Thursday, January 05, 2012

என் நினைப்பை குடுத்தால் போதும்..♥

பூக்களுக்கும்
இதயம் இரும்பால் இருந்தால்
உன்னையும்
பூக்களோடு
ஒப்பிடலாம்..!


கோலாரில் தங்கம் கிடைக்க
காரணம்..
போன
ஜென்மத்தில்
உன் மரணத்துக்கு
பிறகு கோலாரில்தான்
உன்னை புதைத்து
இருப்பார்கள்..♥



நீ
நீயாக
இருக்கிறாய்...
நீ
தீயாக இருந்தாலும்
நான்
குளிக்க வருவேன்..♥



பெட்டியை
திறந்ததும் படம் எடுக்கும்
பாம்பை போல..!
என்னை
பார்த்ததும்
உன்னுள் எடுக்கும் வெட்கம்
ஆஹா..♥



காதல் தரும்
இன்பம்
சில வருடம் தொடரும்..!
காதல் தரும்
துன்பம்
சில ஜென்மங்கள்
தொடரும்..!



என்னை வைத்து எப்படி
வேண்டுமானாலும்
விளையாடு..!
உடைத்து விடாதே
விளையாட என்னை போன்ற
இன்னொரு
உயிருள்ள பொம்மை
கிடைக்காது..♥



பசி வந்தால்
பத்தும் பறந்து போகும்..!
காதல் வந்தால்
பசியும் பறந்து போகும்..!

என்னை
தொட்டு செல்லும் தென்றலிலும்,
சுட்டுச்செல்லும் வெப்பத்திலும்
நனைத்து செல்லும் மழையிலும்
மறைத்துக்கொள்ளும் நிழலிலும்
உன்
காதலையே உணர்கிறேன்...


உனக்கு
குடுப்பதற்கு
உதடுகள்
இருக்கும் பொது...
வெறும் கையேடு தானே
உன்னை
சந்திக்க வரமுடியும்..♥

என்னை பார்த்து
"என்ன தனியா இருக்கியா"
என்று கேட்ப்பார்கள்
"ஹ ஹ ஹ"
நான்
உன் நினைவோடு
இருப்பதை
அறியாமல்..♥
மின்னுவதெல்லாம் பொன்னல்ல"
உன்
விழியை பார்த்த
பிறகுதான்
இதன் உண்மை புரிந்தது..♥

உன்
வாழ்த்துக்களுக்காகவே
ஒவ்வொரு நாளும்
நான்
பண்டிகை நாட்களை
தேடி கொண்டு
இருக்கிறேன் ..!



கொல்வதற்கும் ...
கொல்வதற்கும்
காதல்
அழகு ..!

உன்
கோபத்தில் கூட அப்படி
இல்லை..!
நீ
கை அசைத்து
போகும் பொது
எங்கிருந்துதான் வருகிறதோ
இந்த
கண்ணீர் அருவி..♥



பூக்கள்
உதிர்வதால்
கவலை இல்லை
வாடினால்தான்
நானும் வாடிப்போகிறேன்..!


ஒரு
முற்றுப்புள்ளி வைப்பதில் கூட
நீ
அழகான கவிதை
வடிக்கிறாய்..!
நெற்றியில்
நீ
வைத்திருக்கும் பொட்டை
சொல்கிறேன்..!




அவசர அவசரமாக
கோவிலுக்கு போவேன்...
எதேச்சையாக
எதிரில்
நீ வருவதை பார்ப்பேன்...
என்
அவசரத்தை புரிந்துக்கொண்டு
அம்மனே
நேரில் வருவதாய்
நினைத்துக்கொண்டு
உன்னை தரிசித்துவிட்டு
போவேன்..!


கொடுக்கின்ற
தெய்வம் கூரையை
பித்துக்கொண்டு கொடுக்குமாம்..!
எனக்கு அவ்வளவு எல்லாம் வேண்டாம்,
உனக்குள் 
என் நினைப்பை குடுத்தால் போதும்..♥

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment