Tuesday, March 12, 2013

தக்க நேரத்தில் குழந்தையை காப்பாற்ற உதவியவர்களுக்கு நன்றி ~ஈரநெஞ்சம்


''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]

ஈர நெஞ்சம் அமைப்பின் மூலம் கல்வி உதவி பெற்று பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில் வளர்ந்து வரும் சிறுமி பவித்ரா குடல் வால்வு அறுவை சிகிச்சைக்காக அவரது மாமா இராவணன் அவர்களால் திருப்பூர் அரசுமருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு போதிய வசதி இல்லை என்பதால் சிகிச்சைக்குக் கோவை அழைத்து செல்ல வேண்டும் என்று அங்குள்ள மருத்துவர்களின் அறிவுரைக்குப் பிறகு ஈரநெஞ்சம் வேண்டுகோளுக்கு இணங்க, கோவைக்கு அழைத்து வரப்பட்டாள். பவித்ராவைக் கோவை தனியார் மருத்துவமனையில் பரிசோதித்தத் தலைமை மருத்துவர் பவித்ராவிற்கு மோசமான, உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது என்று கூறவே அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு நேற்று மாலை (05/03/13) சிறுமி பவித்ராவிற்கு குடல் வால்வு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டு உடல் நலம் தேறி வருகிறாள்.
அவளுக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் ஈர நெஞ்சம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
மேலும் தனியார் மருத்துவமனைக்குச் செலுத்த வேண்டிய மருத்துவ கட்டணத்துக்கு
நிதி உதவி செய்த திரு அருண் குமார் அவர்களுக்கும், பழங்கள் மற்றும் மேல் மருத்துவ சிகிச்சைக்கு உதவிய பாண்டிச்சேரியைச் சார்ந்த செல்விக்கும் ஈர நெஞ்சம் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. சிறப்பாக அறுவை சிகிச்சை செய்து அவளது காக்க உதவிய மருத்துவர்களை ஈர நெஞ்சம் வணங்குகிறது.
பெற்றோர் அற்ற அந்தக் குழந்தையை அருகில் இருந்து கவனித்து கொள்ளும் அவளது மாமா ஈர நெஞ்சம் அமைப்பிற்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
https://www.facebook.com/eeranenjam
~ நன்றி (146/2013)
ஈர நெஞ்சம்

Eera Nenjam is taking care of the educational expenses of Selvi Pavithra, who is living in the Prabhancha Peace Home. She was admitted in Government Hospital, Tiruppur, for appendicitis, by her uncle. Since there was not enough facility, the doctors advised him to take her to Coimbatore. The private doctors in Coimbatore recommended her to be admitted in the Government Hospital since her condition was very critical. The surgery was performed on 05/03/2013 at the Government Hospital, Coimbatore and she is recovering very well. We thank all the good souls that prayed for her health. We also appreciate the help of Mr. Arun Kumar who paid the fee to the private hospital, Ms. Selvi from Pondichery who helped to buy fruits and also the doctors at the Government Hospital, Coimbatore, who performed the surgery and saved her. Selvi Pavithra’s uncle thanked Eera Nenjam for our timely help.

~ Thanks (146/2013)
Eera Nenjam
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

1 comment:

sakthi said...

குழந்தைக்கு உதவிய ஈர நெஞ்சம் மகி மற்றும் அருண் குமார்,பாண்டிச்சேரியை சேர்ந்த சகோதரி செல்வி ,இந்த குழந்தை குணமடைய பிரார்தித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்,நன்றிகள்

Post a Comment