Wednesday, March 05, 2014

திருப்பூர் லெச்சுமி பாட்டி உறவினர் கண்டுபிடிக்கப்பட்டு ஒப்படைப்பு

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services
" ****** 
[For English version, please scroll down] 
(277/04-03-2014)


கோவை காந்திபுரம் பேருந்துநிலையத்தில் லெட்சுமி வயது 75   மூதாட்டி ஒருவர் சுற்றித்திரிவதாகவும் , அவர் யார் எங்கிருந்து வந்துள்ளார் ? என்ற விபரம் சரிவர தெரியாத நிலையில் அவருக்கு பாதுகாப்பு கொடுக்கும்படி கோவை காட்டூர் காவல் B3 காவல் நிலையம் வேண்டுகோளுக்கு இணங்க  02-03-2014 அன்று ஈரநெஞ்சம் அமைபினரால்  அழைத்துவரப்பட்டு கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.

காப்பகத்தில் சேர்க்கப்பட்ட 
லெட்சுமி பாட்டி தனது வீடிற்கு போகவேண்டும் என்ற ஏக்கத்தை அறிந்து பாட்டியின்  உறவினர்களை  கண்டறியும் முயற்சியில் ஈரநெஞ்சம் பலவழிகளில்  முயற்சி  எடுத்தது.

https://www.facebook.com/photo.php?fbid=308745359250426&set=a.287928837998745.1073741826.100003448945950&type=1&stream_ref=10

காப்பகத்தில் இருந்த  லெட்சுமி  பாட்டி இடம் இருந்த ஒரு துண்டு காகிதத்தில் இருந்த முகவரியை கொண்டு அந்த பாட்டி நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என்று அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள், பொதுநல அமைப்புகள்  மற்றும்  காவல்துறையினர் உதவியுடன்  தேடப்பட்டது , அதன் பயனாக அந்த முகவரியில் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு லெட்சு மற்றும் அவரது குடுமதினர் வாழ்ந்து வந்ததாகவும்  அதன் பிறகு  திருப்பூரி சென்று விட்டதாகவும்  அறியப்பட்டது . திருப்பூரில் உள்ள அவரது முகவரி தெரியாத நிலையில் இருந்த நிலையில் ஈர நெஞ்சம் அமைப்பு பாட்டியை பற்றி வெளியிட்ட தகவலை அறிந்து  திருதரை பூண்டி , பல்லாங்கோவில் பகுதியை சேர்ந்த   k .சந்திரசேகரன்  bsnl அவர்கள் அமைப்பை தொடர்புகொண்டு  திருப்பூரில் வசித்துவரும்  லெட்சுமி பாட்டியின் மகள் சித்ரா மருமகன் கோவிந்தன் பற்றிய தகவலை தெரிவித்தார் .

அதனை தொடர்ந்து  
லெட்சுமி பாட்டியின் மகள் சித்ரா மருமகன் கோவிந்தன் அவர்களை தொடர்புகொண்டு லெட்சுமி பற்றி விபரம் கூறி அவர்களை உடனடியாக 04/03/2014 அன்று வரவழைக்கப்பட்டு லெட்சுமி பாட்டியை அவர்களுடன் ஒப்படைக்கப்பட்டனர்.லெட்சுமி பாட்டியின் மகள் சித்ரா  கூறும்போது திருதரை  பூண்டியில் இளைய மருமகள்  தனம்  வீட்டில்  லெட்சுமி அம்மா  இருந்தார்கள் , தனம் அவர்களுக்கு தெரியாமல் லெட்சுமி  அம்மா கடந்த 27/02/2014 அன்று காணாமல் போய்விட்டதாகவும் அன்று முதல் அம்மாவை  தேடிவருகிறோம் , திருதரைபூண்டி  காவல் நிலையத்திலும் லெட்சுமி  அம்மாள் காணவில்லை என்று தெரியபடுத்தி உள்ளோம் ,மேலும்  உறவினர்கள் நண்பர்கள் என அனைவரும் அம்மாவை  தேடி கொண்டிருந்தோம் , ஈரநெஞ்சம் அமைப்பு லெட்சுமி அம்மா கோவையில் இருப்பதாக தகவல் அளித்ததை தொடர்ந்து அவரை அழைத்து செல்ல வந்துள்ளோம் , லெட்சுமி  அம்மாவை கிடைத்தது பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அடைகிறோம் , லெட்சுமி  அம்மாவை காணாது மிகவும் தவித்து விட்டோம் , அம்மாவை பாதுகாத்து எங்களையும் தேடி கண்டுபிடித்து தந்ததற்கு ஈரநெஞ்சம் அமைபிற்க்கும் காவல்துறையினருக்கும் , கோவை மாநகராட்சி காப்பகத்திற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு லெட்சுமி பாட்டியை அழைத்து சென்றனர் .

தனது  உறவினரை தொலைத்து விட்டு  தவித்து கொண்டிருந்த லெட்சுமி  பாட்டி அவர்களின் உறவினரை கண்டு பிடிக்க உதவிய அணைத்து நண்பர்களுக்கும் , லெட்சுமி  பாட்டியை காப்பகத்தில் நல்லமுறையில் கவனித்துக்கொண்ட கோவை மாநகராட்சி காப்பகத்திற்கும் , பாட்டியை ஈரநெஞ்சம் அமைப்பிடம்  பாதுகாக்கும்படி  ஒப்படைத்த கோவை B3 காவல் நிலையத்திற்கும் ஈரநெஞ்சம் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவிதுக்கொல்கிறது. 

மீண்டும் ஒரு உறவை குடும்பத்தினருடன் இணைத்து வைத்த மகிழ்ச்சியில் ஈரநெஞ்சம் அமைப்பினர்.

~ நன்றி
ஈர நெஞ்சம்
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான சேவை... வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

இன்றைய பகிர்வில் சில பகுதிகள் உங்கள் தளத்திற்கும் உதவக் கூடும்... முக்கியமாக கீழ் உள்ள தலைப்பு :

6. .in என்பதை .com-யாக மாற்றி எல்லா நாட்டவரையும் வாசிக்க வைக்க...!

இணைப்பு : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisom-3.html

நன்றி...

Post a Comment