''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(19/03/13) கோவை வ. உ. சி. பூங்கா அருகில் மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில்
அகோரமான உருவத்துடன் சுற்றித் திரிந்த திரு. சுப்பிரமணி என்பவரைக் கண்ட ஈர
நெஞ்சம் அமைப்பினர் அவருக்கு முடி திருத்தி உடல் சுத்தம் செய்து புதிய உடை
அணிவித்து கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்து அவருக்கு புனர் வாழ்வு
அளித்துள்ளனர்.
ஈர நெஞ்சம் அமைப்பு அவருக்கு உடல் சுத்தம் செய்வதை கண்ட
அப்பகுதியில் துணிக்கடை வைத்துள்ள திரு. ராஜேஷ் என்னும் மனித நேயம் மிக்க
நண்பர் . அவர் திரு சுப்பிரமணிக்கு மாற்று உடை வழங்கி உதவி செய்தார்.
அவருக்கு ஈர நெஞ்சம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது .
https://www.facebook.com/eeranenjam
~ நன்றி (149/2013)
ஈர நெஞ்சம்
Eera Nenjam volunteers found Mr. Subramani, being mentally challenged,
today (19/03/2013) near V. O. C. Park, Coimbatore and then gave him a
haircut, a bath and new clothers and also got him admitted in Coimbatore
Corporation Home. Mr. Rajesh who has a textile store in that area,
after seeing our volunteers’ service, donated new clothes to Mr.
Subramani. Eera Nenjam appreciates his help.
~ Thanks (149/2013)
Eera Nenjam
Showing posts with label சுப்பிரமணி. Show all posts
Showing posts with label சுப்பிரமணி. Show all posts
Wednesday, March 20, 2013
மனநிலை பாதித்தவருக்கு அடைக்கலம்
லேபிள்கள்:
ஈரநெஞ்சம்,
உதவி,
காப்பகம்,
சுப்பிரமணி,
மனநிலை பாதித்தவர்
Saturday, January 21, 2012
சுப்பிரமணி தாத்தாவிற்கு ஒரு பாதுகாப்பான இடம்...~மகேந்திரன்
கோவை ஹலோ பண்பலையில் வர்ணனையாளராக பணிபுரியும் கௌசிகா என்பவர் அவர் பணிபுரியும் அலுவலகம் அருகில் சாலையோரமாக ஒரு வயதான பெரியவரை கடந்த ஒருவாரமாக சந்தித்து வந்தார் , அந்த பெரியவர் பெயர் சுப்பிரமணி, அவருக்கு வயது 90 , கண்பார்வை இல்லை, இவருக்கு ஆதரவு என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை, சாலையில் குப்பைகளை பொறுக்கிக்கொண்டு வயிற்று பிழைப்பு நடத்திவந்துள்ளார் , கண் பார்வை போனதனால் சாலையிலேயே நான்கு வருடமாக இருக்கிறார் ,
இதனால் கௌசிகா அந்த பெரியவருக்கு தினம் உணவு வழங்கி கவனித்துக்கொண்டார், கௌசிகா அவருக்கு இந்த பெரியவரை ஏதாவது ஒரு பாதுகாப்பான இடம் கிடைக்க என்னிடம் (மகேந்திரன்) தொடர்புகொண்டு சுப்பிரமணி தாத்தா வை பற்றி விபரத்தை சொல்ல , நான் எனது நண்பர்கள் தபசு ராஜ் , மோகன சுந்தரம் அந்த பெரியவர் இருக்கும் இடமான கோவை VOC பூங்கா பின் புறம் ஒரு சாலை ஓரமாக அமர்ந்து


இருந்தார் , அவரை நாங்கள் சந்தித்து அவருக்கு தலை சவரம் செய்து குளிக்கவைத்து ,

வாழ்த்துக்கள் கௌசிகா...

சுப்பிரமணி தாத்தா தற்போது நல்லபடியாக இருக்கிறார்
ஏதாவது நல்லது செஞ்சுகிட்டே இருக்கனும்க...
~மகேந்திரன்
லேபிள்கள்:
ஈரம்,
காப்பகம்,
சுப்பிரமணி,
தாத்தா,
மகேந்திரன்
Subscribe to:
Posts (Atom)