Showing posts with label ஈரம் மகி. Show all posts
Showing posts with label ஈரம் மகி. Show all posts

Friday, August 20, 2021

அன்பே சிவம்

*"உலகில் #மகிழ்ச்சி தரக்கூடியது எது?"*

தஞ்சையை ஆண்ட "மன்னர் #இராஜராஜ #சோழனுக்கு" ஒரு சந்தேகம் எழுந்தது

*"உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடிய பொருள் எது"* 

என்பதே அவர் கேள்வி.??

மன்னரின் கேள்விக்கான சரியான விளக்கத்தை அறிஞர்கள் மட்டுமல்லாமல் மக்களும் அளிக்கலாம். 

*அனைவரையும் மகிழ்விக்கும் பொருளை"* 

அரண்மனையில் இருக்கும் கொலு மண்டபத்தில் வைத்து விடுங்கள்,

யாருடைய *"பொருள்"* அரசருடைய சந்தேகத்திற்கு சரியான விடை தருகிறதோ, 

அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு,

என அறிவிக்கப்பட்டது. 

மக்களும் யோசித்து, 

 *"மகிழ்ச்சியை தரும் பொருட்கள்"* 

எவையோ அவற்றை கொண்டு வந்து அரண்மனை கொலு மண்டபத்தில் வைத்துவிட்டு ,

ஆயிரம் பொற்காசுகள் பரிசுக்காக காத்திருந்தார்கள்.

மறுநாள், 

"மன்னர் ராஜராஜ சோழர்" கொலு மண்டபத்திற்கு வந்து பார்த்தார். 

*"மக்கள் வைத்த பொருட்கள் மண்டபத்தில் நிரம்பி இருந்தது"*

ஒவ்வொரு *"பொருட்களாக"* அரசர் பார்த்துக் கொண்டே வந்தார்.

👇

* முதலில், 

சிறிய அளவு *"பொன்"* இருந்தது. 

அதன் கீழே, 

“செல்வமே மகிழ்ச்சி தரக்கூடியது” என எழுதப்பட்டிருந்தது. 

ஆனால், 

செல்வந்தர்களுக்கும், நோயாளிகளுக்கும் ,

செல்வம் எப்படி மகிழ்ச்சியை தரும்?” 

அதனால் இது சரியான விளக்கம் அல்ல.” 

என அதை நிராகரித்தார் மன்னர்.

👇

 அடுத்ததாக, 

*"இசை கருவி"* இருந்தது. 

அதன் கீழே, 
“இசையே மகிழ்ச்சி தரக்கூடியது” 
என எழுதப்பட்டிருந்தது. 

ஆனால், 

காது கேட்காதவர்களுக்கு இந்த இசை எப்படி மகிழ்ச்சியை தர முடியும்? 

இதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.” என நிராகரித்தார்.

👇

* அடுத்து, 

*"அழகான மலர்கள்"* இருந்தன. 

இவை, 

கண் தெரியாதவர்களுக்கு எப்படி மகிழ்ச்சியை தர முடியும்?. 

அதனால் இதையும் ஏற்றுக்கொள்ள முடியாது”

👇

**** அடுத்து, 

*"இனிப்பான பலகாரங்கள்"* இருந்தது. 

“நோயாளிகளுக்கு  எப்படி இனிப்பு மகிழ்ச்சியை தரும்?” 

என்று கூறி அதனையும் நிராகரித்த ,

*"மன்னர் இராஜராஜ சோழர்"*

👇

அடுத்தாக ,

ஒரு பெரிய 

   🙏 *"சிவலிங்கத்தின்"* 🙏

அருகில் வந்தார். 

அந்த . . .

   🙏 *"சிவலிங்கத்தின்"* 🙏

கீழே ஒரு சிற்பம். 

அதில் ஒரு தாய், 

பசியில் இருக்கும் ஒரு சிறுவனுக்கு உணவு தருவது போல அந்த சிற்பம் வடிவமைக்கப்பட்டிருந்தது. 

அந்த சிற்பத்தின் கீழே, 

        *"அன்பே சிவம்”* 

என்று எழுதப்பட்டிருந்தது. 

இந்த சிலையை வைத்த சிற்பியை அழைத்து வாருங்கள் என்றார்
மன்னர். 

வறுமை தின்ற உடலுடன் ஒரு ஏழை சிற்பி,

""மன்னரின்"" முன் அழைத்து வரப்பட்டார். 

“நீங்கள்தான் இந்த சிலையை இங்கு வைத்தீரா? 

இதன் பொருள் என்ன என்பதை விளக்கமாக சொல்லுங்கள்.” 
என்றார் மன்னர் அந்த சிற்பியிடம்.

“அரசே நான் ஒரு சிற்பி, 

இந்த சிலையை வடிவமைத்தது அடியேன்தான். 

   🙏 *"சிவலிங்கத்தின்"* 🙏

கீழே ஒரு பெண்மணி, 

            *"அன்போடு"* 

ஒரு சிறுவனுக்கு உணவு தருகிறாள்.

இந்த உலகில் ,

              *"அன்பை"* 

மட்டும்தான், 

கண் தெரியாதவர்ளும், 
காது கேட்காதவர்களும், 
வாய் பேச முடியாதவர்களும், 

உணர முடியும்"

அதேபோல் உடல்நலம் இல்லாதவர்களும், 

           *"அன்பைதான்"* 

எதிர்பார்க்கிறார்கள். 

              *"அன்பு"* 

மட்டுமே உலகில் சிறந்தது.

        *"அன்பிருந்தால்"* 

எதிரியையும் நண்பனாக்கும். 

                 *"அன்பு"* 

இல்லையெனில்,

நண்பனையும் எதிரியாக்கும், 

உலகில் சிறந்ததும், 

அனைத்து ஜீவராசிகளுக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியதும்  

              *"அன்பு"*

  *"அன்புதான் இறைவன்"*

அதனால்தான், 

     🙏 *"சிவலிங்கத்தின்"* 🙏

கீழே தாயன்பு கொண்ட ஒரு பெண்மணியை வடிவமைத்து,

    🙏 *”அன்பே சிவம்”* 🙏

என்று எழுதி வைத்தேன்.” 
என விளக்கினார் சிற்பி.

இதை கேட்ட அரசர் மிகவும் மகிழ்ந்தார். 

உலகத்திலேயே அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடியது எது என்ற  என் சந்தேகத்திற்கு அற்புதமான விளக்கம்.

நீங்கள் ஒரு சிற்பி என்பதால் நான் கட்டும் தஞ்சை கோவிலுக்கு நீங்களே சிற்ப வேலையை செய்யுங்கள் என்று கூறி , 

ஆயிரம் பொன்னையும் பரிசாக சிற்பிக்கு தந்து, 

ஏழை சிற்பியின் வாழ்க்கை தரத்தை உயர்த்தினார் அரசர்.

             *"அன்புக்கு"* 

கட்டுப்படாதவர்கள் இந்த உலகத்தில் யார் இருக்கிறார்கள்?. 

*"அன்புதான் அனைத்து ஜீவராசிகளுக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியது"*

Tuesday, March 16, 2021

அரசாங்கம் மக்களுக்கு பணம் கொடுத்தால், காமராஜர் சொன்னது.

பணம்...பணம்...பணம்!
*உழைக்காமலேயே அது ஏழை மக்கள் என்றாலும்கூட, இலவசமாக பணம் கொடுக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தினால் என்னவாகும்?*

படிக்காத மேதை காமராஜர் இந்தக் கேள்விக்கு,
அந்தக் காலத்திலேயே ஒரு நிகழ்ச்சியில் தெளிவாக பதில் சொல்லி இருக்கிறார்..

#பெருந்தலைவர் #காமராஜர் முதலமைச்சராக இருந்த காலம்.

தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை நீரேற்று நிலையத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் காமராஜர் தனக்கே உரிய பாமர பாணியில் பேசியது...

" நாட்ல இருக்கிற எல்லாருக்கும் பணம் வேணும்...

ஏதாச்சும் இயலாமையைச் சொல்லி 
அரசாங்கம் பண உதவி பண்ணனும்னு கேட்கிறாங்க...
எனக்கு ஒன்னும் பிரச்னை இல்லை....

பண நோட்டு அடிக்கிற மிஷின் அரசாங்கத்துகிட்டதான் இருக்கு...

எவ்வளவு வேண்டுமானாலும் அச்சடிக்கலாம்னேன்.

அடிச்சு,  உங்க இஷ்டப்படியே ஆளுக்கு ஒரு மூட்டை பணம் வீடு வீடா போய் கொடுத்துடுவோம்னேன்.

அப்போ,
பணம் இல்லாதவங்களே நாட்டிலே கிடையாதுன்னு நிலை வந்துரும்...
சரியா..?

இப்போ யாரும் வேலைக்குப் போகவேண்டிய அவசியம் இருக்காதுன்னேன்.

பசிக்கும்...

 கடைத்தெரு பக்கம் போனீங்கன்னா எல்லா கடையும் பூட்டிக் கெடக்கும்...!
அரிசி, பருப்பு, உப்பு, புளி, மொளகா, எண்ணெய் ஒன்னும் கெடைக்காது!
ஓட்டல் இருக்காது!

விவசாய வேலைக்கு ஆள் வராது...
 கூப்பிட்டா
ஒரு வேலைக்கும் ஒருத்தனும் வரமாட்டான்...
எப்படி வருவான்னேன்..?

பணம் வேணும்னுதானே உழைக்கிறாங்க....
கட்டு கட்டா பணம் வீட்ல இருக்கும் போது எவன்தான் வேலைக்கு வருவான்னேன்..?

பணத்தை தலைமாட்டில் வச்சுக்கிட்டு,
வயித்துல ஈரத் துணியைப் போட்டுக் கிட்டு சும்மா கெடக்க வேண்டியதுதான்...!

நாடே தூக்கம் வராம கெடக்கும்...

இப்போ அது மதிப்புள்ள பணம் இல்லை...
 வெத்து பேப்பர்தான்னேன்!

*உழைப்புதான் பணம்ன்னேன்...*

பொருளாதாரத்திற்கு ஆதாரமே உழைப்புதான்...

உழைப்பு இல்லாமல் ஒன்னுமே கெடைக்காது... 
பள்ளிக்கூடத்துல முக்கியமா இதைத்தான் நம்ம பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கணும்.

கல்வி, ஆரோக்யம்
இதுக ரெண்ட தவிர அரசாங்கம் எதையும் இலவசமா தரக்கூடாது.

உழைப்பு இல்லாமல்,
 கட்டு கட்டா பணம் குடுத்தால் நாட்டோட பொருளாதாரமே சீர்கெட்டு  கந்தலாகிப் போகும்னேன்..!"

பொருளாதாரப் படிப்பு படிக்காமல்,
 நாட்டு நிலையையும் நாட்டு மக்கள் நாடித்துடிப்பையும் மட்டுமே படித்த ஒரு பாமர மனுஷன்,
 படிக்காத மேதை  சொன்னதை இப்போது நினைத்தாலும் கண்ணீர் வருகிறது.