Wednesday, December 07, 2011

நசுக்கவும் , நனைக்கவும் செய்கிறாய்

ஜன்னல் வழி
விழும் அழகு நிலவொளி
உன்னை நினைவு
படுத்துகிறது..!
அதை
எடுத்து மடித்து
வைக்க வேண்டும்..!
நீ
இல்லாத பொழுதில்
உன்னை ரசிக்க..!


என்
கவிதை எல்லாமே
அழகு ஆனால்
பொய்..!
நீ
மட்டும் அழகு
ஆனால் பொய் அல்ல..♥


"காதல்"
செய்யாத தவருக்குதான்
நினைவுகளால்
தண்டனை
குடுக்கும்..♥



என்
மௌனம்
உன் செவியடைதிருக்கிறது...
எனக்குள்ளே
கதறுவது
உனக்கு எப்படி கேட்க்கும்..?


வெயிலுக்கு
குடைபிடிக்க மழை
வந்தது போல...
தீபதிர்க்காக
காத்திருக்கும் கார்த்திகையில்
நீ வருகிறாய்..♥



தேவதை
எல்லாம் வெள்ளை நிறம்
என
யார் சொன்னது..!
நீ
கருப்பு நிற தேவதை..♥




நீ
மலையா.?
மழையா.?
என்னை
நசுக்கவும் செய்கிறாய்.?
நனைக்கவும் செய்கிறாய்.?


 
நான்
இருக்கும் வரை
என்
சரிபாதி ..நீ
இறந்தபின்
என்
சமாதி ..நீ



எனக்கு இன்னொரு முகவரியும் உண்டு தெரியுமா...?
உன் பார்வை,
உன் நிழல்,
உன் நியாபகம்,
நீ..♥



உன்
புன்னகை
பூக்களின்
ஜாதிப்பெயர்...♥


எல்லா
நதியும் கடலை
நோக்கி...
என்
கண்ணீர் கடல்
மட்டும் உன்னை
நோக்கி..!



பழுத்தால் தான்
கனி
இனிக்கும்..!
கன்னி
நீ பார்த்தாலே
இனிக்கிறது..♥


மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

1 comment:

Yaathoramani.blogspot.com said...

அசத்தல் படங்கள்
அருமையான கற்பனைகள்
அழகான கவிதைகள்
ம்னம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1

Post a Comment