Friday, December 16, 2011

வேணு தாத்தா அரசு மருத்துவமனையில் இருந்து காப்பகத்தில்~மகேந்திரன்





 
இந்த பெரியவர் பெயர் வேணு, கடந்த இரண்டு வாரத்திற்கு முன்  அடையாளம் தெரியாத ஒருவரால் சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு இதுவரை வந்து பார்க்க வில்லை, தற்போது இவருக்கு சிகிச்சை முடிவடைந்து அழைத்து செல்ல யாரும் இல்லாதநிலை, மேலும் இவரால் முதுகு தண்டு அடிபட்ட காரணத்தால் நடக்க முடியவில்லை, சிகிச்சை முடிவடைந்ததால் இவருக்கு கவனிப்பு குறைந்து விட்டது , இவருக்கு யாரும் துணையில்லை , இவரிடம் இவரை பற்றி கேட்க்கும்போது தனது பெயர் வேணு என்றும் ,திருவண்ணாமலை சேர்ந்தவர் ,தனக்கு யாரும் துணை  இல்லை வீடு , உறவினர் ஏதும் இல்லை  என்றும் கூறியுள்ளார் ,
 இன்று காலை ஒருவர் எனக்கு இந்த விபரத்தை சொல்லி இவருக்கு ஆதரவு கேட்க , நான்  மகேந்திரன்  எனது நண்பர் தபசுராஜ் உடனடியாக  அவரை கோவை அரசு மருத்துவமனையில் இருந்து RMO அனுமதியோடு டிஸ்சார்ஜ் செய்து , கோவை அன்னை தெரேசா காப்பகத்தில் சேர்த்து அவருக்கு மீண்டும்  அங்கு முதலுதவி செய்யப்பட்டது அதனைதொடர்ந்து ,நானும் எனது நண்பர் தபசுராஜும் அங்கிருந்து விடை பெற்றோம் .
மருத்துவமனையே ஆனாலும்  அங்கு மருத்துவரே  இருந்தாலும்

உறவினர் என்று ஒருத்தர் வேண்டுமே ,
எதோ மருத்துவமனை வரை இந்த பெரியவரை வந்து சிகிச்சைக்காக  செர்த்தவரை  வாழ்த்தவேண்டும் .
~மகேந்திரன்
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

1 comment:

Samy said...

nee nalla irukkanumya. samy

Post a Comment