Showing posts with label மனிதநேயம். Show all posts
Showing posts with label மனிதநேயம். Show all posts

Thursday, October 23, 2014

ஈரநெஞ்சம் கொண்டாடிய தீபாவளி

" ஈரநெஞ்சம் கொண்டாடிய தீபாவளி "
ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM" Services
***********************************************************
(370 / 21-10-2014)




கோவை சிங்கநல்லூர் அருகே நீலிக்கோணாம்பாளையம் என்னும் இடத்தில் சண்முகம் ( 58 ) என்பவர் கண் தெரியாதவராக இருக்கும் காரணத்தால் பத்து வருடங்களாக குடும்பத்தாரால் புறக்கணிக்கப்பட்டு கழிவுநீர் கால்வாய் ஓரமாக இத்தனை நாளும் இருந்திருக்கிறார் . அவரைப் பற்றி மனோன்மணி என்னும் பெண் ஈரநெஞ்சம் அமைப்புக்கு தகவல் தெரிவித்தார். அனைவரும் தீபாவளி கொண்டாடும் நேரம் அவர் இப்படி இருப்பது மனதுக்கு கஷ்டமாக இருப்பதாகவும் தெரிவித்தார் . அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற ஈரநெஞ்சம் அமைப்பினர் , அந்த பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் சண்முகத்தை அங்கேயே குளிக்க வைத்து , பொதுமக்கள் முன்னிலையில் அவரை தீபாவளி கொண்டாட வைக்க முடிவெடுத்தனர் . அதனைக் கண்ட பொதுமக்கள் அவர்களாகவே அவருக்கு உடுத்த புதிய துணி வாங்கி கொடுத்தனர் .பின்னர் சாப்பிட தீபாவளி பலகாரம் கொடுத்தனர் . பின்னர் அங்கிருக்கும் குழந்தைகள் முன்னிலையில் அவருக்காக பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடி அங்கிருக்கும் மக்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்களையும் நமது ஈரநெஞ்சம் அமைப்பு தெரிவித்துக்கொண்டது ...





பின்னர் கோவை மாநகராட்சி தங்கும் விடுதியில் அனுமதி கேட்டு அங்கு சண்முகம் அவர்களை பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார் . "




" சந்தோஷத்திலேயே பெரிய சந்தோஷம் பிறரை மகிழ்வித்துப் பார்ப்பது தான் " ; அந்த வகையில் சண்முகம் அவர்களை மகிழ்வித்ததில் ஈரநெஞ்சம் அமைப்பு பெருமிதம் கொள்கிறது . அதில் பொதுமக்களும் கலந்து கொண்டது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது ...
ஈரநெஞ்சம் அமைப்பிற்கு இந்த தீபாவளி மறக்கமுடியாத தீபாவளி !!!
~ஈரநெஞ்சம்.
https://www.facebook.com/eeranenjam

Monday, August 13, 2012

"ஈர நெஞ்சம் - சேவைகள்" - காவல்துறையின் மனிதநேயப்பணி



எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோவை காந்திபுரத்தில் உள்ள நடைபாதை பாலத்தில், எழுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர், கடந்த மூன்று நாட்களாக உணவின்றி நடக்க முடியாத நிலையில் படுத்திருந்தார். அவர் சரிவர பேசாததால், எந்த ஊர், என்ன விபரம் என்பது அறியவில்லை. "ஈர நெஞ்சம்" உறுப்பினர் ஒருவர், இவர் இருந்த நிலையை கண்டு, அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு இந்த பெரியவரை பற்றி தகவல் கொடுக்க, காவல்துறையைச்சேர்ந்த துணை ஆய்வாளர் திரு. விஜயேந்திரன் அவர்கள், "ஈர நெஞ்சம்" அமைப்பிற்கு தகவல் கொடுத்து எங்கள் அமைப்புடன் இணைந்து, அவருக்கு முதலுதவி செய்து, கோவை ஸ்ரீ சாய்பாபா முதியோர் காப்பகத்தில் சேர்த்தோம். மேலும், அந்த காப்பகத்திற்கு தென் காசியை சேர்ந்த திரு. ராஜகோபால் அவர்கள் எங்கள் அமைப்பின் மூலமாக தேவையான உபகரணங்களை வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாகவே, காவல்துறை என்றால் மக்கள் மத்தியில் ஒருவித பயம் கலந்த உணர்வு உலவுகின்ற  நிலையில் காவல்துறை இதுபோன்ற  சமூக அமைப்புகளுடன் இணைத்து மக்களுக்கு சேவை செய்வது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை தருகின்றது.  இந்த நிகழ்வை "டெக்கான் கோர்னிகல்" நாளிதழ் 13.08.2012 அன்று வெளியிட்டது. அது உங்கள் பார்வைக்கு.
~நன்றி (டெக்கான் கோர்னிகல் நாளிதழ்)
(ஈர நெஞ்சம்-55 /2012)

https://www.facebook.com/eeranenjam
******
An elder person (~70) was found,  unconscious, without proper food, on the over-bridge near heart of the city, Gandhipuram, Coimbatore for the past three days. As he could not speak well, his identity was not unknown. Yesterday, a volunteer from our organization informed the nearest police station and the sub-inspector Mr Vijayendran had made arrangements to give him first-aid and got admitted into Coimbatore "Sri SaiBaba Home" with the help of our organization. Moreover, Mr. Rajagopal, from Tenkasi, had donated few apparatus to this home through us.

This service of police,joining hands with NGO, proved that police are our friends and it has been applauded by public. This humanitarian service was published in "Deccan Chronical" newspaper on 13.08.2012 with the title" NGO, COPS RESCUE AILING 70-YEAR-OLD MANON THE ROAD"~Thanks (Deccan Chronical newspaper)(EERA NENJAM -55/2012)



 
இந்த செய்தி  தினமலர் ,  தினத்தந்தி, மற்றும்  டெக்கான் க்ரோநிகளில்  வெளியானது.

Thursday, March 08, 2012

இவர்களது இந்த சேவை பலகோடி கொடுத்தாலும் அதற்க்கு ஈடாகாது. ~மகேந்திரன்

கடந்த 26/02/2012 நான் (மகேந்திரன்) எனது குலதெய்வ கோவிலுக்கு சென்று இருந்தேன், அப்போது கோவையில் இருக்கும் எனது நண்பர் பர்கத் ( இவர் சாதாரண இருசக்கர பழுது பார்க்கும் தொழிலாளி)  இரத்தினபுரி பகுதியில் பேச்சியம்மாள்  எனும் பாட்டி பசிமயக்கத்தில் தள்ளாடி கொண்டு இருக்கிறது அவர் பேசுவதும் புரிவது இல்லை , பாவமாக இருக்கிறது அவர் எதோ பிரச்சனையில் இருப்பதாக தெரிகிறது என்ன செய்யலாம் என கேட்க்க , நான் , அந்த பாட்டிக்கு ஏதாவது உண்பதற்கு வாங்கிக்கொடுங்கள் பிறகு அவரை பற்றி காவல்துறைக்கு தகவல் கொடுங்கள் உங்களுக்கு துணையாக நான் ஒருவரை அனுப்பிவைக்கிறேன் என்று சொல்லி நண்பர் மோகன சுந்தரம், அவர் (ஒரு தனியார் கம்பனியில்  கனி பொறியாளராக  பனி புரிபவர்)  அவரை அழைத்து பர்கதின் நம்மரை கொடுத்து விபரம் சொல்லி அந்தப்பகுதிக்கு சென்று அந்த பாட்டிக்கு தேவையான உதவிகளை செய்ய சொல்லி அனுப்பினேன், அதனை தொடர்ந்து இருவரும் அந்த பாட்டியை பற்றி காவல்துறைக்கு தகவல் கொடுத்து ஒரு காவலாளி அந்தபாட்டி யை விசாரிக்க எந்தவிபரமும் அவருக்கு கிடைக்கவில்லை ,ஆகையால் காவல் துறை சேர்ந்த காவலாளி என்னிடம் இந்த பாட்டியை  என்ன செய்வது என்று தெரியவில்லை  ஏதாவது காப்பகத்தில் சேர்த்து விடுங்கள் எதோ வலி தவறி வந்தது போல இருக்கிறது என அலை பேசியில் கூற , காவல் துறை அனுமதியோடு அந்த அம்மாவை மோகனசுந்தரத்தை அன்னை தெரேசா காப்பகத்தில் சேர்த்துவிடுங்கள், நான் நாளை கோவை வந்ததும் பார்த்துக்கொள்கிறேன் என்று கூற , அதன் படி அந்த அம்மாவை மோகன சுந்தரம் ஆட்டோவில் வைத்து காப்பகத்திற்கு அழைத்துக்கொண்டு போய் அந்தப்பாட்டிக்கு  அங்கு  முதலுதவி கொடுக்கப்பட்டது அந்தில் அந்த பாட்டிக்கு நினைவு வர அந்தப்பாட்டி காப்பகத்தில் தங்குவதற்கு விருப்பம் இல்லாமல் அடம்பிடித்து கொண்டு தான் உடையாம்பாளையம் போகணும் என்று கூறிக்கொண்டு இருக்க காப்பகத்தில் அவரை ஏற்க்க மறுத்தனர் . மோகனசுந்தரம் அதை கவனித்து என்னை அழைத்து விபரம் சொல்ல, நான் நண்பர் ஆடி தபசுவை (இவர் தினசரி தள்ளுவண்டியில் சிற்றுண்டி விற்பவர்) அழைத்து மோகனசுந்தரம் ஒரு பாட்டியை அழைத்து வருவார் அவரோடு பர்கத் என்பவரும் வருவார், நீங்கள் மூவரும் அந்த பாட்டியை அழைத்துக்கொண்டு அந்தப்பாட்டி குறிப்பிட்ட உடையாம்பாளையம் அழைத்து போய் அவர் முகவரி தெரிந்தால் அவரது உறவினருடன் சேர்த்துவிடுங்கள், ஆனால் கவனம் என்று சொல்லி , மோகனசுந்தரத்துடன் அந்த பாட்டி செல்ல வழியில் பர்கத் மற்றும் ஆடி தபசு இணைந்து கொண்டனர், பாட்டியை இருசக்கர வாகனத்தில் அமரவைத்து ஆடி தபசு மற்றும் மோகனசுந்தரம் உடையாம்பாளையம்  கூட்டிச்செல்ல அந்தபகுதியில்  அங்கு சென்றதும் பாட்டிக்கு வீட்டிற்கு செல்ல அடையாளம் தெரிந்தது , வீட்டிற்கு சென்றதும் பாட்டி இவர்கள் செய்த உதவிக்கு நன்றி சொல்லி மூவருக்கு காப்பி போட்டுகொடுக்க, மூவரும் எனக்கு அலைபேசியில் அழைத்து பாட்டியின் வீடு கண்டுப்பிடிக்கப்பட்டது என்று கூற எனக்கு எனது குலதெய்வமே நேரில் வாழ்த்தியது போல இருந்தது...
ஆடித்தபசு, பர்கத், மோகனசுந்தரம் இவர்கள் மூவருமே சாதாரண குடும்பத்தை சார்ந்தவர்கள்தான்   ஆனால் இவர்களது இந்த  சேவை பலகோடி கொடுத்தாலும் அதற்க்கு  ஈடாகாது.
ஆடித்தபசு, பர்கத், மோகனசுந்தரம் இவர்கள் மூவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்...
~மகேந்திரன்

Tuesday, August 02, 2011

மரண நேரத்தில் மகனை சந்தித்த அம்மா -மகேந்திரன்

திண்டுக்கலில் ஆதரவு இல்லாத நிலையில் 80 வயது  மூதாட்டியை, திருப்பூரில் உள்ள அவரது மகன் ஜெயராமுடன் சேர்த்துவைத்த மகேந்திரன்.

இந்த செய்தியை ரேடியோ மிர்ச்சியில்
ஒருநாள் முழுவதும் ஒலிபரப்பு செய்தார்கள்.
அதற்கு பிறகு ஒருவாரம் கழித்து அந்த பாட்டி எப்படி இருக்காங்க என்பதை அறிய திருப்பூரில் உள்ள ஜெயராமன் அவர்களின் வீட்டிற்கு தேடி சென்றேன்.
வீட்டிக்குள் நுழைந்ததும் தான் தெரிந்தது அந்த பாட்டி மரணபடுக்கையில் இருப்பது. திண்டுக்கலில் இருந்து அழைத்து வந்ததும் திருப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது,  மருத்துவர் இந்த பாட்டிக்கு வைத்தியம் செய்யும் நிலையை தாண்டிவிட்டார்கள்,  எப்போது வேண்டுமானாலும் உயிர் பிரியலாம் வீட்டிற்கு அழைத்து செல்ல மருத்துவர் சொல்லிவிட்டார்கள்.  மருத்துவமனையில் இருந்து வந்த நாள் முதல் இப்படியே தான் இருக்கிறது ஆனால் நாம் பேசுவது அனைத்தும் பாட்டிக்கு புரிகிறது என்று சொன்னார் ஜெயராம். பிறகு ஜெயராம் அந்த பாட்டியிடம் இவர்தான் மகேந்திரன்,  உன்னை என்னிடத்தில் சேர்த்து வைத்தது இவர்தான் என்று கூற,  அந்தப்பாட்டி முடியாத நிலையிலும் என்னை பார்த்து கையெடுத்து கும்பிட்டார்கள்.
பிறகு நான் பாட்டியின் கையை பிடித்துக்கொண்டு,  "பாட்டி நீங்க கடவுள் மாதிரி நீங்கள் என்னை வணங்க கூடாது", என்று சொல்லிவிட்டு பாட்டியை என் மடியில் சாய்த்துக்கொண்டு அவருடைய முகத்தையும் கண்களையும் நீரால் துடைத்து விட்டேன்.   ஜெயராம் பாட்டிக்கு தண்ணீர் குடுக்க சொன்னார், குடுத்தேன்.  அன்று அதுவரைக்கும் ஏதும் குடிக்காத பாட்டி நான் தண்ணீர் குடுத்ததும் குடித்துக் கொண்டாராம். பிறகு ஜெயராமிடம் இதுவரை எப்படியோ இனி  இருக்கும் காலங்களில் உங்க அம்மாவை நல்லபடியாக பார்த்துக்கோங்க என்று சொல்லி விட்டு பாட்டியின்  காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்  கொண்டு அவர்கள் வீட்டில் இருந்து வெளியே வரும் வேளையில் மீண்டும் அந்த பாட்டி என்னை பார்த்து வணங்க வந்தார்கள். மீண்டும் பாட்டியிடம் வேண்டாம் பாட்டி நீங்க கடவுள் மாதிரி நான் ஏதும் பெருசா செய்ய வில்லை என்று  சொல்லி விட்டு வந்து விட்டேன்.
கோவைக்கு பேருந்தில் ஏறி சிறிது தூரம் வந்ததும் என் அலைபேசியில் ஜெயராம் அழைத்து பாட்டி இறந்து விட்டதாக கூறினார், நான் கலங்கி விட்டேன் , பிறகு அவர் சொன்னார் "எங்க அம்மா உங்களை காண்பதற்காகவே உயிரோடு இருந்த மாதிரி இருக்குங்க மகேந்திரன் சார், எங்க அம்மாவை நான் வெளியே அனுப்பினது தவறு அந்த பாவத்திற்கு உங்களிடம் தான் நான் மன்னிப்பு கேட்க்க வேண்டும்" என்றார், என்னால் ஏதும் பேச முடியவில்லை. நான் அவரிடம் "அதெல்லாம் ஒன்றும் இல்லைங்க. ஆகவேண்டிய காரியத்தை பாருங்க அவங்க உங்க அம்மா எப்போதும் எந்த நிலையிலும் உங்களை ஆசிர்வதிப்பாங்க"  என்று ஆறுதல் சொல்லிவிட்டு அலைபேசியை வைத்து விட்டு வந்துவிட்டேன்...
-மகேந்திரன் ஈரம்