Showing posts with label திருப்பூர். Show all posts
Showing posts with label திருப்பூர். Show all posts

Monday, April 07, 2014

மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவு ~ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services
" ******
[For English version, please scroll down]
(288/05-04-2014)

கோவை சிங்கநல்லூர் உப்பிளிபாலயம் பகுதியில் கடந்த சிலமாதங்களாகச் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் பார்ப்பதற்குப் பரிதாபமாக அப்பகுதியில் இருக்கும் குப்பைகளில் இருக்கும் கண்ட பொருட்களைத் தின்று கொண்டு இருப்பதாகவும் இதனால் அவருக்குப் பாதுகாப்பான இடம் தேடிதரும்படி அப்பகுதி மக்கள் இன்று 05/04/2014 ஈரநெஞ்சம் அமைப்பிற்குத் தகவல் கொடுக்க உடனடியாக ஈரநெஞ்சம் அமைப்பினர் அந்த நபரை மீட்டு அவருக்குத் தேவையான முதலுதவிகள் செய்து கோவை மாநகராட்சி காப்பகத்தில் அனுமதி கேட்டுக் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

அந்த நபருக்கு மனநலம் பாதித்து இருப்பதால் அவருடைய பெயர் உட்படச் சரிவர விபரம் திரட்ட முடியவில்லை. இந்த நபரை உங்களுக்குத் தெரிந்திருந்தால் உடனடியாக ஈரநெஞ்சம் அமைபிற்குத் தகவல் கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு ஈரநெஞ்சம் 9080131500.

நன்றி
~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

A mentally disordered man was found by public in Coimbatore, Singanallur, Upplipaalayam area. He was living there for past few months and he eat sweepings in street. So people contacted Eeranenjam trust and requested them to rescue that man and admit in a safe place today 05-04-2014. At once Eeranenjam rescue and gave some first aid for him. Then he was admitted in Coimbatore corporation home today.

As he is mentally disordered, he unable to say even his name and other details about him. If anybody know about him kindly contact Eeranenjam immediately in the nummber 9080131500.

Thank You
~Eeranenjam

Wednesday, March 05, 2014

திருப்பூர் லெச்சுமி பாட்டி உறவினர் கண்டுபிடிக்கப்பட்டு ஒப்படைப்பு

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services
" ****** 
[For English version, please scroll down] 
(277/04-03-2014)


கோவை காந்திபுரம் பேருந்துநிலையத்தில் லெட்சுமி வயது 75   மூதாட்டி ஒருவர் சுற்றித்திரிவதாகவும் , அவர் யார் எங்கிருந்து வந்துள்ளார் ? என்ற விபரம் சரிவர தெரியாத நிலையில் அவருக்கு பாதுகாப்பு கொடுக்கும்படி கோவை காட்டூர் காவல் B3 காவல் நிலையம் வேண்டுகோளுக்கு இணங்க  02-03-2014 அன்று ஈரநெஞ்சம் அமைபினரால்  அழைத்துவரப்பட்டு கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.

காப்பகத்தில் சேர்க்கப்பட்ட 
லெட்சுமி பாட்டி தனது வீடிற்கு போகவேண்டும் என்ற ஏக்கத்தை அறிந்து பாட்டியின்  உறவினர்களை  கண்டறியும் முயற்சியில் ஈரநெஞ்சம் பலவழிகளில்  முயற்சி  எடுத்தது.

https://www.facebook.com/photo.php?fbid=308745359250426&set=a.287928837998745.1073741826.100003448945950&type=1&stream_ref=10

காப்பகத்தில் இருந்த  லெட்சுமி  பாட்டி இடம் இருந்த ஒரு துண்டு காகிதத்தில் இருந்த முகவரியை கொண்டு அந்த பாட்டி நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என்று அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள், பொதுநல அமைப்புகள்  மற்றும்  காவல்துறையினர் உதவியுடன்  தேடப்பட்டது , அதன் பயனாக அந்த முகவரியில் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு லெட்சு மற்றும் அவரது குடுமதினர் வாழ்ந்து வந்ததாகவும்  அதன் பிறகு  திருப்பூரி சென்று விட்டதாகவும்  அறியப்பட்டது . திருப்பூரில் உள்ள அவரது முகவரி தெரியாத நிலையில் இருந்த நிலையில் ஈர நெஞ்சம் அமைப்பு பாட்டியை பற்றி வெளியிட்ட தகவலை அறிந்து  திருதரை பூண்டி , பல்லாங்கோவில் பகுதியை சேர்ந்த   k .சந்திரசேகரன்  bsnl அவர்கள் அமைப்பை தொடர்புகொண்டு  திருப்பூரில் வசித்துவரும்  லெட்சுமி பாட்டியின் மகள் சித்ரா மருமகன் கோவிந்தன் பற்றிய தகவலை தெரிவித்தார் .

அதனை தொடர்ந்து  
லெட்சுமி பாட்டியின் மகள் சித்ரா மருமகன் கோவிந்தன் அவர்களை தொடர்புகொண்டு லெட்சுமி பற்றி விபரம் கூறி அவர்களை உடனடியாக 04/03/2014 அன்று வரவழைக்கப்பட்டு லெட்சுமி பாட்டியை அவர்களுடன் ஒப்படைக்கப்பட்டனர்.லெட்சுமி பாட்டியின் மகள் சித்ரா  கூறும்போது திருதரை  பூண்டியில் இளைய மருமகள்  தனம்  வீட்டில்  லெட்சுமி அம்மா  இருந்தார்கள் , தனம் அவர்களுக்கு தெரியாமல் லெட்சுமி  அம்மா கடந்த 27/02/2014 அன்று காணாமல் போய்விட்டதாகவும் அன்று முதல் அம்மாவை  தேடிவருகிறோம் , திருதரைபூண்டி  காவல் நிலையத்திலும் லெட்சுமி  அம்மாள் காணவில்லை என்று தெரியபடுத்தி உள்ளோம் ,மேலும்  உறவினர்கள் நண்பர்கள் என அனைவரும் அம்மாவை  தேடி கொண்டிருந்தோம் , ஈரநெஞ்சம் அமைப்பு லெட்சுமி அம்மா கோவையில் இருப்பதாக தகவல் அளித்ததை தொடர்ந்து அவரை அழைத்து செல்ல வந்துள்ளோம் , லெட்சுமி  அம்மாவை கிடைத்தது பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அடைகிறோம் , லெட்சுமி  அம்மாவை காணாது மிகவும் தவித்து விட்டோம் , அம்மாவை பாதுகாத்து எங்களையும் தேடி கண்டுபிடித்து தந்ததற்கு ஈரநெஞ்சம் அமைபிற்க்கும் காவல்துறையினருக்கும் , கோவை மாநகராட்சி காப்பகத்திற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு லெட்சுமி பாட்டியை அழைத்து சென்றனர் .

தனது  உறவினரை தொலைத்து விட்டு  தவித்து கொண்டிருந்த லெட்சுமி  பாட்டி அவர்களின் உறவினரை கண்டு பிடிக்க உதவிய அணைத்து நண்பர்களுக்கும் , லெட்சுமி  பாட்டியை காப்பகத்தில் நல்லமுறையில் கவனித்துக்கொண்ட கோவை மாநகராட்சி காப்பகத்திற்கும் , பாட்டியை ஈரநெஞ்சம் அமைப்பிடம்  பாதுகாக்கும்படி  ஒப்படைத்த கோவை B3 காவல் நிலையத்திற்கும் ஈரநெஞ்சம் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவிதுக்கொல்கிறது. 

மீண்டும் ஒரு உறவை குடும்பத்தினருடன் இணைத்து வைத்த மகிழ்ச்சியில் ஈரநெஞ்சம் அமைப்பினர்.

~ நன்றி
ஈர நெஞ்சம்

Monday, August 12, 2013

உறவாக ஈரநேஞ்சமும் உண்டு , நல்லடக்கம்

"ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(192/10.08.2013)
நேற்று 09-08-2013 இரவு கோவை, பூசாரி பாளையத்தில் லட்சுமி அம்மாள் மூதாட்டி ஒருவர் தெருவில் இறந்து கிடந்ததாக B10 காவல் நிலையத்தினரிடம் இருந்து நமது ஈரநெஞ்சம் அமைப்பிற்கு தகவல் வந்தது. ஈரநெஞ்சம் அமைப்பும் B10 காவல் துறையினரும் இணைந்து அவரை பற்றிய தகவல்களை விசாரித்த போது லட்சுமி அம்மாள் திருப்பூர், புதிய பேருந்து நிலையம் பகுதியை சேர்ந்தவர் என்றும் பிழைப்பு தேடி கோவை வந்தவர் என்றும் தெரிய வந்தது. கோவையில் அவர் தனியே வசித்து வந்தார். பின்னர் உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிர் இழந்தார். அவரது மறைவு குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவரது பேத்தி திருமதி. மாரியம்மாள் தனது குழந்தைகளுடன் உடனே கோவை வந்தார். ஆனால் அவரது குடும்ப சூழ்நிலையும் வறுமையின் காரணமாகவும் அவரது உடலை திரும்ப ஊருக்கு எடுத்து செல்ல இயலாததாலும் அவர் நமது ஈரநெஞ்சம் அமைப்பையே நல்லடக்கம் செய்து தருமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி இன்று 10-08-2013 அன்று அவரது உடல் ஈரநெஞ்சம் அமைப்பால் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது ஆத்மா சாந்தி அடைய ஈரநெஞ்சம் சார்பில் எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறோம்.
நன்றி
~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam
On 09-08-2013 night, B10 Police Station called Eeranenjam and informed that a old lady, named Lakshmi ammal, was died on a Poosaaripalayam street. Then eeranenjam searched her relation along the police and found that she was from Tirupur, New bus stand area and she came coimbatore for a job. And then she fall in sick and died. Eeranenjam informed her family about her death. Her grand daughter Ms. Mariyammal came with her family. But as she is not wealth in economy and she unable to take her body for her final rituals. So as per the requisition of Ms. Mariammal, Eeranenjam taken care and done her final rituals on 10-08-2013. We pray god for her soul rest in peace.
Eera Nenjam
~ Thanks

Sunday, June 23, 2013

தந்தை இழந்த சிறுவர்களுக்கு ஈரநெஞ்சம் அடைக்கலம் தேடித்தந்தது.

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(171/2013)

திருப்பூரில் காளிமுத்து (வயது 14), சமயதங்கம் (வயது 12) இருவரும் ஒன்பதாம் மற்றும் ஆறாம் வகுப்பு படிக்க வேண்டியவர்கள். வறுமையின் காரணமாக வேலைக்குச் செல்லும் நிலை. இவர்களின் தந்தை மகாலிங்கம் பத்து வருடங்களுக்கு முன் காணாமல் போய்விட்டார். அம்மா, திருமதி. சுந்தரவள்ளி, திருப்பூரில் ஒரு தனியார் கம்பெனியில் கூலி வேலை பார்க்கிறார். கணவர் இல்லாத நிலையில் வறுமையால் இவர்களது படிப்பைத் தொடரமுடியாமல் வேலைக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த சமயம், நம் ”ஈர நெஞ்சம்" செய்யும் சேவைகளைக் கேட்டு, அறக்கட்டளையை நேரில் அணுகி, தம் மகன்களைப் படிக்க வைக்குமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, காளிமுத்து, சமயதங்கம் இருவரையும் ஈர நெஞ்சம் அமைப்பு கோவை பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில் சேர்த்து படிப்பைத் தொடர வழி செய்துள்ளது.

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி
ஈர நெஞ்சம்

Both Kalimuthu (age 14) and Samayathangam (age 12) from Thiruppur were supposed to study in ninth and sixth standard respectively. But they are from a poor family and his father left family about 10 years ago and his whereabouts is unknown. Ms. Sundaravalli, their mother, works as a daily wager in a private company in Thiruppur. Without her husband’s support, Sundaravalli was unable to send their two children to school and they were sent to work to support the family. When she came to know about the various services of our Eera Nenjam, she contacted us and requested to help with her children’s education. We got both Kalimuthu and Samayathangam admitted in Coimbatore Prabhancha Peace Ashramam and they are continuing their education.

~ Thanks
Eera Nenjam
Photo: ''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(171/2013)

திருப்பூரில் காளிமுத்து (வயது 14), சமயதங்கம் (வயது 12) இருவரும் ஒன்பதாம் மற்றும் ஆறாம் வகுப்பு படிக்க வேண்டியவர்கள். வறுமையின் காரணமாக வேலைக்குச் செல்லும் நிலை. இவர்களின் தந்தை மகாலிங்கம் பத்து வருடங்களுக்கு முன் காணாமல் போய்விட்டார். அம்மா, திருமதி. சுந்தரவள்ளி, திருப்பூரில் ஒரு தனியார் கம்பெனியில் கூலி வேலை பார்க்கிறார். கணவர் இல்லாத நிலையில் வறுமையால் இவர்களது படிப்பைத் தொடரமுடியாமல் வேலைக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த சமயம், நம் ”ஈர நெஞ்சம்" செய்யும் சேவைகளைக் கேட்டு, அறக்கட்டளையை நேரில் அணுகி, தம் மகன்களைப் படிக்க வைக்குமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, காளிமுத்து, சமயதங்கம் இருவரையும் ஈர நெஞ்சம் அமைப்பு கோவை பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில் சேர்த்து படிப்பைத் தொடர வழி செய்துள்ளது.

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி
ஈர நெஞ்சம்

Both Kalimuthu (age 14) and Samayathangam (age 12) from Thiruppur were supposed to study in ninth and sixth standard respectively. But they are from a poor family and his father left family about 10 years ago and his whereabouts is unknown. Ms. Sundaravalli, their mother, works as a daily wager in a private company in Thiruppur. Without her husband’s support, Sundaravalli was unable to send their two children to school and they were sent to work to support the family. When she came to know about the various services of our Eera Nenjam, she contacted us and requested to help with her children’s education. We got both Kalimuthu and Samayathangam admitted in Coimbatore Prabhancha Peace Ashramam and they are continuing their education.

~ Thanks
Eera Nenjam