Monday, January 18, 2016

ஈரநெஞ்சம் அறக்கட்டளையின் பொங்கலோ பொங்கல்

!!! அனைவருக்கும் ஈரநெஞ்சம் அறக்கட்டளையின் பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!!

 
கோவை மருதமலை அடிவாரத்தில் வசித்து வரும் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களோடு மற்றும் அவர் குடும்பத்தார்களோடும் ஈரநெஞ்சம் அறக்கட்டளை இன்று 16/01/2016 பொங்கல் விழா சிறப்பித்தது . இந்த விழாவில் கோவை மாநகராட்சி ஆதரவற்றோர் காப்பகத்தில் வசிக்கும் முதியவர்களும் கலந்துக் கொண்டனர்.
 

தொழுநோயாளிகள் என்பவர்கள் ஒதுக்கப்பட்டவர்கள் அல்ல அவர்களும் சமுதாயத்தில் அங்கத்தினர் என்பதனை வலியுறுத்தும் வகையிலும், ஆதரவற்றவர்கள் என்று யாரும் இல்லை எல்லோருக்கும் ஆதரவு உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் உறவினர்களால் ஒதுக்கப்பட்ட முதியோர்களையும் மகிழ்விக்கும் வகையில் அமைந்த இந்த பொங்கல் விழா அனைவரையும் பெரும் மகிழ்ச்சியில் திளைக்கச் செய்தது .
விழாவில் மேலும் சிறப்பு அம்சமாக ஈரநெஞ்சம் அறக்கட்டளை தொழு நோயாளிகளைப் பற்றி கட்டுரையாக வெளியிட்ட
"இவர்கள் தீண்டத்தகாதவர்கள் அல்ல"
https://www.facebook.com/eeranenjam.organization/posts/475262285932065
 

கட்டுரை வாயிலாக ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பாக உறுப்பினர் கார்த்திக் தொழுநோயாளிகள் சங்கத்திற்கு ரூபாய் 15000 நன்கொடை வழங்கியதும். 



 

கோவை சுந்தராபுரம் சேர்ந்த இளம் கபடி வீராங்கனையான தர்ஷினி என்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பாக காது கேட்கும் கருவி வழங்கியது அனைவரின் மனதிற்கும் திருப்தியளித்தது.
~ஈரநெஞ்சம்








மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment