Saturday, September 24, 2022

இவர்களை தேடி பார்த்து வியாபாரம் பண்ணனும்

நேத்து நைட்டு வீட்டுக்கு திரும்புறப்ப இந்த அம்மா விக்கிறதுக்கு வச்சிருந்த எல்லா காய்கறியுமே நான் வாங்கிட்டேன் வெறும் 200 ரூபாய் தான்...
நான் அந்த பக்கமா போறப்ப காய்கறியவே வெறிச்சுப் பார்த்துக்கிட்டு உட்கார்ந்து இருந்தாங்க அவங்க... ஒருத்தரும் இவங்ககிட்ட வந்து காய் வாங்கல போல... 😒

இந்த 200 ரூபாயில அந்த அம்மாக்கு அப்படி என்ன லாபம் கிடைச்சிடும்..?!




கடைசியா அந்த அம்மா, "பசிக்குது தம்பி, அந்தக் கடையில இந்த காசுல ஒரு டீ வாங்கி குடுத்துட்டு போங்க ப்பா" ன்னு சொல்லி நான் குடுத்த அந்த ரெண்டு நூறு ரூபா நோட்டுல இருந்து ஒரு நோட்ட எடுத்து குடுத்தாங்க...


"ஏனுங்க பாட்டி வேற காசு இல்லையா"ன்னு கேட்டேன்...

" அட போங்க தம்பி ... நீங்க வேற , இந்த காசுக்காக தான் சாயங்காலம் 5 மணியில இருந்து இங்கன தேமேன்னு உட்கார்ந்து இருக்கேன்"னு சொல்லுச்சு பாருங்க...

நெஞ்சு பாரமானாலும், இந்த அம்மா வச்சிருந்த காய் எல்லாத்தையும் மொத்தமா வாங்குனது என்னமோ பெரிய சாதனை  செஞ்சது போல இருந்துச்சி எனக்கு ...

அதே சந்தோஷத்துல காசு வேணாங்க பாட்டின்னு இதை நீங்களே வெச்சுக்கோங்கனு சொல்லிட்டு அந்த பாட்டிக்கு டிபன் வாங்கி கொடுத்துட்டு என்னை அறியாமலேயே எனக்குள்ள ஒரு கம்பீர நடை போட்டுட்டு வந்தேன்.
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment