Tuesday, February 05, 2013

முத்துக்குமாரின் உறவை மீட்டுத்தந்தது ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]

கோவை மாநகராட்சி காப்பகத்தில் சுமார் 28 வயது முத்துக்குமார் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலை போலவும், அவருக்கு உறவினர் இருப்பது போலவும், அவர் பேசும் போது தெரிய வந்ததைத் தொடந்து ஈரநெஞ்சம் அமைப்பு முத்துக்குமார் அவருக்கு உதவும் முயற்சியில், அவரது உறவினரைத் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. அவர் பெயர் முத்துக்க...ுமார், மற்றும் அவரது ஊர் மதுரை, தனக்குப் பால்பாண்டி, ராஜா, மற்றும் சண்முகம் என்ற தடயங்களோடு மதுரையில் உள்ள ஈரநெஞ்சம் அமைப்பின் உறுப்பினர் விக்னேஷ் மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் மதுரையில் இஸ்மாயில் புரத்தில் அவர்களது உறவினர்கள் இருப்பதை விக்னேஷ் மற்றும் அவரது நண்பர் செந்தில் கண்டறிந்து முத்துக்குமார் பற்றியத் தகவல் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முத்துக்குமாரின் சகோதரர்களான பால் பாண்டி மற்றும் ராஜா அவர்களைக் கோவைக்கு வரவழைத்து முத்துக்குமாரை சகோதரர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டது , மேலும் முத்துக்குமாரின் சகோதரர் ராஜா கூறும் போது, “கடந்த ஒருவாரமாக முத்துக்குமாரைக் காணவில்லை, காவல்துறைக்கும் புகார் பதிவுக்கு செய்யப்பட்டுள்ளது” என்றார். தம்பி முத்துக்குமாரைக் கண்டு பிடித்துக் கொடுத்ததற்கு ஈரநெஞ்சம் அமைபிற்கு மனதார நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மீண்டும் ஒரு தொலைந்த உறவை மீட்டுத் தந்த மகிழ்வில் ஈரநெஞ்சம் இந்த செயலுக்கு உறுதுணையாக இருந்த விக்னேஷ் மற்றும் அவரது நண்பர் செந்தில் இருவரையும் மனமாரப் பாராட்டுகிறது.
முத்துக்குமார் அவர்களின் சகோதரர் பாலபாண்டி ஈரநெஞ்சம் அமைபிற்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார். அதன் பதிவை இந்த கானொளியில் காணலாம் .

http://youtu.be/iHG2mkotjyU

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி (136/2013)
ஈரநெஞ்சம்

Mr. Muthukkumar, aged around 32, admitted in Coimbatore Corporation Home, was found mentally challenged but appeared to have relatives based on his converations. Eera Nenjam started searching for his relatives and found that his native place is Madurai and he has relatives Mr. Pal Pandi, Mr. Raja and Mr. Shanmugam. We contacted Mr. Vignesh of Eera Nenjam in Madurai and his friendMr. Senthil also joined the search and found the relatives of Mr. Muthu Kumar in Ismail Puram, Madurai. Both his brothers Mr. Pal Pandi and Mr. Raja were brought to Coimbatore and then Mr. Muthu Kumar was handed to them. “Our brother Muthu Kumar has been missiing for a week and we have already complained to the Police Station”, said Mr. Raja and also thanked Eera Nenjam for the help.
Once again, Eera Nenjam has helped to reunite the family of a lost person and thanks both Mr. Vignesh and his friend Senthil for their timely help.

Thanks(136/2013)
Eera Nenjam
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

1 comment:

sakthi said...

பிரிந்த உறவு கூடுவது முன் ஜென்ம பயன் .அந்த அரிய பயனை அள்ளி தந்த ஈர நெஞ்சம் மகி, எல்லோருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Post a Comment