Showing posts with label இறந்த பிறகாவது ஒரு சொந்தம் வந்ததே. Show all posts
Showing posts with label இறந்த பிறகாவது ஒரு சொந்தம் வந்ததே. Show all posts

Saturday, January 14, 2012

இருக்கும் வரை யாரும் இல்லை இறந்த பிறகாவது ஒரு சொந்தம் வந்ததே~மகேந்திரன்

ஜனவரி 1 , இவர் பெயர் குமார் வயது 35 இருக்கும் கோவை அரசு மருத்துவமனையில் ஆதரவில்லாமல் இருந்தார்  , இவருக்கு பெற்றோர்கள் இல்லை ,ஒரு விபத்தில் இவருக்கு அடி பட்டு இவருடைய நண்பர்கள் மருத்துவமனையில்  கொண்டு வந்து விட்டு சென்று விட்டனர் ,  அப்போது  இவர் கோமா நிலையில் இருந்தார்  ,குமாரை நீங்கள் ஏதாவது ஒரு காப்பகத்தில் சேர்த்து கொள்ளுங்கள் என கோவை அரசு மருத்துவமனையில் இருந்து குமார் அவருக்கு வைத்தியம் செய்யும்  nurse கேட்க  ,  கோவையில் எந்த காப்பகத்திலும் இவருக்கு இடம் கிடைக்க வில்லை, காரமடை "அன்பு மலர்" முதியோர் காப்பகம் இவருக்கு ஆதரவு தருவதாக முன் வந்தது  , அதனை தொடர்ந்து அவர் மேலும் உடல் நலம் குன்றிவிட்டார், ஆகையால் அவரை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ய முடியவில்லை , நான் அடிக்கடி மருத்துவ மனை சென்று குமாரின் உடலை நிலையை சந்தித்து வந்தேன்,  ஜனவரி 6 காலை 10 மணியளவில் நான் குமாரை சந்திக்க சென்று இருந்த போது  குமார் நிலைமை மிகவும் மோசம் இருந்தது  சற்று நேரத்திலேயே என் கண்முன்னர் அவர் உயிர் பிரிந்தது , பிறகு மருத்துவமனை அதிகாரிகளிடம் நான் குமாருக்கான அலுவலக பணிகளை முடித்து விட்டு எனக்கு தகவல் குடுங்கள் நான் நேரில் வந்து குமாரின் உடலை எங்களது நண்பர்கள் மூலமாக தகனம் செய்ய வருகிறோம் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து , அதனை தொடர்ந்து காவல்துறை குமாரை பற்றி பத்திரிக்கை வாயிலாக  பொதுமக்களுக்கு குமார் இறந்த செய்தியை அறிவித்துள்ளது 13 /01 /12 அன்று வரை ஒருவாரகாலமாகியும்  குமாரை தேடி ஒருவரும் வரவில்லை ,பிறகு காவல் துறை துணை ஆய்வாளர் மாசிலாமணி என்பவர் என்னை அழைத்து குமாரின் உடலை என்னை பெற்றுக்கொள்ள சொல்ல 13 /01 /12 அன்று மதிய ஒருமணியளவில் குமாரின் பிரேத உடல் காவல்துறையினர் மூலம் பெற்றுக்கொண்டு எனது நண்பர் மோகனசுந்தரம்  துணைக்கு வந்தார் மற்றும் உதவும் தோழர் அறக்கட்டளை நண்பர் பழனி உடன் வந்தார் , இவர்களின் உதவியுடன்   13 /01 /12 மதியம் இரண்டுமணிக்கு கோவை புளிய குலம் மயானத்தில் குமாரின் உடல்  நல்லடக்கம்  செய்யப்பட்டது .
இருக்கும் வரை யாரும் இல்லை இறந்த பிறகாவது ஒரு சொந்தம் வந்ததே...
~மகேந்திரன்