Wednesday, November 21, 2012

ஈரநெஞ்சம் அமைப்பின் முயற்சி ~தீரத்சிங்

''ஈர நெஞ்சம் சேவைகள்'' / ''EERA NENJAM Services''

******
[For English version, please scroll down]


கோவை ரத்தினபுரி புது பாலம் பகுதியில், 17.11.2012 அன்று, உடல்நலம் சரியில்லாத நிலையில் ஒருவர் உடலில் சிறுநீரகப்பை (சிறுநீரகம் சேமிக்கும் பை) உடன் மிகவும் பரிதாபமான நிலையில் இருப்பதாகவும், அவருடன் மனைவியும் கடும் குளிரில் அவதிப்பட்டு கொண்டு இருப்பதாகவும் சிலர் ''ஈர நெஞ்சம்'' அமைப்பை அணுகி அவர்களுக்கு தக
ுந்த உதவி செய்ய கேட்டுக்கொண்டனர்.

உடனடியாக ''ஈர நெஞ்சம்'' அமைப்பினர், அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது, பொதுமக்கள் சொன்னதுபோல, திரு.தீரத்சிங் (வயது 55), உடலில் சிறுநீரகப்பை இருந்தது. மற்றும் அவரது மனைவி லட்சுமி அவருடன் இருந்தார். அவரிடம் விபரம் கேட்டபோது "தனது கணவர் தீரத்சிங். அவருக்கு இரண்டு சிறுநீரகமும் பழுதடைந்து விட்டது. முடிந்தவரை சிகிச்சை கொடுத்துள்ளோம். மருத்துவமனையில் சிகிச்சை இவ்வளவுதான்.ஆகையால், தீரத்சிங் அவரை டிச்சார்ஜ் செய்கிறோம் என்று கூறி எங்களை டிஸ்சார்ஜ் செய்து வெளியேற்றிவிட்டனர். ஆனால், இவருக்கு கொஞ்சம் கூட முன்னேற்றம் இல்லை. எங்களுக்கு, வீடு வாசல் ஏதும் இல்லை. ஆகவே, இரவு முழுவதும் கொட்டும் பனியில் இங்கேயே தங்கிவிட்டோம். பனியில் இருந்ததால், இன்று காலை எனது கணவருக்கு மேலும் உடல்நலம் பாதித்து வருகிறது என்ன செய்வது என்று தெரியவில்லை" என்றார். இதற்க்கு இடையில், தீரத்திங் அவரை ''அன்பு மலர்'' காப்பகத்தில் சேர்க்க ''ஈர நெஞ்சம்'' அமைப்பினர் முயற்சி செய்தனர். ஆனால், தீரத்சிங் சிறுநீரகப்பையுடன் இருப்பதால், காப்பகத்தில் கொஞ்சம் தயக்கம் காட்டினர்.மேலும், இரவு முழுவதும், பனியில் இருந்ததால், அவரது உடல் மோசமாக இருந்தது. அதனை கருத்தில் கொண்டு அவரை மீண்டும் அரசு மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று RMO டாக்டர். P.சிவப்ரகாசம் அவரை வேண்டி கேட்டுக்கொண்டு, அவரது அனுமதியோடு ஈரநெஞ்சம் அரசு மருத்துவ மனையில் தீரத்சிங்கை சேர்த்தது. தற்சமையம் தீரத்சிங் நல்ல முறையில் அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதற்காக மருத்துவர் RMO P.சிவப்ரகாசம் அவர்களுக்கு "ஈர நெஞ்சம்" நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது .

மேலும் தீரத்சிங், மற்றும் அவரது மனைவி லட்சுமி அவர்களின் பரிதாபமான நிலையை பார்த்த கோவை ரத்தினபுரி புது பாலம் பொதுமக்கள் அனைவரும், அந்த தம்பதியினருக்கு கோவை அரசு மருத்துவமனை RMO, P.சிவப்ரகாசம் மற்றும் "ஈர நெஞ்சம்" அமைப்பினர் முன்னிலையில் நன்கொடையாக Rs. 3,400 வழங்கினர். இதனை பெற்றுக்கொண்ட திருமதி.லட்சுமி அவர்கள், அரசு மருத்துவமனை RMO . P.சிவப்ரகாசம் அவருக்கும், ''ஈர நெஞ்சம்'' அமைப்பிற்கும் மற்றும் பொதுமக்களுக்கும் மனதார நன்றியினை தெரிவித்துக்கொண்டார். தீரத்சிங் உடல்நலம் விரைவில் குணமடைய உங்களோடு சேர்ந்து ஈரநெஞ்சம் இறைவனை பிரார்த்திக்கிறது. இந்த தகவல்களை, வெவ்வேறு நாளிதழ்களில் வந்துள்ளது. அவைகள் உங்கள் பார்வைக்கு.
நன்றி
ஈரநெஞ்சம் /(111/2012)



https://www.facebook.com/eeranenjam
......

''EERA NENJAM'' organization received a call from public that there was a person with Kidney bag and lying down on the streets of Puthuppalam, Rathinapuri area, Coimbatore on 17.11.2012 and asked us to help him. He and his wife were also struggling in cold. When we visited the place, Mr Theerathsingh (Age: 55) was having kidney-bag on his body and his wife informed us that his two kidneys have been spoiled and hospital authorities discharged him as it would be difficult to cure his case. She continued that there were homeless and as no one for them to take care and had been struggling. Our organization was thinking of admitting him at ''Anbu Malar'' Home, Coimbatore but due to his body and health condition, they were hesitating to admit him and hence we requested the RMO Dr.Sivaprakasam of Coimbatore Government Hospital, Coimbatore, to help him to get admitted back. He generously agreed and as of now he is getting the treatment at the hospital.

By looking at his condition, public from Rathinapuri area have generously donated Rs.3,400 (Rupees three thousand four hundred only) to her in presence of RMO, Dr. Sivaprakasam and EERA NENJAM Organization. She thanked the doctor, public and our organization for the timely help. This information was published in many daily newspapers and their clipping are attached herewith for your reference.
~Thanks
EERA NENJAM / (111/2012)


மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

1 comment:

sakthi said...

ஈர நெஞ்சம் அமைப்பு மற்றும் திரு .மகேந்திரன் அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள் .உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் !

Post a Comment