Monday, May 28, 2012

கோவை அரசுமருத்துவமனை அருகில் பரிதாபமான நிலையில் ஒருவர் ....


' ஈர நெஞ்சம் ' பணிகள் / EERA NENJAM Activities
கோவை அரசு மருத்துவ மனை அருகில் குப்பையோடு குப்பையாக, கடந்த பத்து நாட்களாக அடையாளம் தெரியாத ஒருவர் உடல்நலகுறைவால் ஆதரவற்ற நிலையில் யாரும் பராமரிப்பற்று இருந்தார், இவரை பற்றி 28/05/12 இன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியாகி உள்ளது.
28/05/12 -இந்தியன் எக்ஸ்பிரஸ்
/An unknown man was lying down near Coimbatore Government Hospital for the past ten days without proper care and food. This news was published in 'Indian Expres'newsopaper on 28.05.2012/

ஈரநெஞ்சம்' அறக்கட்டளை இந்த செய்தியினை கண்டதும், உடனடியாக, என்ன செய்ய வேண்டும் ஆலோசித்தது. ' ஈர நெஞ்சம்' அறக்கட்டளையின், நிர்வாக அறங்காவலர் திரு ப.மகேந்திரன், அவர்கள், உடனே அரசு மருத்துவமானையை தொடர்புகொண்டு, தகுந்த ஏற்பாடுகளுடன் அவரை, அரசு மருத்துவமனையில் சேர்த்து வந்தார்.

/The Managing trustee of 'EERA NENJAM', Mr P. Mahendiran have acted immediately and taken necessary steps to admit him at the Coimbatore Government Hospital. /

 



















ஆயிரக்கணக்கான பேர் வந்து போகும் வழியில் இப்படி ஆதரவு இல்லாத நிலையில் பத்து நாட்களாக குப்பையோடு குப்பையாக போட்டு விட்டு போய்விட்டார்களே , காக்கை இறந்தால் கூட அதை சுற்றி காக்கை கூட்டம் அலை மோதுகிறது , காக்கையை விடவா மோசமாகிவிட்டார் இவர் இது போன்றவர்களை பராமரிப்பது யார் பொறுப்பு ? அரசாங்கம் இவர்களுக்காக என்ன செய்யபோகிறது...?
/As per Mr P.Mahendiran asked a question, Who is held responsible for these kinds of people and how Government to help them?
~P.மகேந்திரன் (18/2012)  / P.Mahendiran (18/2012)

(அவர் மருத்துவமனை அருகில் அவர்  இருந்த பரிதாபமான கீழ்கானும் link பாருக்கவும்.)
http://youtu.be/XeQthRWYxEw

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

3 comments:

கோவி said...

நம் ஊரின் நல்ல அமைப்புகளின் செயல்பாடுகள் இன்னும் அதிகமாக வெளி வராமலிருக்கிறது.. சேவைகள் தொடரட்டும். துயரங்கள் மறையட்டும்.

Unknown said...

பக்கத்துல இத்தனை ஆம்புலன்ஸ் வண்டி இருந்தும் ஒருத்தர் கூட்வா அட்மிட் பண்ணல, கஷ்டம்தான்,

மனிதாபிமான உங்களின் செயலுக்கு நன்றி மகேந்திரன்

sakthi said...

ஆயிரக்கணக்கான பேர் வந்து போகும் வழியில் இப்படி ஆதரவு இல்லாத நிலையில் பத்து நாட்களாக குப்பையோடு குப்பையாக போட்டு விட்டு போய்விட்டார்களே , காக்கை இறந்தால் கூட அதை சுற்றி காக்கை கூட்டம் அலை மோதுகிறது , காக்கையை விடவா மோசமாகிவிட்டார் இவர் இது போன்றவர்களை பராமரிப்பது யார் பொறுப்பு ? அரசாங்கம் இவர்களுக்காக என்ன செய்யபோகிறது...?

மனம் கனக்கிறது நண்பரே ,.உங்கள் சேவை வாழ்க

Post a Comment