சோகம் கரைய
நண்பன் இருந்தாலும் சரி
கவிதை எழுததேரிந்தாலும் சரி..!
888888888888888888888888888888
பதுக்கப்பட்டது தானியங்கள்
விதைத்த விவசாயிகள்
பட்டினியில்..!
888888888888888888888888888888
உயிர் போகும் நேரத்தில்
உலகிற்கு ஒளி காட்டதுடிக்கும்
தீக்குச்சிகளுக்கு
வணக்கம்..!
888888888888888888888888888888
சேற்றில் முளைத்த
செந்தாமரையில் தான் கலைமகளே
வீற்றிருக்கிறாள்...
தீண்ட உனக்கு
என்ன..?
888888888888888888888888888888
புதிதாய் அமைத்த பாதையில்
அழிந்து போன புல்லினம்
போர்க்கொடி தூக்கத்தேரியாமல்
ஒரு சோகம்..!
888888888888888888888888888888
குளத்தில் மிதக்கும்
தாமரை பூவை பறித்தாலும்
நிலா பூவை பறிக்க
முடியாது..!
888888888888888888888888888888
நெருப்புக்கும்
அம்மாவின் தாலாட்டு...
ஊதும் குழலில்
அம்மாவின் மூச்சுக்காற்று..!
888888888888888888888888888888
மனிதனின் தாக்குதலால்
இப்போதெல்லாம்
மின்னல் பூ
பூப்பது அரிதாகிவிட்டது..!
888888888888888888888888888888
கஞ்சன் கையில் இருந்து
சிதறியது
பருக்கைகள்...
நன்றி
சொல்லி வாழ்த்தியது
எறும்புகள்..!
888888888888888888888888888888
புல்லின் மீது
வெள்ளை பூ
பூத்திருக்கு
சூரியன் வந்து
களவாட..!
"பனித்துளி"
888888888888888888888888888888
நேற்று பெய்த
மழையில்
எங்கள் வீட்டு கிணற்றுக்கு
தாகம் தீர்ந்தது..!
Tweet | ||||

1 comment:
வணக்கம்
புல்லின் மீது
வெள்ளை பூ
பூத்திருக்கு
சூரியன் வந்து
களவாட..!
பனித்துளி"
கவிதையின் வரிகள் அழகு வாழ்த்துக்கள்
http://2008rupan.wordpress.com/2013/10/11/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0/ அன்புடன் வாருங்கள்.வாருங்கள்....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment