Tuesday, November 05, 2013

பரிதாபம் தாய் இறந்தது கூட ஜெயந்திக்குத் தெரியாது. ~ஈரநெஞ்சம்


''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(228/04/11/13)

கடந்த 1ஆம் தேதி, தீபாவளிக்கு முன்தினம், கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சுமார் 32 வயது மதிக்கத்தக்க மன நிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இருப்பதாக அறிந்த காவல் துறையினர் அந்த பெண்ணை கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்தனர்.

அப்பெண்ணின் பெயர் ஜெயந்தி என்பதை தவிர வேறெதுவும் தெரியவில்லை. இந்நிலையில் இது போல பலரை அவரது குடும்பத்தினரை கண்டு பிடித்து தேடி தந்த ஈரநெஞ்சம் அமைப்பினரை கோவை மாநகராட்சி காப்பகத்தினர் தொடர்பு கொண்டு ஜெயந்தியை பற்றி தெரிவித்தனர். மேலும் அவரது குடும்பத்தினரை தேடி கண்டுபிடிக்குமாறு கேட்டு கொண்டனர். ஈரநெஞ்சம் அமைப்பினர் ஜெயந்தியை நேரில் கண்டு அவரிடம் பேசி விசாரித்த போது புதுத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் என்றும், கே.கே.புதூர் பள்ளியில் 9ஆம் வகுப்புவரை படித்ததாகவும் மட்டும் அறிந்து கொள்ள முடிந்தது.

உடனடியாக அந்த பள்ளிக்கு சென்று விசாரித்த போது அப்படி யாரும் இல்லை என்று கூறிவிட்டனர். பின்னர் அவர் கூறிய புதுத்தோட்டம் பகுதியை தேடி கண்டு பிடித்து அங்கே சென்று விசாரித்தனர் ஈரநெஞ்சம் அமைப்பினர். 3 மணி நேர தேடலுக்கு பின் ஜெயந்தியின் சகோதரிகள் சகாய ராணி மற்றும் சாந்தியை கண்டு பிடித்த கேட்ட போது பல வருத்தபடுபடியான நிகழ்வுகள் தெரிய வந்தது.

ஜெயந்தி மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரது கணவர் 10 வருடங்களுக்குமுன்னரே அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். பிறகு அவர் தனது மகன் ஆண்ட்ரோ கிங்ஸ்லி யுடன் தன தாய் வீட்டில்தான் வசித்து வந்தார். தொடர்ந்து அவர் மருத்துவ சிகிச்சையில் இருந்து மருந்துகள் எடுத்துகொண்டு வந்ததால் மனநிலை தேறி வந்திருக்கிறார். இந்நிலையில் அவரது தாயார் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனால் ஜெயந்தி தொடர்ந்து மருந்து எடுத்துகொள்ள முடியாமல் இருந்திருக்கிறது. தாயார் உடல்நிலை மிகவும் மோசமானதால் எல்லோரும் மருத்துவமனைக்கு சென்று விட்டிருக்கின்றனர். வீட்டில் தனியாக இருந்த ஜெயந்தி தாயாரை தேடியோ அல்லது தன்னை அறியாமலோ வீட்டை பூட்டி கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டார். வழி தவறி காந்திபுரம் வந்து சேர்ந்து விட்டார். அவர் வந்த அன்றே அவரது தாயாரும் இறந்து விட்டார். அதுவும் ஜெயந்திக்குதேரியவில்லை. அவரது சகோதரிகளும் குடும்பத்தினரும் ஜெயந்தியை தேட முயற்சி மேற்கொண்டும் கிடைக்காததால் அவர்களே தாயாரின் இறுதி காரியங்களையும் செய்து விட்டனர்.

இந்நிலையில் 4 நாட்களுக்கு பிறகு இன்று ஜெயந்தி பற்றிய தகவல்களை ஈரநெஞ்சம் அமைப்பினர் மூலம் கேட்டறிந்த அவரது சகோதரிகள் கண்ணில் கண்ணீர் மல்க ஈரநெஞ்சம் அமைப்பினருக்கு நன்றி தெரிவித்தனர். தங்கள் சகோதரியை அழைத்து சென்ற அவர்கள் மிக இக்கட்டான வேதனையான சூழ்நிலையில் இருந்த தங்களுக்கு தங்கள் சகோதரி கிடைத்ததோடு கிங்ஸ்லி க்கு தனது தாயரையும் மீட்டு கொடுத்ததற்கு அவர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து கொண்டனர். மீண்டும் ஒரு உறவை தேடி தந்த மகிழ்ச்சியோடு விடை பெற்று கொண்டது ஈரநெஞ்சம்.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam


on 1-10-2013, a day before Diwali, A mentally disabled lady aged about 32 was founded and admitted in Coimbatore corporation home by police.

Her name is Ms. Jeyanthi. Except her name, they couldn't know any other details about her. then they informed to Eeranenjam trust people, who are joining so many people like her with family. they came and inquired jeyanthi. she told that she was studied in K.K. Puthur school till 9th standard and she is from Puthuthottam area. Eeranenjam people went to that school and inquired about Ms. Jeyanthi. But they also don't know about her. Then eeranenjam went to Puthuththotaam and searched her family. after 3 hrs search, they found her sisters Ms. Sagayarani and Ms.Santhi.

Then only came to know the bad situations of Ms. Jeyanthi. Due to she is mentally disabled, her husband left her ten years back. Then she is living with her mother with her son Antro Kingley. She is taking medical treatment and tablets continuously and she got improvement. When her mother was unwell and admitted in hospital she was unable to continue her treatment and tablets. When her mother was ery serious, all family members were went to hospital and Jeyainthi was alone in home. At that time, she left home and unfortunately missed. The same day her mother was died. But she didn't know that. Her family members tried to found her. But they couldn't and they finished their mother's final rituals.

After 4 days they found her sister, due to Eeranenjam turst 's efforts. They feel very thank and happy because they got their sister and also Kingley got his mother. they told that when they are in critical situation, Eeranenjam done a great help for his family and they said a lot of thanks to Eeranenjam trust with tear. Eeranenjam also feels very happy to join Ms. Jeyanthi with her family.

Thank you.
~Eera Nenjam

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment