Friday, April 18, 2014

தேவராஜ் உறவினர்கள் கண்டுபிடிப்பு ~ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services
" ******
(293/18-04-2014)

கோவை 17-04-2014: திரு தேவராஜ், வயது 90, இவர் புலியகுளம், அன்னை தெரசா மகளிர் பள்ளி அருகில் கண் சரி இல்லாமல் பசி மயக்கத்துடன், துணைக்கு யாருமின்றி இருப்பதாக பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் திரு தேவராஜை மீட்டு ஈரநெஞ்சம் அமைப்பு கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்தனர் , அதனைதொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்பு திரு தேவராஜ் அவருக்கு மகன்களும் மகளும் இருப்பதை அறிந்து அவர்களை தேடி கண்டறியும் முயற்சியில் இறங்கியது அதன் பலனாக அவரது மகன் கந்தசாமி மற்றும் வேங்கடராஜன் தொடர்பு கிடைத்தது. அவர்களிடம் அவர்களுடைய தந்தை திரு தேவராஜ், நிலையை பற்றி தெரிவித்து வந்து அழைத்து செல்லுமாறு ஈரநெஞ்சம் அமைப்பினர் கேட்டுக் கொண்டனர்.
https://www.facebook.com/photo.php?fbid=319653774826251&set=a.143756775749286.13398.100003448945950&type=1&theater

அதனை தொடர்ந்து இன்று 18-04-2014 இன்று திரு தேவராஜின் மகன் வேங்கடராஜன் , மகள் விஜயா இருவரும் கோவை வந்து தங்களின் தந்தையை அழைத்து சென்றனர். இதை பற்றி அவர்கள் கூறும் போது " நாங்கள் இனி இவரை நல்லபடி பார்த்துக்கொள்கிறோம் இந்நாள்வரை கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார் ஆனால் இப்போது இவருக்கு இப்படி பட்ட நிலை ஏற்படும் என்று தெரியாது என்றும் இவரை காப்பாற்றி பாது காப்பு கொடுத்து எங்களிடம் ஒப்படைதமைக்கு ஈரநெஞ்சம் , அமைப்பிற்கும் கோவை மாநகராட்சி காப்பகத்திற்கும் மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் . என்றனர் "

மீண்டும் ஒரு உறவை குடும்பத்தினருடன் இணைத்து வைத்த மகிழ்ச்சியில் ஈரநெஞ்சம் அமைப்பினர்.

நன்றி
~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment