ஜனவரி 1 , இவர் பெயர் குமார் வயது 35 இருக்கும் கோவை அரசு மருத்துவமனையில் ஆதரவில்லாமல் இருந்தார் ,
இவருக்கு பெற்றோர்கள் இல்லை ,ஒரு விபத்தில் இவருக்கு அடி பட்டு இவருடைய நண்பர்கள் மருத்துவமனையில் கொண்டு வந்து விட்டு சென்று விட்டனர் , அப்போது இவர் கோமா நிலையில் இருந்தார் ,குமாரை நீங்கள் ஏதாவது ஒரு காப்பகத்தில் சேர்த்து கொள்ளுங்கள் என கோவை அரசு மருத்துவமனையில் இருந்து குமார் அவருக்கு வைத்தியம் செய்யும் nurse கேட்க , கோவையில் எந்த காப்பகத்திலும் இவருக்கு இடம் கிடைக்க வில்லை, காரமடை "அன்பு மலர்" முதியோர் காப்பகம் இவருக்கு ஆதரவு தருவதாக முன் வந்தது , அதனை தொடர்ந்து அவர் மேலும் உடல் நலம் குன்றிவிட்டார், ஆகையால் அவரை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ய முடியவில்லை , நான் அடிக்கடி மருத்துவ மனை சென்று குமாரின் உடலை நிலையை சந்தித்து வந்தேன், ஜனவரி 6 காலை 10 மணியளவில் நான் குமாரை சந்திக்க சென்று இருந்த போது குமார் நிலைமை மிகவும் மோசம் இருந்தது சற்று நேரத்திலேயே என் கண்முன்னர் அவர் உயிர் பிரிந்தது , பிறகு மருத்துவமனை அதிகாரிகளிடம் நான் குமாருக்கான அலுவலக பணிகளை முடித்து விட்டு எனக்கு தகவல் குடுங்கள் நான் நேரில் வந்து குமாரின் உடலை எங்களது நண்பர்கள் மூலமாக தகனம் செய்ய வருகிறோம் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து , அதனை தொடர்ந்து காவல்துறை குமாரை பற்றி பத்திரிக்கை வாயிலாக
பொதுமக்களுக்கு குமார் இறந்த செய்தியை அறிவித்துள்ளது 13 /01 /12 அன்று வரை ஒருவாரகாலமாகியும் குமாரை தேடி ஒருவரும் வரவில்லை ,பிறகு காவல் துறை துணை ஆய்வாளர் மாசிலாமணி என்பவர் என்னை அழைத்து குமாரின் உடலை என்னை
பெற்றுக்கொள்ள சொல்ல 13 /01 /12 அன்று மதிய ஒருமணியளவில் குமாரின் பிரேத உடல் காவல்துறையினர் மூலம் பெற்றுக்கொண்டு
எனது நண்பர் மோகனசுந்தரம் துணைக்கு வந்தார் மற்றும் உதவும் தோழர் அறக்கட்டளை நண்பர் பழனி உடன் வந்தார் , இவர்களின் உதவியுடன்
13 /01 /12 மதியம் இரண்டுமணிக்கு கோவை புளிய குலம் மயானத்தில் குமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது .

இருக்கும் வரை யாரும் இல்லை இறந்த பிறகாவது ஒரு சொந்தம் வந்ததே...
~மகேந்திரன்







இருக்கும் வரை யாரும் இல்லை இறந்த பிறகாவது ஒரு சொந்தம் வந்ததே...
~மகேந்திரன்
Tweet | ||||

3 comments:
God is there..,
So heartening to see that there are folks like you! Please keep up the good work.
-Dinesh
God Bless You. Keep up the great work.
Post a Comment