Monday, November 28, 2011

எல்லாமும் நீ ...

எந்த கவிஞனையும்
எழுத
தடை விதித்தது
இல்லை
காகிதம்..!
எனக்கு
ஏனடி தடை செய்கிறாய் ..♥

 
நிலாவில்
நட்சத்திரம்
மின்னுவது தெரியுமா..?
உன் மூக்குத்தி
மின்னுகிறதே..♥

 
நீ
எனக்கு
கிடைக்கும் போது
நினைத்துக்கொண்டேன்
நான் கொடுத்து வைத்தவன் என்று...
நான்
உனக்கு குடுக்கும் போது
நினைத்துக்கொண்டேன்
உனக்கு
குடுப்பதர்க்காகவே
வைத்திருந்தவன் என்று..♥


 
 
நீ
எழுத்துப்பிழையோடு
எழுதும் கவிதைக்கு
என்
திருத்தல்கள்
அவசியம்...
அதற்காகவாவது கொஞ்சம்
மக்காய் இரு..♥


 
புத்தகம் இருந்தால்தான்
நூலகமா..?
நீ
நூலிடை கொண்ட
நூலகம்..♥


 
 
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

1 comment:

NILA ( நிலா ) said...

அருமையாக கவிதை வரிகள்...மகி...
தொடருங்கள், ரசித்துக்கொண்டே வருகிறேன்
பின் தொடர்ந்து....
~நிலா

Post a Comment