Monday, January 23, 2012

கண்ணனை போன்றவர்கள் வராமலா போவார்கள்...

கடந்த 21/01/2012 அன்று மாலை ஹலோ பண்பலை வர்ணனையாளர் திரு கண்ணன் என்பவர் கோவை மேட்டுப்பாளையம் சாலை , வடகோவை அருகே ஒருவர் பரிதாபமாக அழுது  கொண்டு இருப்பதை கண்டார்  அவரிடம் போய் விசாரித்தார் , அப்போது இவரை பற்றி தன பெயர்  பாலன்  வயது 58 தனக்கு  யாரும்   இல்லை
கோவையில் கடந்த இரண்டுவருடத்திர்க்கு முன் பெய்த மழையில்  கோவையில் சிவானந்தா காலனி , காந்திநகர் அருகில்  சங்கனூர் பள்ளம் , அதில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு
தனது வீடு தண்ணீரில் அடித்துசெள்ளப்பட்டது, அதுமட்டும் அல்லாமல் , தனக்கு  காலில் பெரும் காயம் ஏற்ப்பட்டது, தனியே வசித்து வருகிறேன்  ,முடிதிருத்தும் வேலை செய்து  வந்தேன்  , காலில் காயம் ஏற்ப்பட்டதர்க்கு இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது,, வீடு இழந்தும் , காலில் அறுவைசிகிச்சை செய்ததாலும்  இருந்த பணம் அனைத்தும் தீர்ந்து போனது , இருக்க வீடு இல்லை , வேறு இடத்தில வேலை செய்ய வேலை கேட்டு எங்கு போனாலும் என் நிலையை கண்டும் உதவ யாரும் முன் வரவது இல்லை , தனி மரமாகவே வீதியில் இருந்தார் பசி பிச்சை எடுக்க வைத்தது ஆனாலும் பிச்சை எடுப்பதில் விருப்பம் இல்லை ,ஆங்காங்கே கோவிலில் கிடைக்கும் பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டு சாலையோரமாகவே  மரணத்தை எதிர்பார்த்து இருக்கிறேன் ,அதனால்த்தான் கண்ணீர் என்று சொல்வதை கேட்டு கண்ணன் கண்கலங்கி விட்டார், பாலன் அவரிடம் ஒரு   ஆதரவற்ற காப்பகம் இருக்கிறது அதில் உள்ளவர்களை நீங்களே பராமரித்துக்கொல்லுங்கள் அவர்களுக்கு தேவையான உதவியை செய்து வாருங்கள் ,என்று கூற , பாலனும் முழு மனதுடன் சம்மதம் தெரிவிக்க திரு கண்ணன்   உடனடியாக என்னை (மகேந்திரன்) தொடர்பு கொண்டு இவருக்கு நாம்  ஏதாவது உதவ வேண்டும் மகேந்திரன்  என்றதும் , நானு உடனடியாக அவர் இருக்கும் இடத்திற்கு சென்று பாலன் அவர்களை  சந்தித்தேன் மிகவும் பரிதாபமாக இருந்தார் , அவரிடம் நான் உங்களை அழைத்து போகட்டுமா என்று கேட்டது மகிச்சியுடன் வருகிறேன் என்றார்,  பிறகு அவருக்காக மாநகராட்சி  காப்பகத்தில் இடம் கேட்டு இன்று 23 /01 /12 காலை 9 மணிக்கு எனது வாகனத்திலேயே பாலன் அவரை அழைத்து கொண்டு உணவு விடுதியில் அவருக்கு உணவு வாங்கி குடுத்து மாநகராச்சி காப்பகத்தில் பத்திரமாக சேர்த்துவிட்டு வந்தேன் தற்போது அவர் அங்கு இருக்கும் ஆதரவற்றவர்கள் முதியவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகரமாக இருக்கிறார், சாலையில் இப்படி இன்னும் தன்னால் ஏதும் முடியாது என்று தவறான எண்ணத்தில் மரணத்தை தேடி இருக்கிறார்கள் அவர்களுக்கெல்லாம் இது போன்ற கண்ணன் வராமலா போவார்கள்...
~மகேந்திரன்
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

2 comments:

Rathnavel Natarajan said...

நல்ல முயற்சி.
மனப்பூர்வ வாழ்த்துகள்.

Rathnavel Natarajan said...

அருமையான செயல். மனப்பூர்வமாக பாராட்டுகிறோம்.
உங்கள் பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.

Post a Comment