday 22.11.203 and handed his mom over to him. When Thanam Amma’s son Kuppachariyar spoke, he mentioned that his mother left home on 21.11.2013 to go to one of the relatives. She has poor memory power, because of that she neither went to the relative house nor returned home. They were searching for her through the night. They came to know that Thanam Amma is in the city home when the police came in the afternoon and told them. He thanked Eera Nenjam for finding his mom and assures that he will take good care of his mother.

Once again Eera Nenjam reunited a lost person back with her family and sharing that good news with you all.

~thank you.
Eera Nenjam

Tuesday, November 05, 2013

பரிதாபம் தாய் இறந்தது கூட ஜெயந்திக்குத் தெரியாது. ~ஈரநெஞ்சம்


''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(228/04/11/13)

கடந்த 1ஆம் தேதி, தீபாவளிக்கு முன்தினம், கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சுமார் 32 வயது மதிக்கத்தக்க மன நிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இருப்பதாக அறிந்த காவல் துறையினர் அந்த பெண்ணை கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்தனர்.

அப்பெண்ணின் பெயர் ஜெயந்தி என்பதை தவிர வேறெதுவும் தெரியவில்லை. இந்நிலையில் இது போல பலரை அவரது குடும்பத்தினரை கண்டு பிடித்து தேடி தந்த ஈரநெஞ்சம் அமைப்பினரை கோவை மாநகராட்சி காப்பகத்தினர் தொடர்பு கொண்டு ஜெயந்தியை பற்றி தெரிவித்தனர். மேலும் அவரது குடும்பத்தினரை தேடி கண்டுபிடிக்குமாறு கேட்டு கொண்டனர். ஈரநெஞ்சம் அமைப்பினர் ஜெயந்தியை நேரில் கண்டு அவரிடம் பேசி விசாரித்த போது புதுத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் என்றும், கே.கே.புதூர் பள்ளியில் 9ஆம் வகுப்புவரை படித்ததாகவும் மட்டும் அறிந்து கொள்ள முடிந்தது.

உடனடியாக அந்த பள்ளிக்கு சென்று விசாரித்த போது அப்படி யாரும் இல்லை என்று கூறிவிட்டனர். பின்னர் அவர் கூறிய புதுத்தோட்டம் பகுதியை தேடி கண்டு பிடித்து அங்கே சென்று விசாரித்தனர் ஈரநெஞ்சம் அமைப்பினர். 3 மணி நேர தேடலுக்கு பின் ஜெயந்தியின் சகோதரிகள் சகாய ராணி மற்றும் சாந்தியை கண்டு பிடித்த கேட்ட போது பல வருத்தபடுபடியான நிகழ்வுகள் தெரிய வந்தது.

ஜெயந்தி மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரது கணவர் 10 வருடங்களுக்குமுன்னரே அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். பிறகு அவர் தனது மகன் ஆண்ட்ரோ கிங்ஸ்லி யுடன் தன தாய் வீட்டில்தான் வசித்து வந்தார். தொடர்ந்து அவர் மருத்துவ சிகிச்சையில் இருந்து மருந்துகள் எடுத்துகொண்டு வந்ததால் மனநிலை தேறி வந்திருக்கிறார். இந்நிலையில் அவரது தாயார் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனால் ஜெயந்தி தொடர்ந்து மருந்து எடுத்துகொள்ள முடியாமல் இருந்திருக்கிறது. தாயார் உடல்நிலை மிகவும் மோசமானதால் எல்லோரும் மருத்துவமனைக்கு சென்று விட்டிருக்கின்றனர். வீட்டில் தனியாக இருந்த ஜெயந்தி தாயாரை தேடியோ அல்லது தன்னை அறியாமலோ வீட்டை பூட்டி கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டார். வழி தவறி காந்திபுரம் வந்து சேர்ந்து விட்டார். அவர் வந்த அன்றே அவரது தாயாரும் இறந்து விட்டார். அதுவும் ஜெயந்திக்குதேரியவில்லை. அவரது சகோதரிகளும் குடும்பத்தினரும் ஜெயந்தியை தேட முயற்சி மேற்கொண்டும் கிடைக்காததால் அவர்களே தாயாரின் இறுதி காரியங்களையும் செய்து விட்டனர்.

இந்நிலையில் 4 நாட்களுக்கு பிறகு இன்று ஜெயந்தி பற்றிய தகவல்களை ஈரநெஞ்சம் அமைப்பினர் மூலம் கேட்டறிந்த அவரது சகோதரிகள் கண்ணில் கண்ணீர் மல்க ஈரநெஞ்சம் அமைப்பினருக்கு நன்றி தெரிவித்தனர். தங்கள் சகோதரியை அழைத்து சென்ற அவர்கள் மிக இக்கட்டான வேதனையான சூழ்நிலையில் இருந்த தங்களுக்கு தங்கள் சகோதரி கிடைத்ததோடு கிங்ஸ்லி க்கு தனது தாயரையும் மீட்டு கொடுத்ததற்கு அவர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து கொண்டனர். மீண்டும் ஒரு உறவை தேடி தந்த மகிழ்ச்சியோடு விடை பெற்று கொண்டது ஈரநெஞ்சம்.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam


on 1-10-2013, a day before Diwali, A mentally disabled lady aged about 32 was founded and admitted in Coimbatore corporation home by police.

Her name is Ms. Jeyanthi. Except her name, they couldn't know any other details about her. then they informed to Eeranenjam trust people, who are joining so many people like her with family. they came and inquired jeyanthi. she told that she was studied in K.K. Puthur school till 9th standard and she is from Puthuthottam area. Eeranenjam people went to that school and inquired about Ms. Jeyanthi. But they also don't know about her. Then eeranenjam went to Puthuththotaam and searched her family. after 3 hrs search, they found her sisters Ms. Sagayarani and Ms.Santhi.

Then only came to know the bad situations of Ms. Jeyanthi. Due to she is mentally disabled, her husband left her ten years back. Then she is living with her mother with her son Antro Kingley. She is taking medical treatment and tablets continuously and she got improvement. When her mother was unwell and admitted in hospital she was unable to continue her treatment and tablets. When her mother was ery serious, all family members were went to hospital and Jeyainthi was alone in home. At that time, she left home and unfortunately missed. The same day her mother was died. But she didn't know that. Her family members tried to found her. But they couldn't and they finished their mother's final rituals.

After 4 days they found her sister, due to Eeranenjam turst 's efforts. They feel very thank and happy because they got their sister and also Kingley got his mother. they told that when they are in critical situation, Eeranenjam done a great help for his family and they said a lot of thanks to Eeranenjam trust with tear. Eeranenjam also feels very happy to join Ms. Jeyanthi with her family.

Thank you.
~Eera Nenjam

Monday, November 04, 2013

கோவை அரசு மருத்துவமனையில் ஒரு பரிதாபம் ~ஈரநெஞ்சம்


''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(227/03/11/13)

கோவை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் கடந்த ஒரு வார காலமாக உடலில் ஆடை இல்லமால் எறும்பு மொய்த்த நிலையில் முதியவர் ஒருவர் கிடப்பதாக அப்பகுதி மக்கள் ஈரநெஞ்சம் அமைப்பிற்கு அளித்தத் தகவலின் பேரில் 03/11/13 அன்று அந்த முதியவரை மீட்டு தேவையான முதலுதவிகளை அளித்து மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.
அவரை பற்றிய தகவல்கள் ஏதும் தெரியாத நிலையில் அந்த முதியவரின் உடல் நலம் விரைவில் குணம் அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம் .
ஓராயிரம் பேர் வந்து போகும் அரசு மருத்துவமனையில் ஒரு வார காலமாக இவர் இந்த நிலையில் இருப்பதை ஒருவரும் பொருட்படுத்தாதது சற்று வருத்த படவே வைக்கிறது.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Eera Nenjam was informed by the public about an elderly man who was lying at Coimbatore General hospital property without any clothes on him and ants crawling all over his body. Following the information that was given on the 03.11.2013, Eera Nenjam rescued the elderly man and gave him first aid, later admitted him at the general hospital for treatment. There is no information about this elderly man. Let us pray to god for him to recover soon. There were thousands of people visit this hospital and it is so disturbing and hurt to know that no one cared and ignored this elderly man who was in such terrible condition.

Thank you.
~Eera Nenjam


Monday, September 23, 2013

ரயிலில் அடிப்பட்டு தான் யாரென்றே தெரியாத ஷேக் சலீம் ~ ஈரநெஞ்சம்***



***ஷேக் சலீம் ~ ஈரநெஞ்சம்***


ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்த  நிலையில் தலை, கை, கால் மற்றும் உடம்பில் பல்வேறு பகுதிகளில் பலத்த காயங்கள் அடைந்த வட மாநில சிறுவன் குறித்து ரயில்வே காவல்துறை அதிகாரி திரு. சபரி அவர்கள் குடுத்த தகவலின் அடிப்படையில் ஈரநெஞ்சம் அமைப்பினர் மூலம் சிறுவன் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 11 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தான்.

அந்த சிறுவன் சுமார் 15 வயது இருக்கும். வீட்டில் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டான்.  பிறகு எங்கே செல்வது என்று தெரியாமல் ஏதோ ஒரு ரயிலில் ஏறி பயணித்துள்ளான். எங்கெங்கோ சென்ற அவனுக்கு எத்தனையோ பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கிறது.

ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்து அவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. எப்படி விழுந்தான் அல்லது யாராவது தள்ளி   விட்டார்களா என்ற விவரம் ஏதும் தெரியவில்லை. பொதுமக்கள் சிலர் அவனை மீட்டு வேறு ஒரு ரயிலில் ஏற்றி அனுப்பி உள்ளனர். இந்த நிலையில் ஈரோட்டில் இருந்து கோவை வந்த ரயிலில் இருந்து தான் திரு. சபரி அவர்கள் மூலம் இந்த சிறுவனை ஈரநெஞ்சம் அமைப்பினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

முதலில் சுயநினைவு இன்றி இருந்த சிறுவனுக்கு முதலுதவி மற்றும்  ஸ்கேன் போன்ற அனைத்து சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டது.  அப்போது சிறுவனுக்கு எந்த ஆபத்தும்  இல்லை என்றும் காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் மனநிலையும் நன்றாக  இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும் அவன் தன்னை பற்றிய தகவல்களை சொல்ல தெரியாமல் மறந்து விட்டிருந்தான். கொஞ்சம் நினைவு திரும்பிய நிலையில் அவனை பற்றி விசாரித்த பொது ஒரு சில தகவல்கள் மட்டுமே அவனால் சொல்ல முடிந்தது.

அவன் பெயர் சலீம், ஒரிஸ்ஸாவில் உள்ள கட்டாக் என்ற பகுதியை சேர்ந்தவன், அவன் தந்தை சதுஜின் பெயிண்டராக      இருக்கிறார், தாய் கெத்தாம் பீபீ, இவன் அவர்களுக்கு இரண்டாவது பையன், அங்குள்ள ஒரு பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கிறான் போன்ற தகவல்களை மட்டும் சொன்னான். ஐந்து மாதங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறான். தற்போது அவனுக்கு தனது முகவரி, தொலைபேசி எண் போன்ற எந்த விவரங்களும் சொல்ல தெரியாமல் இருந்ததால் அவனது குடும்பத்தினரை  கண்டுபிடிப்பது பெரும் சிரமமாக இருந்தது.

எனினும் இணையதளம் மூலம் ஒரிஸா, கட்டாக் பகுதி காவல் நிலையத்தின் தொலைபேசி எண்  மற்றும் மின்னஞ்சல் முகவரி கண்டறியப்பட்டு அவனது புகைபடங்கள் அங்கே அனுப்பட்டது. மேலும் முகநூல் மற்றும் இணையதளங்களில் புகைப்படம் வெளியிட்டு அவனது குடும்பத்தினரை தேடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அப்போதுதான் அந்த காவல் நிலைய காவல் துறை அதிகாரி திரு. அஸ்வின் அவர்கள் மூலம் அவனது பெற்றோர் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர்  தங்கள் மகன் காணாமல்  போனதாக  புகார் அளித்துள்ளது தெரிய வந்தது. அவனது புகைபடத்தை கண்டு அவர்கள் அது தங்கள் மகன் தான் என்பதையும் உறுதி செய்துள்ளனர். தங்கள் மகன் பலத்த காயங்களுடன் இருந்ததை பார்த்து கதறி அழுதுள்ளனர்.

பின்னர் அவர்கள் உடனடியாக ரயில் மூலம் கோவை வர அங்குள்ள காவதுறையினர் ஏற்பாடு செய்தனர். இரண்டு நாட்களுக்கு முன்னர் கிளம்பிய அவர்கள் இன்று 22-09-2013 மதியம் சுமார் 2 மணிக்கு கௌஹாத்தி ட்ரெயினில் அவனது பெற்றோர் கோவை வந்தடைந்தனர். உடனடியாக அவர்கள் ஈரநெஞ்சம் அமைப்பினர் மூலம் சிறுவன் இருந்த அரசு மருத்துவமனைக்கு  அழைத்து செல்லப்பட்டனர். அங்கு தங்கள் மகனை கண்ட அவர்கள் அவனது காயம்பட்ட நிலை கண்டு வருந்தி கண்ணீர் சிந்திய போதும் தங்கள் மகனை திரும்ப பெற்று விட்ட நிம்மதியில் ஆனந்த கண்ணீரும் வடித்தனர்.மருத்துவமனையில்  இருந்த அனைவரும் கூடி அவர்களை தேற்றினார்.

மருத்துவமனையில் இருந்த போது அவன் சக நோயாளிகளிடம் சென்று உணவு வாங்கி உண்டு வந்தான். அவர்களும் அனைவரும் இவனிடம் நல்ல முறையில் பழகி விட்டனர். இவன் நிலை புரிந்து கொண்டு இவனிடம் இரக்கம் காட்டி முட்டை, ஆப்பிள்,  அப்பளம், சாதம் என இவனுக்கு வேண்டிய எல்லம்வழங்கி பார்த்துக் கொண்டனர். மருத்துவமனை ஊழியர்களும் செவிலியர்களும் இவனுக்கு நல்ல முறையில் பராமரிப்பும் சிகிச்சையும் அளித்தனர். ஓரிரு முறை சிறுவனுக்கு வலிப்பு வந்துள்ளது. அப்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து நல்ல முறையில் சிகிச்சை அளித்து வந்தனர். அவனுக்கு பாதுகாப்பும் சிகிச்சையும் அளிக்க மாவட்ட ஆட்சிசியர்   அவர்களும் வலியுறுத்தினார். ஈரநெஞ்சம் அமைப்பை சேர்ந்த திருநங்கைகள் அவனுக்கு உதவியாக அருத்துவமனையில் இருந்தனர். அவர்களும்  அவன் நல்ல முறையில் அன்போடு பார்த்துக்  கொண்டனர்.

இதனை தொடர்ந்து 23/09/13 அன்று ஷேக் சலீமிற்கு தொடர்ந்து   இங்கு சிகிச்சை பெறுவதற்கு  தங்களுக்கு மொழி பிரச்சனை இருக்கிறது அதனால்  அவனது தாய் தந்தை    தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தனர். அதற்க்கு இணங்க  மருத்துவமனையில் இருந்து சலீமை டிஸ்சார்ஜ் செய்து அன்று மதியமே ஈரநெஞ்சம் அமைப்பு சலீம் , மற்றும் அவனது பெற்றோரை ரயிலின் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.

சிறுவனின் பெற்றோர் வரும் வரையில் அவனுக்கு மருத்துவமனையில் நல்ல முறையில் சிகிச்சை அளிக்க உதவிய மருத்துவமனை தலைமை அதிகாரி, மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், அவனுக்கு சிறப்பு சிகிச்சைக்கு அனுமதி அளித்து உதவிய மாவட்ட ஆட்சியர் மற்றும் அவனுக்கு உணவு வழங்கி உதவிய உடன் இருந்த நோயாளிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் அவனுக்கு உணவு வழங்கிய கடைக்காரர்கள் அனைவருக்கும் ஈரநெஞ்சம் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

மேலும் ஈரநெஞ்சம் உறுப்பினர்களான  திருநங்கைகள் உடன் இருந்து அந்த சிறுவனை பராமரித்து வந்தனர். அவர்களுக்கும் சிறுவனை பெற்றோருடன் சேர்த்து வைக்க உதவிய காவல் துறை அதிகாரி திரு. அஸ்வின் மற்றும் ஈரநெஞ்சம் உறுப்பினர்களுக்கும் நன்றி.



~ஈரநெஞ்சம்

Wednesday, July 24, 2013

காயத்துடன் இருந்தவரை ஈரநெஞ்சம் மருத்துவமனையில் சேர்த்தது

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(184/23.07.2013)
இன்று 23.07.13 காலை கோவை அரசு மருத்துவமனை அருகே சுமார் 60 வயது நிரம்பிய ஒருவர் கால் அழுகிய நிலையில் காயத்துடன் சாலையோரம் ஆதரவற்று இருபதாக பொதுமக்கள் ஈரநெஞ்சம் அமைப்பிற்கு தகவல் கொடுத்தனர். அதனை தொடர்ந்து ஈரநெஞ்சம் அவ்விடத்திற்கு விரைந்து சென்று 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஈரநெஞ்சம் அவரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளது.
அவரின் உடல்நலம் விரைவில் குணமடைய நாம் அனைவரும் இறைவனிடம் வேண்டிகொள்வோம்.



http://www.youtube.com/watch?v=5QImvChl0WI&feature=youtu.be

~நன்றி
ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Today morning 23.07.2013, the civilians passed a message to Eera Nenjam that there was a man around age 60 with the decomposed leg, was lying down helplessly by the roadside beside the Kovai Government Hospital. Eera Nenjam rushed to that place and admitted him to the hospital for treatment with the help of 108 Ambulance Service.
Let us all pray to god for his recovery.

~Thank You
Eeranenjam