Wednesday, November 23, 2011

அழகி..♥

ஒரு
பட்டி காட்டான்
மிட்டாய் கடை
கண்ட உணர்வே
எனக்கு...
ஒவ்வொரு முறை
உன்
குறுஞ்செய்தி
காணும் கணமும்..♥
 
 உன்னை
ஒவ்வொரு முறை
பார்க்கும் பொழுதும்
நீ
உன்னைவிட
அழகாகவே தெரிகிறாய்..♥

 
உன்
கிளையில்தான்
என் கூடு...
என்னை
பிடிக்க வலை
தேவை
இல்லை..♥


 
 
நிலா
உடைந்து உதிர்ந்து
இருக்கோ
என்று யாரும்
வியக்க வேண்டாம்..!
அது
அவள் கூந்தலில்
இறந்து
உதிர்ந்த மல்லிகை பூக்கள்..♥

 
தூங்குகின்றவனை
கண்ணடித்து எழுப்பும்
வித்தை கற்றவள்
நீ
இருக்க
 எனக்கு எப்படி
உறக்கம் வரும்..♥

 
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

2 comments:

Yaathoramani.blogspot.com said...

மிக் அழகாக எளிய சொற்களில் காதல் உணர்வை படிப்பவர்களும்
உணர வைத்துப் போகும் அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1

Subasree Mohan said...

கடை ஏழு வள்ளல்கள் எட்டாவதாக மகி.

Post a Comment