Showing posts with label காப்பாற்றப்பட்டது. Show all posts
Showing posts with label காப்பாற்றப்பட்டது. Show all posts

Tuesday, August 02, 2011

மரண நேரத்தில் மகனை சந்தித்த அம்மா -மகேந்திரன்

திண்டுக்கலில் ஆதரவு இல்லாத நிலையில் 80 வயது  மூதாட்டியை, திருப்பூரில் உள்ள அவரது மகன் ஜெயராமுடன் சேர்த்துவைத்த மகேந்திரன்.

இந்த செய்தியை ரேடியோ மிர்ச்சியில்
ஒருநாள் முழுவதும் ஒலிபரப்பு செய்தார்கள்.
அதற்கு பிறகு ஒருவாரம் கழித்து அந்த பாட்டி எப்படி இருக்காங்க என்பதை அறிய திருப்பூரில் உள்ள ஜெயராமன் அவர்களின் வீட்டிற்கு தேடி சென்றேன்.
வீட்டிக்குள் நுழைந்ததும் தான் தெரிந்தது அந்த பாட்டி மரணபடுக்கையில் இருப்பது. திண்டுக்கலில் இருந்து அழைத்து வந்ததும் திருப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது,  மருத்துவர் இந்த பாட்டிக்கு வைத்தியம் செய்யும் நிலையை தாண்டிவிட்டார்கள்,  எப்போது வேண்டுமானாலும் உயிர் பிரியலாம் வீட்டிற்கு அழைத்து செல்ல மருத்துவர் சொல்லிவிட்டார்கள்.  மருத்துவமனையில் இருந்து வந்த நாள் முதல் இப்படியே தான் இருக்கிறது ஆனால் நாம் பேசுவது அனைத்தும் பாட்டிக்கு புரிகிறது என்று சொன்னார் ஜெயராம். பிறகு ஜெயராம் அந்த பாட்டியிடம் இவர்தான் மகேந்திரன்,  உன்னை என்னிடத்தில் சேர்த்து வைத்தது இவர்தான் என்று கூற,  அந்தப்பாட்டி முடியாத நிலையிலும் என்னை பார்த்து கையெடுத்து கும்பிட்டார்கள்.
பிறகு நான் பாட்டியின் கையை பிடித்துக்கொண்டு,  "பாட்டி நீங்க கடவுள் மாதிரி நீங்கள் என்னை வணங்க கூடாது", என்று சொல்லிவிட்டு பாட்டியை என் மடியில் சாய்த்துக்கொண்டு அவருடைய முகத்தையும் கண்களையும் நீரால் துடைத்து விட்டேன்.   ஜெயராம் பாட்டிக்கு தண்ணீர் குடுக்க சொன்னார், குடுத்தேன்.  அன்று அதுவரைக்கும் ஏதும் குடிக்காத பாட்டி நான் தண்ணீர் குடுத்ததும் குடித்துக் கொண்டாராம். பிறகு ஜெயராமிடம் இதுவரை எப்படியோ இனி  இருக்கும் காலங்களில் உங்க அம்மாவை நல்லபடியாக பார்த்துக்கோங்க என்று சொல்லி விட்டு பாட்டியின்  காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்  கொண்டு அவர்கள் வீட்டில் இருந்து வெளியே வரும் வேளையில் மீண்டும் அந்த பாட்டி என்னை பார்த்து வணங்க வந்தார்கள். மீண்டும் பாட்டியிடம் வேண்டாம் பாட்டி நீங்க கடவுள் மாதிரி நான் ஏதும் பெருசா செய்ய வில்லை என்று  சொல்லி விட்டு வந்து விட்டேன்.
கோவைக்கு பேருந்தில் ஏறி சிறிது தூரம் வந்ததும் என் அலைபேசியில் ஜெயராம் அழைத்து பாட்டி இறந்து விட்டதாக கூறினார், நான் கலங்கி விட்டேன் , பிறகு அவர் சொன்னார் "எங்க அம்மா உங்களை காண்பதற்காகவே உயிரோடு இருந்த மாதிரி இருக்குங்க மகேந்திரன் சார், எங்க அம்மாவை நான் வெளியே அனுப்பினது தவறு அந்த பாவத்திற்கு உங்களிடம் தான் நான் மன்னிப்பு கேட்க்க வேண்டும்" என்றார், என்னால் ஏதும் பேச முடியவில்லை. நான் அவரிடம் "அதெல்லாம் ஒன்றும் இல்லைங்க. ஆகவேண்டிய காரியத்தை பாருங்க அவங்க உங்க அம்மா எப்போதும் எந்த நிலையிலும் உங்களை ஆசிர்வதிப்பாங்க"  என்று ஆறுதல் சொல்லிவிட்டு அலைபேசியை வைத்து விட்டு வந்துவிட்டேன்...
-மகேந்திரன் ஈரம்

Thursday, July 14, 2011

ஒரு மரம் காப்பாற்றப்பட்டது இன்று...

ஜூலை 14: கோவை இரத்தினபுரி பகுதியில் வீடு கட்டுவதற்கு இடையுறாக சாலையின் ஓரமாக இருந்த   வேப்பமரத்தை வீட்டின் உரிமையாளர் வெட்டிக்கொண்டு (கொன்று) இருந்தனர் , நான் (மகேந்திரன்), கனகராஜ் மற்றும் பாபு இந்தசெயலை  கண்டு அதிர்ச்சி அடைந்து அவர்களிடம் மரத்தின் பயன்களை பற்றி எடுத்துக்குறி அந்த மரம் வெட்டுவதை தடுத்து நிறுத்தி அவர்களை இன்னொரு மரம் நடவும் சம்மதிக்க வைத்து விட்டு  வந்தோம்.  
இதனைதொடர்ந்து வீட்டின் உரிமையாளர் தனது கட்டிடத்தின் முன் பகுதியில் இன்னும் ஒரு மரம் நட்டுள்ளார் .

Sunday, May 22, 2011

என்ன செய்தேன்

 என்ன செய்தேன்
21/05/11 இரவு 8pm - mahendiran.
இவர் பெயர் பாலசுப்ரமணி 80 வயது இருக்கும் .
இவர் இரவு 8pm இருக்கும் கோவை கவுண்டம் பாளையம் பகுதியில் ஒரு மது பானகடை முன் கீழே விழுந்து கிடந்தார்.
பார்பவர்கள் எதோ அவர் குடிபோதையில் விழுந்து கிடப்பது போல இருந்தார்.
அந்த வழியாக நான் ஒரு திருமண விழாவிற்க்கு செல்லும் பொது அவர் இருந்த பரிதாபமான நிலையை கண்டு  திருமண விழாவிற்கு செல்ல மனம் இல்லாமல் அவரிடம் நெருங்கி அவரை விசாரித்தேன், அப்போது தான் தெரிந்தது அவர் நடந்து வரும்போது ஒரு காலும் கையும் வாதம் வந்து கீழே விழுந்து விட்டார் என்று . பிறகு 108 ய் அழைத்து, 108 வருவதற்குள் அவரது முகவரியை அவரிடம் விசாரித்தேன் அவர் மகன் கோபால் , நம்பர் 61 கொண்டாய் சாமி நாயுடு வீதி  வேலண்டி பாளையம் என்று சொல்ல 108 வாகனம் வந்து விட்டது.
அதுவரை இல்லாத கூட்டம் 108 வாகனம் வந்ததும் வந்து விட்டது.
பிறகு 108 வாகனத்தில் கோவை அரசு மருதுவமனைக்கி அனுப்பி வைத்தேன். பிறகு அவர் கொடுத்த முகவரியை தேடும் பணியில் இறங்கினேன், ஒருவழியாக ஒருமணிநேரம் அலைந்து முகவரியை கண்டு பிடித்து அவரது மகன் கோபாலை சந்தித்து அவர் பதட்ட படாதவாறு. அவருடைய தந்தையின் நிலையை எடுத்து சொல்லி அரசு மருதுவமனைக்கி உடனே செல்லும்படி சொன்னேன் , அதற்கு கோபால்  என்னை பார்த்து கை எடுத்து கும்பிட்டு கண்ணிறொரு நான் செய்த உதவிக்கு நன்றி சொன்னார்.
அவரிடம் எனது போன் நம்பரை கொடுத்துவிட்டு திரும்பினேன்.
தற்சமயம்  பாலசுப்ரமணி கோவை அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்று வருகிறார்.
பிறகென்ன திருமண விழாவிற்க்கு செல்ல நேரம் இல்லாமல் வீடு திரும்பும் பொது மணி 10:30pm
அந்த பெரியவர் விரைவில் குணமடைய வேண்டிகோங்க.


 -மகேந்திரன்