Saturday, January 14, 2012

சாலையில் இன்னும் எத்தனை ராஜம் அம்மாக்களோ..? ~மகேந்திரன்


இந்த அம்மாவின் பெயர் ராஜம் வயது 80 இருக்கும் ,கோவை நகர பேருந்து நிலையத்தில் இன்று 11/01/12 மதியம் சுமார் ஒருமணியளவில் ஒரு பேருந்தில் இருந்து நீண்ட நேரமாக இறங்க மறுத்து அடம் பிடித்தபடி இருந்தார் . இதனால் அந்த பகுதியில் பதட்டமும் ஏற்பட்டது  ,அதனை தொடர்ந்து தேவி என்னும் ஒரு பெண்மணி என்னை தொடர்பு கொண்டு விபரத்தை சொல்ல உடனடியாக நான் மகேந்திரன் அந்த அம்மா இருக்கும் இடமான கோவை நகர பேருந்து  நிலையத்திற்கு சென்று அந்த அம்மாவை... சந்தித்தேன் அப்போது அந்த அம்மாவின் கால்கள் இரண்டும் வீக்கமடைந்து இருந்தது தெரிந்தது ஒரு பேருந்தில் ஏறிவிட்டு இறங்காமல்  இருந்தார் ,அவரிடம் தாங்கள் யார் எங்கு போக வேண்டும் அம்மா என்று கேட்டதற்கு அவருடைய பெயரை தவிர அவர் சொல்வது எதுவும் புரியவில்லை , பிறகு அந்த அம்மாவை நான் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அன்னை தெரேசா காப்பகத்தில் சேர்த்து விட்டு  அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து  வந்தேன்,
அதனை  தொடர்ந்து அன்னை தெரேசா காப்பகத்தின் பாதுகாப்பில் இருந்து வந்தார்கள்  அந்த ராஜம்  அம்மாவை  நேற்று  12 /01 /12 காலை நான்  சந்திக்க சென்று  அந்த அம்மாவிடம் பேசும்போது அந்த அம்மா தான் திருவள்ளுவர் மாவட்டம் கடமுத்தூர்சேர்ந்தவர் என 
நீண்ட நேரம் விசாரித்தபிறகு ஓரளவுக்கு இது மட்டும் புரிந்தது , 


 
 





அதனை கொண்டு  எனது facebook அன்னக்கொடை குழு  நண்பர்கள்  உதவியால் ஸ்ரீதர் வயது 41 கடமுதூர் முன்னாள் ஒன்றிய குழு பெரும் தலைவர் இவரின் அறிமுகம் கிடைத்தது அவர் கடமுத்தூரை சேர்ந்தவர்  என்பதால் சிரமம் சற்று குறைந்தது அவரிடம் இந்த ராஜம் அம்மாவை பற்றி சொல்ல , அவர் மூலம் அந்த ராஜம்  அம்மாவின் பேரனான புனிதன் என்பவர் கிடைக்கப்பட்டார் அவரிடம்  பேசும்போது பதட்டத்துடன் எனது பாட்டி தான் என்றும் அவர் ஒரு மாதமாக காணவில்லை என்று சொன்னார்  அதனால் இன்று பத்திரிகையில் காணவில்லை என்று விளம்பரம் கொடுக்க முடிவு செய்தபோது  திரு ஸ்ரீதர் என்பவர் மூலம் பாட்டி ,   மகேந்திரன் என்பவரிடம் கோவையில்  இருக்கிறார் என்னும் செய்தி அறிந்தேன் , மிகுந்த சந்தோசம் அடைகிறேன்  அவர் எப்படி கோவைக்கு வந்தார் என்று ஏதும் தெரியவில்லை , உடனே உங்களது அலைபேசி எண்   வாங்கி உங்களிடம்  தொடர்புகொண்டேன்   என்றார்  ,அவரிடம்  நீங்கள் கோவைக்கு வந்து உங்கள் பாட்டியான ராஜம் அம்மாவை அவர்களை அழைத்து செல்லுங்கள் என்றதும் அவர் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்  மேலும் ஒரு பேரனான் சுரேஷ்  அவர்கள் நமக்கு தெரிந்ததே அவர் சென்னை பெரம்பூரில் இருக்கிறார் அவரிடமும் ராஜம் அம்மா கோவையில் இருப்பது தகவல் குடுக்கப்பட்டது , அவரும் இன்ப அதிர்ச்சி அடைந்தார்  , ராஜம் அம்மாவை அழைத்து செல்ல நமது அன்னக்கொடை நண்பர் Syam Selvam   அவர்கள் திரு  சுரேஷ் மற்றும்  ராஜம் அம்மாவின் மேலும் சில உறவினர்களை அழைத்துக்கொண்டு கோவைக்கு வந்துக்கொண்டு இருக்கிறார்,
இன்று காலை 14 /01 /12 பத்து மணியளவில் என்னை சந்தித்து ராஜம் அம்மாவின் புகைபடத்தகாட்ட அந்த அம்மாவின் பேரன் சுரேஷ் இவர் தான் என உறுதி செய்து  கொண்டேன் , சுரேஷை அழைத்துக்கொண்டு எனது  நண்பர்களுடன் அன்னை தெரேசா  காப்பகத்தில் இருக்கும்  ராஜம் அம்மாவை சந்திக்க சென்றோம்,
பேரனை எதிர் பார்த்து இருந்த  ராஜம் அம்மாவின் முன் பேரன் சுரேஷை நிறுத்தினோம் , பேரனை பார்த்த சந்தோசத்தில் ராஜம் அம்மா ஆனத்த கண்ணீரில்  மூழ்கினார், சுரேசும் கண்கலங்கினார் , அப்போது  காப்பகத்தில் இருந்த ஆதரவற்றவ்ர்களும்  அந்த நிகழ்வை கண்டு கண்கலங்கினார். நம்மை தேடியும் உறவினர்கள் வரமாட்டார்களா என்ற ஏக்கம் கண்களில் தெரிந்தது. பிறகு பாட்டியும் பேரனும் அன்பை பரிமாறி கொண்டதை   கண்டோம் , சற்று நேரத்தில் பாட்டியையும் பேரனையும் சந்தோசமாக அவர்களின் ஊருக்கு வழி அனுப்பி வைத்தோம் ,


 


 

ராஜம் அம்மா ஊருக்கு செல்லும் போது தனது பேரனுடன் சேர்த்துவைத்த அனைவரையும் வாழ்த்தி சென்றார் ,


( ஒரு விஷயம் தேவி என்பவர்  மட்டும் இந்த ராஜம் அம்மாவை கண்டும்  காணாமல் சென்று  இருந்தால் இந்த அம்மாவின் நிலை (?) வாழ்த்துக்கள் தேவி ,
~மகேந்திரன்
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

2 comments:

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
உங்கள் சேவைக்கு தலை வணங்குகிறோம்.
இந்த பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

துரைடேனியல் said...

Ungalai pola manithargal iruppathinaalthan Bhoomiyil innum mazhai pozhigirathu. Thodara Vaalthukkal!

Post a Comment