Saturday, December 24, 2011

அடங்க வில்லை உன் ஆழகு..♥

கண்கள்
கல்லாக இருந்தால்
கண்ணீருக்கு
அவசியம்
இருக்காதே..!



ஒரு
பெரும் படைக்கு முன்
தனியொருவனாய்
நான்..!
உன்
நினைவுகளுக்கு
முன்
நான்..♥

இது
அவஸ்தை அல்ல
கொஞ்சம்
அனுபவிக்க விடு
அதற்குள்
வந்து விடாதே..!
உனக்காக
காத்திருப்பதிலும்
சுகம்
இருக்கிறது..♥

முத்தமிட
ஆசை உடைந்து
விடுமா
பனித்துளி..!


அணைக்குள்
அடங்காத
வெள்ளம் போல...
என்
கண்களுக்குள் அடங்க வில்லை
உன்
ஆழகு..♥
கவிதைகளாய் வழிகிறது..!


பார்வை
இல்லாதவர்கள்
எல்லாம் அதிர்ஷ்ட
சாலிகள்..!
உன்னை
பார்த்து என்னைபோல
அவதி
பட தேவை இல்லையே ..♥




மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

4 comments:

Yaathoramani.blogspot.com said...

கற்பனையும் அழகும் வார்த்தை பிரயோகங்களும்
காதல் கவிதைகளில்தான் துள்ளி விளையாடுகிறன
அதற்காகவாவது ஒரு காதல் கவிதை
எழுதிப்பார்க்கவேண்டும் என்கிற ஆவலை
தூண்டிப் போகிறது உங்கள் பதிவு
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

சசிகலா said...

மிகவும் அருமையான வரிகள் .

Suresh Subramanian said...

ந்ல்ல கவிதை..... ... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com

வேதகண்ணன் said...

//முத்தமிட
ஆசை உடைந்து
விடுமா
பனித்துளி..!// இந்த வரிகள் என்னை ஊடுருவி என்னை இலகுவாக்குகிறது!

Post a Comment